என் மலர்
விளையாட்டு
கெய்க்வார்டு, பாபா அபரஜித் ஆகியோரின் சதத்தால் இந்தியா ‘ஏ’ அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்தியா ‘பி’ அபார வெற்றி பெற்றது.
தியோதர் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ - இந்தியா ‘பி’ அணிகள் மோதின. இந்தியா ‘ஏ’ அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்தியா ‘பி’ அணியின் கெய்க்வார்டு, பன்சால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பன்சால் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜெய்ஸ்வால் 34 பந்தில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்து கெய்க்வார்டு உடன் பாபா அபரஜித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தது. கெய்க்வார்டு 113 ரன்களும், பாபா அபரிஜித் 101 பந்தில் 101 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது.
இருவரின் சதங்களால் இந்தியா ‘பி’ 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. பின்னர் 303 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. இந்தியா ‘பி’ அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் இந்தியா ‘ஏ’ அணி ரன்கள் சேர்க்க திணறியது.
கேப்டன் விஹாரி மட்டும் தாக்குப்பிடித்து 59 ரன்கள் அடிக்க, மற்ற வீரர்கள் சொதப்பியதால் இந்தியா ‘ஏ’ 194 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது. இந்தியா ‘பி’ 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா ‘பி’ அணி சார்பில் கலாரியா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதன்படி இந்தியா ‘பி’ அணியின் கெய்க்வார்டு, பன்சால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பன்சால் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜெய்ஸ்வால் 34 பந்தில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அடுத்து கெய்க்வார்டு உடன் பாபா அபரஜித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தது. கெய்க்வார்டு 113 ரன்களும், பாபா அபரிஜித் 101 பந்தில் 101 ரன்களும் சேர்த்தனர். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது.
இருவரின் சதங்களால் இந்தியா ‘பி’ 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. பின்னர் 303 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி களம் இறங்கியது. இந்தியா ‘பி’ அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் இந்தியா ‘ஏ’ அணி ரன்கள் சேர்க்க திணறியது.
கேப்டன் விஹாரி மட்டும் தாக்குப்பிடித்து 59 ரன்கள் அடிக்க, மற்ற வீரர்கள் சொதப்பியதால் இந்தியா ‘ஏ’ 194 ரன்னில் சுருண்டு படுதோல்வியடைந்தது. இந்தியா ‘பி’ 108 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தியா ‘பி’ அணி சார்பில் கலாரியா 3 விக்கெட்டும், முகமது சிராஜ் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பிங்க் பந்து புதிதாக இருக்கும்போது ரெட் பந்தை விட அதிக அளவில் ஸ்விங் ஆகும் என தொடக்க பேட்ஸ்மேன்களுக்கு உனத்கட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கொல்கத்தாவில் பகல்-இரவு போட்டியாக நடக்கிறது. டெஸ்ட் போட்டியில் பொதுவாக ரெட் பந்து பயன்படுத்தப்படும். ஆனால் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் பிங்க் பந்து பயன்படுத்தப்படுகிறது.
தற்போதைய இந்திய அணியில் முகமது ஷமி மற்றும் சகா ஆகியோர் மட்டுமே பிங்க் பந்தில் விளையாடியுள்ளனர். விராட் கோலி உள்பட மற்ற வீரர்கள் விளையாடியதில்லை.
உள்ளூர் தொடரான துலீப் டிராபியில் வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனத்கட் பிங்க் பந்தில் விளையாடியுள்ளார். அந்த அனுபவத்தை வைத்து பிங்க் பந்து புதிதாக இருக்கும்போது ரெட் பந்தை விட அதிக அளவில் ஸ்விங் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உனத்கட் கூறுகையில் ‘‘டெஸ்டில் பயன்படுத்தப்படும் ரெட் பந்தில் இருந்து முற்றிலுமாக மாறி பிங்க் பந்தை பயன்படுத்துவதால், அது எல்லோருக்கும் சவாலானதாக இருக்கும்.
எஸ்.ஜி. ரெட் பந்தை போன்று பிங்க் பந்து முன்னதாகவே ரிவர்ஸ் ஸ்விங் ஆகாது. ஆனால், டெஸ்ட் போட்டிக்கு முன் பந்தை தரத்தை அவர்கள் நன்கு அறிவார்கள். உள்ளூர் போட்டிகளுக்கு தயார் செய்யப்படும் ஆடுகளத்தை விட தரமான ஆடுகளத்தை தயார் செய்வார்கள். பிங்க் பந்து போட்டி சிறந்த ஆட்டமாக இருக்கும்.
புதிய பிங்க் பந்து முன்னதாகவே ரெட் பந்தை காட்டிலும் அதிக அளவில் ஸ்விங் ஆகும். இதனால் புதுப்பந்தை எதிர்கொள்ளுவது பேட்ஸ்மேன்களும்’’ என்றார்.
தற்போதைய இந்திய அணியில் முகமது ஷமி மற்றும் சகா ஆகியோர் மட்டுமே பிங்க் பந்தில் விளையாடியுள்ளனர். விராட் கோலி உள்பட மற்ற வீரர்கள் விளையாடியதில்லை.
உள்ளூர் தொடரான துலீப் டிராபியில் வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனத்கட் பிங்க் பந்தில் விளையாடியுள்ளார். அந்த அனுபவத்தை வைத்து பிங்க் பந்து புதிதாக இருக்கும்போது ரெட் பந்தை விட அதிக அளவில் ஸ்விங் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உனத்கட் கூறுகையில் ‘‘டெஸ்டில் பயன்படுத்தப்படும் ரெட் பந்தில் இருந்து முற்றிலுமாக மாறி பிங்க் பந்தை பயன்படுத்துவதால், அது எல்லோருக்கும் சவாலானதாக இருக்கும்.
எஸ்.ஜி. ரெட் பந்தை போன்று பிங்க் பந்து முன்னதாகவே ரிவர்ஸ் ஸ்விங் ஆகாது. ஆனால், டெஸ்ட் போட்டிக்கு முன் பந்தை தரத்தை அவர்கள் நன்கு அறிவார்கள். உள்ளூர் போட்டிகளுக்கு தயார் செய்யப்படும் ஆடுகளத்தை விட தரமான ஆடுகளத்தை தயார் செய்வார்கள். பிங்க் பந்து போட்டி சிறந்த ஆட்டமாக இருக்கும்.
புதிய பிங்க் பந்து முன்னதாகவே ரெட் பந்தை காட்டிலும் அதிக அளவில் ஸ்விங் ஆகும். இதனால் புதுப்பந்தை எதிர்கொள்ளுவது பேட்ஸ்மேன்களும்’’ என்றார்.
இந்தியா - வங்காளதேசம் இடையேயான முதல் டி20 போட்டி திட்டமிட்டபடி டெல்லியில் நடைபெறும் என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் டி 20 போட்டி வரும் 3-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகம் காணப்படுவதால், கிரிக்கெட் போட்டியை அங்கு நடத்த எதிர்ப்புகள் எழுந்தன.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கடிதம் எழுதியிருந்தனர். டெல்லி காற்றில் மூன்று நான்கு மணி நேரம் அணியில் விளையாடுவது வீரர்களை மோசமாக பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர். இதனால், திட்டமிட்டபடி டெல்லியில் முதல் டி20 போட்டி நடைபெறுமா? என்று கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி, முதல் டி20 போட்டி டெல்லியில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிசிசிஐ தலைவர் கங்குலிக்கு கடிதம் எழுதியிருந்தனர். டெல்லி காற்றில் மூன்று நான்கு மணி நேரம் அணியில் விளையாடுவது வீரர்களை மோசமாக பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர். இதனால், திட்டமிட்டபடி டெல்லியில் முதல் டி20 போட்டி நடைபெறுமா? என்று கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பிசிசிஐ தலைவர் கங்குலி, முதல் டி20 போட்டி டெல்லியில் திட்டமிட்டபடி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
மன அழுத்த பிரச்சினை காரணமாக கிரிக்கெட்டில் இருந்து தற்காலிக ஓய்வு பெற மேக்ஸ்வெல் முடிவு செய்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவர் மேக்ஸ்வெல். ஆல்ரவுண்டரான மேக்ஸ்வெல், அதிரடிக்கு பெயர் போனவர். அசாத்திய ஆட்டத்தின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள மேக்ஸ்வெல், சமீபத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் குறிப்பிடும்படியாக ஆடவில்லை.
தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடி வரும் அவர், திடீரென தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், ‘‘மேக்ஸ்வேல் மன அழுத்த பிரச்சினை காரணமாக கிரிக்கெட்டில் இருந்து சில காலம் விலகி இருக்க உள்ளார். தனது பிரச்சினையிலிருந்து அவர் விரைவில் மீண்டு வந்து மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேக்ஸ்வெல்லுக்கு ஆஸ்திரேலிய அணியின் மனநல மருத்துவர் ஆலோசனைகள் வழங்கி உதவி அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 28 பந்துகளில் 62 ரன்களை மேக்ஸ்வெல் விளாசித்தள்ளியது குறிப்பிடத்தக்கது.
தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடி வரும் அவர், திடீரென தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், ‘‘மேக்ஸ்வேல் மன அழுத்த பிரச்சினை காரணமாக கிரிக்கெட்டில் இருந்து சில காலம் விலகி இருக்க உள்ளார். தனது பிரச்சினையிலிருந்து அவர் விரைவில் மீண்டு வந்து மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேக்ஸ்வெல்லுக்கு ஆஸ்திரேலிய அணியின் மனநல மருத்துவர் ஆலோசனைகள் வழங்கி உதவி அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 28 பந்துகளில் 62 ரன்களை மேக்ஸ்வெல் விளாசித்தள்ளியது குறிப்பிடத்தக்கது.
ஆங்காங் அணிக்கு எதிரான போட்டியில் 12 ரன் வித்தியாத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஓமன் அணி 20 ஓவர் உலக கோப்பைக்கு தகுதி பெற்றது.
துபாய்:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2020) அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் 10 அணிகள் நேரடியாக விளையாடும். மீதியுள்ள 6 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.
இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இதில் இலங்கை, வங்காளதேசம் தவிர மற்ற 8 அணிகளும் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடும்.
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றன. இதில் 14 அணிகள் பங்கேற்றன. இதிலிருந்து 6 நாடுகள் தகுதி பெறும்.
பப்புவா நியூகினியா, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா ஆகிய 4 நாடுகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தின் மூலம் ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகளும் உலக கோப்பை போட்டிக்கு நுழைந்தன. கடைசி இரண்டு அணிகளாக இந்த அணிகள் தேர்வு பெற்றன.
ஆங்காங்குக்கு எதிரான போட்டியில் ஓமன் 12 ரன் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஓமன் அணி தகுதி பெற்றது.
உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்றில் ஒரு அரைஇறுதியில் அயர்லாந்து - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
மற்றொரு அரைஇறுதியில் பப்புவா நியூகினியா - நமிபியா அணிகள் மோதுகின்றன.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2020) அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது.
இந்த போட்டியில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. இதில் 10 அணிகள் நேரடியாக விளையாடும். மீதியுள்ள 6 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.
இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. இதில் இலங்கை, வங்காளதேசம் தவிர மற்ற 8 அணிகளும் நேரடியாக 2-வது சுற்றில் விளையாடும்.
20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகின்றன. இதில் 14 அணிகள் பங்கேற்றன. இதிலிருந்து 6 நாடுகள் தகுதி பெறும்.
பப்புவா நியூகினியா, அயர்லாந்து, நெதர்லாந்து, நமிபியா ஆகிய 4 நாடுகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த நிலையில் நேற்று நடந்த ஆட்டத்தின் மூலம் ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகளும் உலக கோப்பை போட்டிக்கு நுழைந்தன. கடைசி இரண்டு அணிகளாக இந்த அணிகள் தேர்வு பெற்றன.
ஆங்காங்குக்கு எதிரான போட்டியில் ஓமன் 12 ரன் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஓமன் அணி தகுதி பெற்றது.
உலக கோப்பை போட்டிக்கான தகுதி சுற்றில் ஒரு அரைஇறுதியில் அயர்லாந்து - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.
மற்றொரு அரைஇறுதியில் பப்புவா நியூகினியா - நமிபியா அணிகள் மோதுகின்றன.
மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கிறிஸ்ட்சர்சில் நாளை நடக்க உள்ள முதல் 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்துடன் மோதுகிறது.
கிறிஸ்ட்சர்ச்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் ஆட்டம் கிறிஸ்ட்சர்சில் நாளை நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.
மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் பேர்ஸ்டோவ், சாம் பில்ங்ஸ், கேப்டன் மார்கன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
சவுத்தி தலைமையிலான நியூசிலாந்து அணி உள்ளூரில் விளையாடுவது சாதகமானதே. கேப்டன் வில்லியம்சன் விளையாடாதது அந்த அணிக்கு சற்று பாதிப்பே.
நியூசிலாந்து அணியின் கிராண்ட்ஹோம், குப்தில், டெய்லர், காலின்முன்ரோ போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் நாளை மோதுவது 17-வது ஆட்டம் ஆகும். இதுவரை நடந்த 16 ஆட்டத்தில் இங்கிலாந்து 10-ல், நியூசிலாந்து 5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதும் 20 ஓவர் ஆட்டம் கிறிஸ்ட்சர்சில் நாளை நடக்கிறது. இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்குகிறது.
மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் பேர்ஸ்டோவ், சாம் பில்ங்ஸ், கேப்டன் மார்கன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
சவுத்தி தலைமையிலான நியூசிலாந்து அணி உள்ளூரில் விளையாடுவது சாதகமானதே. கேப்டன் வில்லியம்சன் விளையாடாதது அந்த அணிக்கு சற்று பாதிப்பே.
நியூசிலாந்து அணியின் கிராண்ட்ஹோம், குப்தில், டெய்லர், காலின்முன்ரோ போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
இரு அணிகளும் 20 ஓவர் போட்டியில் நாளை மோதுவது 17-வது ஆட்டம் ஆகும். இதுவரை நடந்த 16 ஆட்டத்தில் இங்கிலாந்து 10-ல், நியூசிலாந்து 5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லை.
இந்தியா - வங்காளதேச அணிகள் மோதும் பகல் இரவு டெஸ்ட் போட்டிக்கு 72 இளம் சிவப்பு பந்துகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது.
புதுடெல்லி:
வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக நேற்று இரவு இந்தியா வந்தது.
இந்தியா - வங்காளதேச அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் டெல்லியில் வருகிற 3-ந் தேதி நடக்கிறது. காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் இந்த ஆட்டம் நடைபெறுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. வேறு இடத்துக்கு போட்டி மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
10-ந் தேதியுடன் 20 ஓவர் தொடர் முடிகிறது. முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது.
கொல்கத்தா டெஸ்ட் பகல்-இரவாக நடக்கிறது. முதல் முறையாக இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது.
டெஸ்ட் போட்டியில் வழக்கமாக சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும். பகல்-இரவு டெஸ்டில் இளம் சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும். இந்தியாவில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் நடைபெறுவதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அனைத்து ஏற்பாடுகளையும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்டில் பயன்படுத்துவதற்காக 72 இளம் சிவப்பு பந்துகளை தயாரித்து அனுப்புமாறு கிரிக்கெட் வாரியம் தயாரிப்பு நிறுவனமான எஸ்.ஜி. அமைப்புடன் கேட்டுக்கொண்டுள்ளது.
எஸ்.ஜி. நிறுவனம் பகல்- இரவு டெஸ்டுக்காக இளம் சிவப்பு நிற பந்துகளை விசேஷமாக தயாரிக்கிறது.
வங்காளதேச கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக நேற்று இரவு இந்தியா வந்தது.
இந்தியா - வங்காளதேச அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் டெல்லியில் வருகிற 3-ந் தேதி நடக்கிறது. காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் இந்த ஆட்டம் நடைபெறுமா? என்று கேள்வி எழுந்துள்ளது. வேறு இடத்துக்கு போட்டி மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
10-ந் தேதியுடன் 20 ஓவர் தொடர் முடிகிறது. முதல் டெஸ்ட் போட்டி இந்தூரில் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நவம்பர் 22-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை நடக்கிறது.
கொல்கத்தா டெஸ்ட் பகல்-இரவாக நடக்கிறது. முதல் முறையாக இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது.
டெஸ்ட் போட்டியில் வழக்கமாக சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும். பகல்-இரவு டெஸ்டில் இளம் சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும். இந்தியாவில் முதல் முறையாக பகல்-இரவு டெஸ்ட் நடைபெறுவதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அனைத்து ஏற்பாடுகளையும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்டில் பயன்படுத்துவதற்காக 72 இளம் சிவப்பு பந்துகளை தயாரித்து அனுப்புமாறு கிரிக்கெட் வாரியம் தயாரிப்பு நிறுவனமான எஸ்.ஜி. அமைப்புடன் கேட்டுக்கொண்டுள்ளது.
எஸ்.ஜி. நிறுவனம் பகல்- இரவு டெஸ்டுக்காக இளம் சிவப்பு நிற பந்துகளை விசேஷமாக தயாரிக்கிறது.
வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆணிவேராக விளங்கிய ஷகிப் அல்-ஹசனுடன், சூதாட்ட தரகர் ‘வாட்ஸ் அப்’ மூலம் பேசிய விவரத்தை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆணிவேராக விளங்கிய ஷகிப் அல்-ஹசனுடன், சூதாட்ட தரகர் தீபக் அகர்வால் ‘வாட்ஸ் அப்’ மூலம் பேசிய விவரத்தை ஐ.சி.சி. வெளியிட்டு இருக்கிறது. ஷகிப் அல்-ஹசனின் செல்போன் நம்பரை அவருடைய நண்பர் மூலம் வாங்கிய சூதாட்ட தரகர் 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் முதல்முறையாக அவரை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது ஷகிப் அல்-ஹசன் வங்காளதேச பிரிமியர் லீக் போட்டியில் டாக்கா டைனமைட்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த சமயத்தில் வங்காளதேச பிரிமியர் லீக் போட்டியில் விளையாடிய மற்ற வீரர்களின் செல்போன் நம்பரை கேட்டு இருக்கிறார். அதன் பிறகு இருவர் இடையே பலமுறை உரையாடல் நடந்து இருக்கிறது.
2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த இலங்கை, ஜிம்பாப்வே, வங்காளதேச அணிகள் இடையிலான முத்தரப்பு தொடரில் ஷகிப் அல்-ஹசன் ஆடிய போதும் அந்த சூதாட்ட தரகர் தொடர்பு கொண்டுள்ளார். அதில் ஜனவரி 19-ந் தேதி நடந்த போட்டியில் ஷகிப் அல்-ஹசன் ஆட்டநாயகன் விருது பெற்றதும் வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார். அதைத்தொடர்ந்து அனுப்பிய ஒரு செய்தியில், ‘இந்த தொடரில் நாம் இணைந்து பணியாற்றலாமா? அல்லது ஐ.பி.எல். போட்டி வரை காத்திருக்கவா?’ என்று கேட்டுள்ளார். இதில் பணியாற்றலாமா என்ற வார்த்தை அணி குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல் என்று அர்த்தமாம். அதன் பிறகு ஜனவரி 23-ந் தேதி ஷகிப் அல்-ஹசனுக்கு அனுப்பிய குறுந்தகவலில், ‘சகோதரா இந்த தொடரில் ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா?’ என்று கேட்டுள்ளார்.
2018-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணிக்காக ஆடிய போதும் ஷகிப் அல்-ஹசனுக்கு தூண்டில் போட்டுள்ளார். அப்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு வீரர் பெயரை குறிப்பிட்டு அவர் களம் இறங்குவாரா? என்று கேட்டு இருக்கிறார். மேலும் பிட்காயின்ஸ், டாலர், வங்கி கணக்கு உள்பட பல விஷயங்கள் குறித்து இருவருக்கும் இடையே உரையாடல் நடந்து இருக்கிறது. நேரில் சந்திக்க வேண்டும் என்று சூதாட்ட தரகர் வேண்டுகோள் வைத்து இருக்கிறார். ஆனால் இதில் எந்தவொரு உரையாடலையும் தனது அணி நிர்வாகத்துக்கோ? அல்லது ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவினருக்கோ? ஷகிப் அல்-ஹசன் தெரிவிக்கவில்லை. அத்துடன் தனது உரையாடல் பதிவை அழித்து விட்டார். ஆனால் ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவினரின் விசாரணையின் போது தன்னை சூதாட்ட தரகர் அணுகியதை மறைத்தது உண்மை தான் என்று ஷகிப் அல்-ஹசன் ஒப்புக்கொண்டுள்ளார். அதே சமயம் சூதாட்ட தரகரை சந்திக்கவில்லை என்றும் அவருக்கு தகவல் எதுவும் அளிக்கவில்லை என்றும் மறுத்துள்ளார்.
வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசனுக்கு இன்னும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
சூதாட்ட தரகர் அணுகியதை தெரிவிக்காததால் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசனுக்கு இன்னும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
வங்காளதேச டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனும், உலகின் ‘நம்பர் ஒன்’ ஆல்-ரவுண்டருமான ஷகிப் அல்-ஹசனை, இந்தியாவை சேர்ந்த சூதாட்ட தரகர் தீபக் அகர்வால் 2017-ம் ஆண்டு முதல் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது அம்பலமானது. ஆடும் லெவன் அணி குறித்த விவரம் மற்றும் ஆட்ட வியூகம் பற்றிய பல்வேறு தகவல்களை சூதாட்ட தரகர் கேட்டு இருக்கிறார். இருவருக்கும் இடையிலான ‘வாட்ஸ்-அப்’ உரையாடலை கண்டுபிடித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவினர், ஷகிப் அல்-ஹசனிடம் விசாரணை நடத்தினர். அப்போது சூதாட்ட தரகர் தன்னை தொடர்பு கொண்டதை தெரிவிக்காமல் மறைத்தது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து ஷகிப் அல்-ஹசன் 2 ஆண்டுகள் விளையாட தடை விதித்து ஐ.சி.சி. நேற்று முன்தினம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதில் முதல் ஒரு ஆண்டு அவர் எந்த போட்டியிலும் பங்கேற்க முடியாது. அடுத்த ஒரு ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்ட தண்டனையாகும். முதல் ஆண்டில் ஷகிப் அல்-ஹசனின் நடத்தையை பொறுத்து நிறுத்தி வைக்கப்பட்ட தண்டனையில் தளர்வு செய்யப்படும்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ்ராஜா கருத்து தெரிவிக்கையில், ‘ஷகிப் அல்-ஹசன் தடை எல்லா விளையாட்டு ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் ஒரு பாடமாகும். நீங்கள் ஆட்டத்தை அவமதிப்பதுடன், கிரிக்கெட்டை விட தன்னை பெரிய ஆளாக காட்ட முயற்சிக்கும் வகையில் விதிமுறையை மதிக்காமல் செயல்பட்டால் பெரிய சரிவை தான் சந்திக்க நேரிடும்’ என்றார்.
ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் தனது டுவிட்டர் பதிவில், ‘வீரர்களுக்கு பல முறை ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவினர் விதிமுறையை எடுத்து சொல்லிய பிறகும் ஷகிப் அல்-ஹசன் தன்னை தரகர் அணுகிய விஷயம் குறித்து தகவல் தெரிவிக்காதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஷகிப் அல்-ஹசன் விவகாரம் குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் அளித்த பேட்டியில், ‘ஷகிப் அல்-ஹசனிடம் ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணை குறித்து எனக்கோ? வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த வேறு யாருக்குமோ? முன்கூட்டியே தெரியாது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஜனவரி மாதத்தில் இருந்தே இந்த விசாரணை நடைபெற்று இருக்கிறது. ஊழல் தடுப்பு பிரிவு தனிப்பட்ட அமைப்பாகும். ஷகிப் அல்-ஹசனிடம் மட்டுமே விசாரணை குறித்து பேசி இருக்கின்றனர். இந்த விஷயத்தை மூன்று நாட்களுக்கு முன்பு தான் அவர் என்னிடம் தெரிவித்தார். ஷகிப் அல்-ஹசன் இடத்தை நிரப்ப தகுதியான வீரர் எங்களிடம் கிடையாது. உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான அவர் விளையாட முடியாமல் போனது உண்மையிலேயே எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. நாங்கள் இந்தியாவில் முதல்முறையாக முழுமையான போட்டித் தொடரில் விளையாட இருக்கிறோம். அத்துடன் இந்த போட்டி தொடரில் இருந்து தான் எங்களுடைய டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்குகிறது. ஷகிப் அல்-ஹசனை மனதில் வைத்து தான் இந்த தொடருக்கான எல்லா திட்டங்களையும் நாங்கள் வகுத்து இருந்தோம்’ என்று தெரிவித்தார்.
வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வாளருமான ஹபிபுல் பஷர் கூறுகையில், ‘முதிர்ச்சியான ஒரு கிரிக்கெட் வீரரான ஷகிப் அல்-ஹசன் சூதாட்ட தரகர் அணுகியதை ஐ.சி.சி.யிடம் தெரிவிக்கவில்லை என்பதை நம்ப கடினமாக இருக்கிறது. இது எனக்கு அதிர்ச்சி அளிப்பதுடன், வங்காளதேச கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். தடை காலம் முடிந்து அவர் மீண்டும் களம் திரும்பி பழைய ஆட்ட நிலையை எட்டுவது என்பது மிகவும் கடினமானதாகும்’ என்றார்.
இதற்கிடையே, சூதாட்ட சர்ச்சையால் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து ஷகிப் அல்-ஹசன், கிரிக்கெட் விதிகளை வகுப்பதில் தாயகமாக விளங்கும் மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் (எம்.சி.சி.) உலக கிரிக்கெட் கமிட்டியில் இருந்து விலகி இருக்கிறார். முன்னாள், இன்னாள் வீரர்கள் மற்றும் நடுவர்களை உள்ளடக்கிய இந்த கிரிக்கெட் கமிட்டியில் 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து ஷகிப் அல்-ஹசன் அங்கம் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சூதாட்ட தரகர் அணுகியதை தெரிவிக்காததால் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட வங்காளதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹசனுக்கு இன்னும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
வங்காளதேச டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டனும், உலகின் ‘நம்பர் ஒன்’ ஆல்-ரவுண்டருமான ஷகிப் அல்-ஹசனை, இந்தியாவை சேர்ந்த சூதாட்ட தரகர் தீபக் அகர்வால் 2017-ம் ஆண்டு முதல் பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியது அம்பலமானது. ஆடும் லெவன் அணி குறித்த விவரம் மற்றும் ஆட்ட வியூகம் பற்றிய பல்வேறு தகவல்களை சூதாட்ட தரகர் கேட்டு இருக்கிறார். இருவருக்கும் இடையிலான ‘வாட்ஸ்-அப்’ உரையாடலை கண்டுபிடித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவினர், ஷகிப் அல்-ஹசனிடம் விசாரணை நடத்தினர். அப்போது சூதாட்ட தரகர் தன்னை தொடர்பு கொண்டதை தெரிவிக்காமல் மறைத்தது உண்மை தான் என்று ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து ஷகிப் அல்-ஹசன் 2 ஆண்டுகள் விளையாட தடை விதித்து ஐ.சி.சி. நேற்று முன்தினம் அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதில் முதல் ஒரு ஆண்டு அவர் எந்த போட்டியிலும் பங்கேற்க முடியாது. அடுத்த ஒரு ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்ட தண்டனையாகும். முதல் ஆண்டில் ஷகிப் அல்-ஹசனின் நடத்தையை பொறுத்து நிறுத்தி வைக்கப்பட்ட தண்டனையில் தளர்வு செய்யப்படும்.
ஷகிப் அல்-ஹசன் மீதான தடையை முன்னாள் வீரர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். இது குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தனது டுவிட்டர் பதிவில், ‘ஷகிப் அல்-ஹசன் மீது எனக்கு எந்தவித அனுதாபமும் இல்லை. இந்த காலகட்டத்தில் வீரர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது குறித்து எல்லா நேரங்களிலும் எடுத்து சொல்லப்படுகிறது. ஏதாவது நடந்தால் அது குறித்து உடனடியாக புகார் தெரிவிக்க வேண்டும் என்பதும் வீரர்களுக்கு தெரியும். அப்படி இருக்கையில் தன்னை சூதாட்ட தரகர் அணுகிய தகவலை தெரிவிக்காத ஷகிப் அல்-ஹசனுக்கு 2 ஆண்டு தடை விதித்தது போதாது. இன்னும் கடுமையாக நீண்ட கால தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும். யார் என்ன சொன்னாலும், ஊழலை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். விதியை பின்பற்றாவிட்டால் விளைவுகளை சந்திக்க தான் வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரமீஸ்ராஜா கருத்து தெரிவிக்கையில், ‘ஷகிப் அல்-ஹசன் தடை எல்லா விளையாட்டு ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும் ஒரு பாடமாகும். நீங்கள் ஆட்டத்தை அவமதிப்பதுடன், கிரிக்கெட்டை விட தன்னை பெரிய ஆளாக காட்ட முயற்சிக்கும் வகையில் விதிமுறையை மதிக்காமல் செயல்பட்டால் பெரிய சரிவை தான் சந்திக்க நேரிடும்’ என்றார்.
ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் தனது டுவிட்டர் பதிவில், ‘வீரர்களுக்கு பல முறை ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவினர் விதிமுறையை எடுத்து சொல்லிய பிறகும் ஷகிப் அல்-ஹசன் தன்னை தரகர் அணுகிய விஷயம் குறித்து தகவல் தெரிவிக்காதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஷகிப் அல்-ஹசன் விவகாரம் குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹசன் அளித்த பேட்டியில், ‘ஷகிப் அல்-ஹசனிடம் ஐ.சி.சி. ஊழல் தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணை குறித்து எனக்கோ? வங்காளதேச கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த வேறு யாருக்குமோ? முன்கூட்டியே தெரியாது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். ஜனவரி மாதத்தில் இருந்தே இந்த விசாரணை நடைபெற்று இருக்கிறது. ஊழல் தடுப்பு பிரிவு தனிப்பட்ட அமைப்பாகும். ஷகிப் அல்-ஹசனிடம் மட்டுமே விசாரணை குறித்து பேசி இருக்கின்றனர். இந்த விஷயத்தை மூன்று நாட்களுக்கு முன்பு தான் அவர் என்னிடம் தெரிவித்தார். ஷகிப் அல்-ஹசன் இடத்தை நிரப்ப தகுதியான வீரர் எங்களிடம் கிடையாது. உலகின் சிறந்த வீரர்களில் ஒருவரான அவர் விளையாட முடியாமல் போனது உண்மையிலேயே எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. நாங்கள் இந்தியாவில் முதல்முறையாக முழுமையான போட்டித் தொடரில் விளையாட இருக்கிறோம். அத்துடன் இந்த போட்டி தொடரில் இருந்து தான் எங்களுடைய டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்குகிறது. ஷகிப் அல்-ஹசனை மனதில் வைத்து தான் இந்த தொடருக்கான எல்லா திட்டங்களையும் நாங்கள் வகுத்து இருந்தோம்’ என்று தெரிவித்தார்.
வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வாளருமான ஹபிபுல் பஷர் கூறுகையில், ‘முதிர்ச்சியான ஒரு கிரிக்கெட் வீரரான ஷகிப் அல்-ஹசன் சூதாட்ட தரகர் அணுகியதை ஐ.சி.சி.யிடம் தெரிவிக்கவில்லை என்பதை நம்ப கடினமாக இருக்கிறது. இது எனக்கு அதிர்ச்சி அளிப்பதுடன், வங்காளதேச கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். தடை காலம் முடிந்து அவர் மீண்டும் களம் திரும்பி பழைய ஆட்ட நிலையை எட்டுவது என்பது மிகவும் கடினமானதாகும்’ என்றார்.
இதற்கிடையே, சூதாட்ட சர்ச்சையால் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து ஷகிப் அல்-ஹசன், கிரிக்கெட் விதிகளை வகுப்பதில் தாயகமாக விளங்கும் மெரில்போர்ன் கிரிக்கெட் கிளப்பின் (எம்.சி.சி.) உலக கிரிக்கெட் கமிட்டியில் இருந்து விலகி இருக்கிறார். முன்னாள், இன்னாள் வீரர்கள் மற்றும் நடுவர்களை உள்ளடக்கிய இந்த கிரிக்கெட் கமிட்டியில் 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து ஷகிப் அல்-ஹசன் அங்கம் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஆடுகளத்தில் அதிக புற்கள் இருக்க வேண்டும் என்று பிட்ச் பராமரிப்பாளர் தல்ஜித் யோசனை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவில் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆடுகளம் தயாரிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து 22 ஆண்டு கால அனுபவம் வாய்ந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் ஆடுகள தயாரிப்பாளர் தல்ஜித் சிங் சில யோசனைகளை முன்வைத்துள்ளார். 77 வயதான தல்ஜித் கூறியதாவது:-
இந்த டெஸ்ட் போட்டியின்போது இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுதான் கவலைக்குரிய அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. பனிப்பொழிவை தடுப்பது நமது கையில் இல்லை. அவுட்பீல்டில் புற்கள் உயரமாக இருக்கும்போது, பனித்துளி அதன் மீது அதிக அளவில் படரும். பந்தும் எளிதில் ஈரமாகி விடும். இதை தவிர்க்கும் வகையில் அவுட்பீல்டில் உள்ள புற்களின் உயரத்தை குறைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். வழக்கமாக அவுட் பீல்டில் 7-8 மில்லிமீட்டர் உயரத்துக்கு புற்கள் இருக்கும். பகல்-இரவு டெஸ்டில் 6 மில்லிமீட்டர் அளவுக்கு குறைக்கலாம். இவ்வாறு செய்தால் பனிப்பொழிவின் பாதிப்பை வெகுவாக குறைக்கலாம். ஆனால் பனியை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க்) சீக்கிரமாகவே அழுக்காகி விடும். எனவே ஆடுகளத்தில் (பிட்ச்) தொடர்ந்து அதிகமான புற்கள் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். 2015-ம் ஆண்டு அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் (ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதிய ஆட்டம்) அவர்கள் 11 மில்லிமீட்டர் உயரத்துக்கு ஆடுகளத்தில் புற்களை விட்டு வைத்திருந்தனர். புற்களுடன் கூடிய ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.
இவ்வாறு தல்ஜித் கூறினார்.
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் ஆடுகள பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜீ கூறுகையில், ‘பனிப்பொழிவை சமாளிக்க நிறைய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இரவு 8 அல்லது 8.30 மணியில் இருந்து நள்ளிரவு வரை பனிப்பொழிவு இருக்கும். ஆட்டத்தை முன்கூட்டியே தொடங்கினால் 8.30 மணிக்குள் முடித்து விடலாம். அப்போது பனிப்பிரச்சினை இருக்கவே இருக்காது’ என்றார்.
இதற்கிடையே பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்துவதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் எஸ்.ஜி. நிறுவனத்திடம் 72 இளஞ்சிவப்பு நிற பந்துக்கு ஆர்டர் செய்துள்ளது. அடுத்த வாரத்தில் அதை கிரிக்கெட் வாரியத்திற்கு சப்ளை செய்து விடுவோம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்தியா-வங்காளதேச அணிகள் மோதும் வரலாற்று சிறப்பு மிக்க இந்த டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான ஆடுகளம் தயாரிப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து 22 ஆண்டு கால அனுபவம் வாய்ந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் ஆடுகள தயாரிப்பாளர் தல்ஜித் சிங் சில யோசனைகளை முன்வைத்துள்ளார். 77 வயதான தல்ஜித் கூறியதாவது:-
இந்த டெஸ்ட் போட்டியின்போது இரவில் பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுதான் கவலைக்குரிய அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது. பனிப்பொழிவை தடுப்பது நமது கையில் இல்லை. அவுட்பீல்டில் புற்கள் உயரமாக இருக்கும்போது, பனித்துளி அதன் மீது அதிக அளவில் படரும். பந்தும் எளிதில் ஈரமாகி விடும். இதை தவிர்க்கும் வகையில் அவுட்பீல்டில் உள்ள புற்களின் உயரத்தை குறைக்கும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும். வழக்கமாக அவுட் பீல்டில் 7-8 மில்லிமீட்டர் உயரத்துக்கு புற்கள் இருக்கும். பகல்-இரவு டெஸ்டில் 6 மில்லிமீட்டர் அளவுக்கு குறைக்கலாம். இவ்வாறு செய்தால் பனிப்பொழிவின் பாதிப்பை வெகுவாக குறைக்கலாம். ஆனால் பனியை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு நிற பந்து (பிங்க்) சீக்கிரமாகவே அழுக்காகி விடும். எனவே ஆடுகளத்தில் (பிட்ச்) தொடர்ந்து அதிகமான புற்கள் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். 2015-ம் ஆண்டு அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் (ஆஸ்திரேலியா-நியூசிலாந்து மோதிய ஆட்டம்) அவர்கள் 11 மில்லிமீட்டர் உயரத்துக்கு ஆடுகளத்தில் புற்களை விட்டு வைத்திருந்தனர். புற்களுடன் கூடிய ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும்.
இவ்வாறு தல்ஜித் கூறினார்.
பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் ஆடுகள பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜீ கூறுகையில், ‘பனிப்பொழிவை சமாளிக்க நிறைய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இரவு 8 அல்லது 8.30 மணியில் இருந்து நள்ளிரவு வரை பனிப்பொழிவு இருக்கும். ஆட்டத்தை முன்கூட்டியே தொடங்கினால் 8.30 மணிக்குள் முடித்து விடலாம். அப்போது பனிப்பிரச்சினை இருக்கவே இருக்காது’ என்றார்.
இதற்கிடையே பகல்-இரவு டெஸ்ட் போட்டிக்கு பயன்படுத்துவதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் எஸ்.ஜி. நிறுவனத்திடம் 72 இளஞ்சிவப்பு நிற பந்துக்கு ஆர்டர் செய்துள்ளது. அடுத்த வாரத்தில் அதை கிரிக்கெட் வாரியத்திற்கு சப்ளை செய்து விடுவோம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் ஷாகிப் அல் ஹசன் இல்லாதது எங்களுக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும் என வங்காளதேச கேப்டன் மெஹ்முதுல்லா தெரிவித்துள்ளார்.
இந்தியா - வங்காளதேச அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்தத் தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேச அணி இன்று டெல்லி வந்துள்ளது.
ஷாகிப் அல் ஹசன் இரண்டு ஆண்டு தடையால் விளையாட முடியாமல் போனது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஷாகிப் அல் ஹசன் இல்லாதது எங்களுக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும் என வங்காளதேச டி20 அணி கேப்டன் மெஹ்முதுல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெஹ்முதுல்லா கூறுகையில் ‘‘ஷாகிப் அல் ஹசன் இல்லாதது எங்களை மேலும் உழைக்க உத்வேகமாக உருவாக்கும். நாட்டுக்காக விளையாடுவதை விட மிகப்பெரிய கவுரவம் ஏதும் இருக்க முடியாது. அணியை நடத்தும் பொறுப்பு எனக்குள்ளது. அதனால் என்னுடைய ஒட்டுமொத்த ஆட்டத்தையும் அணிக்காக வெளிப்படுத்த முயற்சி செய்வேன்’’ என்றார்.
ஷாகிப் அல் ஹசன் இரண்டு ஆண்டு தடையால் விளையாட முடியாமல் போனது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஷாகிப் அல் ஹசன் இல்லாதது எங்களுக்கு கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும் என வங்காளதேச டி20 அணி கேப்டன் மெஹ்முதுல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மெஹ்முதுல்லா கூறுகையில் ‘‘ஷாகிப் அல் ஹசன் இல்லாதது எங்களை மேலும் உழைக்க உத்வேகமாக உருவாக்கும். நாட்டுக்காக விளையாடுவதை விட மிகப்பெரிய கவுரவம் ஏதும் இருக்க முடியாது. அணியை நடத்தும் பொறுப்பு எனக்குள்ளது. அதனால் என்னுடைய ஒட்டுமொத்த ஆட்டத்தையும் அணிக்காக வெளிப்படுத்த முயற்சி செய்வேன்’’ என்றார்.
டெல்லியில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
புதுடெல்லி:
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு மைதானத்தில் இன்று இரவு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி, கொல்கத்தா அணிகள் மோதின.
ஆட்டத்தின் தொடக்கம் முதல் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியின் முடிவில் 0-0 என சமனிலை வகித்தன.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 48வது நிமிடத்தில் கொல்கத்தா அணி வீரர் டேவிட் வில்லியம்ஸ் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார். அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முடியவில்லை.
இறுதியில், கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இரண்டாவது வெற்றியை பதிவுசெய்துள்ள கொல்கத்தா அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.






