என் மலர்tooltip icon

    விளையாட்டு

    காஷ்மீரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் தொடர் ஒன்றில் 2.5 கிலோ கொண்ட மீன் ஒன்று ஆட்டநாயகன் விருதாக வழங்கப்பட்டது.
    காஷ்மீரில் உள்ள மைதானம் ஒன்றில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றிருக்கிறது. அந்த மைதானம் மோசமான நிலையில் இருந்ததால், அங்கு கிரிக்கெட் வீரர்கள் விளையாடுவதில் பெரும் சிரமம் இருந்தது. இதனால் அந்த கிரிக்கெட் மைதானத்தை சீரமைக்க நினைத்த உள்ளூர் கிரிக்கெட் குழுவினர், தங்களிடம் இருந்த சொந்தப் பணத்தை செலவழித்து தயார் செய்துள்ளனர். இன்னும் அங்கு பல வேலைகள் இருப்பதால் அந்த மைதானத்தை தயார் செய்ய நிதியுதவியை எதிர்பார்த்துள்ளனர்.

    இந்நிலையில் அங்கு நடந்த கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்தி, அதன்மூலம் மைதானத்தின் மீது கவனத்தை திருப்ப அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அவர்கள் பெரிய அளவு மீன்களை வாங்கி, அதை போட்டியில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு ஆட்டநாயகன் விருதாக கொடுத்திருக்கின்றனர்.

    இந்த நிகழ்வு உள்ளூர்வாசிகளின் கவனத்தை ஈர்த்தது. இந்த காட்சியை காஷ்மீரை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் தனது ட்விட்டரில் பகிர, அதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

    கிரிக்கெட் உலகில் எத்தனையோ ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மீன் என்பது யாரும் கண்டிராத ஒன்றாக திகழ்கிறது. 2017-ம் ஆண்டு இலங்கையில் நடந்த தொடர் ஒன்றில் ஜஸ்ப்ரித் பும்ராவிற்கு மினி வேன் ஒன்று ஆட்டநாயகன் விருதாக வழங்கப்பட்டது.

    டாகா பிரிமியர் லீக் போட்டியில் இங்கிலாந்தை சேர்ந்த அறிமுக வீரர் ஒருவருக்கு கலவை மிஷின் கொடுக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு இங்கிலாந்து வீரர் இயான் மோர்கன் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சன் சைன் எனும் நிறுவனத்தின் ஸ்நாக்ஸை ஆட்டநாயகன் விருதாக பெற்றிருக்கிறார்.
    இளம் வீரர் தேவ்தத் அரைசதம் அடிக்க ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 11 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்துள்ளது.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்சரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி துபாயில் நடைபெற்ற வருகிறது. சன்சரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆரோன் பிஞ்ச் நிதானமாக விளையாட தேவ்தத் படிக்கல் சன்சரைசர்ஸ் ஐதராபாத் பந்து வீச்சை தெறிக்கவிட்டார். இதனால் ஆர்சிபி ரன் விகிதம் சராசரியாக உயர்ந்து கொண்டு வந்தது.

    பவர் பளேயில் விக்கெட் இழபபிற்கு 53 ரன்கள் சேர்த்தது. 9-வது ஓவரை ரஷித் கான் வீசினார். இந்த ஓவரில் பிஞ்ச் தலா ஒரு பவுண்டரி, சிக்ஸ் விளாசினார்.

    10-வது ஓவரை அபிஷேக் சர்மா வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஆர்சிபி அணிக்காத தனது அறிமுக போட்டியிலேயே அரைசதம் அடித்தார். 36 பந்தில் 8 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார்.

    10 ஓவர் முடிவில் ஆர்சிபி விக்கெட் இழப்பின்றி 86 ரன்கள் எடுத்திருந்தது. 11 ஓவரை விஜய் சங்கர் வீசினார். இந்த ஓவரில் தேவ்தத் 42 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
    ஐபிஎல் 2020 சீசனின் 3-வது ஆட்டம் இன்று துபாயில் நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி ‘‘அணியில் நாங்கள் சில மாறுதல்களை கொண்டு வந்துள்ளோம். நாங்கள் பேலன்ஸ் மற்றும் ரிலாக்ஸ் அணியாக உணர்கிறோம். இந்த நேரத்தில் அதிக தலைவரக்ளை உருவாக்க ஐடியா வைத்துள்ளோம்’’ என்றார.

    ஆர்சிபி அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஆரோன் பிஞ்ச், 2. தேவ்தத் படிக்கல், 3. விராட் கோலி, 4. டி வில்லியர்ஸ், 5. டுபே, 6. வாஷிங்டன் சுந்தர், 7. ஜோஷ் பிலிப்பே, 8. உமேஷ் யாதவ், 9. நவ்தீப் சைனி, 10. டெல் ஸ்டெயின், 11. சாஹல்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. மணிஷ் பாண்டே, 4. விஜய் சங்கர், 5. மிட்செல் மார்ஷ், 6. பிரியம் கார்க், 7. அபிஷேக் சர்மா, 8. ரஷித் கான், 9. புவனேஷ்வர் குமார், 10. சந்தீப் ஷர்மா, 11. டி. நடராஜன்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக சிறந்த காட்சியை அரங்கேற்ற எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
    ஐ.பி.எல். கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 7-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. இதனால் இந்த முறை சிறப்பான வகையில விளையாட விரும்புகிறது. பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக விளையாடவில்லை.

    இருந்தாலும் மீதமுள்ள சிறந்த வீரர்களை கொண்டு சிறந்த காட்சியை வெளிப்படுத்த காத்துக் கொண்டிருக்கிறோம் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில் ‘‘இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டியை உண்மையிலேயே தவறவிட்டேன். துபாய்க்கு வந்து இரண்டு நாட்கள் நல்ல முறையில் ஓய்வு எடுத்தேன். அதன்பின் ஓட்டப் பயிற்சி மேற்கொண்டேன். நேற்று ஜிக்-ஜாக் ரன்னிங் எடுத்துக் கொண்டு பாதுகாப்பு வழிகாட்டுதல் நடைமுறைப்படி இன்று விளையாடுவதற்கு அனுமதி பெற்றுள்ளேன்.

    இன்று வலைப்பயிற்சி மேற்கொண்டு நாளை போட்டிக்கு தயாராகிவிடுவேன் என்று நம்புகிறேன். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரகள் கடந்த ஒரு மாதமாக இங்கே உள்ளனர். சிறப்பான முறையில் பயிற்சி மேற்கொண்டதாக அறிந்தேன். இது அனுபவ மற்றும் இளம் வீரர்களுக்கு சிறப்பாக அமைந்தது. நாங்கள் இந்த வருட்ம சிறப்பு வாய்ந்த அணியை பெற்றுள்ளோம். உண்மையிலேயே வலிமையான அணி. போட்டிக்கு நாங்கள் தயாராகிவிட்டோம்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை நாங்கள் பார்த்தோம். சென்னை சிறப்பாக விளையாடி போட்டியை முடித்தார்கள். சென்னை அணிக்கெதிராக சிறப்பான நிகழ்ச்சியை நடத்துவோம், தொடரை சிறப்பாக தொடங்குவோம் என்று நம்புகிறோம்’’ என்றார்.
    பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தில் காயம் அடைந்த அஸ்வின் 25-ம் தேதி சென்னை அணிக்கெதிரான போட்டிக்கு தயாராகி விடுவார் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. டெல்லி அணிக்காக விளையாடிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட் வீழ்த்தினார். என்றாலும் அந்த ஓவரின் கடைசி பந்தை ரன் எடுக்க விடாமல் தடுக்க கிழே விழுந்தார். அப்போது அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

    இதனால் அவர் உடனடியாக வெளியேறினார். அதன்பின் பந்துவீசவில்லை. காயத்தால் அடுத்த போட்டியில் களம் இறங்குவாரா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் 25-ந்தேதி சிஎஸ்கே அணிக்கெதிராக நிச்சயம் விளையாடுவார் என்று டெல்லி அணி தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ரிக்கி பாண்டிங் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘அஸ்வினுக்கு ஏற்பட்ட காயம் பற்றி விரைவில் கண்டறிவோம். சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக அவர் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. போட்டியை நாங்கள் தொடங்கிய பிறகு, கடுமையாக போரிட்டது த்ரில் ஆன விசயம். ஸ்டாய்னிஸ் பேட்டிங் மற்றும் பந்து வீச்சிலும், ரபடா சூப்பர் ஓவரிலும் அசத்தினர்’’ என்றார்.
    சூப்பர் ஓவரில் தோல்வியடைந்த நிலையில், உடனடியாக அதில் இருந்து மீண்டு வருவோம் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. முதல் மூன்று பந்துகளில் 12 ரன்கள் அடித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியால், கடைசி மூன்று பந்தில் ஒரு ரன் அடிக்க முடியாமல் போனது.

    இதனால் போட்டி ‘டை’யில் முடிந்து சூப்பர் ஓவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் தோல்வியை தழுவியது. இந்நிலையில் அடுத்த போட்டியில் விசயங்களை சரியாக செய்வோம் என பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘நாங்கள் விளையாடிய விதம் மிகவும் பெருமையாக இருக்கிறது. நாங்கள் வெற்றி பெற்றிருக்கனும், துரதிருஷ்டவசமாக, சூப்பர் ஓவர் வரை சென்றுவிட்டது. சூப்பர் ஓவரில் குறைந்தது 10 முதல் 12 ரன்கள் தேவை. எங்களால் அதை எடுக்க முடியவில்லை. டெல்லி அணி சிறப்பாக விளையாடியது. நாங்கள் அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிட்டோம். ஆனால், தொடரின் முதல் போட்டி என்பதால் விளையாடிய விதம் திருப்தி அளிக்கும் விதமாக இருந்தது. ஆடுகளத்தில் நாங்கள் செய்ய வேண்டிய சிறு சிறு விசயங்களை சரிசெய்து கொள்வோம்’’ என்றார்.
    ஜோர்டான் இரண்டு ரன்களுக்கு ஓடும்போது க்ரீஸை தொடவில்லை என்று நடுவர் ஒரு ரன்னை குறைத்ததால் தோல்வியடைந்தோம் என பஞ்சாப் அணி குற்றம்சாட்டியுள்ளது.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 157 ரன்கள் எடுத்தது. 2-வது 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி களம் இறங்கியது, அந்த அணிக்கு கடைசி இரண்டு பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. ஆனால் இரண்டு பந்திலும் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் போட்டி ‘டை’யில் முடிந்தது.

    போட்டி ‘டை’யில் முடிந்ததால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி பெற்றது. 

    முதலில் விளையாடும்போது ஜோர்டான் இரண்டு ரன்களுக்கு ஓடினார். அப்போது க்ரீஸை தொடவில்லை (Short-run) என நடுவர் நிதின் மேனன் ஒரு ரன்னை கழித்துவிட்டார். ஆனால் டி.வி. ரீ-பிளேயில் ஜோர்டான் பேட்டை க்ரீஸ்-க்குள் வைத்தது தெளிவாக தெரிந்தது. இந்த ஒரு ரன்தான் மிகப்பெரிய இழப்பை சந்திக்க நேரிட்டது என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அப்பீல் செய்தது.

    இதுகுறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சிஇஓ சதீஷ் மேனன் கூறியதாவது ‘‘நாங்கள் போட்டி நடுவரிடம் அப்பீல் செய்தோம். மனிதர்கள் தவறு செய்வது இயல்பு என்பதை புரிந்து கொள்கிறோம். ஐபிஎல் போன்ற உலகத்தரம் வாய்ந்த தொடரில் இதுபோன்ற மனித தவறுகளுக்கு வழி வைக்கக் கூடாது. இந்த ஒரு ரன் எங்களுடைய பிளே-ஆஃப்ஸ் வாய்ப்பை கூட பறித்துவிடும்.

    இழந்த போட்டி இழந்ததுதான். இது நியாயமானது அல்ல. விதிமுறைகள் மாற்றப்படும். சிறிய அளவிலான மனித தவறுகள் கூட நடைபெறாது என நம்புகிறோம்’’ என்றார்.
    சென்னை அணி 2-வது ஆட்டத்தில் ஸ்டீவ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நாளை (22-ந்தேதி) எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் சார்ஜாவில் நடக்கிறது.

    சார்ஜா:

    ஐ.பி.எல் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கியது.

    3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம் அந்த அணிக்கு எதிரான தொடர் தோல்விக்கு சி.எஸ். கே. முற்றுப்புள்ளி வைத்தது.

    சென்னை அணி 2-வது ஆட்டத்தில் ஸ்டீவ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நாளை (22-ந்தேதி) எதிர் கொள்கிறது. இந்த ஆட்டம் சார்ஜாவில் நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    மும்பைக்கு எதிராக சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றதுபோல் ராஜஸ்தானுக்கு எதிராகவும் அபாரமான திறமையை வெளிப்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது வெற்றியை பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளைய போட்டிக்கான சி.எஸ்.கே. அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. காயத்தில் இருந்து குணம் அடையாத பிராவோ நாளைய போட்டியிலும் ஆட மாட்டார்.

    சென்னை அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் இருக்கிறது. அம்பதி ராயுடு, டுபெலிசிஸ் ஆகியோர் தொடக்க ஆட்டத்தில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

    இதேபோல பந்துவீச்சில் ஜடேஜா, நிகிடி, தீபக் சாஹர் ஆகியோர் முத்திரை பதித்தனர். ஆல்ரவுண்டர் பணியில் சாம்கரண் சிறப்பாக செயல்பட்டார்.

    ஸ்டீவ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் அணி தொடக்க ஆட்டத்திலேயே வெற்றிபெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேனான பட்லர் நாளைய ஆட்டத்தில் விளையாடமாட்டார்.

    ராஜஸ்தான் அணியில் கேப்டன் ஸ்டீவ் சுமித், மில்லர், ராபின் உத்தப்பா, ஆண்ட்ரு டை, சஞ்சுசாம்சன், டாம்கரண், ஜோப்ர ஆர்சர் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் இது வரை 21 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் 14-ல், ராஜஸ்தான் ராயல்ஸ் 7-ல் வெற்றி பெற்றுள்ளன.

    கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த மார்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

    துபாய்:

    ஐ.பி.எல். போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ளார்.

    தினேஷ்கார்த்திக் 2018-ம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். காம்பீருக்கு பதிலாக அவர் அந்த பொறுப்பை ஏற்றார். 2018-ல் அவரது தலைமையிலான கொல்கத்தா அணி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது.

    ஆனால் கடந்த முறை கொல்கத்தா அணி 5-வது இடத்தை பிடித்தது. தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங்கும், சிறப்பாக அமையவில்லை. அவர் 14 ஆட்டத்தில் 253 ரன் எடுத்தார்.

    35 வயதான தினேஷ் கார்த்திக் இந்த ஐ.பி.எல். போட்டியில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தும் வேட்கையில் உள்ளார்.

    இந்தநிலையில் கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த மார்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கொல்கத்தா அணியின் பேட்டிங் வரிசை துடிப்பாகவும், எல்லோரையும் கவரும் வகையில் உள்ளது. மார்கன் மிடில் ஆர்டரில் மிகப்பெரிய பலமாக இருப்பார். அவர் நிலையாக ஆடக்கூடியவர். அனுபவம் வாய்ந்தவர். அவர் ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன் என்பதை பல முறை நிரூபித்துள்ளார்.

    கொல்கத்தா அணி இந்த சீசனில் முதல் 4 அல்லது 5 ஆட்டத்தில் சிறப்பாக செயல் படாவிட்டால் தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக மார்கனை கேப்டனாக நியமிக்க வேண்டும். ஏனெனில் எப்போதும் இதற்கான வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு கவாஸ்கர் கூறி உள்ளார்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வருகிற 23-ந் தேதி எதிர்கொள்கிறது.

    ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லுமென்று நம்புகிறேன் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
    மும்பை:

    13வது ஐபிஎல் சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தொடங்கிய முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமாக ஆடி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்த ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் என்று நம்புகிறேன் என்று கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் கூறுகையில், இந்த ஐ.பி.எல். கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணி நிச்சயம் வெல்லும் என்று நம்புகிறேன். போட்டி எங்கு நடந்தாலும் எப்போதும் எனது ஆதரவு மும்பை அணிக்கு உண்டு. மும்பை மற்றும் இந்தியன்ஸ் ஒன்றிணையும் போது அது மும்பை இந்தியன்ஸ் ஆகிறது என தெரிவித்துள்ளார்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு-ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    கடந்த ஆண்டு கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த முறை பரிகாரம் தேடும் வகையில் விளையாடும் என்று நம்பலாம். புதிதாக அணிக்கு வாங்கப்பட்டுள்ள ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரராக இறங்க உள்ளார். இது அவர் கால்பதிக்கும் 8-வது அணியாகும். கோலி, டிவில்லியர்ஸ் ஜோடி வழக்கம் போல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பந்து வீச்சில் சாஹல், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், கிறிஸ் மோரிஸ் வலு சேர்க்கிறார்கள். வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் வியூகங்களை தீட்டியுள்ளனர்.

    வார்னர் தலைமையிலான ஐதராபாத் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த ஆண்டு பெங்களூருக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 185 ரன்கள் குவித்து சாதனை படைத்த வார்னரும், ஜானி பேர்ஸ்டோவும் அதே போன்று மிரட்ட காத்திருக்கிறார்கள். உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் ரஷித்கான், முகமது நபி இருவரும் இறங்கும் பட்சத்தில் கேன் வில்லியம்சனுக்கு அணியில் இடம் கிடைக்காது. புவனேஷ்வர்குமார், மனிஷ் பாண்டே, சஹா, கலீல் அகமது என்று திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
    இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் 9 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) கால்இறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
    ரோம்:

    இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் 9 முறை சாம்பியனான ரபெல் நடால் (ஸ்பெயின்) கால்இறுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை 6-2, 7-5 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜென்டினா வீரர் டியாகா ஸ்வாட்ஸ்மன் வீழ்த்தினார். நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-5, 6-3 என்ற நேர் செட்டில் கேஸ்பர் ருட்டை (நார்வே) வெளியேற்றி 10-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதியில் சிமோனா ஹாலெப் (ருமேனியா) 6-3, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் முகுருஜாவை (ஸ்பெயின்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இந்த ஆட்டம் 2 மணி 16 நிமிடங்கள் நீடித்தது.
    ×