என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 35 பந்தில் 50 ரன்கள் அடித்த ஜடேஜா, முதன்முறையாக அரைசதத்தை பதிவு செய்ததுடன், ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 8.2 ஓவரில் 42 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்ததால் ரவீந்திர ஜடேஜா முன்னதாகவே களம் இறங்கிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்த சூழ்நிலையை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு ரன்கள் அடித்தார்.

    அவர் 34 பந்தில் அரைசதம் அடித்தார். ஐபிஎல் வரலாற்றில் இதுதான் அவருடைய அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மேலும், முதல் அரைசதம் ஆகும்.

    இதற்கு முன் 2012-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக 48 ரன்களும், 2011-ல் கேரளா அணிக்காக புனே வாரியர்ஸ் அணிக்கெதிராக 47 ரன்களும், 2012-ல் சென்னை அணிக்காக புனே வாரியர்ஸ் அணிக்கெதிராக 44 ரன்களும் அடித்துள்ளார்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 10 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் மட்டுமே எடுத்ததன் மூலம் சிஎஸ்கே துபாய் மைதானத்தில் மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் 164 ரன்கள் அடித்தது. பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் வேகப்பந்து வீச்சில் சென்னை அணி தொடகத்திலேயே விக்கெட்டை இழந்தது. வாட்சன் 1 ரன்னிலும், அம்பதி ராயுடு 8 ரன்னிலும், டு பிளிஸ்சிஸ் 22 ரன்னிலும், கேதர் ஜாதவ் 3 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இதனால் முதல் 10 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்களே அடித்தது. இதன் மூலம் துபாய் மைதானத்தில் முதல் 10 ஓவரில் குறைவான ரன்களை பதிவு செய்த அணி என்ற மோசமான சாதனையை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் டெல்லிக்கு எதிராக 3 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்ததது. தற்போது அதை மிஞ்சியுள்ளது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக 3 விக்கெட் இழப்பிற்கு 49 ரன்கள் எடுத்திருந்தது.
    இளம் வீரர்களான பிரியம் கார்க் - அபிஷேக் சர்மா 77 ரன்கள் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 165 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஐதராபாத்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் இடையிலான ஐபிஎல் தொடரின் 14-வது ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார்.

    முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோவ் டக்அவுட் ஆக, ஐதராபாத்தின் ரன்வேகத்தில் தடைஏற்பட்டது. இதனால் பவர் பிளேயில் 42 ரன்களே அடித்தது. அடுத்து வந்த மணிஷ் பாண்டே அதிரடியா விளையாட நினைத்து 8-வது ஓவரில் முதல் பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்தில் ஐந்து பவுண்டரிகள் அடித்தார்.

    முதல் 10 ஓவரில் ஐதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்தது. 11-வது ஓவரை சாவ்லா வீசினார்.  இந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 5-வது பந்தில் வார்னர் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் கேன் வில்லியம்சன் ரன்அவுட் ஆனார்.

    11 ஓவரில் 69 ரன்கள் எடுப்பதற்குள் முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்ததால் ஐதராபாத் அணி 125 ரன்னை தாண்டுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

    5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இளம் வீரர்களாக அபிஷேக் சர்மா- பிரியம் கார்க் இன்னிங்சை கெஞ்சம் கொஞ்சமாக நகர்த்தினர். 14-வது ஓவரில் இருந்து அதிரடியை தொடங்கினர்.

    ஜடேஜா வீசிய 14-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸ், பவுண்டரியுடன் 14 ரன்கள் அடித்தது. அடுத்த ஓவரில் 9 ரன்கள் அடிக்க 15 ஓவரில் 100 ரன்கள் அடித்தது.

    17-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாச 22 ரன்கள் கிடைத்தது, இதனால் ஸ்போர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. 

    18-வது ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. இந்த ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா 31 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர் பிரியம் கார்க் உடன் இணைந்து 77 ரன்கள் அடித்தது ஐதராபாத்துக்கு மிகப்பெரிய பூஸ்ட் ஆக அமைந்தது.

    19-வது ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. இந்த ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து இளம் வீரர் பிரியம் கார்க் முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். கடைசி ஓவரில் 7 ரன்கள் அடிக்க ஐதராபாத் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்துள்ளது. பிரியம் கார்க் 26 பந்தில்  51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சென்னை அணி சார்பில் தீபக் சாஹர் 31 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். சர்துல் தாகூர், சாவ்லா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    தீபக் சாஹரின் முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோவ் ஸ்டம்பை பறிகொடுக்க, சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி டேவிட் வார்னர், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்தில் வார்னர் ஒரு ரன் எடுத்தார். 2-வது மற்றும் 3-வது பந்தில் ரன் அடிக்காத பேர்ஸ்டோவ் 4-வது பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து மணிஷ் பாண்டு களம் இறங்கினார். முதல் பந்திலேயே ஸ்லிப் பகுதியில் கேட்ச் கொடுப்பது போன்று அடித்தார். பந்து சற்று விலகிச் சென்றதால் பவுண்டரிக்கு சென்றது. முதல் ஓவரில் ஐதராபாத்  6 ரன்கள் அடித்தது.

    2-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். மணிஷ் பாண்டு ஒரு பவுண்டரி அடிக்க ஐதராபாத் 6 ரன்கள் அடித்தது.

    3-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் பந்தில் மணிஷ் பாண்டே பவுண்டரி அடித்தாலும், மீதமுள்ள ஐந்து பந்துகளில் இரண்டு ரன்களே விட்டுக்கொடுத்தார். இதனால் ஐதராபாத் அணிக்கு 6 ரன்கள்  கிடைத்தது.

    4-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் அடித்தது. 

    5-வது ஓவரை தீபக் சாஹர் வீசினார். இந்த ஓவரில்  ஐதராபாத் ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்தது.

    6-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் எடுக்க ஐதராபாத் பவர் பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் அடித்துள்ளது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சென்னை அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
    ஐபிஎல் தொடரின் 14-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது. ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    சென்னை அணியில் முரளி விஜய், ஹாசில்வுட், ருத்துராஜ் நீக்கப்பட்டு வெயின் பிராவோ, அம்பதி ராயுடு மற்றும் ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம்:-

    1. வாட்சன், 2. டு பிளிஸ்சிஸ், 3. அம்பதி ராயுடு, 4. கேதர் ஜாதவ், 5. எம்எஸ் டோனி, 6. சாம் கர்ரன், 7. ஜடேஜா, 8. பியூஷ் சாவ்லா, 9. தீபக் சாஹர், 10. ஷர்துல் தாகூர், 11. வெயின் பிராவோ.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விவரம்:-

    1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. கேன் வில்லியம்சன், 4. மணிஷ் பாண்டே, 5. அப்துல் சமாத், 6. அபிஷேக் ஷர்மா, 7. பிரியம் கார்க், 8. ரஷித் கான், 9. புவனேஷ்வர் குமார், 10, கலீல் அகமது, 11. டி. நடராஜன்.
    சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து விலகிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் மாற்று வீரரை எடுக்காமல் உள்ளது என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் தொடரில் விளையாடும் அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தனித்துவம் உண்டு. அது பெரும்பாலான தொடர்களில் பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியது என்பதுதான். ஆனால் இந்த சீசன் தொடங்குவதற்கு முன்னதாகவே சுரேஷ் ரெய்னா விலகிவிட்டார். அவருக்கு மாற்று வீரரை சென்னை அணி தேர்வு செய்யவில்லை.

    முதல் போட்டிக்குப் பிறகு சென்னை அணி சற்று தடுமாற்றம் அடைந்துள்ளது. அணி இன்னும் செட்டில் ஆகவில்லை. முதன்முறையாக இந்த நிலையில் சென்னை அணியில் பார்ப்பதாக இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து இர்பான் பதான் கூறுகையில் ‘‘முதன்முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செட்டில் ஆகாத நிலையை நான் பார்க்கிறேன். சுரேஷ் ரெய்னா போட்டிக்கு முன்னதாகவே இந்தியா திரும்பியபோது, பிரச்சனையை சந்தித்தது. தற்போது வரை அவருக்கு மாற்று வீரரை தேர்வு செய்யவில்லை.

    அணி கலவையில் ஏராளமான பிரச்சனை உள்ளது. 3-வது இடத்தில் சுரேஷ் ரெய்னா விளையாடினால், கூடுதலாக ஒரு பந்து வீச்சாளருடன் அவர்கள் விளையாட முடியும். தற்போது அவர்கள் ஐந்து பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே விளையாடுகிறார்கள். கேதர் ஜாதவை பந்து வீச டோனி அனுமதிக்காததும் கவலைக்குரியது’’ என்றார்.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த வால்ஷ், அந்நாட்டு பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்தவர் வால்ஷ். டெஸ்ட் கிரிக்கெட்டில் 519 விக்கெட் வீழ்த்தியுள்ளார். மேலும், ஐசிசி-யின் ஹால் ஆஃப் ஃபேம் உறுப்பினராக கவுரவிக்கப்பட்டுள்ளார்.

    இவர் வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 2022 வரை அப்பதவியில் நீடிப்பார். ஐசிசி-யின் 50 ஓவர் உலக கோப்பை, டி20 உலக கோப்பை தொடரிலும் பயிற்சியாளராக செயல்படுவார்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டில் 2013 முதல் 2016 வரை தேர்வாளராகவும், ஜூனியர் அணியின் மானேஜராகவும் இருந்துள்ளார்.
    சொந்த காரணத்திற்காக ஐபிஎல் 13-வது சீசனில் இருந்து ரெய்னா, ஹர்பஜன் சிங் விலகிய நிலையில், இருவரின் ஒப்பந்த உறவை முறித்துக் கொள்ள சிஎஸ்கே முடிவு செய்துள்ளது.
    ஐபிஎல் 13-வது கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக ரெய்னா அணியுடன் சென்றிருந்தார். வீரர்கள் கோரன்டைனில் இருந்தபோது, சொந்த காரணத்திற்கான இந்தியா திரும்பினார். அதன்பின் ஒட்டுமொத்த தொடரிலும் இருந்து விலகினார். ஹர்பஜன் சிங் ஐக்கிய அரபு அமீரகம் செல்லவில்லை. இவரும் விலகுவதாக தெரிவித்தார்.

    டோனிக்கும், சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ரெய்னா விலகியதாக கூறப்பட்டது. அணி உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ரெய்னா குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

    இருவரையும் 2018-ல் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்திருந்தது. ரெய்னாவுக்கு 11 கோடி ரூபாய் சம்பளமும், ஹர்பஜன் சிங்கிற்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. ஐபிஎல் விதிப்படி இந்த சீசனுடன் 3 வருட ஒப்பந்தம் முடிவடைகிறது.

    இந்நிலையில் இருவரின் ஒப்பந்தத்தை நீட்டிக்காமல் முறித்து கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதுகுறித்து அந்த அணியின் சிஇஓ-விடம் கேட்டபோது, அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். ஆனால் இந்த செய்தியை மறுக்கவில்லை. சென்னை அணி இருவரையும் வெளியேற்றினால், ஐபிஎல் ஏலத்தில் மற்ற அணிகள் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது.

    ஆனால் அடுத்த வருடத்திற்கான ஏலம் நடைபெறுமா? என்பது கேள்விக்குறியே. 6 மாத கால இடைவெளி இருக்க வேண்டும். இந்த நடைமுறை பின்பற்றபட்டால் அடுத்த ஐபிஎல் தொடர் பங்கேற்பது சந்தேகம்தான்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக விளையாடுவதன் மூலம் ஐபிஎல்-லில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை எம்எஸ் டோனி படைக்க இருக்கிறார்.
    ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ். சென்னை அணி ஏறக்குறைய எல்லாத் தொடர்களிலும் பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறியிருக்கும். மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு அதிக முறை முன்னேறியதன் மூலம் சென்னை அணி மற்ற அணிகளை விட அதிக போட்டிகளில் விளையாடியிருக்கும்.

    2008-ல் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக எம்எஸ் டோனி விளையாடி வருகிறார். இவருடன் இணைந்து ரெய்னாவும் விளையாடி வருகிறார். இந்த சீசனில் இருந்து சொந்த வேலை காரணமாக சுரேஷ் ரெய்னா வெளியேறியுள்ளார்.

    சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் 192 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுதன் ஐபிஎல்-லில் ஒரு வீரர்கள் விளையாடிய அதிகப்பட்ச போட்டியாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது போட்டியில் விளையாடியபோது கேப்டன் எம்எஸ் டோனி 192 போட்டிகளில் விளையாடி சமன் செய்திருந்தார்.

    இன்றைய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிரான ஆட்டம் மூலம் 193 போட்டிகளில் விளையாடி, அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைக்க இருக்கிறார்.
    இந்த ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சம பலத்துடன் உள்ளதாக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார்.

    அபுதாபி:

    ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி 3 ஆட்டத்தில் 2 வெற்றி 1 தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி நாளை ராஜஸ்தானுடன் மோதுகிறது.

    இந்தநிலையில் பெங்களூர் அணி சம பலத்துடன் உள்ளதாக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டு நாங்கள் சீரான, சமபலத்துடனான அணியை பெற்றிருக்கிறோம். குறிப்பாக பந்துவீச்சில் சிறந்த நிலையில் இருக்கிறோம். 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்று இந்த ஆண்டு நாங்கள் மிகவும் சாதகமாக இருக்கிறோம். வீராட்கோலி மற்றும் டிவில்லியர்ஸ் உள்பட அணியில் உள்ள அனைவருக்கும் வித்தியாசமான உணர்வு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

     

    2016-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியின் போது இருந்த உணர்வுபோல் தற்போது இருக்கிறது. இந்த ஆண்டு சிறப்பாக தொடங்கி இருப்பது அணிக்கு புத்துணர்ச்சியை அளித்து இருக்கிறது. நான் அணியில் விளையாடுகிறேனோ இல்லையோ எனது நோக்கம். பெங்களூர் அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுப்பதுதான்.

     

    இவ்வாறு அவர் கூறினார்.

    அபிதாபியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை மும்பை வீழ்த்தியது. பந்து வீச்சாளர்கள், திட்டத்தை சரியாக செயல்படுத்தினர் என்று ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

    அபுதாபி:

    13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. அபிதாபியில் நேற்று நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.

    முதலில் விளையாடிய மும்பை 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 70 ரன்னும், போல்லார்ட் 47 ரன்னும், ஹர்திக் பாண்டியா 30 ரன்னும் எடுத்தனர்.

     


    பின்னர் விளையாடிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 143 ரன்னே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரிக்கல்ஸ் பூரன் 44 ரன் எடுத்தார்.

     

    மும்பை தரப்பில் பும்ரா, பேட்டிசன், ராகுல் சாகல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 4-வது ஆட்டத்தில் விளையாடிய மும்பை அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.

    பஞ்சாப் அணி 3-வது தோல்வியை (4 ஆட்டம்) சந்தித்துள்ளது.

    வெற்றி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    இது ஒரு சிறந்த வெற்றி. எங்கள் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்கள் தாக்குதல் தொடுப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அதை எதிர்க்கொண்டு இறுதி வரை முன்னேற விரும்பினோம்.

    ஹர்திக் பாண்டியா மற்றும் போல்லார்ட் இறுதி கட்டத்தில் ரன்களை பெற்று கொடுத்தனர். இது போன்று நிறைய முறை செய்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சிறந்த நிலையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒட்டு மொத்தமாக பேட்டிங் செயல்பாடு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    பந்து வீசுவது எளிதாக இருக்காது என்பது எங்களுக்கு தெரியும். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்பதையும் நாங்கள் அறிந்து இருந்தோம். அதையும் நாங்கள் செய்தோம்.

    பந்து வீச்சாளர்கள் தங்களது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினார்கள். நான் 500 ரன்னை கடந்ததை நன்றாக உணர்கிறேன். ஆனால் அதை நான் அதிகமாக பார்க்கவில்லை. போட்டியில் வெல்வதுதான் முக்கியமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-

    இந்த தோல்வி வெறுப்பு அளிக்கிறது என்று சொல்ல மாட்டேன். ஆனால் ஏமாற்றம் அளிக்கிறது. 4 ஆட்டத்தில் 3-ல் நாங்கள் எளிதாக வெற்றி பெற்றிருக்க முடியும். இந்த ஆட்டத்தில் இறுதிக்கட்டத்தில் நாங்கள் சரியாக பந்து வீசவில்லை. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு வலுவாக மீண்டும் வரவேண்டும்.

    மற்றொரு பந்து வீச்சாளரை அணியில் சேர்ப்பது நன்றாக இருக்கும். மேலும் ஒரு ஆல்ரவுண்டர் இருப்பது சிறப்பானதாகவும் இருக்கும். ஆனால் பயிற்சியாளர்கள் பேசி கூடுதல் பந்து வீச்சாளரை சேர்ப்பதா? அல்லது அதே அணியுடன் விளையாடுவதா? என்பதை முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். செக்குடியரசு வீராங்கனை பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் லிதுவேனியா வீரர் ரிகார்டஸ் பெரான்கிசை ஊதித்தள்ளி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்னொரு ஆட்டத்தில் பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் 6-4, 7-6 (7-5), 6-1 என்ற நேர்செட்டில் ஆந்த்ரே மார்டினை (சுலோவக்கியா) வெளியேற்றினார். 5 மணி நேரம் நீடித்த ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்பாலெஸ் பானா 7-5, 6-7 (5-7), 6-3, 3-6, 8-6 என்ற செட் கணக்கில் போராடி கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தினார். சிட்சிபாஸ் (கிரீஸ்), கச்சனோவ் (ரஷியா), தியாகோ மான்டிரோ (பிரேசில்), காரெனோ பஸ்டா (ஸ்பெயின்), கிறிஸ்டியன் காரின் (சிலி), மார்டன் புக்சோவிச் (ஹங்கேரி) ஆகியோரும் தங்களது 2-வது தடையை வெற்றிகரமாக தாண்டினார்கள்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2017-ம் ஆண்டு சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா), தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார். 69 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஆஸ்டாபென்கோ 6-4, 6-2 என்ற நேர்செட்டில் பிளிஸ்கோவாவுக்கு அதிர்ச்சி அளித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் கிவிடோவா (செக்குடியரசு) 6-3, 6-3 என்ற நேர்செட்டில் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியை விரட்டியடித்தார். இதே போல் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சோபியா கெனின் (அமெரிக்கா) சரிவில் இருந்து மீண்டு வந்து 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் அனா போக்டனை சாய்த்தார்.

    2016-ம் ஆண்டு சாம்பியன் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), சபலென்கா (பெலாரஸ்), டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா), ஆன்ஸ் ஜாபெர் (துனிசியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். அதேநேரத்தில் அமெரிக்க முன்னணி வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் தோல்வி கண்டு 2-வது சுற்றுடன் நடையை கட்டினார்.
    ×