என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்மித் ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 17-ந்தேதி தொடங்குகிறது. 2018-ல் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் தொடரை 2-1 எனக் கைப்பற்றி சாதனைப் படைத்தது. அப்போது ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் கிடையாது.

    தற்போது இருவரும் அணியில் உள்ளனர். மேலும் மார்னஸ் லாபஸ்சேன் அசுர ஃபார்மில் உள்ளார். இவர்கள் மூன்று பேரும் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவாலாக திகழ்வார்கள். குறிப்பாக ஸ்மித் எப்படி விளையாடுவார் என்பதே எதிர்பார்ப்பு.

    ஆனால், ஏற்கனவே இந்திய பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஸ்மித் மிகவும் சிறப்பாக விளையாடி இருக்கிறார். இஷாந்த் சர்மாவுக்கு எதிராக 176 சராசரி வைத்துள்ளார். அஸ்வினுக்குத் எதிராக 116 சராசரி வைத்துள்ளார். முகமது ஷமிக்கு 112 சராசரி வைத்துள்ளார்.

    உமேஷ் யாதவுக்கு எதிராக 65.50 சராசரி வைத்துள்ளார். ஜடேஜாவுக்கு எதிராக 37.80 சராசரி வைத்துள்ளார். ஆனால் பும்ரா பந்து வீச்சை இதுவரை எதிர்கொள்ளவில்லை. ஸ்மித்திற்கு கடும் சவாலாக பும்ரா இருக்க வாய்ப்புள்ளது.
    உடலை தாக்கக்கூடிய ஷார்ட் பால்-ஐ எதிர்கொள்ள எந்த பேட்ஸ்மேனும் தயாராக இருக்கமாட்டார்கள் என்று டெஸ்ட கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா இந்த முறையும் சாதிக்குமா?, விராட் கோலி இல்லாத இந்திய அணி எப்படி விளையாடும்?, ஸ்டீவ் ஸ்மித்தை இந்திய பந்து வீச்சாளர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்? என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

    இந்தத் தொடரில் ஷார்ட் பால் மிகப்பெரிய பேசும்பொருளாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் யாரும் ஷார்ட் பால்-ஐ எதிர்கொள்ள யாரும் தயாராக இருக்க மாட்டார்கள் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘ஷார்ட் பால்-ஐ எதிர்கொள்ள யாரும் தயாராக இருக்கமாட்டார்கள். சிறந்த ஷார்ட் பால் சிறந்த பேட்ஸ்மேனுக்குக் சிக்கலை ஏற்படுத்தும். நான் தயார் என்று எவராலும் சொல்ல முடியாது’’ என்றார்.
    கேமரூன் நாட்டில் பிறந்து ஜெர்மனில் வசித்து வரும் யூசோயுபா மவுகோகோ 16 வயதில் ஜெர்மனின் பண்டேஸ்லிகா கால்பந்தில் விளையாடி சாதனைப் படைத்துள்ளார்.
    ஜெர்மனியில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் பண்டேஸ்லிகா. இந்த லீக்கில் பொருஸ்சியா டார்ட்மண்ட் முக்கியமான அணிகளில் ஒன்று. இந்திய நேரப்படி இன்று நடைபெற்ற ஆட்டத்தில் பொருஸ்சியா டார்ட்மண்ட் ஹெர்தா அணியை எதிர்கொண்டது.

    இதில் பொருஸ்சியா டார்ட்மண்ட் அணி 5-2 என வெற்றி பெற்றது. அந்த அணியின் எர்லிங் ஹாலண்ட் நான்கு கோல்கள் அடித்தார். ஹாலண்ட் 85-வது நிமிடத்தில் வெளியேறினார். அவருக்குப் பதிலாக யூசோயுபா மவுகோகோ களம் இறங்கினார்.

    இவருக்கு 16 வயதே ஆகிறது. இதன்மூலம் பண்டேஸ்லிகா லீக் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் களம் இறங்கிய வீரர் என்ற பெருமையை யூசோயுபா மவுகோகோ பெற்றுள்ளார். இதற்கு முன் பிவிபி அணியின் நுரி சாஹின் 17 வயது பிறந்த நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். அந்த சாதனையை தற்போது யூசோயுபா மவுகோகோ முறியடித்துள்ளார்.

    பொருஸ்சியா அணியின் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் இடம்பிடித்து 88 ஆட்டங்களில் 141 கோல்கள் அடித்துள்ளார். கடைசி நான்கு போட்டிகளில் மட்டும் 13 கோல்கள் அடித்துள்ளார்.
    சர்பராஸ் அகமது நியூசிலாந்து தொடரில் விளையாடுவதற்கான லங்கா பிரிமீயர் லீக்கில் இருந்து விலகியுள்ளதால், ஷாகிப் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    இலங்கை கிரிக்கெட் போர்டால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள லங்கா பிரிமீயர் லீக் பல தடைகளை தாண்டி 26-ந்தேதி தொடங்குகிறது. இதில் விளையாடும் ஐந்து அணிகளில் காலே கிளாடியேட்டர்ஸ் அணியும் ஒன்று.

    காலே அணியின் கேப்டனாக பாகிஸ்தானைச் சேர்ந்த சர்பராஸ் அகமது நியமிக்கப்பட்டிருந்தார். பாகிஸ்தான்  அணி நியூசிலாந்து சென்று டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான பாகிஸ்தான் அணியில் சர்பராஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதனால் காலே கிளாடியேட்டர்ஸ் அணியில் இருந்து சர்பராஸ் அகமது விலகியுள்ளார். இந்நிலையில் ஷாகித் அப்ரிடி அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    லங்கா பிரிமீயர் லீக்கில் இருந்து கெய்ல், டு பிளிஸ்சிஸ், லியம் பிளாங்கெட், தாவித் மலன், லிசித் மலிங்கா, கம்ரான் அக்மல், வஹாப் ரியாஸ், முகமது ஹபீஸ் போன்றோரும் விலகியுள்ளனர்.
    ஆஸ்திரேலிய தொடருக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வரும் விராட் கோலி, வெளியிட்டுள்ள வீடியோவிற்கு சூர்யகுமார் யாதவ் ரியாக்ட் செய்துள்ளார்.
    மும்பையைச் சேர்ந்த சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சில தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். உள்ளூர் தொடர்களிலும் சிறப்பாக விளையாடுகிறார். என்றாலும் 30 வயதாக அவருக்கு இதுவரை இந்திய தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை.

    சமீபத்தில் முடைவடைந்த ஐபிஎல் 13-வது சீசனில் அதிரடி ஆட்டம் மூலம் ரன்கள் குவித்த போதிலும், அணியில் இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தார். இந்திய அணி அறிவித்த பின்னர் ஆர்சிபி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

    சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்தபோது விராட் கோலி அவரை சீண்ட விரும்பினார். ஆனால் சூர்யகுமார் யாதவ் அவருக்கு பதில் அளிக்காமல் முகத்தை திருப்பிக்கொண்டு அமைதியாக சென்றுவிட்டார். சூர்யகுமார் யாதவின் அமைதியில் ஏராளமான அர்த்தங்கள் புதைந்து இருந்தன.

    ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. விராட் கோலி பயிற்சி மேற்கொண்ட வீடியோவை வெளியிட்டு, ‘‘லவ் டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சி செசன்’’ என்று பதிவிட்டிருந்தார்.

    அதற்கு சூர்யகுமார் யாதவ் ‘‘எனர்ஜி, சவுண்ட், விராட் கோலியின் ஆதிக்கத்தை பார்க்க காத்திருக்க முடியாது... #theBrand’’ எனப் பதிவிட்டுள்ளார்.

    விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக உள்ளேன் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்ததிலும் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்துள்ளன.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவது மகிழ்ச்சி என ரோகித் சர்மா அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.  முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 17ந்தேதி பகல்-இரவு ஆட்டமாக தொடங்குகிறது.

    இதனை முன்னிட்டு விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த 11ந்தேதி இரவு துபாயில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு சென்றது.

    விராட் கோலி தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் முதலாவது டெஸ்ட் முடிந்ததும் இந்தியா திரும்பி விடுவார்.  அதே சமயம் சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல். போட்டியில் ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட இடது தோள்பட்டை காயத்தினால் ஒரு நாள் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

    டெஸ்ட் அணியில் மட்டும் அங்கம் வகிக்கும் ரோகித் சர்மா தாயகம் திரும்பி, ஓரிரு வாரங்கள் கழித்து ஆஸ்திரேலியாவுக்கு கிளம்புவார் என்று தெரிவிக்கப்பட்டது.  இதன்படி தீபாவளி பண்டிகை கழிந்து, பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா கடந்த 19ந்தேதி காலை சென்றார்.

    அவர் காயத்தில் இருந்து முழு அளவில் விடுபடுவதற்காக சென்றுள்ளார்.  இதில் 100 சதவீதம் குணம் அடைவதற்கான சிகிச்சை அவருக்கு வழங்கப்படும்.  இதேபோன்று பி.சி.சி.ஐ. மருத்துவ குழுவும் ரோகித்தின் உடற்தகுதியை கண்காணிக்கும்.  அதுபற்றி அனைத்து இந்திய மூத்த தேர்வு குழுவுக்கும் விளக்கம் அளிக்கும் என பி.சி.சி.ஐ. அறிக்கை தெரிவித்தது.

    இந்நிலையில், டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடாத சூழலில், தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மா களம் இறங்குகிறார்.  இந்த முடிவை அணி நிர்வாகம் எடுத்துள்ளது.  இதுபற்றி ரோகித் சர்மா கூறும்பொழுது, டெஸ்ட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவது என்பது மகிழ்ச்சி அளிக்க கூடிய விசயம்.

    எந்த வரிசையில் நான் விளையாட வேண்டும் என அணி விரும்புகிறதோ அந்த வரிசையில் இறங்கி விளையாடுவதில் எனக்கு மகிழ்ச்சியே.  ஆனால், தொடக்க ஆட்டக்காரர் என்ற நிலையில் இருந்து அணி நிர்வாகம் என்னை மாற்றி விடுமா? என்பது பற்றி எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.

    விராட் விளையாடவில்லை என தெரிந்ததும், யார் வேறு என்ன வாய்ப்புகள் உள்ளன என்பது பற்றி ஆஸ்திரேலியாவில் முன்பே உள்ள அவர்களுக்கு (அணி நிர்வாகம்) யாரை எந்த இடத்தில் விளையாட வைக்க வேண்டும் என்று தெரிந்திருக்கும்.  இன்னிங்சில் யார் தொடக்க வீரராக இறங்க வேண்டும் என்றும் முடிவு செய்து வைத்திருக்க கூடும் என்று கூறியுள்ளார்.

    அவர்கள் என்ன விரும்புகிறார்களோ, அதன்படி பேட்டிங் செய்ய தயாராகவே நான் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

    சுனில் கவாஸ்கர் அவரது மகனை பல மாதங்கள் பார்க்காமல் இருந்துள்ளார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. பேறுகால விடுப்பு கேட்டதற்கு பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பின்னர் இந்தியா திரும்புகிறார்.

    விராட் கோலியின் முடிவுக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கபில்தேவ் விராட் கோலி முடிவு குறித்து கூறுகையில் ‘‘செல்வதற்கும் திரும்பி வருவதற்கும் நாம் வாய்ப்பு வழங்க வேண்டும் என நினைக்க வேண்டாம். இது உறுதி.

    சுனில் கவாஸ்கர் பல மாதங்கள் அவரது மகனை பார்க்கவில்லை. இது வித்தியாசமான விஷயம். பார்வை, யோசனைகள் மாறுபட்டவை. நான் விராட் கோலியை பற்றி பேசும்போது, அவரது தந்தை காலமானபோது, அடுத்த நாள் கிரிக்கெட் விளையாட வந்தார். தற்போது அவர் தனது குழந்தைக்காக ஓய்வு கேட்டுள்ளார். இது சிறப்பானது. அதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.

    நீங்கள் விமானத்தை வாடகைக்கு பிடித்து வந்துவிட்டு மூன்று நாட்களில் செல்ல முடியும். தற்போது விளையாட்டு வீரர்கள் இதை செய்யமுடியும் என்பதை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. நான் விராட் கோலிக்காக மகிழ்ச்சி அடைகிறேன். அவரது குடும்பத்தை பார்ப்பதற்காக திரும்பி வருகிறார். உங்களுடைய பேரார்வத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், மிகப்பெரிய பேரார்வம் அவருக்கு ஒரு குழந்தை பிறக்கிறது என்பதுதான்’’ என்றார்.
    விராட் கோலி ஏழு போட்டிகளில் விளையாடினாலும் 110 சதவீதம் உத்வேகத்துடன் விளையாடுவார் என்று மார்கஸ் ஸ்டோய்னிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று ஒருநாள், மூன்று டி20 மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது. விராட் கோலி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடிய பின்னர் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடியாடுகிறார். அதன்பின் நாடு திரும்புகிறார்.

    மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் இந்தியா திரும்புகிறார். அவரது முடிவுக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ், விராட் கோலி ஏழு போட்டிகளில் விளையாடினாலும் 110 சதவீத உத்வேகத்துடன் விளையாடுவார் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் விராட் கோலி குறித்து மார்கஸ் ஸ்டோய்னிஸ் கூறுகையில் ‘‘விராட் கோலியைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். ஒருவேளை அதிக உத்வேகத்துடன் விளையாடலாம். ஆனால், 110 சதவீதம் உத்வேகத்திற்கு மேல் தேவை என்று நான் நினைக்கவில்லை. அதை பார்க்கலாம்.

    அவர் போட்டிக்கு தயாராக இருப்பார் என்பதை என்னால் உறுதியாக கூற இயலும். முதல் குழந்தை பிறப்பிற்காக சொந்த நாடு திரும்புகிறார். என்னுடைய பார்வையில் அது சரியான முடிவு. ஆகவே. அவர் கூடுதல் உத்வேகத்துடன் இருப்பார்’’ என்றார்.
    இந்த ஐபிஎல் போட்டியில் 71 யார்க்கர் பந்துகளை வீசிய தமிழக வீரர் நடராஜனுக்கு கபில்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    தமிழகத்தை சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் டி. நடராஜன். இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அவர் 2017 ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணியில் அறிமுகமானார்.

    2018-ம் ஆண்டில் இருந்து நடராஜன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார்.

    சமீபத்தில் நடந்து முடிந்த 13-வது ஐ.பி.எல். போட்டியில் அவரது பந்துவீச்சு அபாரமாக இருந்தது. யார்க்கர் பந்துகளை வீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

    சேலத்தை சேர்ந்த 29 வயதான நடராஜன் இந்த ஐ.பி.எல். போட்டியில் 16 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 71 யார்க்கர் பந்துகளை இந்த தொடரில் வீசினார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் நடராஜனின் பந்துவீச்சை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிரபல வேகப்பந்து வீரருமான கபில்தேவ் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஐ.பி.எல். போட்டியில் என்னுடைய கதாநாயகன் நடராஜன்தான். இந்த இளம் வீரருக்கு பயமே இல்லை. தொடர்ந்து ஏராளமான யார்க்கர்களை வீசினார். யார்க்கர்தான் சிறந்த பந்து. இன்று மட்டுமல்ல கடந்த 100 ஆண்டுகளாகவே அது சிறந்த பந்தாகும். யார்க்கர் வீசுவதற்கான அடிப்படைகளை சரியாக அவர் பின்பற்றினார்.

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய பந்து வீச்சாளர்கள் வேகமாக பந்து வீசுவதை விடவும், சுவிங்தான் முக்கியம் என்பதை அறிந்துள்ளார்கள்.

    மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் வீசிய சந்தீப் சர்மா பந்தை நன்கு சுவிங் செய்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை உருவாக்கினார். எனவே வேகமல்ல சுவிங்தான் முக்கியம் என்பதை பந்து வீச்சாளர்கள் அறிய வேண்டும்.

    வீராட் கோலி தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டோடு நாடு திரும்புகிறார். முன்பெல்லாம் எங்களால் இப்படி போய்விட்டு வர முடியாது.

    கவாஸ்கர் தன்னுடைய மகனை பல மாதங்களாக பார்க்கவில்லை. அது வேறு சூழல். இப்போது நிலைமை மாறிவிட்டது. கோலி தன்னுடைய அப்பா இறந்தபோது மறுநாளே ஆட வந்து விட்டார்.

    தற்போது அவர் தன்னுடைய குழந்தை பிறப்புக்காக லீவு எடுக்கிறார். நல்லதுதான். அவருக்கு கிரிக்கெட்டில் உள்ள ஆர்வத்தை விட, குழந்தையை ஏந்தும் ஆர்வம்தான் அதிகம் இருக்கிறது என்பதை உணர்கிறேன். மதிக்கிறேன்.

    இவ்வாறு கபில்தேவ் கூறியுள்ளார்.

    ஏ.டி.பி. டென்னிஸ் இறுதிச்சுற்று போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் ரபேல் நடால் தோல்வி அடைந்தார்.

    லண்டன்;

    உலகின் டாப்-8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. டென்னிஸ் இறுதிச்சுற்று லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இதன் அரை இறுதி ஆட்டத்தில் உலகின் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார். ரஷியாவை சேர்ந்த டேனில் மெட்வதேவ் 3-6, 7-6, (7-4), 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    மெட்வதேவ் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் முன்னேறி இருக்கிறார்.

    மற்றொரு அரை இறுதியில் டொமினிக் தீம் (ஆஸ்திரியா) 7-5, 6-7 (10-12), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு 5 முறை சாம்பியனும், முதல் நிலை வீரருமான ஜோகோவிச்சை (செர்பியா) தோற்கடித்தார்.

    இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் டொமினிக் தீம்- மெட்வதேவ் மோதுகிறார்கள். இருவருமே முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ள னர். இதனால் முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல இருவரும் ஆர்வத்தில் உள்ளனர்.

    தென்ஆப்பிரிக்க அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
    கேப்டவுடன்:

    மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 27-ந் தேதி கேப்டவுனில் நடக்கிறது. இந்த போட்டி தொடருக்காக தயாராகி வரும் தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என 50 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

    இதனை அடுத்து அவரும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இருவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் தென்ஆப்பிரிக்க அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவரது பெயர் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் நேற்று நடக்க இருந்த தென்ஆப்பிரிக்க அணியினருக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்து வீரர்களுக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட பரிசோதனையில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதால் அவர்கள் நேற்று தனியாக பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம் ஆஸ்திரேலிய தொடருக்கு எந்தவித நெருக்கடியும் இன்றி தயாராக முடியும் என வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கூறியுள்ளார்
    சிட்னி:

    இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    இந்த சீசனில் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி மொத்தம் 20 விக்கெட்டுகளை கைப்பற்றினேன். ஐ.பி.எல்.-ல் நான் விளையாடிய விதம் எனக்கு நிறைய நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீசியதன் மூலம் கிடைத்த சாதகமான அம்சம் என்னவென்றால், இப்போது ஆஸ்திரேலிய தொடருக்கு எந்தவித நெருக்கடியும் இன்றி தயாராக முடியும். என் மீது எந்த சுமையும் இல்லை. தற்போது நல்ல நம்பிக்கையுடன் சரியான நிலையில் இருக்கிறேன்.

    இந்த நீண்ட ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதலில் வெள்ளை நிற பந்திலும், அதன் பிறகு இளஞ்சிவப்பு பந்து, சிவப்பு பந்துகளில் விளையாடுகிறோம். இதில் எனது கவனம் சிவப்பு பந்தில் (டெஸ்ட் கிரிக்கெட்) தான் உள்ளது. அதற்காக தீவிர பயிற்சி எடுக்கிறேன். களத்தில் நீங்கள் சரியான அளவில் விரும்பிய இடத்தில் பந்தை பிட்ச் செய்து வீசத் தொடங்கி விட்டால் அதன் பிறகு எந்த வடிவிலான கிரிக்கெட்டிலும் சாதிக்க முடியும்.

    அணியில் இடம் பெற்றுள்ள எங்களது வேகப்பந்து வீச்சாளர்களால் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்துக்கு மேல் பந்து வீச முடியும். ஆஸ்திரேலியா போன்ற ஆடுகளங்களில் இத்தகைய வேகம் தேவை. எங்களது மாற்று வேகப்பந்து வீச்சாளர்கள் கூட இவ்வளவு வேகத்தில் வீசக்கூடியவர்கள் தான்.

    மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு சூப்பர் ஓவரில் 5 ரன்னுக்குள் அதிரடி பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோரை எனது பந்து வீச்சில் முடக்கியது இந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் திருப்தி அளித்த இன்னிங்சாகும்.

    இவ்வாறு ஷமி கூறினார்.
    ×