என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் மேலும் ஒரு வீரர் கொரோனாவால் பாதிப்பு
Byமாலை மலர்22 Nov 2020 1:21 AM GMT (Updated: 22 Nov 2020 1:21 AM GMT)
தென்ஆப்பிரிக்க அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
கேப்டவுடன்:
மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 27-ந் தேதி கேப்டவுனில் நடக்கிறது. இந்த போட்டி தொடருக்காக தயாராகி வரும் தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என 50 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து அவரும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இருவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் தென்ஆப்பிரிக்க அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவரது பெயர் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் நேற்று நடக்க இருந்த தென்ஆப்பிரிக்க அணியினருக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்து வீரர்களுக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட பரிசோதனையில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதால் அவர்கள் நேற்று தனியாக பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 27-ந் தேதி கேப்டவுனில் நடக்கிறது. இந்த போட்டி தொடருக்காக தயாராகி வரும் தென்ஆப்பிரிக்க அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என 50 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் ஒரு வீரருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்து அவரும், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த இருவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் தென்ஆப்பிரிக்க அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அவரது பெயர் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் நேற்று நடக்க இருந்த தென்ஆப்பிரிக்க அணியினருக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இங்கிலாந்து வீரர்களுக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட பரிசோதனையில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதால் அவர்கள் நேற்று தனியாக பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X