search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் நடால்
    X
    ரபேல் நடால்

    உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் - நடால் அதிர்ச்சி தோல்வி

    ஏ.டி.பி. டென்னிஸ் இறுதிச்சுற்று போட்டியின் அரை இறுதி ஆட்டத்தில் ரபேல் நடால் தோல்வி அடைந்தார்.

    லண்டன்;

    உலகின் டாப்-8 வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. டென்னிஸ் இறுதிச்சுற்று லண்டனில் நடைபெற்று வருகிறது.

    இதன் அரை இறுதி ஆட்டத்தில் உலகின் 2-ம் நிலை வீரரான ரபெல் நடால் (ஸ்பெயின்) அதிர்ச்சிகரமாக தோல்வி அடைந்தார். ரஷியாவை சேர்ந்த டேனில் மெட்வதேவ் 3-6, 7-6, (7-4), 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

    மெட்வதேவ் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் முன்னேறி இருக்கிறார்.

    மற்றொரு அரை இறுதியில் டொமினிக் தீம் (ஆஸ்திரியா) 7-5, 6-7 (10-12), 7-6 (7-5) என்ற செட் கணக்கில் கடும் போராட்டத்துக்கு பிறகு 5 முறை சாம்பியனும், முதல் நிலை வீரருமான ஜோகோவிச்சை (செர்பியா) தோற்கடித்தார்.

    இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் டொமினிக் தீம்- மெட்வதேவ் மோதுகிறார்கள். இருவருமே முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ள னர். இதனால் முதல் சாம்பியன் பட்டத்தை வெல்ல இருவரும் ஆர்வத்தில் உள்ளனர்.

    Next Story
    ×