என் மலர்
விளையாட்டு



ரியோ டி ஜெனீரோ:
47-வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் நடைபெற்று வருகிறது. கால்இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்கியது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.30 மணிக்கு நடந்த கால் இறுதியில் பிரேசில்-சிலி அணிகள் மோதின. இதில் பிரேசில் 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
46-வது நிமிடத்தில் லுகாஸ் பகியூட்டோ கோல் அடித்தார். இந்த ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரேசில் வீரர் கேப்ரியல் ஜீசஸ் சிவப்பு அட்டை காட்டப்பட்டு நடுவரால் வெளியேற்றப்பட்டார். இதனால் ஆட்டத்தின் இறுதிவரை 10 வீரர்களுடன் விளையாடி பிரேசில் இந்த வெற்றியை பெற்றது.
முன்னதாக நடந்த கால் இறுதியில் பெரு-பராகுவே அணிகள் மோதின. ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் போட்டு இருந்தன. கூடுதல் நேரத்திலும் இதே நிலையே நீடித்தது. இதனால் முடிவை நிர்ணயிக்க ‘பெனால்டி ஷூட் அவுட்’ கடைபிடிக்கப்பட்டது.
இதில் பெரு 4-3 என்ற கோல் கணக்கில் பராகுவேயை தோற்கடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றது. 6-ந் தேதி நடைபெறும் முதல் அரையிறுதியில் பிரேசில்-பெரு அணிகள் மோதுகின்றன.
நாளை அதிகாலை நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் உருகுவே- கொலம்பியா, அர்ஜென் டினா-ஈக்வடார் அணிகள் மோதுகின்றன.


47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இப்போட்டி தொடரில் கால் இறுதிக்கு அர்ஜென்டினா, உருகுவே, பராகுவே, சிலி (ஏ பிரிவு), ஈக்வெடார் (பி பிரிவு) அடங்கிய அணிகள் தகுதி பெற்றன. பொலிவியா, வெனிசுலா அணிகள் வெளியேற்றப்பட்டன.
கால்இறுதி ஆட்டங்கள் நாளை தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை நடக்கும் முதல் கால் இறுதியில் ‘பி’ பிரிவில் 2-ம் இடம் பெறவும். ‘ஏ’ பிரிவில் 3-ம் இடம் பிடிக்க பராகுவேவும் மோதுகின்றன.
அதேபோல் காலை 5.30 மணிக்கு தொடங்கும் மற்றொருகால் இறுதியில் ‘பி’ பிரிவில் முதலிடம் பிடித்த பிரேசில், ‘ஏ’ பிரிவில் 4-ம் இடம் பிடித்த சிலி பலப்பரீட்சை நடத்துகின்றன.
லண்டன்:
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. சவுத்தம்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வி அடைந்தது.
அடுத்து இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
இதில் முதல் டெஸ்ட் போட்டி வருகிற ஆகஸ்ட் 4-ந் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் செப்டம்பர் 10-ந் தேதி தொடங்குகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா தோற்றதால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி திணறும் என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணி சிறந்த வீரர்களை கொண்டது. ஆனால் பந்துவீச்சில் பந்து நகர்ந்ததால் எப்போதுமே அந்த வாய்ப்புகளை இங்கிலாந்து அதிகமாக பயன்படுத்தி கொள்ளும். ஆகஸ்ட் மாதத்தில் நிலைமைகள் ஈரப்பதத்துடன் இருந்தால், இந்திய அணிக்கு எதிராக இங்கிலாந்து நன்கு நகரும் வகையில் பந்துவீசும். இந்திய அணி உலகத்தரம் வாய்ந்த பேட்டிங் பிரிவை கொண்டது.
ஆனால் அவர்களது பெரிய பலவீனம் நகரும் பந்து. அதே போல் நிலைமை இருந்தால் அந்த வாய்ப்பை அவர்களுக்கு எதிராக எப்போதும் நீங்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.











