search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோகோவிச்
    X
    ஜோகோவிச்

    விம்பிள்டன் டென்னிஸ் 3-வது சுற்றில் ஜோகோவிச் வெற்றி - ஆன்டிமுர்ரே வெளியேற்றம்

    உலகின் முதல்நிலை வீரரும், 19 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ஜோகோவிச் 3-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த டெனிஸ் குட்லாவை எதிர்கொண்டார்.
    லண்டன்;

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல்நிலை வீரரும், 19 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றவருமான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த டெனிஸ் குட்லாவை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-4, 6-3, 7-6 (9-7) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்ற ஆட்டங்களில் 5-ம் நிலை வீரரான ஆந்த்ரே ருபலே (ரஷ்யா), அகுட் (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

    மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) தோற்றார். காயத்தால் நீண்ட இடைவெளிக்கு பிறகு களம் இறங்கிய அவர் 4-6, 2-6, 2-6 என்ற கணக்கில் கனடா வீரர் டெனிசிடம் தோற்றார்.

    இதைப்போல 9-வது வரிசையில் உள்ள டியாகோ ஸ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 13-வது வரிசையில் உள்ள மெர்ட்டன்ஸ் (பெல்ஜியம்), 11-வது இடத்தில் உள்ள முகுருஜா (ஸ்பெயின்) ஆகியோர் அதிர்ச்சிகரமாக தோற்றனர்.

    மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா), ரைபகினா (கஜகஸ்தான்) ஆகியோர் வெற்றிபெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
    Next Story
    ×