என் மலர்tooltip icon

    விளையாட்டு

    முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தது.
    சார்ஜா:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சார்ஜாவில் நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

    முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, சன்ரைசர்ஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. குறிப்பாக, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் வெளியேறினர். 

    அதன்பின்னரும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிய, பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்தது. 

    அதிகபட்சமாக மார்க்ராம் 27 ரன்கள் எடுத்தார். கேப்டன் கே.எல்.ராகுல் 21 ரன்களும், ஹர்பிரீத் 18 ரன்களும் (நாட் அவுட்), கிறிஸ் கெயில் 14 ரன்களும், தீபக் ஹுடா 13 ரன்களும் எடுத்தனர். சன்ரைசர்ஸ் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 3 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

    இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடுகிறது.
    ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    அபுதாபி:

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இன்று அபுதாபியில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதனையடுத்து முதலில் பேட் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 43 ரன்கள் எடுத்திருந்தார். 

    இதையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் துவக்கத்தில் இருந்தே தடுமாறிய அந்த அணி 55 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்களை இழந்தது. அணியின் கேப்டன் சாம்சன் மட்டும் நிதானமாக விளையாடி அரை சதம் அடித்தார். அவர் 53 பந்துகளில் 70 ரன்கள் எடுத்திருந்தார். அந்த அணியில் சாம்சன், மஹிபால் ஆகிய இரண்டு பேரை தவிர மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. 

    ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. டெல்லி தரப்பில் அன்ரிச் நார்ட்ஜே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சால் 20 ஓவர் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது.
    அபுதாபி:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இன்று அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில், ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தவான், பிரித்வி ஷா களமிறங்கினர். ராஜஸ்தான் அணியின் சிறப்பான பந்து வீச்சை எதிர் கொள்ள முடியாமல் இருவரும் தடுமாறினர். தவான் 8 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தியாகி பந்து வீச்சில் போல்ட் ஆனார். அடுத்த ஓவரில் பிரித்வி ஷா சக்காரியா ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

    21 ரன்களுக்கு 2 விக்கெட் எடுத்து தடுமாறிய நிலையில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர். 83 ரன்கள் இருக்கும் போது ரிஷப் பண்ட் 24(24 பந்துகள்) ரன்கள் எடுத்து வெளியேறினார். சிறப்பாக ஆடிய அய்யர் 43 ரன்கள் எடுத்து ஸ்டெம்பிங் என்ற முறையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹேட்மயர் 28, அக்‌ஷர் படேல் 12 என விக்கெட்டுகளை இழந்தனர். லலித் யாதவ் 14 ரன்னிலும் அஸ்வின் 6 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணி தரப்பில் சகாரியா, முஸ்தாபிசுர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ள டெல்லி அணி, இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.
    அபுதாபி:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் இன்று அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் ரி‌ஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ்-சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில், ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

    ராஜஸ்தான் அணியில் எவின் லெவிஸ், கிறிஸ் மோரிஸ் நீக்கப்பட்டு, தப்ரைஸ் ஷாம்சி, டேவிட் மில்லர் ஆகியோர் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லி அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஸ்டாய்னிசுக்கு பதில் லலித் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ராஜஸ்தான் அணி

    டெல்லி அணி: பிருத்வி ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஹெட்மயர், லலித் யாதவ், ஏஆர் படேல், அஷ்வின், ரபாடா, நோர்ட்ஜே, அவேஷ் கான்

    ராஜஸ்தான் அணி:  ஜெய்ஸ்வால், சாம்சன், லிவிங்ஸ்டன், மில்லர், லோம்ரர், பராக், தேவாதியா, கார்த்திக் தியாகி, சகாரியா, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷாம்சி.

    டெல்லி அணி 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 5-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. 
    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் முதல் இன்னிங்ஸின் 4வது ஓவரை சென்னை அணிக்காக ஷர்துல் தாக்கூர் வீசினார். ஓவரின் நான்காவது பந்தை கோலி, நின்ற இடத்திலிருந்து சிக்ஸருக்கு விரட்டினார்.
    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. இந்தப் போட்டியில் சென்னை அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அணிகளுக்கான புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்குச் சென்றுள்ளது.

    இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர், 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கேப்டன் கோலி, 53 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால், அவரின் சிறப்பான பேட்டிங் வெற்றி பெறுவதற்கு உதவவில்லை.

    அதே நேரத்தில் போட்டியின் முதல் இன்னிங்ஸின் 4வது ஓவரை சென்னை அணிக்காக ஷர்துல் தாக்கூர் வீசினார். ஓவரின் நான்காவது பந்தை கோலி, நின்ற இடத்திலிருந்து சிக்ஸருக்கு விரட்டினார்.

    இந்த ஷாட்டின்போது பந்து செல்லும் திசையை கோலி பார்க்கவே இல்லை. அதே நேரத்தில் பந்து 82 மீட்டர் பறந்துசென்று மைதானத்துக்கு வெளியே விழுந்தது. கோலியின் அசாத்திய பேட்டிங் காரணமாக இது குறித்தான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    வீடியோவைப் பார்க்க - https://www.iplt20.com/video/239793/out-of-sharjah-virat-s-mammoth-six?tagNames=ipl-magic,indian-premier-league,ipl-magic
    சார்ஜாவில் இரவு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    அபுதாபி:

    14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 2-வது கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.

    7-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. அபுதாபியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ரி‌ஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ்-சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 5-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் இதுவரை 23 முறை மோதி உள்ளன. இதில் டெல்லி 12 ஆட்டத்திலும், ராஜஸ்தான் 11 ஆட்டத்திலும் வெற்றி பெற்று உள்ளன.

    சார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஐதராபாத் அணி 1 வெற்றி, 7 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றிக்காக காத்து இருக்கிறது.

    பஞ்சாப் அணி 3 வெற்றி 6 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப் அணி ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. அந்த அணி வெற்றியை கோட்டை விட்டது. அந்த மாதிரியான நிலைமை ஏற்பட்டு விடாமல் இருக்க அந்த அணி வீரர்கள் கவனமுடன் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் ஐதராபாத் 12-ல், பஞ்சாப் கிங்ஸ் 5-ல் வெற்றி பெற்று உள்ளன. வெற்றி பெற அணிகள் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஐ.பி.எல். ஆட்டங்கள் விறுவிறுப்பாக இருக்கும்.

    எங்களது பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீசவில்லை என தோல்வி குறித்து பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

    ஷார்ஜா:

    ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரை வீழ்த்தி சென்னை அணி 7-வது வெற்றியை பெற்று புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.

    ஷார்ஜாவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணிக்கு 157 ரன் இலக்காக இருந்தது.

    படிக்கல் 50 பந்தில் 70 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) , கேப்டன் விராட் கோலி 41 பந்தில் 53 ரன்னும் (6 பவுண்டரி ,1 சிக்சர்) எடுத்தனர். பிராவோ 3 விக்கெட்டும், ‌ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், தீபக் சாகர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ருதுராஜ் கெய்க்வாட் 26 பந்தில் 38 ரன்னும் (4பவுண்டரி 1 சிக்சர்), அம்பதி ராயுடு 22 பந்தில் 32 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), டுபெலிசிஸ் 26 பந்தில் 31 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.

    சி.எஸ்.கே. பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது. சென்னையும் , டெல்லியும் தலா 14 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன் ரேட்டில் முன்னிலையில் உள்ளதால் சி.எஸ்.கே. முதல் இடத்தில் உள்ளது.

    இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. டோனி மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு 14-வது ஓவரில் பிராவோவை பந்து வீச அழைத்தார். அதற்கு பலன் கிடைத்தது. விராட் கோலி, மேக்ஸ்வெல், ஹர்சல் பட்டேல் ஆகிய 3 விக்கெட்டை பிராவோ கைப்பற்றினார்.

    இந்தப்போட்டிக்கு பிறகு பேசிய டோனி ஆல்ரவுண்டர் பிராவோவை வெகுவாக பாராட்டினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    பிராவோவை நான் என் சகோதரன் என்று அழைக்கிறேன். அவர் எப்போதுமே பந்தை மெதுவாக வீசுவார் என்று எல்லோருக்கும் தெரியும். நான் அவரிடம் 6 பந்தையும் வெவ்வேறு விதமாக வீசுமாறு கூறினேன். அதற்கு ஏற்ப அவர் சிறப்பாக செயல்பட்டார்.

    ஆடுகளத்திற்கு தகுந்தவாறு எங்களது செயல்பாடு இருந்தது. இதனால் இந்த வெற்றியை பெற்றோம்.

    இவ்வாறு டோனி கூறினார்.

    பெங்களூர் அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் 2-வது தோல்வியை தழுவியது. ஒட்டு மொத்தத்தில் 4-வது தோல்வி ஏற்பட்டது. ஆனாலும் அந்த அணி 10 புள்ளிகளுடன் தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது.

    தோல்வி குறித்து பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறும்போது, “நாங்கள் 175 ரன் வரை எடுத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் வெற்றி பெற்றிருப்போம். எங்களது பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீசவில்லை” என்றார். 

    டெல்லி கேப்பிடல்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 7-ல் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது.
    ஷார்ஜா:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 35 லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது.

    சென்னை அணி  9 ஆட்டங்களில் 2 தோல்வி, 7 வெற்றி என 14 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 
     
    டெல்லி கேப்பிடல்ஸ் 9 ஆட்டங்களில் 2 தோல்வி, 7 வெற்றி என 14 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.

    பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 5-ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் 3-ம் இடத்தில் உள்ளது.

    விக்கெட் வீழ்த்திய பிராவோ

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 4-வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4-ம் இடத்தில் உள்ளது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5-ம் இடத்தில் உள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 6-ம் இடத்தில் உள்ளது.

    பஞ்சாப் கிங்ஸ் அணி 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 7ம் இடத்தில் உள்ளது.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 8 போட்டிகளில் ஒரு வெற்றி, 7 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

    இந்தியா பெண்கள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் மோனி சதமடித்து அசத்தி, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள், ஒரு டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய பெண்கள் அணி அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹரப் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

    அதன்படி, முதலில் ஆடிய இந்திய பெண்கள் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 86 ரன்கள் குவித்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் தஹ்லா மெக்ராத் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    86 ரன்கள் எடுத்த ஸ்மிருதி மந்தனா

    இதையடுத்து, 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய பெண்கள் அணி களமிறங்கியது. முன்னணி வீராங்கனைகல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 52 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. 

    5-வது விக்கெட்டுக்கு தஹ்லா மெக்ராத் உடன் ஜோடி சேர்ந்த தொடக்க வீராங்கனை மோனி இந்திய வீராங்கனைகளின் பந்து வீச்சை சிதறடித்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலியாவை சரிவில் இருந்து மீட்டது. அதிரடியாக ஆடிய மோனி சதம் விளாசினார். பொறுப்புடன் ஆடிய தஹ்லா மெக்ராத் 74 ரன்கள் குவித்து வெளியேறினார். 

    கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது. இந்திய வீராங்கனை கோஸ்வாமி இறுதி ஓவரை வீசினார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் கோஸ்வாமி வீசிய கடைசி பந்து நோ-பால் ஆக அறிவிக்கப்பட்டது. 

    இதனை தொடர்ந்து 1 பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது. கடைசி பந்தை சந்தித்த ஆஸ்திரேலிய வீராங்கனை ஹேரி 2 ரன்கள் விளாசினார். இதனால், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய பெண்கள் அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய மோனி 125 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 

    இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது.
    சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபியின் விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் அரைசதம் அடித்தனர்.
    ஷார்ஜா:

    ஐ.பி.எல். தொடரின் 35-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மணல் புயல் வீசியதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    விராட் கோலி, தேவ்தத் படிக்கல் தொடக்கத்தில் அபாரமாக விளையாடினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.

    விராட் கோலி 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டி.வில்லியர்ஸ் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கல் 70 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், ஆர்.சி.பி. அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்துள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிராவோ 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. கெயிக்வாட், டு பிளசிஸ் ஜோடி அதிரடியாக ஆடியது.  முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் சேர்த்தது. கெயிக்வாட் 38 ரன்னிலும், டு பிளசிஸ் 31 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து ஆடிய மொயீன் அலி 23 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய அம்பதி ராயுடு 32 ரன்னில் வீழ்ந்தார்.

    விக்கெட் வீழ்ந்ததை கொண்டாடும் விராட் கோலி

    அடுத்து ரெய்னாவுடன் எம்.எஸ்.டோனி ஜோடி சேர்ந்தார்.  இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.

    இறுதியில், சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ரெய்னா 17 ரன்னும், டோனி 11 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இந்த வெற்றியுடன் புள்ளிப் பட்டியலில் சென்னை அணி மீண்டும் முதலிடம் பிடித்தது.
    விராட் கோலி, தேவ்தத் படிக்கல் அரைசதம் அடித்தாலும் மிடில் ஓவர்களில் சொதப்பியதால் சென்னைக்கு 157 ரன்களே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்.சி.பி.
    ஐ.பி.எல். தொடரின் 35-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. சரியாக 7 மணிக்கு டாஸ் சுண்டப்படும். ஷார்ஜா மைதானத்தில் மணல் புயல் வீசியதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் அரைமணி நேரம் கழித்து டாஸ் சுண்டப்பட்டது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். சென்னை அணியில் மாற்றம் ஏதுமில்லை. ஆர்.சி.பி.-யில் டிம் டேவிட், நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டனர்.

    விராட் கோலி, தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அபாரமாக விளையாடினர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 55 ரன்கள் குவித்தது.

    அதன்பின் ரன் உயர்வில் சரிவு ஏற்பட்டது. 10 ஓவரில் 90 ரன்கள் எடுத்திருந்தது. தேவ்தத் படிக்கல் 35 பந்திலும், விராட் கோலி 36 பந்திலும் அரைசதம் அடித்தனர். விராட் கோலி 41 பந்தில் 53 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ஆர்.சி.பி. 13.2 ஓவரில் 111 ரன்கள் எடுத்திருந்தது. 11-வது ஓவரில் இருந்து 13.2 ஓவர் வரை 20 பந்தில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தது ஆர்.சி.பி.

    டி வில்லியர்ஸை வீழ்த்தி ஷர்துல் தாகூர்

    அடுத்து வந்த டி.வில்லியர்ஸ் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 50 பந்தில் 70 ரன்கள் சேர்த்தார். படிக்கல் ஆட்டமிழக்கும்போது ஆர்.சி.பி. 17 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி மூன்று ஓவரில் 16 ரன்கள் அடிக்க ஆர்.சி.பி. 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பிராவோ 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், ஆடும் லெவனில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
    ஐ.பி.எல். தொடரின் 35-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் இன்று இரவு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சரியாக 7 மணிக்கு டாஸ் சுண்டப்படும். ஷார்ஜா மைதானத்தில் மணல் புயல் வீசியதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

    சுமார் அரைமணி நேரம் கழித்து டாஸ் சுண்டப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். சென்னை அணியில் மாற்றம் ஏதுமில்லை. ஆர்.சி.பி.-யில் டிம் டேவிட், நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

    1. ருதுராஜ், 2. டு பிளிஸ்சிஸ், 3. மொயீன் அலி, 4. சுரேஷ் ரெய்னா, 5. அம்பத்தி ராயுடு, 6. ரவீந்திர ஜடேஜா, 7. வெய்ன் பிராவோ, 8. டோனி (கேப்டன்), 9. ஷர்துல் தாக்குர், 1. தீபக் சாஹர், 10. ஹேசில்வுட்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி:

    1. விராட் கோலி, 2. தேவ்தத் படிக்கல், 3. எஸ். பரத், 4. மேக்ஸ்வெல், 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. வணிந்து ஹசரங்கா, 7. நவ்தீப் சைனி 8. டிம் டேவிட், 9. முகமது சிராஜ், 10. ஹர்ஷல் பட்டேல், 11. சஹல்.
    ×