என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கவுண்டிக் கிரிக்கெட், ஐ.பி.எல். போன்ற வெளிநாட்டு 20 ஓவர் தொடரில் தொடர்ந்து விளையாடுவதாக இங்கிலாந்து அணி வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.

    அபுதாபி:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மொயின் அலி. ஆல்ரவுண்டரான அவர் தற்போது நடந்து வரும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் செnனை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில் மொயின் அலி, தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் கவுண்டிக் கிரிக்கெட், ஐ.பி.எல். போன்ற வெளிநாட்டு 20 ஓவர் தொடரிலும் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை இங்கிலாந்து அணி பயிற்சியாளர் கிறிஸ் சில்வர் உட் மற்றும் டெஸ்ட் அணி கேப்டன் ஜோரூட் ஆகியோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

    மொயின் அலி

    34 வயதான மொயின் அலி டெஸ்ட் கிரிக்கெட்டில் 2014-ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இதுவரை 64 டெஸ்ட்டில் விளையாடி உள்ளார். 2,914 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதம், 14 அரைசதம் அடங்கும். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 155 ரன் எடுத்துள்ளார். 195 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

    வரும் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் ஆசஷ் தொடர் ஆகியவற்றுக்காக நீண்ட நாட்கள் சுற்றுப்பயணத்தில் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்ததாக தெரிகிறது.

    டி20 கிரிக்கெட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த 5-வது சர்வதேச வீர்ர விராட் கோலி ஆவார்.
    துபாய்:

    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக் தொடரின் 39-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த பெங்களூர் 6 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. மும்பை அணிக்கு எதிராக அபாரமாக ஆடிய பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி 51 ரன் விளாசினார்.

    இவர் தனது 13-வது ரன்னை கடந்த போது டி20 அரங்கில் 10 ஆயிரம் ரன்னை எட்டிய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். மேலும், 10 ஆயிரம் ரன்களை கடந்த 5-வது சர்வதேச வீரரானார். இதுவரை 314 போட்டியில் 5 சதம், 74 அரைசதம் உள்பட 10,038 ரன்கள் எடுத்துள்ளார்.

    ஏற்கனவே, வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (14,275 ரன்), பொல்லார்டு (11,195 ரன்), பாகிஸ்தானின் சோயப் மாலிக் (10,808 ரன்), ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் (10,019 ரன்) ஆகியோர் இம்மைல்கல்லை எட்டியுள்ளனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆர்சிபி அணியின் ஹர்ஷல் படேல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
    துபாய்:

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக் தொடரின் 39-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆர்.சி.பி. அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 51 ரன்னிலும், விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மேக்ஸ்வெல் 56 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

    மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, டி காக் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இந்த ஜோடி 57 ரன்கள் சேர்த்த நிலையில் டி காக் 24 ரன்னில் வெளியேறினார். அடுத்து ரோகித் சர்மா 43 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. 

    57 ரன்கள் சேர்த்த ரோகித் சர்மா- டி காக் ஜோடி

    இறுதியில், மும்பை அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஆர்சிபி அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    குறிப்பாக, 17-வது ஓவரை வீசிய ஹர்ஷல் படேல் ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, ராகுல் சாஹர் ஆகியோரை ஹாட்ரிக்கில் வீழ்த்தி அசத்தினார்.

    ஆர்சிபி அணி சார்பில் ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டும், சஹல் 3 விக்கெட்டும், மேக்ஸ்வெல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இது ஆர்சிபி அணி பெற்ற 6வது வெற்றி ஆகும்.
    விராட் கோலி, மேக்ஸ்வெல் அரைசதம் அடித்த போதிலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 166 ரன்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது ஆர்.சி.பி.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக் தொடரின் 39-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெற்றார்.

    ஆர்.சி.பி. அணியின் விராட் கோலி- தேவ்தத் படிக்கல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். தேவ்தத் படிக்கல் ரன்ஏதும் எடுக்காமல் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஸ்ரீகர் பரத் 24 பந்தில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். விராட் கோலி 42 பந்தில் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பரத்- விராட் கோலி ஜோடி 2-வது விக்கெடடுக்கு 43 பந்தில் 68 ரன்கள் சேர்த்தது.

    விராட் கோலி அவுட்டாகும்போது ஆர்.சி.பி. 15.5 ஓவரில் 126 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் உடன் ஏபி டி வில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சை துவம்சம் செய்தது. 18-வது ஓவரில் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸ் இரண்டு பவுண்டரிகள் விரட்டினார். அத்துடன் 33 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். 18-வது ஓவரில் ஆர்.சி.பி. 17 ரன்கள் அடித்தது.

    விராட் கோலி

    19-வது ஓவரை பும்ரா வீசினார். முதல் பந்தை பவுண்டரிக்கு தூக்கிய மேக்ஸ்வெல் 3-வது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 37 பந்தில் 56 ரன்கள் சேர்த்தார். அடுத்த பந்தில் டி வில்லியர்ஸ் ஆட்டமிழந்தார். அவர் 6 பந்தில் 11 ரன்கள் எடுத்தார். இந்த ஓவரில் 6 ரன்கள் எடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை ஆர்.சி.பி. இழந்தது.

    ஆர்.சி.பி. 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரை எதிர்கொண்டது. கடைசி ஓவரில் பவுல்ட் 1 விக்கெட் வீழ்த்தி 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க ஆர்.சி.பி. 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ரா 3 விக்கெட் வீழ்த்தினார்.
    ரெய்னா, டோனி, அம்பதி ராயுடு என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்ப ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி த்ரில் ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
    சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 38-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கன் டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெய்ன் பிராவோ இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக சுட்டிப்பையன் சாம் கர்ரன் இடம் பிடித்துள்ளார்.  கொல்கத்தா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதி 33 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தினேஷ் கார்த்தி அதிரடியாக விளையாடி 11 பந்தில் 26 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது. நிதிஷ் ராணா 27 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷர்துல் தாகூர், ஹசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க் வாட், டு பிளிஸ்சிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்தில் 40 ரன்களும், டு பிளிஸ்சிஸ் 30 பந்தில் 43 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தா்ர.

    அடுத்து வந்த மொயீன் அலி 28 பந்தில் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த அம்பதி ராயுடு 10 ரன்னிலும், சுரேஷ் ரெய்னா 11 ரன்னிலும், டோனி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிக்கல் ஏற்பட்டது.

    கடைசி 2 ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை பிரதித் கிருஷ்ணா வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் அடிக்கப்பட்டது. 3-வது மற்றும் 4-வது பந்தை இமாலய சிக்சருக்கு தூக்கினார் ஜடேஜா. அதோடு மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் 22 ரன்கள் கிடைக்க சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

    கடைசி ஓவரை சுனில் நரைன் வீசினார். முதல் பந்தில் சாம் கர்ரன் ஆட்டமிழந்தார். 2-வது பந்தில் ஷர்துல் தாகூர் ரன் அடிக்கவில்லை. ஆனால் 3-வது பந்தில் ஷர்துல் தாகூர் 3 ரன் எடுத்தார். இதனால் கடைசி இரண்டு பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. 5-வது பந்தை சந்தித்த ஜடேஜா அவுட் ஆனார்.

    ஷர்துல் தாகூர், தீபக் சாஹர்

    இதனால் கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. தீபக் சாஹர் களம் இறங்கினார். கடைசி பந்தில் கொல்கத்தா அணி ரன் அடிக்கவிடாமல் தடுத்துவிட்டால் போட்டி ‘டை’யில் முடிந்து சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சாஹர் ஒரு ரன் அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் 10 போட்டிகளில் 8-ல் வெற்றி புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்ததுடன் பிளே-ஆப் சுற்று வாய்ப்பையும் உறுதி செய்தது.
    மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்ட்யா இடம் பிடித்துள்ள நிலையில், ஆர்.சி.பி. மூன்று மாற்றங்களை செய்துள்ளது.
    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக் தொடரின் 39-வது லீக் ஆட்டம் துபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி:

    1. விராட் கோலி, 2. தேவ்தத் படிக்கல், 3. எஸ். பரத், 4. மேக்ஸ்வெல், 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. டேனியல் கிறிஸ்டியன், 7. ஷபாஷ் அகமது 8. கைல் ஜேமிசன், 9. முகமது சிராஜ், 10. ஹர்ஷல் பட்டேல், 11. சஹல்.

    மும்பை இந்தியன்ஸ் அணி:-

    1. டி காக், 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்டு, 7. குருணல் பாண்ட்யா, 8. ஆடம் மில்னே, 9. ராகுல் சாஹர், 10. பும்ரா, 11. டிரென்ட் பவுல்ட்.
    வெங்கடேஷ் அய்யர், அந்த்ரே ரஸல் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தாவின் ரன்உயர்வுக்கு ஷர்துல் தாகூர் தடைபோட்ட நிலையில், தினேஷ் கார்த்திக் அதிரடி காட்டினார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையில் ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 38-வது லீக் ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கன் டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெய்ன் பிராவோ இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக சுட்டிப்பையன் சாம் கர்ரன் இடம் பிடித்துள்ளார்.  கொல்கத்தா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    கொல்கத்தா அணியின் ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷுப்மான் கில் முதல் ஓவரில் இரண்டு பவுண்ரிகள் விளாசினார். என்றாலும், கடைசி பந்தில் ரன்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். 

    அடுத்து வந்த ராகுல் திரிபாதி சிறப்பாக விளையாடினார். முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய வெங்கடேஷ் அய்யர் 18 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். கொல்கத்தா முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்திருந்தது.

    ரஸல் அவுட்

    கேப்டன் மோர்கன் 8 ரன்னில் வெளியேறினார். அரைசதம் நோக்கிச் சென்ற ராகுல் திரிபாதி 33 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த்ரே ரஸல் 15 பந்தில் 20 ரன்கள் எடுத்து க்ளீன் போல்டானார். ரஸல் ஆட்டமிழக்கும்போது கொல்கத்தா 16.4 ஓவரில் 125 ரன்கள் எடுத்திருந்தது.

    தினேஷ் கார்த்தி அதிரடியாக விளையாடி 11 பந்தில் 26 ரன்கள் அடிக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் அடித்துள்ளது. நிதிஷ் ராணா 27 பந்தில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஷர்துல் தாகூர், ஹசில்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
    கோஸ்வாமி 3 விக்கெட் வீழ்த்த ஷபாலி வர்மா 56 ரன்களும், யாஸ்டிகா பாட்டியா 64 ரன்களும் அடிக்க 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றது.
    இந்திய பெண்கள் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் மூனறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், இன்று 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மூனே 52 ரன்களும், கார்ட்னெர் 67 ரன்களும் விளாசினர். இந்திய அணி சார்பில் கோஸ்வாமி 10 ஓவர்கள் வீசி 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பூஜா வாஸ்ட்ரகார் 46 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 265 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி 56 ரன்கள் சேர்த்தார். 3-வது வீராங்கனையாக களம் இறங்கிய யாஸ்டிகா பாட்டியா 69 பந்தில் 64 ரன்கள் விளாசினார்.

    தீப்தி ஷர்மா 30 பந்தில் 31 ரன்களும், ஸ்னே ராணா 27 பந்தில் 30 ரன்களும் சேர்க்க இந்தியா 49.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெய்ன் பிராவோவிற்குப் பதிலாக சுட்டிப்பையன் சாம் கர்ரன் அணியில் இடம் பிடித்துள்ளார்.
    ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டின் 38-வது லீக் ஆட்டம் அபு தாபியில் மதியம் 3.30 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் மோர்கன் டாஸ் வென்று  பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெய்ன் பிராவோ இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக சுட்டிப்பையன் சாம் கர்ரன் இடம் பிடித்துள்ளார்.  கொல்கத்தா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

    ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி, நிதிஷ் ராணா, மோர்கன், தினேஷ் கார்த்திக், அந்த்ரே ரஸல், சுனில் நரைன், பெர்குசன், வரண் சக்ரவர்த்தி, பிரசித் கிருஷ்ணா.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

    1. ருதுராஜ், 2. டு பிளிஸ்சிஸ், 3. மொயீன் அலி, 4. சுரேஷ் ரெய்னா, 5. அம்பத்தி ராயுடு, 6. ரவீந்திர ஜடேஜா, 7. சாம் கர்ரன், 8. டோனி (கேப்டன்), 9. ஷர்துல் தாக்குர், 1. தீபக் சாஹர், 10. ஹேசில்வுட்.
    பிளே-ஆப் சுற்று வாய்ப்புக்கு பஞ்சாப் அணி எஞ்சி உள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று இரவு சார்ஜாவில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணியை 5 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவரில் 7 விக்கெட்டுகளுக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மார்க்ராம் 27 ரன் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் ஹோல்டர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் விளையாடிய ஐதராபாத் அணி விக்கெட்டுகளை இழந்து திணறியது. சகா, (31 ரன்) ஹோல்டர் (47 ரன்) ஆகியோர் தாக்கு பிடித்து விளையாடினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்டது. இதில் 11 ரன்னே எடுக்கப்பட்டது.

    பஞ்சாப் தரப்பில் ரவிபிஷ்னோய் 3 விக்கெட்டும், முகமது ‌ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். முகமது ‌ஷமி 4 ஓவர் வீசி 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பஞ்சாப் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும். அதன் மூலம் அந்த அணி பிளே-ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. 8-வது தோல்வியை சந்தித்த ஐதராபாத் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.

    வெற்றி குறித்து பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-

    இந்த வெற்றி மூலம் பஞ்சாப் கிங்ஸ் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று நம்புகிறேன்.

    ஹோல்டர் அற்புதமாக விளையாடினார். அவர் ஒரே ஓவரில் என்னையும் மயங்க் அகர்வாலையும் அவுட் செய்தார். பேட்டிங்கையும் சிறப்பாக செய்தார்.

    ஆடுகளத்தில் வேகம் இல்லை. நீங்கள் ஒரு நல்ல ஸ்கோரை எடுத்தால் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

    இந்த ஆடுகளம் 160-170 ரன் எடுக்கும் ஆடுகளம் அல்ல என்பதும் அதிக ஷாட்டுகளை விளையாட கூடாது என்பதும் பேட்ஸ்மேன்களுக்கான பாடம். இதை யாராவது உணர்ந்து இருந்தால் நாங்கள் 140 ரன் எடுத்திருக்கலாம்.

    எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முகமது ‌ஷமி தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஹர்பீர்த் பிரார் ஒரு சிறந்த ஆல்-ரவுண்ட் கிரிக்கெட் வீரர் என்று நான் நினைக்கிறேன். அவர் எங்களுக்காக ஆட்டத்தை முடித்து வைத்தார். அவர் உயரமான பந்து வீச்சாளர். அவரது பந்தில் அடித்து விளையாடுவது எளிதானதல்ல.

    ஒவ்வொரு முறையும் அவருடன் நான் செல்லும் போது, கவலைப்படாதே நான் ரன்களை விட்டு கொடுக்க மாட்டேன் என்று கூறுவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிளே-ஆப் சுற்று வாய்ப்புக்கு பஞ்சாப் அணி எஞ்சி உள்ள அனைத்து ஆட்டங்களும் வெல்ல வேண்டும்.
    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சென்னை அணி சம பலத்துடன் இருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.30 மணிக்கு அபுதாபியில் நடக்கும் 38-வது லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 9 ஆட்டத்தில் 7 வெற்றி, 2 தோல்வி பெற்று 14 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைவதை கிட்டத்தட்ட உறுதி செய்துவிடும். சென்னை அணியின் ரன் ரேட் (+1.18) நன்றாக உள்ளது.

    சென்னை அணியில் ருதுராஜ் கெய்க் வாட், டுபெலிசிஸ், அம்பதி ராயுடு ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் தீபக் சாகர், பிராவோ ஆகியோர் முத்திரை பதித்து வருகின்றனர்.

    சுரேஷ் ரெய்னா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சென்னை அணி சம பலத்துடன் இருப்பதால் இன்றைய ஆட்டத்திலும் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கொல்கத்தா அணி 9 ஆட்டத்தில் 4 வெற்றி, 5 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டும் என்றால் கொல்கத்தா அடுத்துவரும் ஆட்டங்களில் வெற்றிபெற வேண்டியது கட்டாயமாகும். இதனால் அந்த அணி வெற்றிக்காக போராடும்.

    கொல்கத்தா அணி பேட்டிங்கில் திரிபாதி, வெங்கடேஷ் அய்யர், சுப்மன்கில், நிதிஷ் ரானா ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி, ரசல், சுனில் நரேன் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இரவு 7.30 மணிக்கு துபாயில் தொடங்கும் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ்- ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பெங்களூரூ அணி 10 புள்ளிகளுடன் (9 ஆட்டம்) 3-வது இடத்தில் உள்ளது. கடைசி 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்துள்ள அந்த அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப முயற்சிக்கும். மும்பை அணி 9 ஆட்டத்தில் 4 வெற்றிபெற்று 8 புள்ளியுடன் 6-வது இடத்தில் உள்ளது.
    ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் பிஷ்னோய் 3 விக்கெட்டும், ஷமி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    சார்ஜா:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு சார்ஜாவில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

    முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மார்கிராம் 27 ரன்கள் எடுத்தார். கேப்டன் கே.எல்.ராகுல் 21 ரன்களும், ஹர்பிரீத் 18 ரன்களும் (நாட் அவுட்), கிறிஸ் கெயில் 14 ரன்களும், தீபக் ஹுடா 13 ரன்களும் எடுத்தனர்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் தரப்பில் ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

    இதையடுத்து, 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி களமிறங்கியது. பஞ்சாப் அணியின் பந்து வீச்சில் ஐதராபாத் அணி வீரர்கள் திணறினர். ஒரு கட்டத்தில் 60 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் தத்தளித்தது.

    ரன் அவுட்டான சகா

    தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சகாவுடன் ஜேசன் ஹோல்டர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து ஆடியது. 
    சகா 31 ரன்னில் அவுட்டானார். 

    இறுதியில், ஐதராபாத் 7 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹோல்டர் 47 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். பஞ்சாப் அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும்.
    ×