search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷபாலி வர்மா, யாஸ்டிகா பாட்டியா
    X
    ஷபாலி வர்மா, யாஸ்டிகா பாட்டியா

    பெண்கள் கிரிக்கெட்: 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

    கோஸ்வாமி 3 விக்கெட் வீழ்த்த ஷபாலி வர்மா 56 ரன்களும், யாஸ்டிகா பாட்டியா 64 ரன்களும் அடிக்க 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய பெண்கள் அணி வெற்றி பெற்றது.
    இந்திய பெண்கள் அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. முதலில் மூனறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், இன்று 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

    இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் மூனே 52 ரன்களும், கார்ட்னெர் 67 ரன்களும் விளாசினர். இந்திய அணி சார்பில் கோஸ்வாமி 10 ஓவர்கள் வீசி 37 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். பூஜா வாஸ்ட்ரகார் 46 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 265 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய பெண்கள் அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா சிறப்பாக விளையாடி 56 ரன்கள் சேர்த்தார். 3-வது வீராங்கனையாக களம் இறங்கிய யாஸ்டிகா பாட்டியா 69 பந்தில் 64 ரன்கள் விளாசினார்.

    தீப்தி ஷர்மா 30 பந்தில் 31 ரன்களும், ஸ்னே ராணா 27 பந்தில் 30 ரன்களும் சேர்க்க இந்தியா 49.3 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    Next Story
    ×