search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி, எம்.எஸ். டோனி
    X
    விராட் கோலி, எம்.எஸ். டோனி

    ஆர்.சி.பி.க்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

    சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், ஆடும் லெவனில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
    ஐ.பி.எல். தொடரின் 35-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் இன்று இரவு நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சரியாக 7 மணிக்கு டாஸ் சுண்டப்படும். ஷார்ஜா மைதானத்தில் மணல் புயல் வீசியதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டது.

    சுமார் அரைமணி நேரம் கழித்து டாஸ் சுண்டப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். டோனி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். சென்னை அணியில் மாற்றம் ஏதுமில்லை. ஆர்.சி.பி.-யில் டிம் டேவிட், நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

    1. ருதுராஜ், 2. டு பிளிஸ்சிஸ், 3. மொயீன் அலி, 4. சுரேஷ் ரெய்னா, 5. அம்பத்தி ராயுடு, 6. ரவீந்திர ஜடேஜா, 7. வெய்ன் பிராவோ, 8. டோனி (கேப்டன்), 9. ஷர்துல் தாக்குர், 1. தீபக் சாஹர், 10. ஹேசில்வுட்.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி:

    1. விராட் கோலி, 2. தேவ்தத் படிக்கல், 3. எஸ். பரத், 4. மேக்ஸ்வெல், 5. ஏபி டி வில்லியர்ஸ், 6. வணிந்து ஹசரங்கா, 7. நவ்தீப் சைனி 8. டிம் டேவிட், 9. முகமது சிராஜ், 10. ஹர்ஷல் பட்டேல், 11. சஹல்.
    Next Story
    ×