என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AUSWvINDW"

    • டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 163 ரன்கள் சேர்த்தது.

    சிட்னி:

    இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல் டி 20 போட்டியில் மழை காரணமாக டக்வொர்த் லெவிஸ் முறைப்படி இந்தியா வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி கான்பெராவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 163 ரன்கள் சேர்த்தது. தொடக்க வீராங்கனை ஜார்ஜியா வோல் 57 பந்தில் 88 ரன்கள் குவித்தார். பெத் மூனி 46 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இந்திய அணி களமிறங்கியது. ஷபாலி வர்மா 29 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 31 ரன்னும் எடுத்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 19 ரன்கள் இத்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. டி20 தொடர் 1-1 என சமனில் உள்ளது.

    இந்திய அணியின் கடைசி 6 விக்கெட்கள் வெறும் 7 ரன்னில் வீழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
    • இந்த ஆண்டு 6 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 108 ரன்கள் மட்டுமே ஷபாலி வர்மா எடுத்துள்ளார்.

    இந்திய மகளிர் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடகிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த சில போட்டிகளில் சொதப்பிய தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் இந்த ஆண்டு 6 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 108 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 33 ரன்கள் அடித்துள்ளார்.

    காயம் காரணமாக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயங்கா பாட்டீல் விலகி உள்ளார். மேலும் கடந்த மாதம் நியூசிலாந்திற்கு எதிராக 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றதில் விளையாடிய அணியில் இருந்து உமா செத்ரி, தயாளன் ஹேமலதா, ஸ்ரேயங்கா பாட்டீல் மற்றும் சயாலி சத்கரே ஆகிய நான்கு பேர் இடம் பெறவில்லை.

    ஒருநாள் தொடருக்கான இந்திய அணி:

    ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, பிரியா புனியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், யாஸ்திகா பாட்டியா, ரிச்சா கோஷ், தேஜல் ஹசாப்னிஸ், தீப்தி சர்மா, மின்னு மணி , பிரியா மிஸ்ரா, ராதா யாதவ், டைட்டாஸ் சாது, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், சைமா தாகூர்.

    • இந்தியாவின் மந்தனா 105 ரன்களில் அவுட் ஆனார்.
    • ஆஸ்திரேலிய தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    பெர்த்:

    இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி போட்டி பெர்த்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

    அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 298 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சதர்லேண்ட் சதம் அடித்து அசத்தினார். அவர் 110 ரன்னில் அவுட் ஆனார். இந்தியா தரப்பில் அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    கடினமான இலக்குடன் இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக மந்தனா - ரிச்சா கோஷ் களமிறங்கினர். ரிச்சா கோஷ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து மந்தனாவுடன் ஹர்லீன் தியோல் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர்.

    இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 118 ரன்கள் குவித்தது. தியோல் 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹர்மன்பிரீத் கவுர் 12 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மந்தனா சதம் (105) அடித்து அவுட் ஆனார்.

    இதனை தொடர்ந்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் வெளியேற இறுதியில் இந்தியா 45.1 ஓவரில் 215 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய தரப்பில் ஆஷ்லே கார்ட்னர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் இந்தியாவை ஒயிட்வாஷ் செய்துள்ளது.

    ×