என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராஜஸ்தானுடன் இன்று மோதல் - ‘பிளேஆப்’ சுற்று ஆர்வத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்
அபுதாபி:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 2-வது கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.
7-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. அபுதாபியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ்-சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி அணி 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 5-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் இதுவரை 23 முறை மோதி உள்ளன. இதில் டெல்லி 12 ஆட்டத்திலும், ராஜஸ்தான் 11 ஆட்டத்திலும் வெற்றி பெற்று உள்ளன.
சார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐதராபாத் அணி 1 வெற்றி, 7 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றிக்காக காத்து இருக்கிறது.
பஞ்சாப் அணி 3 வெற்றி 6 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப் அணி ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. அந்த அணி வெற்றியை கோட்டை விட்டது. அந்த மாதிரியான நிலைமை ஏற்பட்டு விடாமல் இருக்க அந்த அணி வீரர்கள் கவனமுடன் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் ஐதராபாத் 12-ல், பஞ்சாப் கிங்ஸ் 5-ல் வெற்றி பெற்று உள்ளன. வெற்றி பெற அணிகள் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஐ.பி.எல். ஆட்டங்கள் விறுவிறுப்பாக இருக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்