என் மலர்
விளையாட்டு
புதுடெல்லி:
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட்கோலி. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அவர் சதம் அடிக்காமல் உள்ளார். கடைசியாக 2019-ம் ஆண்டு வங்காள தேசத்துக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் சதம் அடித்து இருந்தார்.
கேப்டன் பதவியால் விராட் கோலியின் பேட்டிங் திறன் பாதிக்கப்படுவதாக கருத்து நிலவியது. அவர் இந்திய கிரிக்கெட் அணியின் 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக உள்ளார்.
பேட்டிங் திறன் பாதிக்கப்படுவதால் விராட் கோலி சமீபத்தில் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ரோகித் சர்மா நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் 20 ஓவர் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி நீக்கப்படுகிறார். தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணிக்கு ஒருநாள் தொடரில் புதிய கேப்டன் நியமிக்கப்படுகிறார். ரோகித் சர்மாவே ஒருநாள் போட்டிக்கும் கேப்டனாக பொறுப்பேற்கிறார்.
இந்திய அணி டிசம்பர் முதல் ஜனவரி வரை தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் நான்கு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது.
டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-ந் தேதியும், ஒருநாள் தொடர் ஜனவரி 11-ந் தேதியும், 20 ஓவர் தொடர் ஜனவரி 19-ந் தேதியும் தொடங்குகிறது. இந்த ஒருநாள் தொடரின் போது தான் விராட் கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்படுகிறது.
ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவி தொடர்பாக விராட் கோலியிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் ஆலோசனை நடத்துகிறது. அதன்பிறகு ரோகித் சர்மா ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார்.
இதற்கிடையே நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கோலி முதல் டெஸ்டிலும் ஆடமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் முதல் டெஸ்டுக்கு ரகானே கேப்டனாக செயல்படுவார்.
மேலும் 20 ஓவர் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு நியூசிலாந்துக்கு டெஸ்ட் தொடரில் ஓய்வு கொடுக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.






புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக விராட் கோலி பணியாற்றி வந்தார்.
கேப்டன் பொறுப்பு சுமையால் தனது பேட்டிங் திறன் பாதிக்கப்படுவதாக அவர் கருதினார். இதனால் 20 ஓவர் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து மட்டும் அவர் விலகி உள்ளார்.
தற்போது முடிந்த 20 ஓவர் உலக கோப்பையோடு அவர் கேப்டன் பதவியை துறந்தார். அதே நேரத்தில் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கோலி தொடர்ந்து கேப்டன் பதவியில் நீடிப்பார்.
20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், 20 ஓவர் அணியில் தொடர்ந்து ஆடுவேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் தோற்றதால் விராட் கோலியின் கேப்டன் பதவி குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் கேப்டன் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்படலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் டெஸ்ட், ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகக்கூடாது என்று முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகக்கூடாது என்று நான் நினைக்கிறேன். இது அவரது முடிவை பொறுத்தது. அணியில் ஒரு வீரராக விளையாட கோலி விரும்பினாலும், அது அவரின் முடிவுதான்.
விராட் கோலி தலைமையின் கீழ் இந்திய அணி சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை பெற்றுள்ளது. கேப்டன் பதவியில் அவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளார். அவர் ஒரு சிறந்த வீரர். ஆக்ரோஷமாக இருந்து அணியை வழி நடத்தினார்.
ஐ.சி.சி. போட்டிகளில் மோசமாக தோல்வி அடைந்தது குறித்தும், அரை இறுதிக்கு கூட தகுதி பெறாமல் இருந்தது குறித்தும் இந்திய அணி சுய பரிசோதனை செய்ய வேண்டும்.
இந்திய அணி கடைசியாக 2013 ஐ.சி.சி. போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றது. அதன்பின் 8 ஆண்டுகளாக எதையும் வெல்லவில்லை. இதுகுறித்து நிச்சயம் ஆய்வு செய்ய வேண்டும்.
இரு நாடுகளிடையே போட்டிகளில் வென்றாலும், உலக அளவிலான போட்டியை வெல்லும்போதுதான் மக்கள் நினைவு வைத்திருப்பார்கள். அதே நேரத்தில் கடினமான இந்த கால கட்டத்தில் இந்திய அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி பதவி விலகியதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் 20 ஓவர் போட்டியில் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா பொறுத்தமானவர் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
20 ஓவர் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா சிறந்தவர். அடுத்த உலக கோப்பைக்கு இன்னும் 10 முதல் 12 மாதங்களே உள்ளன. ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணியை சிறப்பாக வழி நடத்தியுள்ளார். எனவே ரோகித் சர்மாவுக்கு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு கொடுத்தது சரியே.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
‘டாப்-8’ வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று என்று அழைக்கப்படும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் இன்று முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது.
மொத்தம் ரூ.37 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் இருந்து உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி விலகி விட்டார். அவர் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு தயாராகும் பொருட்டும், கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் காரணமாகவும் இந்த முடிவை மேற்கொண்டார். இதேபோல் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபிர் அடுத்த சீசனுக்கு தயாராகுவதற்கு வசதியாக ஒதுங்கினார். அவர்களுக்கு பதிலாக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் (போலந்து), 10-வது இடத்தில் உள்ள பாலா படோசா (ஸ்பெயின்) ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் வீராங்கனைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். அந்த பிரிவுகளுக்கு மெக்சிகோ நாட்டின் பழமை வாய்ந்த நகரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. இதில் ‘சீச்சன் இட்சா’ பிரிவில் சபலென்கா (பெலாரஸ்), மரியா சக்காரி (கிரீஸ்), இகா ஸ்வியாடெக் (போலந்து), பாலா படோசா (ஸ்பெயின்) ஆகியோரும், ‘தியோதி அகான்’ பிரிவில் பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) கோன்டாவெய்ட் (எஸ்தோனியா) ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.
இதில் ஒவ்வொரு வீராங்கனைகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.
தொடக்க நாளில் நடைபெறும் ஒற்றையர் ஆட்டங்களில் கிரெஜ்சிகோவா-கோன்டாவெய்ட், கரோலினா பிளிஸ்கோவா-கார்பின் முகுருகா ஆகியோர் மோதுகிறார்கள்.
பெண்கள் இரட்டையர் பிரிவிலும் போட்டி நடைபெறுகிறது. இதில் ஷூகோ அயமா-எனா ஷிபஹரா (ஜப்பான்), சமந்தா ஸ்டோசுர் (ஆஸ்திரேலியா)-ஜாங் ஷூய் (சீனா) உள்பட 8 இணைகள் கலந்து கொள்கிறது.






