search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    விராட் கோலி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

    விராட் கோலி மகளுக்கு மிரட்டல் விடுத்த 23 வயது வாலிபர் தெலுங்கானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம்  தோல்வியடைந்தது.  இரண்டாவது ஆட்டத்தில்  நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.  இந்தியா அணி தொடர்ந்து தோல்வியடைந்து வந்தது.  இதுகுறித்து, இந்திய வீரர் முகமது ஷமியை சமூக வலைத்தளங்களில்  பலர் விமர்சனம் செய்து வந்தனர்.  இந்த விமர்சனங்களை கண்டித்து கேப்டன் விராட் கோலி, ஷமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து, விராட் கோலியின் ஆதரவைத் தொடர்ந்து ட்விட்டரில்  நபர் ஒருவர் கோலியின் 9 மாத குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த சம்பவம் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து, தேசிய மகளிர் ஆணையம், குழந்தைகள் ஆணையமும் இந்த மிரட்டல் குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கோரியிருந்தன. பின்னர், சம்பவம் குறித்து விசாரணை குறித்து நடத்தப்பட்டு வந்தது.

    மேலும்.  மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு  செய்தனர்.  இதனைத்தொடர்ந்து, ட்விட்ரில் மிரட்டல் விடுத்தரை தேடும் பணியில் இறங்கினர்.  விசாரணையில், தெலுங்கானா மாநிலம் சங்கராரெட்டியைச் சேர்ந்த அகுபதினி ராம் நாகேஷ் (23) என்பவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.  மேற்கொண்ட விசாரணையில்,  வாலிபர் நாகேஷ்  சங்கராரெட்டி நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். தனியார் மென்பொருள் நிறுவனத்தில்  பணியாற்றி  வந்துள்ளார்.  தேடப்பட்ட நிலையில், மும்பை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர்.

    மேலும், கோலியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நாகேஷ் தனது ட்விட்டர் பெயரை மாற்றி பயன்படுத்தி வந்துள்ளதைக் கண்டுபிடித்த போலீசார், வாலிபர் மீது ஐபிசி பிரிவு 374 (ஏ), 506, 500 தகவல்தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67 மற்றும் 67 (பி) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×