search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி
    X
    விராட் கோலி

    ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி நீக்கம்? தென் ஆப்பிரிக்க பயணத்துக்கு புதிய கேப்டன் நியமனம்

    நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கோலி முதல் டெஸ்டிலும் ஆடமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட்கோலி. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அவர் சதம் அடிக்காமல் உள்ளார். கடைசியாக 2019-ம் ஆண்டு வங்காள தேசத்துக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் சதம் அடித்து இருந்தார்.

    கேப்டன் பதவியால் விராட் கோலியின் பேட்டிங் திறன் பாதிக்கப்படுவதாக கருத்து நிலவியது. அவர் இந்திய கிரிக்கெட் அணியின் 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக உள்ளார்.

    பேட்டிங் திறன் பாதிக்கப்படுவதால் விராட் கோலி சமீபத்தில் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ரோகித் சர்மா நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் 20 ஓவர் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    இதற்கிடையே ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி நீக்கப்படுகிறார். தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணிக்கு ஒருநாள் தொடரில் புதிய கேப்டன் நியமிக்கப்படுகிறார். ரோகித் சர்மாவே ஒருநாள் போட்டிக்கும் கேப்டனாக பொறுப்பேற்கிறார்.

    இந்திய அணி டிசம்பர் முதல் ஜனவரி வரை தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் நான்கு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது.

    டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-ந் தேதியும், ஒருநாள் தொடர் ஜனவரி 11-ந் தேதியும், 20 ஓவர் தொடர் ஜனவரி 19-ந் தேதியும் தொடங்குகிறது. இந்த ஒருநாள் தொடரின் போது தான் விராட் கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்படுகிறது.

    ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவி தொடர்பாக விராட் கோலியிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் ஆலோசனை நடத்துகிறது. அதன்பிறகு ரோகித் சர்மா ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார்.

    இதற்கிடையே நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கோலி முதல் டெஸ்டிலும் ஆடமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் முதல் டெஸ்டுக்கு ரகானே கேப்டனாக செயல்படுவார்.

    மேலும் 20 ஓவர் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு நியூசிலாந்துக்கு டெஸ்ட் தொடரில் ஓய்வு கொடுக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×