என் மலர்
விளையாட்டு
கிறிஸ்ட்சர்ச்:
12-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.
8 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அரை இறுதிக்கு முன்னேறின. எஞ்சிய 2 அணிகள் எவை என்பது இன்றைய கடைசி நாள் ஆட்டத்தின் முடிவில் தெரியவரும்.
மிதாலிராஜ் தலைமையிலான இந்திய அணி கடைசி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை இன்று எதிர்கொண்டது. அரை இறுதியில் நுழைய இதில் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு இருந்தது.
‘டாஸ்’ வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன் குவித்தது.
தொடக்க வீராங்கனை மந்தனா 71 ரன்னும், கேப் டன் மிதாலிராஜ் 68 ரன்னும், ஷபாலி வர்மா 53 ரன்னும், ஹர்மன் பிரீத் கவுர் 48 ரன்னும் எடுத்தனர்.
275 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தென்ஆப்பிரிக்கா ஆடியது.
மற்றொரு ஆட்டத்தில் இங்கிலாந்து- வங்காளதேசம் மோதின. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 234 ரன் எடுத்தது.
பின்னர் ஆடிய வங்காள தேசம் 134 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து 100 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த அணி 8 புள்ளியுடன் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
நியூசிலாந்து, வங்காளதேசம், பாகிஸ்தான் அணிகள் ஏற்கனவே வாய்ப்பை இழந்து விட்டன.
தமிழகத்தை சேர்ந்தவர் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் பத்ரிநாத். கிரிக்கெட் வென்சர்ஸ் நிறுவனரான இவர் ஆன்லைன் மூலம் இளம் வீரர்களின் திறமையை கண்டறிந்து இலவசமாக பயிற்சி அளிக்கிறார்.
டி.என்.பி.எல். கிரிக்கெட் டில் பயிற்சியாளராக பணியாற்றிய போது தமிழகத்தில் ஏராளமான இளம் வீரர்களிடம் அபார திறமை ஒளிந்து கிடப்பதை அறிய முடிந்தது. இத்தகைய வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை ஏற்படுத்துவதோடு உயர்தர பயிற்சியும் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், ‘ஆன்லைன் டேலண்ட் ஹண்ட்’ என்ற பெயரில் இணைய தளத்தில் வீரர்களின் திறமையை கண்டறியும் திட்டத்தை தொடங்கி உள்ளேன்.
விளையாட்டோடு எனக்கு உள்ள தொடர்புகளை பயன்படுத்தி இந்த திட்டத்தின் மூலம் தேர்வாகும் இளம் வீரர்களை அவர்களது வயது மற்றும் திறமை அடிப்படையில் சில அணிகளில் சேர்த்து விளையாட வைக்க முடியும் என்பது என்னுடைய எண்ணமாகும்.
லாப நோக்கமின்றி தொடங்கப்படும் இந்த திட்டத்தில் சேர கிரிக்கெட் வீரர்கள் பணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. முற்றிலும் இலவசமாகும்.
இந்த திட்டத்தில் சேர விரும்புவோர் தங்களது ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் விதமான வீடியோ பதிவுகளை www.cricitventures.com என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த வீடியோ பதிவுகளை நானும் எனது பயிற்சியாளர் குழுவினரும் பார்த்து, திறமையான இளம் வீரர்களை கண்டறிவோம்.
வீரர்களின் தகுதி, திறமைக்கு ஏற்ப பிரித்து ‘எலைட் குரூப்’ ஒன்று உருவாக்கப்படும்.
இதில் இடம்பெறும் வீரர்கள் எங்களது மேம்படுத்தப்பட்ட பயிற்சி பெறுவதோடு, ஊக்கத் தொகை உதவியும் கிடைக்கும். இவர்களுக்கு பெரிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தாலும் ஆச்சரிய மில்லை. எலைட் குரூப்பில் இடம் பெறாத வீரர்களுக்கு வேறு சில பயிற்சிகள் அளித்து செம்மைப்படுத்தப்படுவர்.
வீரர்களுக்கு தொழில் நுட்ப திறன் பயிற்சியுடன் மேலும் பல திறன்களை பயிற்சிவித்து பன்முக கிரிக்கெட் வீரர்களாக உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவாகும்.
இவ்வாறு பத்ரிநாத் கூறினார்.






