என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
சுவிஸ் ஓபன் அரையிறுதில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தோல்வி
Byமாலை மலர்27 March 2022 3:09 AM GMT (Updated: 27 March 2022 3:09 AM GMT)
இறுதி போட்டியில் இந்தோனேஷிய வீரர் ஜோனதான் கிறிஸ்டி, இந்திய வீரர் பிரனாயுடன் மோதுகிறார்.
பாசெல்:
சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், இந்தோனேஷிய வீரர் ஜோனதான் கிறிஸ்டியுடன் மோதினார்.
பாசெல் நகரில் இந்த போட்டி 55 நிமிடங்கள் நடைபெற்றது. இதில் முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் ஸ்ரீகாந்த் கைப்பற்றினார். எனினும் அடுத்த இரண்டு செட்களையும் 21-7, 21-13 என்ற கணக்கில் ஜோனதான் கிறிஸ்டி கைப்பற்றி வெற்றி பெற்றார்.
முன்னதாக நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீரர் எச்.எஸ்.பிரனோய், இந்தோனேசிய வீரர் சினிசுகா கின்டிங்கை 21-19, 19-21, 21-18 என்ற செட்கணக்கில் தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தார்.
இதையடுத்து இன்று நடைபெறும் இறுதி போட்டியில் ஜோனதான் கிறிஸ்டி, இந்திய வீரர் பிரனாயுடன் மோதுகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X