என் மலர்
விளையாட்டு
- ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன் குவித்து இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்தது.
- 298 ரன்கள் எடுத்து அசாருதீன்-வெங்சர்க்கார் ஜோடி முதல் இடத்தில் உள்ளது.
எட்ஜ்பஸ்டன்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் ஆடிய இந்திய அணி 98 ரன் எடுப்பதற்குள் 5 விக்கெட்டை இழந்தது.
சுப்மன் கில் (17 ரன்), புஜாரா (13), ஸ்ரேயாஸ் அய்யர் (15) ஆகியோர் ஆண்டர்சன் பந்திலும் , விஹாரி (20), விராட் கோலி (11) ஆகியோர் மேத்யூ பாட்ஸ் பந்திலும் வெளியேறினார்கள். 6-வது விக்கெட்டான ரிஷப்பண்ட்-ரவீந்திர ஜடேஜா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.
குறிப்பாக ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 89 பந்தில் சதம் அடித்து 5-வது செஞ்சூரியை பதிவு செய்தார். ரிஷப் பண்ட் 111 பந்தில் 146 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் 19 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். அவரும், ஜடேஜாவும் 6-வது விக்கெட்டுக்கு 222 ரன் குவித்தது மிகவும் முக்கியமானதாகும்.
அடுத்து வந்த ஷர்துல் தாகூர் ஒரு ரன்னில் பென்ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் இருந்த ஜடேஜா தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 73 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 338 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.
ஜடேஜா 83 ரன்னிலும் (10 பவுண்டரி) முகமது ஷமி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன் குவித்து இங்கிலாந்து மண்ணில் சாதனை படைத்தது. 1997-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுன் மைதானத்தில் அசாருதீன்-தெண்டுல்கர் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன் எடுத்தனர். இதனை ரிஷப் பண்ட்-ஜடேஜா ஜோடி சமன் செய்தது.
298 ரன்கள் எடுத்து அசாருதீன்-வெங்சர்க்கார் ஜோடி முதல் இடத்தில் உள்ளது. 272 ரன்கள் எடுத்து அசாருதீன் - கபில் தேவ் ஜோடி 2-வது இடத்திலும் டோனி-டிராவிட் ஜோடி 224 ரன்கள் எடுத்து 3-வது இடத்திலும் உள்ளது.
- அதிரடியாக விளையாடிய ஹூடா 59 ரன்கள் எடுத்தார்.
- உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
டெர்பிஷயர்:
டெர்பிஷயர்-இந்தியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் நேற்று நடந்தது. இந்திய அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. புவனேஸ்வர் குமார், ஹர்த்திக் பாண்ட்யா, ஹர்சல் படேல், இஷான் கிஷன், சாஹல், திரிபாதி ஆகியோர் இந்த அணியில் இடம் பெறவில்லை.
முதலில் பேட்டிங் செய்த டெர்பிஷயர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்ட்வா-சாம்சன் ஜோடி களமிறங்கியது. ருதுராஜ் 3 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து ஹூடா-சாம்சன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 38 ரன்கள் எடுத்து சாம்சன் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய ஹூடா 59 ரன்னில் வெளியேறினார். அயர்லாந்தை தொடர்ந்து இந்த போட்டியிலும் ஹூடாவின் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். அடுத்ததாக சூர்யகுமார் யாதவ் 36 தினேஷ் கார்த்திக் 7 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
16.4 ஓவரில் 151 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
- அதிவேகமாக சதம் அடித்தவர்கள் பட்டியலில் வீரேந்திர சேவாக் முதல் இடத்தில் உள்ளார்.
- இங்கிலாந்தில் இரண்டு சதங்களை அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை பண்ட் படைத்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர். சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இந்திய அணி 98 ரன்னில் 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ரிஷப் பண்ட்- ஜடேஜா ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது.
ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். ஜடேஜா அரை சதம் விளாசினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 338 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 111 பந்துகளில் 146 ரன்னில் அவுட் ஆனார். அதிரடியாக சதம் அடித்ததன் மூலம் டெஸ்டில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 3-வது இடத்தை ரிஷப் பண்ட் பிடித்தார்.
முதல் இடத்தில் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் உள்ளார். அவர் 2006-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 78 பந்தில் சதம் அடித்தார். 1990-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக அசாருதீன் 88 பந்தில் சதம் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். தற்போது ரிஷப் பண்ட் 89- பந்தில் சதம் அடித்துள்ளார்.
இதேபோல் அதிவேகமாக சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர்களில் டோனி சாதனையை பண்ட் முறியடித்தார். 2006-ல் பாகிஸ்தானுக்கு எதிராக டோனி 93 பந்துகளில் சதம் விளாசினார். அதனை பண்ட் முறியடித்துள்ளார். அவர் மேலும் இரண்டு சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
ஒரு ஆண்டில் இரண்டு சதங்களை அடித்த நான்காவது இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் பண்ட் படைத்துள்ளார். 24 வயதில் வெளிநாட்டு மண்ணில் இரண்டு சதம் அடித்தவர்கள் பட்டியலில் பண்ட் மட்டுமே இருந்து வருகிறார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் அவர் சதம் அடித்திருந்தார்.
இங்கிலாந்தில் இரண்டு சதங்களை அடித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். பண்ட் 2018 சுற்றுப்பயணத்தின் போது ஐந்தாவது டெஸ்டில் இங்கிலாந்து மண்ணில் தனது முதல் சதத்தை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் 2000 ரன்களை கடந்துள்ளார்.
- சானியா மற்றும் பாவிக் ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
- 35 வயதான சானியா மிர்சா தனது இறுதி விம்பிள்டன் போட்டியில் விளையாடி வருகிறார்.
லண்டன்:
விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சானியா மிர்சா- பாவிக் ஜோடி விளையாடி வருகிறது.
ஆறாம் நிலை வீராங்கனையான சானியா மற்றும் பாவிக் ஜோடி 6-4, 3-6, 6(10)-6(3) என்ற செட் கணக்கில் ஜார்ஜியாவின் நடேலா டிசலமிட்ஸே - ஸ்பெயினின் டேவிட் வேகா ஹெர்னாண்டஸ் ஜோடியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.
35 வயதான சானியா மிர்சா தனது இறுதி விம்பிள்டன் போட்டியில் விளையாடி வருகிறார்.
- உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்க முன்னணி வீரரான ஜான் இஸ்னர் 3-வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
லண்டன்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சக வீரர் கெக்மனோவிச்சுடன் மோதினார். இதில் 6-0, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு சுற்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அமெரிக்காவின் ஜான் இஸ்னருடன் மோதினார். இதில் 6-4, 7-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார் சின்னர்.
- இந்தியா 2 விக்கெட்டுக்கு 53 ரன் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது.
- ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 222 ரன்கள் சேர்த்து அசத்தியது.
பர்மிங்காம்:
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக புஜாரா, ஷுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. கில் 17 ரன்னிலும், புஜாரா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது பாதிக்கப்பட்டது. மழை நின்றதும் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. விகாரி 20 ரன்னிலும், விராட் கோலி 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஸ்ரேயஸ் அய்யர் 15 ரன்னில் ஆண்டர்சன் பந்துச்சில் விக்கெட் கீப்பர் பில்லிங்சிடம் பிடிபட்டார். இதனால் இந்திய அணி 100 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அடுத்து இறங்கிய ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இருவரும் இணைந்து ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். தேநீர் இடைவேளையில் இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து ஆடிய ரிஷப் பண்ட் அதிரடியாக ஆடி சதமடித்தார். ஜடேஜா அரை சதம் கடந்தார். அணியின் எண்ணிக்கை 320 ஆக இருந்தபோது ரிஷப் பண்ட் 146 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷர்துல் தாக்குர் ஒரு ரன்னில் அவுட்டானார்.
முதல் நாள் முடிவில், இந்திய அணி 73 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. ஜடேஜா 83 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட், மேட்டி பாட்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினர்.
- மலேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் சீன வீராங்கனையிடம் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.
- இதன்மூலம் மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியிலிருந்து அவர் வெளியேறினார்.
கோலாலம்பூர்:
மலேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, சீன தைபே வீராங்கனை டாய் சூ யிங் ஆகியோர் மோதினர்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை 21-13 என்ற கணக்கில் பி.வி.சிந்து வென்றார். அடுத்து சுதாரித்துக் கொண்ட
சூ யிங் அடுத்த இரு செட்களை 21-15, 21-13 என்ற செட் கணக்கில் வென்றார். இந்த தோல்வியின் மூலம் மலேசிய ஓபன் போட்டியிலிருந்து பி.வி.சிந்து வெளியேறினார்.
- சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா அரை சதம் அடித்தார்.
- மழை குறுக்கிட்டதால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
பர்மிங்காம்:
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக புஜாரா-சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. கில் 17 ரன்னிலும், புஜாரா 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற நிலையில் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. விகாரி 20 ரன்னுக்கும், விராட் கோலி 11 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
ஸ்ரேயஸ் அய்யர் 15 ரன்னில் ஆண்டர்சன் பந்துச்சில் விக்கெட் கீப்பர் பில்லிங்சிடம் பிடிபட்டார். இதனால் இந்திய அணி 100 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ரிஷப் பண்ட்டும், ரவீந்திர ஜடேஜாவும் இணைந்து ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இந்திய அணி தேநீர் இடைவேளை வரை 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை எடுத்தது. ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். பின்னர் தொடர்ந்து பண்ட்-ஜடேஜா ஜோடி ரன் குவிப்பில் ஈடுபட்டது.
அபாரமாக விளையாடிய ரிஷப் பண்ட் சதம் அடித்தார். ஜடேஜா அரைச்சதம் அடித்தார். முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 60 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 259 ரன்கள் அடித்திருந்தது.
- இங்கிலாந்து அணி வீரர் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- விராட் கோலி 1 ரன்னிலும் விஹாரி 14 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக புஜாரா-சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. சுப்மன் கில் ஆட்டம் அருமையாக இருந்தது. 4 பவுண்டரிகள் விளாசிய அவர் ஆண்டர்சன் ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த விஹாரி-புஜாராவுடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
17-வது ஓவர் வரை தாக்கு பிடித்த இந்த ஜோடியை ஆண்டர்சன் பிரித்தார். புஜாரா 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். தொடர்ந்து விளையாடிய நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. விராட் கோலி 1 ரன்னிலும் விஹாரி 14 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
- இந்திய அணியின் கேப்டன் கவூர் 44 ரன்கள் அடித்தார்.
- இலங்கை அணி தரப்பில் இனோகா ரணவீரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 48.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக நிலாக்ஷி டி சில்வா 43 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷவாலி வர்மா-மந்தனா ஜோடி ஆடினர். மந்தனா 4 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அடுத்து வந்த பாட்டியா 1 ரன்னில் போல்ட் ஆனார். அடுத்த வந்த கேப்டன் கவூர் - ஷவாலி வர்மாவுடன் ஜோடி சேர்ந்து ரன் குவிக்க ஆரம்பித்தனர்.
1 பவுண்டரி 2 சிக்சர் அடித்த ஷவாலி வர்மா 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். அடுத்து வந்த ஹர்லீன் தியோல்- கவூர் ஜோடி சேர்ந்து ஆடினார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவூர் 44 ரன்னில் வெளியேற சிறிது நேரத்தில் ஹர்லீன் தியோல் 34 ரன்னில் வெளியேறினார்.
இந்திய அணி 103 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகளை பறிக்கொடுத்திருந்தது. அடுத்து வந்த ரிச்சா கோஷ் 6 ரன்னில் வெளியேறினார். 4 விக்கெட்டுகள் மட்டுமே மீதம் இருந்த நிலையில் தீப்தி வர்மா- பூஜா ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.
இந்திய அணி 38 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. இதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அதிகப்பட்சமாக கவூர் 44 ரன்கள் அடித்தார். இலங்கை அணி தரப்பில் இனோகா ரணவீரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி ஜூலை 4-ந் தேதி நடக்கிறது.
- நாதன் லயன் 108 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 436 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- அஸ்வின் 442 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலியா அணியும் ஒருநாள் தொடரை இலங்கை அணியும் கைப்பற்றினர். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி நடந்தது.
இதில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். அவர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டும் இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டும் கைப்பற்றினார். 9 விக்கெட்டுகள் கைப்பற்றியதன் மூலம் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் அவர் 10-வது இடத்தை பிடித்தார்.
நாதன் லயன் 108 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 436 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 20 முறை 5 விக்கெட்டுகளையும் 3 முறை 10 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இவர் இன்னும் 7 விக்கெட்டுகள் வீழ்த்தினால் இந்திய வீரர் அஸ்வினை பின்னுக்கு தள்ளுவார். அஸ்வின் 442 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
- இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந் தேதி தொடங்குகிறது.
இலங்கை அணி ஆஸ்திரேலியாவுடன் மூன்று வடிவிலான தொடர்களில் விளையாடி வருகிறது. டி20 தொடரை ஆஸ்திரேலியா அணியும் ஒருநாள் தொடரை இலங்கை அணியும் கைப்பற்றினர். இதனையடுத்து முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் முதல் டெஸ்டில் விளையாடிய இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது நாளில் அவருக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்ததால் அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு பதிலாக பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டார். இரண்டாவது இன்னிங்சில் பெர்னாண்டோ 12 மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






