என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட்
இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் மழையால் பாதிப்பு
- இங்கிலாந்து அணி வீரர் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- விராட் கோலி 1 ரன்னிலும் விஹாரி 14 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக புஜாரா-சுப்மன் கில் ஜோடி களமிறங்கியது. சுப்மன் கில் ஆட்டம் அருமையாக இருந்தது. 4 பவுண்டரிகள் விளாசிய அவர் ஆண்டர்சன் ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த விஹாரி-புஜாராவுடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
17-வது ஓவர் வரை தாக்கு பிடித்த இந்த ஜோடியை ஆண்டர்சன் பிரித்தார். புஜாரா 13 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். தொடர்ந்து விளையாடிய நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. விராட் கோலி 1 ரன்னிலும் விஹாரி 14 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்