என் மலர்
விளையாட்டு
- டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
- அதிகபட்சமாக ஷபாப் கான் 52 ரன்களும், இஃப்திகார் அகமது 51 ரன்களும், முகமது ஹாரிஸ் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா 28 ரன்களும் எடுத்தனர்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று சிட்னியில் அரங்கேறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் (குரூப்2) மோதின.
சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 21 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11-ல் பாகிஸ்தானும், 10-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. 5 புள்ளிகளுடன் உள்ள பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் சிக்கலின்றி அரை இறுதிக்குள் நுழைந்துவிடும். ஆனால் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி (நெதர்லாந்துக்கு எதிராக), 2 தோல்வி (இந்தியா, ஜிம்பாப்வேக்கு எதிராக) என்று 2 புள்ளிகளுடன் பின்தங்கியிருக்கிறது. அந்த அணியை பொறுத்தவரை எஞ்சிய இரு ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தென்ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் (குரூப்2) மோதின. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ய தொடங்கியது.
இறுதியில், 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஷபாப் கான் 52 ரன்களும், இஃப்திகார் அகமது 51 ரன்களும், முகமது ஹாரிஸ் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் தலா 28 ரன்களும் எடுத்தனர்.
தொடர்ந்து, 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியுள்ளது.
- உலகக் கோப்பை போட்டியில் விளையாட பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார்.
- தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா 7.5 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார்.
டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் பிரக்ஞானந்தா தங்கம் வென்று அசத்தினார். 9 சுற்றுகள் கொண்ட தொடரில் 7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார் பிரக்ஞானந்தா. இதன்மூலம் உலகக் கோப்பை போட்டியில் விளையாட பிரக்ஞானந்தா தகுதி பெற்றுள்ளார்.
முன்னதாக மகளிர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா 7.5 புள்ளிகளுடன் தங்கம் வென்று அசத்தினார். அத்துடன் உலகக் கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளார்.
முன்னதாக சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் ஆடவர் அணி மற்றும் மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்றிருந்து. தமிழ்நாட்டைச் சேர்ந்த டி.குகேஷ் தங்கப்பதக்கம், பிரக்ஞானந்தா வெண்கல பதக்கம் மற்றும் வைஷாலி வெண்கலப் பதக்கமும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரோகித் சர்மாவுக்கு 35 வயதும், விராட் கோலிக்கு 33 வயதும் ஆகிறது
- கேப்டன் பதவிக்கு பாண்ட்யா, ராகுல், பண்ட் ஆகியோரில் ஒருவரை நியமிக்க திட்டம்
ஒவ்வொரு உலகக் கோப்பை தொடர் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் வாரியம் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான திட்டத்தை வகுக்கும். இந்திய அணியில் இருந்து விராட் கோலி திடீரென விலகியதால் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ரோகித் சர்மாவுக்கு 35 வயதாகிறது. அவர் இன்னும் அதிகமான காலம் விளையாட வாய்ப்பில்லை. அதற்குள் அடுத்தக்கட்ட கேப்டனை தயார் படுத்த பிசிசிஐ விரும்புகிறது. மேலும், போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவதால் ஓய்வு கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது ரோகித் சர்மா மூன்று வடிவிலான கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக உள்ளார். இதனால் அவருக்கு அடிக்கடி ஓய்வு அளிக்க இயலாது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால், அடிக்கடி ஓய்வு அளிக்கப்படுகிறது. அதேபோல் ரோகித் சர்மாவுக்கும் அடிக்கடி ஓய்வு கொடுக்க பிசிசிஐ விரும்புகிறது.
ஆகவே, ரோகித் சர்மா அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்குப்பின் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை. விராட் கோலிக்கு மிகப்பெரிய தொடரை தவிர்த்து மற்ற டி20 போட்டிகளிலும் ஓய்வு அளிக்கப்படும். ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வலியுறுத்தப்படும் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து செய்தி கசிந்துள்ளதாக செய்தி நிறுவனம் செய்து செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில் வெளியான தகவல் பின்வருமாறு:-
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்குப்பின் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரிடம் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் விரிவாக கலந்துரையாடுவார்கள். ஒரு வகை கிரிக்கெட்டில் இருந்து அவர்கள் ஓய்வு பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட மாட்டார்கள்.
ஆனால், அவர்கள் இருவரும் 35 வயதை தொடுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதோடு இருவரும் இந்திய அணிக்கு முக்கியமான வீரர்கள். தொடர்ந்து பெரிய தொடர்கள், ஐசிசி தொடர்கள் வருவதால் அவர்களுக்கு சுழற்சி முறை மற்றும் ஓய்வுகள் தேவை. ஆனால், ஒரு கேப்டனை அடிக்கடி சுழற்சி முறையில் மாற்ற முடியாது.
டி20-யில் கவனம் செலுத்த முடியாது என்பதால் ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் அல்லது கே.எல். ராகுல் ஆகியோரில் ஒருவர் கேப்டன் பதவிக்கு தயாராகும்போது, ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து படிப்படியாக வெளியேற்ற வேண்டும்.
அதேபோல் விராட் கோலியிடம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த கேட்டுக்கொள்ளப்படும்.
பிசிசிஐ-யின் திட்டம்
1. ரோகித் சர்மா 2023 உலகக் கோப்பையில் இருந்து ரோகித் சர்மா மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக தொடரமாட்டார்.
2. ஆனால், 2024 வரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அதிக அளவில் கவனம் செலுத்துவார்.
3. டி20-யில் ஹர்திக் பாண்ட்யா, கே.எல். ராகுல், பண்ட் ஆகியோர் 2024 வரை கேப்டன் பதவியை பகிர்ந்து கொள்வார்கள்.
4. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப்பின், கேப்டன் பதவி குறித்து ரோகித் சர்மா உடன் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் ஆலோசனை நடத்துவார்கள்.
5. காயம் மற்றும் உடற்தகுதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா 2024 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை.
6. அதற்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் வளர்க்கபட்டு வருகிறார்கள். ஹர்திக் பாண்ட்யா தேர்வாளர்களால் கவர்ந்துள்ளார்.
7. ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இருவரும் ஐ.பி.எல். தொடரில் சிறந்த கேப்டன் என்பதை பலமுறை நிரூபித்துள்ளனர். கே.எல். ராகுலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியிடம் இருந்து கற்றுக் கொண்டு வருகிறார்கள்.
8. ஆனால், அனைத்து மாற்றங்கள் குறித்தும் 2023 உலகக் கோப்பைக்குபின் பேசப்படும்.
விராட் கோலி
1. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைக்குப்பின் விராட் கோலி தொடர்ந்து டி20 போட்டியில் விளையாட முடியாது.
2. தேர்வாளர்கள் அவரை முக்கியமான மற்றும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக மட்டும் தேர்வு செய்வார்கள்.
3. ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் அதிக அளவில் கவனம் செலுத்த வலியுறுத்தப்படுவார்.
2023-ல் டி20 உலகக் கோப்பைக்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தினால், தேர்வுக்குழு அதற்கான பணிகளை தொடங்கிவிட்டது. ஒருநாள் போட்டியில் வீரர்கள் அந்தந்த இடங்களுக்கு பொருத்தமாக இருக்கிறார்களா? என்று சோதிக்கலாம். அதன்பின் 2024-ல் டி20 உலகக் கோப்பை வருவதால் மீண்டும் டி20 முக்கியத்துவம் பெறும்.
இவ்வாறு அந்த செய்தில் தகவல் வெளியாகியுள்ளது.
- வங்காளதேச அணிக்கெதிராக 3 ஓவரில் 25 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
- தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 ஓவரில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்
உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு குழுவில் முகமது ஷமிக்கு முதலில் இடம் கிடைக்கவில்லை. அவர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி சுமார் ஒரு வருடம் ஆகிவிட்டது. உலகக் கோப்பைக்கு முன் இந்தியாவில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக விளையாட இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு விளையாடவில்லை.
உலகக்கோப்பை நெருங்கியதால், முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்டது. அந்த நேரத்தில்தான் பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது. கடைசி நேரத்தில் உலகக் கோப்பை தொடரில் இருந்து பும்ரா விலகினார்.
பும்ராவுக்குப் பதிலாக தீபக் சாஹர் அல்லது அவேஷ் கான் ஆகியோரில் ஒருவரை தேர்வு செய்ய பிசிசிஐ விரும்பியது. ஆனால் அவர்களின் பந்து வீச்சு சரியான முறையில் இல்லாத காரணத்தினால், முகமது ஷமியை பிசிசிஐ தேர்வு செய்தது.
டெஸ்ட் போட்டியில் அபாரமாக பந்து வீசும் முகமது ஷமியால் டி20-யில் சிறப்பாக பந்து வீச முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள மைதானங்களில் ஷமி சிறப்பாக பந்து வீசியிருக்கிறார். அந்த அனுபவத்தை வைத்து பிசிசிஐ அவரை ஆடும் லெவன் அணியில் சேர்த்தது.
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளிலும் முகமது ஷமி அபாரமாக பந்து வீசியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக 4-25-1 எனவும், நெதர்லாந்துக்கு எதிராக 4-27-1 எனவும், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4-13-1 எனவும், 3-25-1 எனவும் அசத்தியுள்ளார்.
டி20-யில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் அணியில் சேர்த்த உடனேயே சிறப்பாக பந்து வீசுவதற்கான காரணம் குறித்து அவர் விவரித்துள்ளார்.
இதுகுறிதது அவர் கூறியதாவது:-
எல்லாமே முன்னேற்பாடை சார்ந்தது. எப்போதுமே தயாராக இருக்க வேண்டும் என அணி நிர்வாகம் என்னிடம் சொல்லியுள்ளது. அணிக்கு தேவைப்படும்போது உங்களுக்கு அழைப்பு வரும். இதைத்தான் நாங்கள் எப்போதுமே சொல்வோம். நீங்கள் என்னுடைய வீடியோவை பார்த்தீர்கள் என்றால், நான் எப்போதுமே பயிற்சியை விட்டது கிடையாது, என்னுடைய பயிற்சி தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்.
ஒரு வடிவிலான கிரிக்கெட்டில் இருந்து மற்றொரு வடிவ கிரிக்கெட்டிற்கு மாறுவது, அதாவது ரெட் பால் கிரிக்கெட்டில் இருந்து ஒயிட் பால் கிரிக்கெட்டிற்கு மாறுவது எப்போதுமே எளிதானது அல்ல.
நான் டி20 உலகக் கோப்பைக்குபின் தற்போது டி20-யில் விளையாடுகிறேன். ஒரு வீரரருக்கு என்ன நிறம் பந்து என்பதை விட, நம்பிக்கை தேவை என்பது ஏற்றுக் கொள்கிறேன். அதற்கு நிச்சயமாக பயிற்சி தேவை.
புதுப் பந்து, பழைய பந்து ஆகியவற்றில் பந்து வீசுவது அனுபவத்தின் காரணமாகத்தான். போட்டியை என்னைப் பார்த்தீர்கள் என்றால், நான் புதுப் பந்தில்தான் பந்து வீசுவேன். ஆநால், பயிற்சியின் போது, நான் வழக்கமாக பழைய பந்து அல்லது ஓரளவிற்கு தேய்ந்த புதுப்பந்து ஆகியவற்றைதான் பயன்படுத்துவேன்.
கடந்த வருடம் உலகக் கோப்பை தொடரின்போது, பாகிஸ்தானுக்கு எதிராக ஷமி அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தார். இதனால் அவர் கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். ஆனால், தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடிய இப்திகாரை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
- வங்காள தேசம ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது
- தொடக்க வீரர் லிட்டோன் தாஸ் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு பயத்தை ஏற்படுத்தினார்.
உலகக் கோப்பையில் இந்திய அணி 2007-ம் ஆண்டு வங்காளதேச அணியிடம் தோல்வியடைந்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. அதில் இருந்து ஐ.சி.சி. நடத்தும் தொடர்களில் இந்தியா- வங்காளதேச அணிகளுக்கு இடையிலான ஆட்டம் எப்போதுமே பரபரப்பாகவே செல்லும்.
நேற்று நடைபெற்ற ஆட்டமும் பரபரப்பாக சென்றது. 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேச அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் லிட்டோன் தாஸ் அதிரடியாக விளையாட, வங்காள தேசம் எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
லிட்டோன் தாஸ் 21 பந்தில் அரைசதம் கடந்தார். அந்த அணி 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. மழை நின்றபின் ஆட்டம் 16 ஓவராக குறைக்கப்பட்டு, 151 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
மழைக்குப்பின் ஆட்டம் தொடங்கியதும் இந்திய வீரர்கள் சிறப்பான வகையில் பந்து வீசினர். இந்த வங்காள தேசம் 5 ரன்னில் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில், வங்காள தேச வீரர் நுருல் ஹசன் ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளார். அது என்னவென்றால், விராட் கோலி Fake Fielding-ல் ஈடுபட்டார். அது ஐசிசி விதிக்கு முரண்பாடானது. அதற்காக பெனால்டி முறையில் எங்களுக்கு ஐந்து ரன்கள் தந்திருக்கனும் எனத் தெரிவித்துள்ளார்.
7-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை லிட்டோன் தாஸ் மிட் விக்கெட் ஆஃப் சைடு அடித்தார். பவுண்டரி லைனில் அர்ஷ்தீப் சிங் பந்தை பிடித்து விக்கெட் கீப்பரிடம் வீசினார். அப்போது விராட் கோலி பந்து பிடித்து வீசுவது போல் சைகை செய்தார். இது Fake Fielding ஆகும். இப்படி செய்வதை மைதானத்தில் இருக்கும் நடுவர்கள் பார்த்தால் பெனால்டியாக ஐந்து ரன்கள் கொடுப்பார்கள்.
இதைத்தான் நுருல் ஹசன் தற்போது தெரிவித்துள்ளார். வங்களா தேச அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான நுருல் ஹசன் இதுகுறித்து கூறியதாவது:-
மைதானம் ஈரப்பதமாக இருந்தது. இது ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது. எல்லோரும் இதை பார்த்து இருப்பீர்கள். நாம் விராட் கோலியின் போலி த்ரோ குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது, அதற்காக எங்களுக்கு ஐந்து ரன்கள் பெனால்டியாக கொடுத்திருக்கனும். அது துரதிருஷ்டவமாக கிடைக்கவில்லை.
இந்த போட்டியில் மேலும் சில முடிவுகள் சர்ச்சையை எழுப்பியுள்ளது. தினேஷ் கார்த்திக் ரன்-அவுட்டின்போது பந்து பீல்டரின் கையில் இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. பந்து முதலில் ஸ்டம்பை தாக்கியதா? அல்லது பீல்டரின் கை தாக்கியதா? என்பது தெளிவாக தெரியவில்லை. நடுவர் அவுட் கொடுத்துவிட்டார்.
லிட்டோன் தாஸ் அர்ஷ்தீப் சிங் பந்தில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால், பந்து தரையில் பட்டு தினேஷ் கார்த்திக் கையில் புகுந்தது போல் தெரிந்தது. நடுவர் சந்தேகத்தின் பேரில் நாட்-அவுட் இல்லை எனத் தெரிவித்து 3-வது நடுவரின் உதவியை நாடினார்.
ரீ-பிளேயில் பந்து தரையில் படுவதை நடுவர் உறுதி செய்ய முடியாத நிலையில், ஒன்றிரண்டு ரீ-பிளேயுடன் நாட்-அவுட் என அறிவித்துவிட்டார்.
எப்படியோ, சர்ச்சைக்கிடையில் பரபரப்பான ஆட்டத்திற்கு இடையில் இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்கான வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துள்ளது.
- கடைசி ஓவர்களை ஒரு இளம் வீரர் வீசுவது அத்தனை சுலபம் கிடையாது.
- பும்ரா இல்லாத நிலையில் அர்ஷ்தீப் சிங் இதனை சிறப்பாக செய்து வருகிறார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் அடிலெய்ட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற வங்களாதேசம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
முன்னதாக கடைசி ஓவரில் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அதை வீசப் போவது அனுபவம் மிக்க ஷமியா அல்லது அர்ஷ்தீப் சிங்கா என ரசிகர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டது. ஆனால் கேப்டன் ரோகித் சர்மா அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங்கிடம் வழங்கினார். தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திய அர்ஷ்தீப், யார்க்கர் பந்து வீச்சை பயன்படுத்தினார்.
இதனால் அந்த ஓவரில் வங்காளதேச அணியால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியாவின் வெற்றி குறித்து பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா இல்லாத சமயங்களில் டெத் ஓவர்களை வீச தயாராக இருக்கும்படி அர்ஷ்தீப் சிங்யிடம் ஏற்கனவே கூறியிருந்தாக தெரிவித்தார்.
ஒரு இளம் வீரர் இதை செய்வது அத்தனை சுலபம் கிடையாது, அதற்கான நாங்கள் அவரை தயார்படுத்தினோம், கடந்த 9 மாதங்களாக அர்ஷ்தீப் சிறப்பாக அதை கையாளுகிறார் என்றும் அவர் தெரிவித்தார். இனியும் தொடர்ந்து அவர் சரியாக செய்வார் என்றும் ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் நேற்றைய போட்டியில் தங்களது பீல்டிங் அற்புதமாக இருந்ததாகவும், சில கேட்சுகள் சிறப்பாக அமைந்தன. அழுத்தமான சூழலில் கேட்சுகளை பிடிப்பது எங்களது வீரர்களின் திறனை வெளிப்படுத்துகிறது, எங்களது பீல்டிங்கில் எனக்கு எந்த சந்தேகமும் இருந்ததில்லை என்றும் ரோகித் குறிப்பிட்டுள்ளார்.
- இன்றைய போட்டியில் அதிரடியாக ஆடிய விராட் கோலி 64 ரன்கள் குவித்தார்
- ஜெயவர்தனே சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய விராட் கோலி 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முன்னதாக நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 62 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்லை (965) பின்னுக்கு தள்ளி கோலி 2-வது இடத்துக்கு (989 ரன்கள்) முன்னேறி இருந்தார். இதை தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான கடைசி போட்டியில் 11 ரன்களை கடந்த போது டி20 உலகக் கோப்பையில் ஆயிரம் ரன்களை அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை படைத்தார். அப்போது இந்த பட்டியலில் இலங்கை வீரர் ஜெயவர்தனே 1016 ரன்களுடன் முதலிடத்தில் இருந்தார்.
இந்த நிலையில் இன்று அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, ஜெயவர்தனே சாதனையை முறியடித்து டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் 23 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி 1065 ரன்கள் அடித்துள்ளார். 2-வது இடத்தில் ஜெயவர்தனே (1016 ரன்கள்- 31 போட்டிகள்) உள்ளார்.
- டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்காளதேச அணிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- 16வது ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் 14 ரன்களே எடுக்க முடிந்தது
டி20 உலகக்கோப்பையில் இன்றைய சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் கட்டாயம் வெற்றி வெறவேண்டிய நெருக்கடியுடன் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது.
185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேச அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வங்காளதேசம் 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்த நிலையில், திடீரென மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் தடைபட்டது. அப்போது வங்காளதேசம் வெற்றிபெற 78 பந்துகளில் 119 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. லித்தன் தாஸ் 59 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
சில நிமிடங்களுக்கு பின் மழை நின்றதையடுத்து ஆட்டம் தொடங்கியது. அதேவேளை, மழை காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டது. டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி, வங்காளதேச அணி 16 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்டது. வங்காளதேச அணி ஏற்கனவே 7 ஓவரில் 66 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்னும் 54 பந்துகளில் 85 ரன்கள் எடுக்கவேண்டும்.
அதேசமயம் இந்திய அணி வங்காளதேசத்தின் விக்கெட்டுகளை வீழ்த்தவேண்டிய கட்டாயத்தில் பந்துவீசத் தொடங்கியது. இலக்கை நோக்கி வங்காளதேச அணி அதிரடியாக ஆடியது. லித்தன் தாஸ் 60 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதன்பின்னர் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. கடைசி இரண்டு ஓவர்களில் 31 ரன்கள் தேவை என்ற நிலையில் ஆட்டம் பரபரப்பானது.
ஹர்திக் வீசிய 15வது ஓவரில் 11 ரன்கள் எடுக்கப்பட்டது. எனவே, 16வது ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட தஷ்கின் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தில் சிக்சர் விளாசினார் நூருல். மூன்றாவது பந்தில் ரன் ஏதும் இல்லை. நான்காவது பந்தில் 2 ரன்களே எடுக்க முடிந்தது. 5வது பந்தில் பவுண்டரி அடித்தார். கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்தார். அந்த ஓவரில் மொத்தம் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
16 ஓவர் முடிவில் வங்காளதேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்ததால், இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் குரூப் பி புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
- முதலில் பேட்டிங் செய்த அணி 271 ரன்கள் குவித்தது.
- 2-வது பேட்டிங் செய்த அணி 230 ரன்கள் சேர்த்தது.
ஐ.பி.எல்., பிக் பாஸ் போன்று தென் ஆப்பிரிக்காவில் டி20 சேலஞ்ச் தொடர் நடத்தப்படுகிறது. இந்த வருடம் அறிமுகமாகிய இந்த தொடரில் விளையாடும் அணிகளை ஐ.பி.எல். தொடரில் விளையாடும் அணிகளை வாங்கிய உரிமையாளர்கள்தான் வாங்கியுள்ளன.
லீக் ஆட்டம் ஒன்றில் நைட்ஸ் மற்றும் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நைட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் இளம் வீரரான தெவால்ட் பிரேவிஸ் அபாரமாக விளையாடி 57 பந்தில் 162 ரன்கள் விளாச, டைட்டன்ஸ் அணி 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது. பிரேவிஸின் ஸ்டிரைக் ரேட் 284.21 ஆகும். அவரது ஸ்கோரில் தலா 13 பவுண்டரி, சிக்சர்கள் அடங்கும்.
அதன்பின் 272 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய டைட்டன்ஸ் அணி 230 ரன்கள் சேர்த்தது. இரண்டு அணிகளும் இணைந்து 501 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த போட்டியாக இந்த ஆட்டம் அமைந்துள்ளது.
இதற்கு முன் நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் போட்டியில் இரண்டு அணிகளும் இணைந்து 497 ரன்கள் குவித்திருந்தது. 2016-ம் ஆண்டு அடிக்கப்பட்ட இந்த ரன்தான் அதிகபட்ச ரன்களாக இருந்தது. தற்போது 7 வருடங்களுக்குப்பின் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.
டி20 கிரிக்கெட்டில் பிரேவிஸ் விளாசிய 162 ரன்கள், நான்காவது அதிகபட்ச ஸ்கோராகும்.
கிறிஸ் கெய்ல் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் குவித்தது அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. ஆரோன் பிஞ்ச் 172 ரன்களுடன் 2-வது இடத்திலும், ஜிம்பாப்வே வீரர் ஹாமில்டன், ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்ரதுல்லா ஜாஜாய் ஆட்டமிழக்காமல் 162 ரன்களுடன் 3-வது இடத்தில் உள்ளனர்.
- உலகக் கோப்பையில் பாபர் ஆசம் ஆட்டம் மோசமாக இருக்கிறது.
- மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க விமர்சகர்கள் வலியுறுத்தல்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கும் அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் கருதப்பட்டது. தற்போது, அரையிறுதிக்கு முன்னேறுமா? என்ற நிலை அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசமின் ஃபார்ம் முக்கிய காரணம்.
மூன்று போட்டிகளில் விளையாடி முறையே 0, 4 மற்றும் 4 ரன்களே அடித்துள்ளார். இதனால் அவரது ஆட்டம் குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வரிசை பலவீனமாக இருப்பதால், அவர் தொடக்க வீரராக களம் இறங்குவதற்குப் பதிலாக மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் எங்கள் கேப்டன் ஃபார்ம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் தெரிவித்துள்ளார்.
பாபர் ஆசம் குறித்து சதாப் கான் கூறுகையில் ''பாபர் ஆசம் உலகத்தரம் வாய்ந்த வீரர். இதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால், அவரும் ஒரு மனிதன்தான். சில நேரங்களில் அவர் தவறு செய்யலாம். இருந்தாலும், அவர் எங்களுடைய கேப்டன். அவர் எங்களுடைய சிறந்த கேப்டன். அவர் எங்களுக்கு ஆதராவாக உள்ளார். இதனால், தற்போது அவருக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம். மூன்று போட்டிகள் மட்டும். அதனால் யாரும் அவருடைய ஃபார்ம் குறித்து கவலைப்பட வேண்டாம். அவர் உலகத் தரம் வாய்ந்த வீரர்.
அவர் ஃபார்ம்-க்கு வருவதற்கு ஒரு ஷாட் மட்டுமே தேவை. ரிஸ்வான் போன்று ரன்கள் குவிக்க தொடங்கி விடுவார். ஆகவே, பாபர் ஆசம் அடுத்த போட்டியில் ரன்கள் குவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு அடுத்த போட்டி மிகப்பெரியது. ஆகவே, அவர் அணிக்காக ரன்கள் குவிப்பார்'' என்றார்.
பாகிஸ்தான் நாளை தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
- விராட் கோலி 64 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
- வங்காளதேசம் தரப்பில் ஹசன் மஹ்மூத் 3 விக்கெட் கைப்பற்றினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்ய, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
அதிரடியாக ஆடிய துவக்க வீரர் கே.எல்.ராகுல் 50 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி -சூர்யகுமார் யாதவ் இருவரும் நிதானமான விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.
சூர்யகுமார் யாதவ் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் கடந்தார். மறுமுனையில் ஹர்திக் பாண்ட்யா 5 ரன்கள், தினேஷ் கார்த்திக் 7 ரன்கள், அக்சர் பட்டேல் 7 ரன்கள் என வெளியேற, இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 64 ரன்களுடனும், அஸ்வின் 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
வங்காளதேசம் தரப்பில் ஹசன் மஹ்மூத் 3 விக்கெட் கைப்பற்றினார். ஷாகிப் அல் அசன் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்குகிறது.
- மேக்ஸ் ஓட்வாட், டாம் கூப்பர் இணை அருமையாக ஆடி ரன்களை சேகரித்தனர்.
- இறுதியில் அந்த அணி 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் நெதர்லாந்து, ஜிம்பாப்வே அணிகள் மோதின.
இந்தப்போட்டிக்கான டாசில் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அந்த அணி 19.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ராசா 40 ரன்னும், வில்லியம்ஸ் 28 ரன்னும் எடுத்தனர். அந்த அணியில் சிக்கந்தர் ராசா, சீன் வில்ல்லியம்சை தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கில் ஆட்டம் இழந்தனர். ஜிம்பாப்வே அணி தரப்பில் பால் வான் மீகெரென் 3 விக்கெட்டும், பிரண்டன் கிளெவர், லீடெ, வான் பீக் தலா 2 விக்கெட்டும், கிளாசென் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக ஸ்டீபன், மேக்ஸ் ஓட்வாட் ஆகியோர் களம் புகுந்தனர். இதில் ஸ்டீபன் 8 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து டாம் கூப்பர் களம் இறங்கினார்.
மேக்ஸ் ஓட்வாட், டாம் கூப்பர் இணை அருமையாக ஆடி ரன்களை சேகரித்தனர். இதில் டாம் கூப்பர் 32 ரன்னுக்கும், மேக்ஸ் ஓட்வாட் 52 ரன்னும் அடித்து ஆட்டம் இழந்தனர்.
இதையடுத்து களம் இறங்கிய காலின் 1 ரன்னுக்கும், எட்வர்ட்ஸ் 5 ரன்னுக்கும் அவுட் ஆகினர். இறுதியில் அந்த அணி 18 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் மேக்ஸ் ஓட்வாட் 52 ரன்கள் அடித்தார்.






