என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.
    • லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    ஐதராபாத்:

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.

    இந்த தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதையடுத்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா மற்றும் குசல் பெரேரா ஆகியோர் களம் இறங்கினர்.

    இதில் பெரேரா டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இதையடுத்து நிசாங்காவுடன் குசல் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. அதிரடியாக ஆடிய நிசாங்கா 51 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

    இதையடுத்து மெண்டிஸ் உடன் சமரவிக்ரமா ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மெண்டிஸ் 77 பந்தில் 122 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய அசலங்கா 1 ரன், டி சில்வா 25 ரன், தசுன் ஷனகா 12 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய சமரவிக்ரமா சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் குவித்தது. குசல் மெண்டிஸ் 122 ரன்னும், சதீரா சமரவிக்ரமா ௧௦௮ ரன்னும் குவித்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஹசன் அலி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    இதையடுத்து 345 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாட தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபிக் மற்றும் இமாம்-உல்-ஹக் களமிறங்கினர். இதில் இமாம்-உல்-ஹக் 12 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் 10 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

    இதையடுத்து முகமது ரிஸ்வானுடன் அப்துல்லா ஷபிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் பாகிஸ்தான் அணியின் ரன்வேகம் கணிசமாக உயர்ந்தது. சதம் விளாசிய அப்துல்லா ஷபிக், 113 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் அதிரடி காட்டிய முகமது ரிஸ்வான் 131 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இறுதியாக பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    • இந்தியா 28 தங்கம் உள்பட 107 பதக்கங்கள் வென்று வரலாற்று சாதனை படைத்தது.
    • உங்களின் செயல்திறனைக் கண்டு முழு நாடும் பெருமிதம் கொள்கிறது என்றார் பிரதமர் மோடி.

    புதுடெல்லி:

    சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

    இந்தியா முதல் முறையாக 28 தங்கம் உள்பட 107 பதக்கங்கள் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது.

    இந்நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இன்று கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:

    ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் அணி சிறப்பாகச் செயல்பட்டதில் பெருமை அடைகிறேன்.

    140 கோடி இந்தியர்கள் சார்பாக உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.

    உங்களின் கடின உழைப்பு மற்றும் சாதனைகள் காரணமாக நாடு முழுவதும் கொண்டாட்டமான சூழல் நிலவுகிறது.

    உங்களின் செயல்திறனைக் கண்டு முழு நாடும் பெருமிதம் கொள்கிறது.

    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இது இந்தியாவின் சிறந்த செயல்பாடாகும் என தெரிவித்தார்.

    • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.
    • சேப்பாக்கத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    புதுடெல்லி:

    13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை ரவுண்ட் ராபின் முறையில் மோதவேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்திய அணி 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை நாளை எதிர்கொள்கிறது. புதுடெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.

    ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற இந்தியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் தொடக்க ஆட்டத்தில் விளையாடவில்லை. அவர் நாளைய போட்டியிலும் ஆட மாட்டார். அவர் இந்திய அணியோடு டெல்லி செல்லவில்லை. சென்னையிலேயே தங்கி இருக்கிறார். மருத்துவக் குழு தொடர்ந்து அவரை கண்காணித்து வருகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சு, பீல்டிங் மிகவும் அபாரமாக இருந்தது. ஜடேஜா, குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள்.

    விராட் கோலி, கே.எல்.ராகுலின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. உடல் தகுதி குறித்து விமர்சனம் செய்தவர்களுக்கு தனது பேட்டிங் மூலம் ராகுல் பதிலடி கொடுத்தார்.

    நாளைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரேயாஸ் அய்யர் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் அவர் இடத்தில் சூர்யகுமார் யாதவ் இடம் பெறுவாரா என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல இஷான் கிஷனும் நல்ல வாய்ப்பை பயன்படுத்தவில்லை.

    பந்துவீச்சில் மாற்றம் இருக்குமா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை ஆடுகளம் என்பதால் 3 சுழற்பந்து வீரர்கள் இடம் பெற்றனர். நாளைய போட்டியில் 2 சுழற்பந்து வீரர் என்ற நிலை ஏற்பட்டால் அஸ்வின் கழற்றி விடப்படுவார். முகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஹஷ்மத்துல்லா ஷகிதி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் வங்காளதேசத்திடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்து முதல் வெற்றியைப் பெறும் வேட்கையில் உள்ளது.

    அந்த அணியில் ரஷித்கான் சுழற்பந்தில் முத்திரை பதிக்கக் கூடியவர். அவரை நம்பியே அந்த அணி அதிகமாக இருக்கிறது. இது தவிர நூர் அகமது, முஜிபுர் ரகுமான் போன்ற சிறந்த வீரர்களும் ஆப்கானிஸ்தானில் உள்ளனர்.

    இரு அணியும் இதுவரை 3 ஆட்டத்தில் மோதி உள்ளன. இதில் இந்தியா 2-ல் வெற்றி பெற்றது. ஒரு போட்டி சமனில் முடிந்தது.

    பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • முதலில் ஆடிய இங்கிலாந்து 364 ரன்களை குவித்தது.
    • அந்த அணியின் டேவிட் மலான் சதமடித்து அசத்தினார்.

    தர்மசலா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இமாசலப்பிரதேசத்தின் தர்மசலாவில் 7வது லீக் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. டேவிட் மலான் 107 பந்தில் 5 சிக்சர், 16 பவுண்டரி உள்பட 140 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 68 பந்தில் ஒரு சிக்சர், 8 பவுண்டரி உள்பட 82 ரன்கள் சேர்த்தார்

    வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் பொறுப்புடன் ஆடி 76 ரன்னில் அவுட்டானார். முஷ்பிகுர் ரஹிம் 51 ரன்னில் வெளியேறினார். ஹிருடோய் 39 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், வங்காளதேசம் 227 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 137 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

    இங்கிலாந்து சார்பில் ரீஸ் டாப்ளே 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இலங்கை 344 ரன்களை குவித்தது.

    ஐதராபாத்:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், தெலுங்கானாவின் ஐதராபாத்தில் 8-வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் குசால் பெராரா டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா அரை சதமடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் அதிரடியாக ஆடி சதமடித்தார். அவர் 77 பந்துகளில் 6 சிக்சர், 14 பவுண்டரி உள்பட 122 ரன்கள் குவித்தார்.

    அவரை தொடர்ந்து இறங்கிய சதீரா சமரவிக்ரம பொறுப்புடன் ஆடி சதமடித்து 108 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்களை குவித்தது.

    பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 4 விக்கெட்டும், ஹரிஸ் ராப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 345 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

    • டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 364 ரன்களை குவித்தது.

    தர்மசலா:

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இமாசலப்பிரதேசத்தின் தர்மசலாவில் 7வது லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து, வங்காளதேசம் ஆகிய அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. பேர்ஸ்டோவ், டேவிட் மலான் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்த நிலையில் பேர்ஸ்டோவ் அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய ஜோ ரூட், மலானுடன் இணைந்து அதிரடியை தொடர்ந்தார். இருவரும் கிடைத்த பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். டேவிட் மலான் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். ஜோ ரூட் அரை சதமடித்தார்.

    2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மலான், ஜோ ரூட் 151 ரன்கள் சேர்த்தனர். மலான் 107 பந்தில் 5 சிக்சர், 16 பவுண்டரி உள்பட 140 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஜோ ரூட் 68 பந்தில் ஒரு சிக்சர், 8 பவுண்டரி உள்பட 82 ரன்கள் சேர்த்தார்

    இறுதியில், இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது.

    வங்காளதேசம் சார்பில் மெஹிதி ஹசன் 4 விக்கெட்டும், ஷோரிபுல் இஸ்லாம் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்குகிறது.

    • முதல் போட்டியில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்துள்ளது
    • பாகிஸ்தான் 2-வது வெற்றியை பெறும் வகையில் விளையாடும்

    உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் போட்டி காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.

    முதல் போட்டியில் இங்கிலாந்து நியூசிலாந்திடம் தோல்வியடைந்திருந்தது. இதனால் இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும். அதேவேளையில் வங்காளதேசம் இங்கிலாந்துக்கு ஷாக் கொடுக்க நினைக்கும். இந்த போட்டி இமாச்சல பிரதேசம் தரம்சாலாவில் நடைபெறுகிறது.

    இங்கு நடைபெற்ற முதல் போட்டியில் வங்காளதேசம் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியிருந்தது. இதே மைதானம் என்பதால் வங்காளதேசத்திற்கு சற்று கூடுதல் அட்வான்டேஜ் ஆக இருக்கும்.

    மதியம் 2 மணிக்கு தொடங்கும் போட்டியில் பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஐதராபாத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் நெதர்லாந்தை வீழ்த்தியிருந்தது. அதே உற்சாகத்துடன் இன்று இலங்கையை வீழ்த்த துடிக்கும்.

    இலங்கை அணி முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்காவிடம் தோல்வியடைந்தது. தென்ஆப்பிரிக்கா 428 ரன்கள் குவித்தாலும், இலங்கை 44.5 ஓவர்களில் 326 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்ய முயற்சிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் இந்த போட்டி பரபரப்பு, சுவாரஸ்யம் மிகுந்ததாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

    • ஆஸ்திரேலியா போட்டிக்கு முன்னதாகவே காய்ச்சலால் பாதிப்பு
    • தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்திய அணி நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியது. இந்த போட்டி சென்னையில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்தபோது, இந்திய வீரர் சுப்மான் கில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அவருக்கு டெங்கு உறுதியானது. இதனால் முதல் போட்டியில் விளையாடவில்லை. நேற்று இந்திய அணி டெல்லி புறப்பட்டு சென்றது. நாளை டெல்லியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

    இந்த போட்டியிலும் சுப்மான் கில் விளையாடமாட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இந்திய வீரர்களுடன் டெல்லி பயணிக்கவில்லை. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    சாதகமான ரிசல்ட் வந்து, உடல்நிலை சரியானால் நேரடியாக அகமதாபாத் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீப காலமாக தொடக்க வீரராக களம் இறங்கி சிறப்பான ஆட்டத்தை சுப்மான் கில் வெளிப்படுத்தி வருகிறார். அவர் இல்லாதது இந்திய அணிக்கு பெரிய இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை. சென்னையில் இந்திய அணி 2 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து திணறியது குறிப்பிடத்தக்கது.

    சுப்மான் கில் இல்லாததால் இஷான் கிஷன் தொடக்க வீரராக களம் இறங்கினார்.

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
    • உலகக் கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி வரும் சனிக்கிழமை (அக்டோபர் 14) நடைபெற இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி போட்டிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அகமதாபாத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாக அகதாபாத் காவல் துறை ஆணையர் தெரிவித்து உள்ளார்.

    போட்டியின் போது, 7 ஆயிரம் காவலர்கள், 4 ஆயிரம் ஹோம் கார்டுகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நகரின் மிகமுக்கிய பகுதிகள் மற்றும் பதற்றம் அதிகமுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட இருக்கிறது. நான்கு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள், காவல் துறை தலைவர் என காவல் துறையை சேர்ந்த உயரதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வை செய்ய உள்ளனர். 

    • நெதர்லாந்து அணி அதிகபட்சமாக கொலின் அக்கர்மேன் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சாண்ட்னர் 5 விக்கெட்டும் மாட் ஹென்றி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    ஐதராபாத்:

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியுடன் நெதர்லாந்து மோதியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ரச்சின் ரவீந்திரா, வில் யங், டாம் லாதம் ஆகியோரின் அரை சதத்தால் 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத், பால் வான் மீகெரென், ரோலோஃப் வான் டெர் மெர்வே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது. தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய நெதர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. நெதர்லாந்து அணி அதிகபட்சமாக கொலின் அக்கர்மேன் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற இறுதியில் நெதர்லாந்து அணி 46.3 ஒவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் எடுத்தது.

    நியூசிலாந்து தரப்பில் மிட்செல் சாண்ட்னர் 5 விக்கெட்டும் மாட் ஹென்றி 3 விக்கெட்டும் கைப்பற்றினர். 

    • நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
    • ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரராக ரஷித் கான் உள்ளார்.

    ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டை உலுக்கி உள்ளது. ஆப்கானிஸ்தான் வடமேற்கில் 35 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹெராட் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் இது 6.3 ஆக பதிவானது.

    இதன் தொடர்ச்சியாக 6 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து தரை மட்டமானது. அதில் இருந்தவர்கள் என்ன நடந்தது என்பது பற்றி அறியாமலேயே மண்ணோடு மண்ணாக இடிபாடுகளுக்குள் சிக்கினார்கள். நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

    இந்த நிலையில், உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் அணி வீரர் ரஷித் கான், உலகக் கோப்பை போட்டியில் வாங்கும் சம்பளத்தை தனது நாட்டு மக்களுக்கு வழங்குவதாக அறிவித்து இருக்கிறார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரராக ரஷித் கான் உள்ளார்.

    உலகக் கோப்பை 2023 தொடரின் மூன்றாவது போட்டியில் வங்காளதேசம் அணியை எதிர்கொண்டு விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி போராடி தோல்வியை தழுவியது. இதை அடுத்து ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான போட்டி அக்டோபர் 11-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    • வில் யங், ரவீந்திரா, டாம் லாதம் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
    • நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத், பால் வான் மீகெரென், ரோலோஃப் வான் டெர் மெர்வே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐதராபாத்:

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியுடன் நெதர்லாந்து மோதுகிறது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே -வில் யங் களமிறங்கினர்.

    இருவரும் முதல் 3 ஓவர்களை மெய்டன் செய்தனர். முதலில் தடுமாறினாலும் பின்னர் பவுண்டரிகளை விளாசி தள்ளினர். கான்வே 32 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா வில் யங் உடன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் அடித்தனர்.

    அணியின் ஸ்கோர் 144 ரன்கள் இருந்த போது இந்த ஜோடி பிரிந்தது. யங் 70 ரன்னில் அவுட் ஆனார். அதனை தொடர்ந்து ரச்சின் ரவீந்திரா 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த மிட்செல் 48, டாம் லாதம் 53 என அதிரடியாக விளையாட கடைசியாக வந்த சாட்னர் 17 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார்.

    இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 322 ரன்கள் குவித்தது. நெதர்லாந்து தரப்பில் ஆர்யன் தத், பால் வான் மீகெரென், ரோலோஃப் வான் டெர் மெர்வே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ×