என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்
- முதலீட்டையும் ஆன்லைன், ஆ ப்லைன் என்ற இரண்டு முறையில் செய்ய முடியும்.
- ஒவ்வொரு முதலீட்டுக்கும் சாதகமான ஒரு கால கட்டம் உண்டு.
மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பே "பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை" என்று வள்ளுவப் பெருமான் நமக்கு அறிவுறுத்தியுள்ளார். ஆகவே நாம் செல்வம் என்னும் சிம்மாசனத்தில் அமரும் வழிகளைத் தேடி வருகிறோம். போஸ்ட் ஆபீஸ், வங்கிகள், தங்கம், வீடு, பங்குச்சந்தை என்று ஒவ்வொன்றாகப் பார்த்து வரும் வேளையில் நாம் இப்போது நிற்பது மியூச்சுவல் பண்ட் எனப்படும் புதிய வழியின் முன்னால்.
நாம் பார்த்த முதலீட்டு வழிகளில் சில வருமானம் தரும்; சில வளர்ச்சி தரும். பப்ளிக் ப்ராவிடென்ட் பண்ட், ஆர்பிஐ பாண்ட் மாதிரியான கவர்ன்மென்ட் சேமிப்பு, பேங்க் சேமிப்பு, போஸ்ட் ஆ பீஸ் சேமிப்பு எல்லாம் வருமானம் தரும். ரியல் எஸ்டேட், தங்கம், பங்குகள் ஆகியவை வளர்ச்சி தரும். இவை இரண்டையும் தரக்கூடிய முதலீடு என்றால் அது மியூச்சுவல் பண்ட்தான். அது நமக்கு ஓரளவு புதியது என்பதால் அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மியூச்சுவல் பண்ட் என்றால் என்ன? பங்குச் சந்தை முதலீடு அதிகபட்ச வருமானம் தரக்கூடியது என்பதால் அதில் முதலீடு செய்ய நாம் அனைவருமே விரும்புகிறோம். ஆனால் முன்பே கூறியது போல் பங்குச்சந்தை என்பது யாருக்கும் அடங்காத குதிரை; முன்னால் சென்றால் முட்டும்; பின்னால் சென்றால் உதைக்கும். இதில் சவாரி செய்து சம்பாதிக்க திறமை, பொறுமை, விஷயஞானம், கம்ப்யூட்டரைக் கையாளும் திறன் ஆகியவை இன்றியமையாதவை. இவை இல்லாதவர்களால் சந்தை தரும் கூடுதல் வருமானத்தைப் பெறமுடியுமா? கண்டிப்பாக முடியும். அதற்கு உதவுவது மியூச்சுவல் பண்ட்.
மியூச்சுவல் பண்ட் நிறுவனம் நாம் முதலீடு செய்ய விரும்பும் பணத்தைத் திரட்டும். அதனை நிர்வகிக்க பல நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை நியமிக்கும். முக்கியமாக மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களில் பங்குச்சந்தையின் உள்ளும், புறமும் நன்கு அறிந்த ஒரு திறமையான பண்ட் மேனேஜர் இருப்பார். அவர், பொதுமக்களிடம் இருந்து திரட்டிய அந்தப் பணத்தை பங்குகளிலும், கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்வார். பிறகு காலநேரத்துக்குத் தகுந்தாற்போல அவைகளை வாங்கி, விற்று, லாபம் சம்பாதிப்பார். அதில் ஒரு கணிசமான பங்கு, முதலீடு செய்த நமக்கு வந்து சேரும். செபி (Securities and Exchange Board of India) என்னும் அரசு அமைப்பு இதனை கண்காணிப்பதால் ஒழுக்கம், வெளிப்படைத்தன்மை ஆகியவை இதில் நிறைந்துள்ளன.
டெட் பண்ட்ஸ், ஈக்விட்டி பண்ட்ஸ், ஹைப்ரிட் பண்ட்ஸ், இண்டெக்ஸ் பண்ட்ஸ், மனிமார்க்கெட் பண்ட்ஸ் என்ற ஐந்து வகைகள் இதில் உண்டு. இவை ஒவ்வொன்றின் கீழும் பல திட்டங்கள் உள்ளன. இவற்றில் அதிக முக்கியத்துவம் பெறுவது ஈக்விட்டி பண்ட்ஸ்.
ஈக்விட்டி பண்ட்ஸில் இருந்து வரக்கூடிய வருமானம் சந்தை சார்ந்தது என்பதால் நிலையானதாக இருக்காது. சந்தையின் போக்கைப் பொறுத்து கூடலாம்; குறையலாம். ஆனாலும் நிலையான வருமானம் தரும் சேமிப்புக்களை விட இதில் அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு உண்டு. சமீபத்தில் இதில் நூறு ரூபாயில் கூட முதலீட்டை ஆரம்பிக்கும் வசதி எஸ்.பி.ஐ. வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பணம் தேவைப்படும் நேரம் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த பண்டுகளை பலவிதமாக வகைப்படுத்தலாம். ஓப்பன் எண்டட், க்ளோஸ் எண்டட், இன்டர்வல் பண்ட்ஸ் என்பது ஒரு வகை. ஓப்பன் எண்டட் பண்டுகளில் தேவை ஏற்படும்போது நம் பணத்தைத் திருப்பி எடுத்துக் கொள்ள முடியும். க்ளோஸ் எண்டட் என்றால், வங்கி பிக்சட் டிபாசிட் மாதிரி. ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகுதான் திருப்பித் தரப்படும். இன்டர்வல் பண்ட்ஸ்களில் குறிப்பிட்ட காலகட்டங்களில் மட்டும்தான் வாங்க, விற்க முடியும்.
ஆக்டிவ் பண்ட், பாஸிவ் பண்ட் என்பது இன்னொருவிதமான வகைப்படுத்தல். ஆக்டிவ் பண்டில் பண்ட் மேனேஜர் அடிக்கடி வாங்கி விற்று லாபம் சம்பாதிப்பார். பாஸிவ் பண்டில் பண்ட் மேனேஜருக்கு அதிக வேலை இருக்காது.
உதாரணமாக, சென்செக்ஸ் இண்டெக்ஸ் பண்ட் என்பது, சென்செக்ஸ் எனப்படும் குறியீட்டில் இருக்கக்கூடிய 30 பங்குகளையும், அங்கு இருக்கிற அதே விகிதத்தில் பண்டிலும் வாங்குவதாகும். பாஸிவ் பண்டில் மேனேஜருக்கு அதிக வேலை இல்லை என்பதால் முதலீட்டாளர்களுக்கு விதிக்கப்படும் கட்டணமும் குறைவு.
க்ரோத் பண்டில் நன்கு வளரக்கூடிய நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். டிவிடெண்ட்டுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படாது. இன்கம் பண்டில் அவ்வப்போது வருமானம் தரக்கூடிய பங்குகளிலும், பத்திரங்களிலும் முதலீடு செய்வார்கள். ஹைப்ரிட் பண்டில் வளர்ச்சி, வருமானம் என்ற இரண்டுமே ஓரளவு கிடைக்கும்படி பங்குகள் மற்றும் கடன்கள் என்ற இரண்டு வகை சொத்துக்களிலும் முதலீடு செய்யப்படும். மல்ட்டி அசெட் பண்டில் மூன்று வகையான சொத்துக்களில் முதலீடு செய்யப்படும். இதில் கடன் மற்றும் ஈக்விட்டியோடு தங்கத்திலும் முதலீடு செய்யப்படுவதால் சமீப காலங்களில் அதிகம் விரும்பப்படுகிறது.

சுந்தரி ஜகதீசன்
இத்தன பண்ட் பற்றிக் கூறுகிறீர்களே? இவற்றில் எதில் முதலீடு செய்யலாம் என்றுதானே கேட்கிறீர்கள்? அது நம் ரிஸ்க் எடுக்கும் தன்மையைப் பொறுத்தது. இதை முழுவதுமாகப் புரிந்துகொள்ள ஒரு மியூச்சுவல் பண்ட் ஏஜென்ட்டை நாடுவது நல்லது. நாம் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் டைரக்ட் ப்ளான் மற்றும் ரெகுலர் ப்ளான். ஒரு ஏஜென்ட் அல்லது டிஸ்ட் ரிப்யூட்டர் மூலம் முதலீடு செய்தால் அது ரெகுலர் ப்ளான் எனப்படும். அதில் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ எனப்படும் கட்டணங்கள் அதிகமாக இருக்கும் என்பதால் வருமானம் குறையும். டைரக்ட் ப்ளானில் ஏஜென்ட் துணையின்றி நேரடியாக நாமே முதலீடு செய்வதால் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ குறையும்; வருமானம் சற்று அதிகமாக இருக்கும்.
இவை தவிர, க்ரோத் ஆப்ஷன், ஐடிசிடபிள்யூ ஆப்ஷன் என்று இரண்டு விஷயங்கள் உண்டு. க்ரோத் ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால் நமக்கு வர வேண்டிய வருமானம் மறுபடி அதே திட்டத்திலேயே முதலீடு செய்யப்படும். அதனால் லாபம் அதிகமாகும். ஐடிசிடபிள்யூ ஆப்ஷனில் ஒவ்வொரு காலாண்டிலும் டிவிடெண்ட் வருமானம் நம் வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்துவிடும்.
இவற்றில் நாம் முதலீடு செய்யவும் பல விதங்கள் இருக்கின்றன. கையில உள்ள பணத்தை மொத்தமாக முதலீடு செய்வதை லம்ப்சம் முதலீடு என்பார்கள். இதை சந்தை சற்று சரிவில் இருக்கும்போது செய்தால் லாபம் அதிகம் வரும். அல்லது எஸ்ஐபி (சிப்) மூலம் குறிப்பிட்ட கால அவகாசத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்யலாம். மாதாந்திர வருமானம் பெறுபவர்கள் சேமிக்க இது உதவும். எஸ்டிபி என்றால், மொத்தப் பணத்தையும் ஒரு லிக்விட் பண்டில் போட்டு குறிப்பிட்ட கால அவகாசத்தில் நாம் விரும்பும் வேறு பண்டுக்கு மாற்றும்படி செய்வது. இன்டர் ஸ்கீம் ஸ்விட்ச் என்றால் ஒரு திட்டத்தில் உள்ள மொத்தப் பணத்தையும் அதே ஏஎம்சி நிறுவனத்தில் உள்ள வேறு ஒரு திட்டத்துக்கு மாற்றுவது.
எஸ்டபிள்யூபி என்றால் சிஸ்டமேடிக் வித்ட்ராவல் ப்ளான். நமக்கு மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை வருமானமாக வேண்டுமென்றால் இந்த எஸ்டபிள்யூபி மூலம் பெறமுடியும். மாதாமாதம் சற்று உபரி வருமானம் வேண்டும் என்பவர்களுக்கும், ரிட்டயர் ஆனவர்களுக்கும் இந்த வகை ப்ளான் மிகவும் உபயோகமாக இருக்கும்.
மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்ய முக்கியமாக பான் கார்ட் மற்றும் பேங்க் அக்கவுன்ட் தேவை. ஒரு மியூச்சுவல் பண்ட் ஏ.எம்.ஸி.க்கு அல்லது ஏஜென்ட் அலுவலகத்துக்கு அட்ரஸ் ப்ரூ ப், ஐ.டி.ப்ரூ ப், போட்டோ போன்றவற்றை எடுத்துச்சென்று, கேஒய்சி செயல்முறையை முடித்தபின், அக்கவுன்ட் தருவார்கள். அதன்பின் நம் முதலீட்டுப் பயணத்தை ஆரம்பிக்கலாம். கம்ப்யூட்டரை சிறப்பாகக் கையாளத் தெரிந்தவர்கள் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் இணைய தளத்திலேயே கே.ஒய்.சி. முடித்து, முதலீட்டை ஆரம்பிக்கலாம்.
முதலீட்டையும் ஆன்லைன், ஆ ப்லைன் என்ற இரண்டு முறையில் செய்ய முடியும். ஆப்லைன் என்றால், அதற்கான விண்ணப்பத்தை நிரப்பி, குறிப்பிட்ட தொகைக்கு ஒரு காசோலையை இணைத்து, அந்த மியூச்சுவல் பண்ட் நிறுவனத்திலோ, சர்வீஸ் சென்டரிலோ அல்லது டிஸ்ட்ரிப்யூட்டர் அலுவலகத்திலோ சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் என்றால், அந்த குறிப்பிட்ட மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் இணையதளத்துக்கு சென்று, லாக் இன் செய்து முதலீட்டைத் துவங்கலாம். பணத்தை வெளியே எடுக்கவும், இந்த இரண்டு முறைகளையும் பின்பற்றலாம்.
அடிக்கடி என்.ஏ.வி. என்னும் வார்த்தையை கேள்விப்படுகிறோம். என்.ஏ.வி.என்றால், நாம் வாங்க/ விற்க விரும்பும் பண்டின் ஒரு யூனிட் விலை. நாம் வாங்க/ விற்க விரும்பும் பண்ட் இன்று என்ன விலையாக இருக்கிறது என்பதை, ஆம் பி இணையதளம், மியூச்சுவல் பண்ட் இணையதளம், தினசரி பத்திரிக்கைகள் போன்றவற்றில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
மியூச்சுவல் பண்டில் முக்கியமாக நாம் செய்யவேண்டிய ஒரு விஷயம் நாமினேஷன். இது இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவர் இறந்து விட்டால், அவருடைய முதலீட்டை நாமினியாக யார் இருக்கிறார்களோ, அவர்களிடம்தான் மியூச்சுவல் பண்ட் கொடுக்கும். இதனால் கோர்ட், கேஸ் என்று அலைய வேண்டியிருக்காது. முதலில் ஒருவர் பெயரை நாமினேஷனாகக் கொடுத்தாலும், பிறகு விரும்பினால் அதனை மாற்றலாம்.
பொதுவாக எந்த முதலீட்டுப் பயணத்திலும் ஏதாவது குறைபாடு வருவது சகஜம். அப்படி எதுவும் குறைபாடுகள் இருந்தால் முதலில் அந்த மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் ரிலேஷன்ஷிப் மேனேஜரைத் தொடர்பு கொள்ளவேண்டும். அவருடைய பெயர், இமெய்ல் ஐடி எல்லாம் மியூச்சுவல் பண்டின் இணையதளத்தில் கிடைக்கும். ஒருவேளை நம் பிரச்னை தீரவில்லை என்றால், செபியின் ஸ்கோர்ஸ் (SCORES) என்னும் வெப்சைட்டில் புகார் தரலாம்.
ஒவ்வொரு முதலீட்டுக்கும் சாதகமான ஒரு கால கட்டம் உண்டு. தற்சமயம் தங்கம் ஏறுகிறது; சில சமயம் ரியல் எஸ்டேட் அபரிமிதமாக வளரும். சென்ற வருடம் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் பண்ட்களின் காலம். பொதுமக்களில் 30 சதவீதம்-35 சதவீதம் இப்போது இந்த முதலீடுகளை மேற்கொள்கிறார்கள். மேலை நாடுகளில் சுமார் 90சதவீதம் மக்கள் சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். இது குறித்த விழிப்புணர்வு அதிகமாகும்போது இந்தியாவிலும் நிறைய மக்கள் சந்தைசார் முதலீடுகளுக்குள் வருவார்கள். அப்போது இந்த முதலீட்டு வழி இன்னும் அதிகமாக பலன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே மியூச்சுவல் பண்ட் வைத்திருக்கிறீர்களா? அவற்றின் வருடாந்திர வளர்ச்சி விகிதம் என்ன?
- ரஜினியின் நடிப்பையும், ஸ்ரீதேவியின் நடிப்பையும் ரெஜினா குடும்பத்தினர் நேரில் கண்டுகளித்தனர்.
- ரெஜினா வின்சென்ட் எழுந்து வீட்டுக்குள் மாடியில் உள்ள அறைக்குச் செல்ல புறப்பட்டார்.
ரஜினி அடிபட்ட புலி போல விஜயா நர்சிங் ஹோம் ஆஸ்பத்திரியில் சீறிக் கொண்டே இருந்தார். ஆஸ்பத்திரியில் அவர் இருந்த 3 நாட்களும் டாக்டர்கள் போர்முனையில் நிற்பது போலதான் உணர்ந்தனர்.
3-வது நாள் அவர் அம்மாவை பார்க்க வேண்டும் என்று திரும்ப... திரும்ப... சொல்லிக் கொண்டு இருந்ததால் அவர் குறிப்பிட்ட ரெஜினாம்மாவை டாக்டர்கள் தொடர்பு கொண்டனர்.
யார் அந்த ரெஜினாம்மா...?
அவரைப் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். சென்னையில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பெஸ்ட் அண்ட் கிராம்டன் நிறுவனம் புகழ் பெற்ற நிறுவனமாக இருந்தது. அந்த நிறுவனத்துக்கு சொந்தமாக சென்னை ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகர் பகுதியில் ஒரு ஏக்கருக்கும் மேல் பரப்பளவு கொண்ட இடம் இருந்தது.
அந்த இடத்தில் கட்டப்பட்டு இருந்த பங்களாவில் பெஸ்ட் அண்ட் கிராம்டன் நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக இருந்த வின்சென்ட் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் இருந்த பங்களாவை மாளிகை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அந்த இடம் பராமரிக்கப்பட்டு வந்தது. பங்களாவின் பின்புறம் அழகிய புல்தரை அமைக்கப்பட்டு இருந்தது.
வீட்டை சுற்றிலும் வகை வகையான பூச்செடிகளுடன் அழகான தோட்டம் அமைத்து இருந்தனர். பசுஞ்சோலைக்கு மத்தியில் அந்த மாளிகை வீடு ரம்மியமாக இருந்தது. அந்த பங்களாவின் பின்புறம் விருந்தினர்கள் தங்கவும் அறைகள் கட்டப்பட்டு இருந்தன.
பங்களா முன்புறமும் மிகவும் விஸ்தாரமாக காலி இடம் இருந்தது. படத்தயாரிப்பாளர் ஏ.பி.நாகராஜன் அந்த இடத்தை பார்த்ததும் தனது "மேல்நாட்டு மருமகள்" படத்தின் சூட்டிங்கை அங்கு நடத்த ஆசைப்பட்டார். அதற்கு அனுமதி கிடைத்ததால் அந்த படம் அங்கு எடுக்கப்பட்டது.
பெஸ்ட் அன்ட் கிராம்டன் தலைமை நிர்வாகி வின்சென்ட்டுக்கு ஜேப்பியார் நண்பர் ஆவார். எனவே ஜேப்பியாரும் தனது படங்களின் படப்பிடிப்புகளையும் அங்கு நடத்தினார். வின்சென்ட்டின் மனைவி ரெஜினா வின்சென்ட். இவர்தான் சூப்பர் ஸ்டார் ரஜினியால் 'ரெஜினாம்மா' என்று அழைக்கப்பட்டார்.
இவர் இயற்கை வைத்தியத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். ஆனால் மருத்துவமனைகளில் பணிபுரியவில்லை. தெரிந்தவர்களுக்கு மட்டும் வைத்தியம் செய்வதை வழக்கத்தில் வைத்திருந்தார். அதோடு அவர் சென்னையில் மதர் தெரசா சமூக நல அமைப்பின் பொறுப்பாளராகவும் இருந்தார்.
எப்போதும் சமூக நல சேவை செய்வதை நோக்கமாக கொண்ட அவர் தனது வீட்டில் நடக்கும் படப்பிடிப்புகளை எப்போதாவது பார்ப்பது உண்டு. மற்றபடி அவருக்கு சினிமாவில் பெரிய ஆர்வம் கிடையாது. அவரது வாரிசுகள் விரும்பியதால் வீட்டின் பின்பகுதியில் உள்ள தோட்டத்து பகுதியை படப்பிடிப்புக்கு விடுவதற்கு அவர் தடை விதிக்கவில்லை.
இந்த நிலையில்தான் 1979-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஜினி கதாநாயகனாகவும், ஸ்ரீதேவி கதாநாயகியாகவும் நடித்த "தர்ம யுத்தம்" படத்துக்கான படப்பிடிப்பை நடத்த சென்னையில் இடம் தேடப்பட்டு வந்தது. ரெஜினா வின்சென்ட் பங்களாவை பார்த்ததும் படத்தயாரிப்பாளர் சீனிவாசன் அங்கு படப்பிடிப்பு நடத்த விரும்பினார். ரெஜினாவிடம் அவர் 3 நாட்கள் பங்களா இடத்தை தந்தால் போதும் சூட்டிங்கை முடித்து விடுவோம் என்றார்.
அதற்கு ரெஜினா வின்சென்ட் ஒப்புதல் அளித்தார். மறுநாளே படப்பிடிப்பு தொடங்கியது. முதல் 2 நாட்கள் படப்பிடிப்பு மின்னல் வேகத்தில் நடந்தது. ரஜினியின் நடிப்பையும், ஸ்ரீதேவியின் நடிப்பையும் ரெஜினா குடும்பத்தினர் நேரில் கண்டுகளித்தனர்.
அதே சமயத்தில் படப்பிடிப்புக்கு இடையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரஜினி தனியாக ஒரு ஓரமாக நின்றபடி ஸ்டைலாக சிகரெட்டை ஊதித் தள்ளுவதை ரெஜினா வின்சென்ட் கவனிக்கத் தவற வில்லை. இந்த நிலையில்தான் 3-வது நாள் படப்பிடிப்பில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. அன்றைய தினம் மதர் தெரசா சமூக நல அமைப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ரெஜினா வின்சென்ட் காலையிலேயே புறப்பட்டுச் சென்று விட்டார்.
அன்று தர்ம யுத்தம் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க தயாரிப்பாளர் சீனிவாசன் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அன்று எதிர்பாராதவிதமாக ரஜினி கடுமையான மது போதையுடன் அந்த பங்களாவுக்கு வந்தார். அவரால் நிற்கக்கூட முடியவில்லை. படப்பிடிப்பை நாளை வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.
தயாரிப்பாளர் சீனிவாசனுக்கு திக் என்று ஆகி விட்டது. மனம் வெறுத்துப் போன அவர் படப்பிடிப்பு சாதனங்களை அகற்ற கூறினார். அதன்படி திரைப்பட தொழிலாளர்கள் அந்த பங்களாவில் இருந்த படப்பிடிப்பு சாதனங்களை ஒவ்வொன்றாக எடுத்து வைக்க தொடங்கினார்கள். அப்போது வெளியில் சென்று இருந்த ரெஜினா வின்சென்ட் காரில் வந்து இறங்கினார். படப்பிடிப்பு எதுவும் நடக்காமல் இருப்பதை பார்த்ததும் ஏதோ ஒன்று நடந்து இருக்கிறது என்பது அவருக்கு புரிந்து விட்டது. அவரை பார்த்ததும் படத்தயாரிப்பாளர் சீனிவாசன் கண்ணீர் மல்க வந்தார். அவரிடம் ரெஜினா வின்சென்ட், "ஏன் படப்பிடிப்பு நடக்கவில்லை" என்று கேட்டார்.
அதற்கு படத்தயாரிப்பாளர் சீனிவாசன், "கதாநாயகன் ரஜினி மது அருந்தி விட்டு வந்ததால் படப்பிடிப்பை தொடர முடியவில்லை. நாளை மீண்டும் வருவதாக சொல்லி விட்டு போய் இருக்கிறார். தயவு செய்து நாளை ஒருநாள் மட்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க வேண்டும்" என்றார்.
அவரது சூழ்நிலையைப் புரிந்துக் கொண்ட ரெஜினா வின்சென்ட் "சரி நடத்திக் கொள்ளுங்கள்" என்று சம்மதித்தார். அடுத்த நாள் ரஜினி, ஸ்ரீதேவி காலையிலேயே வந்து விட்டனர். காட்சிகள் அனைத்தும் விறு விறுப்பாக படமாக்கப்பட்டன. ரஜினி தனது ஒவ்வொரு காட்சியிலும் தத்ரூபமாக நடித்தார்.
அவர் நடித்த காட்சிகள் ஒரே டேக்கில் ஓகே ஆனது. இதைப் பார்த்து ரெஜினா வின்சென்ட்டும் அவரது குடும்பத்தினரும் பிரமித்தனர். நடிப்பில் இவ்வளவு திறமையுடன் இருக்கும் ரஜினி மீது முதல் முறையாக ரெஜினா வின்சென்டுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஒரு ஈர்ப்பும், அன்பும் ஏற்பட்டது.
முதல் 2 நாட்கள் படப்பிடிப்பை பார்க்காத ரெஜினா வின்சென்ட் 3-வது நாள் படப்பிடிப்பை வேடிக்கையாக பார்க்க ஆரம்பித்து அதில் அப்படியே மனதை பறிகொடுத்து அங்கேயே அமர்ந்து விட்டார். மதியம் படப்பிடிப்புக்கான இடைவேளை விடப்பட்டது. அப்போது ரெஜினா வின்சென்ட் எழுந்து வீட்டுக்குள் மாடியில் உள்ள அறைக்குச் செல்ல புறப்பட்டார்.
இதைப் பார்த்த ரஜினி வேகம் வேகமாக வந்தார். ரெஜினா வின்சென்ட் அருகில் சென்று "அம்மா" என்று அழைத்தார். ரெஜினாவுக்கு தூக்கி வாரிப் போட்டது. திரும்பிப் பார்த்தார். ரஜினி கண்கள் பாசத்தில் மிளிர நின்றுக் கொண்டிருந்தார்.
"அம்மா நான் உங்களிடம் பேச வேண்டும். என் மனதில் உள்ளதை எல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது" என்றார். இதை ரெஜினா வின்சென்ட் எதிர்பார்க்கவில்லை. அவர் ரஜினியை பார்த்து, "நானே உன்னிடம் பேச வேண்டும் என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தேன். உனக்கு நிறைய அட்வைஸ் தேவைப்படுகிறது. படப்பிடிப்பு முடிந்ததும் பேசலாம்" என்றார்.
அவர் அவ்வாறு சொன்னதும் ரஜினிக்கு ஆச்சரியமாக இருந்தது. தலையை சரித்து ரெஜினா வின்சென்ட்டை கண் இமை கொட்டாமல் பார்த்தார். அவரையும் அறியாமல் அவர் வாயில் இருந்து "சரிம்மா" என்ற வார்த்தை வந்தது. ஆனால் அன்று மாலை ரெஜினா வின்சென்ட்டை ரஜினி சந்திக்கவில்லை. படப்பிடிப்பு முடிந்து சென்று விட்டார். சுமார் ஒரு வாரம் கழித்து ரஜினி அந்த பங்களாவுக்கு தன்னந்தனியாக வந்தார். ரஜினி எப்போதுமே புதிய விஷயங்களை தொடங்குவதற்கு வியாழக்கிழமையை தேர்வு செய்வது வழக்கமாகும். அன்று பிப்ரவரி 15-ந்தேதி வியாழக்கிழமை.
ரஜினி அந்த பங்களாவுக்குள் சென்ற போது ரெஜினா வின்சென்ட்டின் மகள் பமீலா கீழ்தளத்தில் வயலின் வாசித்துக் கொண்டிருந்தார். அவரிடம் ரஜினி, அம்மாவை பார்க்க வேண்டும் என்றார். உடனே பமீலா மேல் தளத்துக்கு சென்று தனது தாயாரிடம், "ரஜினி சார் வந்து இருக்காங்க. உங்களோடு பேச வேண்டுமாம்" என்றார்.
ரெஜினா வின்சென்ட் அந்த சமயத்தில் ரஜினியை சுத்தமாக மறந்து போய் இருந்தார். மீண்டும் ரஜினி வந்து இருக்கும் தகவல் அறிந்ததும் அவர் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். ரஜினி அங்கு இல்லை. பங்களா பின்புறத்தில் உள்ள புல்வெளியில் நின்று கொண்டிருந்தார். அங்கு சென்ற ரெஜினா வின்சென்ட், "என்னப்பா.... என்ன விஷயம்..." என்று கேட்டார். அடுத்த வினாடி ரஜினி கொஞ்சம் கூட தாமதிக்கவில்லை. நெடுஞ்சான் கிடையாக ரெஜினா வின்சென்ட் காலில் விழுந்து கும்பிட்டார்.
ரெஜினா வின்சென்ட்டுக்கு அதிர்ச்சியாகி விட்டது. அடுத்து என்ன நடந்தது என்பதை நாளை பார்க்கலாம்.
- பதினெட்டு வயதில் கவுரி உறவினர்களோடு கங்காசாகருக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டாள்.
- பதிமூன்று ஆண்டுகள் சாரதேஸ்வரி ஆசிரமம் வாடகை இடங்களில் இயங்கியது.
அப்போது பதிமூன்று வயதுதான் இருக்கும் கவுரிக்கு. ஆனால் தெளிவாகத் தன் தாயிடம் ஒரு வாக்கியத்தைச் சொன்னாள் அவள்.
அதைக்கேட்ட கவுரியின் தாய்க்கு உள்ளூற அச்சமும் கவலையும் எழுந்தன. காரணம் அந்த வாக்கியத்தைச் சொன்னபோது கவுரியின் சொற்களில் தென்பட்ட உறுதியும் கண்ணில் தென்பட்ட தீர்மானமும்.
அவள் சொன்னாள்: `நான் மரணமே இல்லாதவனைத்தான் மணப்பேன். செத்துப் போகிறவர்களை மணந்துகொள்ள மாட்டேன்!`
பகவான் கிருஷ்ணரே தன் கணவர் என்பதைப் பிஞ்சுமொழியில் அவள் சொன்ன விதம்தான் அது. மீராவின் வழிவந்த இன்னொரு கிருஷ்ண பக்தை அவள். பகவான் ராமகிருஷ்ணரிடம் மந்திரோபதேசம் பெற்று, பக்தியில் தோய்ந்து வாழ்ந்தவள்.
கவுரி சிறுவயதில் ஒரு யோகினியைச் சந்தித்தாள். கவுரியின் கிருஷ்ண பக்தியைப் பார்த்து வியந்த யோகினி, `தாமோதர் சிலா` என்னும் விஷ்ணு சாலிக்கிராமத்தை அவளிடம் கொடுத்தாள்.
`இந்த சாலிகிராமத்தில் உன் கணவர் கிருஷ்ணர் உயிரோடும் உணர்வோடும் உறைந்திருக்கிறார். உன்னை மிகவும் நேசிப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார். அதனால்தான் இவரை உன்னிடம் ஒப்படைக்கிறேன். இவரை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்!` - சொல்லிவிட்டு, அவளை ஆசீர்வாதம் செய்து, விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.
தன் வலது உள்ளங்கையில் வைத்து அந்த சாலிக்கிராமத்தையே பார்த்துக் கொண்டிருந்த கவுரியின் விழிகளில் பக்திக் கண்ணீர் பெருகியது. அவள் அந்த சாலிகிராமக் கிருஷ்ணரிடம் தன் வாழ்வை ஒப்படைத்துவிட்டாள்.
அதையே தாலியைப் போல் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டாள். நாள்தோறும் அதை பூஜித்து வரலானாள். வாழ்நாளில் ஒருநாள் கூட அவள் அந்தக் கிருஷ்ணரைப் பிரிந்ததே இல்லை........
ஹெளராவில், சிப்பூர் கிராமத்தில் 1857 இல், பார்வதி சரண் சட்டோபாத்யாயாவுக்கும் கிரிபாலா தேவிக்கும் மகளாகப் பிறந்தாள் கவுரி. கவுரிக்குச் சின்னஞ் சிறுவயதிலேயே அளவற்ற ஆன்மீக நாட்டம் இருந்தது.
ஒருமுறை தன் அண்ணனோடு கங்கையில் படகில் போய்க் கொண்டிருந்தாள் சிறுமி கவுரி. அப்போது, அவளுக்குத் தான் அணிந்திருந்த தங்க வளையலைப் பற்றிச் சிந்தனை எழுந்தது. தங்கம் அணியாவிட்டால்தான் என்ன?
வளையலைக் கழற்றிக் கடித்துப் பார்த்தாள்! தங்கம் ஒன்றும் தித்திக்கவில்லையே? பிறகு எதற்கு இது?
அண்ணனின் பதற்றத்தைப் பொருட்படுத்தாமல் தங்க வளையல்களைக் கங்கையில் வீசிவிட்டாள்!
இதற்காக உறவினர்கள் அவளைக் கடிந்துகொண்ட போது அவளுக்கு வியப்பாக இருந்தது. ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத, இனிப்பாகக் கூட இல்லாத தங்கத்தை வீசி எறிந்ததற்கு ஏன் இத்தனை கோபம் எல்லோரிடமும்?!
1875 இல், பதினெட்டு வயதில் கவுரி உறவினர்களோடு கங்காசாகருக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டாள். அங்கே தங்கியிருந்த மூன்றாம் நாள், திடீரென்று யாத்ரீகர்களின் கூட்டத்தில் கலந்து மறைந்துவிட்டாள்.
அவளுக்கு உறவினர்களோடு வாழும் சராசரி வாழ்க்கை பிடிக்கவில்லை. பிறப்பால் நேர்ந்த அத்தனை உறவுகளையும் அப்போதே முற்றிலுமாகத் துறந்துவிட்டாள்.
கால்நடையாகவும் ரயிலிலும் இந்தியாவில் உள்ள பல ஆலயங்களுக்குச் சென்றாள். பல நாட்கள் உண்ணாமலே இருப்பது, பல நாட்கள் மவுனத்தில் ஆழ்ந்திருப்பது, நாள்முழுவதும் தியானத்தில் தோய்ந்திருப்பது என்று அவள் செய்த சாதனைகள் பலப்பல.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கவுரி ஆண் உடை தரித்துத்தான் இமாலயம் உள்ளிட்ட பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டாள். என்னை எந்த ஆணேனும் காமப் பார்வை பார்த்தால் அவனை என் காலடியில் போட்டு, ஒரு புழுவைப் போல் மிதித்துத் தேய்ப்பேன் என உறுமினாள்.

திருப்பூர் கிருஷ்ணன்
இயற்கையிலேயே பேரழகியான அவள் தன் அழகால் யாரும் தன்னை இம்சை செய்யக் கூடாது என்பதற்காக களிமண்ணையும் சாம்பலையும் முகத்தில் அள்ளிப் பூசிக்கொண்டு அழகை மறைத்து உலவினாள். எலும்புருவை வேண்டிப் பெற்ற காரைக்காலம்மையாரைப் போன்ற மனோபாவம் கெளரிக்கும் இருந்தது.....
கொல்கத்தாவில் 1882இல், பலராம்போஸ் என்ற பக்தர் இல்லத்தில் அவள் தன் கிருஷ்ண சாலிகிராமத்தை பூஜித்துக் கொண்டிருக்கும்போது அந்த விந்தை நிகழ்ந்தது.
என்ன இது! சாலிக்கிராமத்தின் தோற்றம் மறைந்து அங்கே இரு மனிதப் பாதங்கள் தென்படுகின்றனவே! கவுரி தன் விழிகளைத் தேய்த்து விட்டுக் கொண்டு மறுபடி மறுபடி பார்த்தாள். சந்தேகமே இல்லை. ஒளிவீசும் திருப்பாதங்கள். குளுமையான அந்தத் தூய பாதங்களைப் பரவசத்தோடு தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டாள். அவை யாருடையவை?
சில கணங்களில் காட்சி மறைந்து மீண்டும் சாலிகிராமமே கண்ணுக்குத் தென்பட்டது. தான் தரிசித்த திருப்பாதங்கள் யாருடையவை என கவுரியின் மனம் அலைபாய்ந்தது. அந்தப் பாதங்கள் தன்னைக் கயிறுகட்டித் தன்னிடத்தில் வா என்று இழுப்பதுபோல் தோன்றியது கவுரிக்கு.
பலராம்போஸ் அழைத்துச் செல்ல, பரமஹம்சரை முதல்முறையாக தரிசித்து அவர் பாதங்களில் விழுந்து வணங்கி நிமிர்ந்தபோது அவள் உள்மனம் ஆனந்தத்துடன் கூவியது. ஆ. அதே பாதங்கள். கவுரி அந்தப் பாதங்களைக் கிருஷ்ணரின் பாதங்கள் என்றே கண்டுகொண்டாள். குருதேவர் கையில் ஒரு நூல்கண்டை வைத்து அதில் நூலைச் சுற்றியவாறே கவுரியைப் பார்த்துக் குறும்புகலந்த புன்முறுவல் பூத்தார். உன்னைக் கயிறுகட்டி இழுத்தது நான்தான் என்பதை நூலைச் சுற்றுவதன் மூலம் தெரிவிக்கிறாரா?
அன்று முதல் அவள் பரமஹம்சரின் பக்தையாக மாறி சாரதாதேவியோடு அங்கேயே தங்கிவிட்டாள்.
`பகவானே! இளம் வயதிலேயே ஆன்மீக நாட்டத்தால் உறவுகளையெல்லாம் துண்டித்துக் கொண்ட நான், உங்களைச் சந்திக்க ஏன் இத்தனை கால தாமதமாயிற்று?` - பரமஹம்சரிடம் ஆதங்கத்தோடு வினவினாள்.
`நீ தன்னந்தனியே எத்தனை ஆன்மீகச் சாதனைகளைச் செய்து பக்குவப் பட்டிருக்கிறாய்? முன்னரே சந்தித்திருந்தால் இந்தச் சாதனைகளையெல்லாம் செய்திருப்பாயா?` - சிரித்துக்கொண்டே பரமஹம்சர் வினவியதும் கவுரியின் மனம் சமாதானமடைந்தது.
தட்சிணேஸ்வரத்தில் பரமஹம்சரிடம் தீட்சை பெற்ற பிறகு கவுரி சாரதாதேவியுடன் வசிக்கலானாள். பரமஹம்சருக்காக அவள் உணவு தயாரித்ததும் உண்டு.
பரமஹம்சர், `கவுரி ஒரு முழுமையான ஆன்மா. பிருந்தாவனத்தில் இருந்த ஒரு கோபிகை தான் அவள்!` என்று சொன்னதுண்டு.
பரமஹம்சர், ஓயாமல் திருத்தல யாத்திரை செல்லும் கவுரியை `போதும் இனி யாத்திரைகள்!` எனச் சொல்லி ஓரிடத்தில் தங்கவைத்தார். இந்தியப் பெண்களின் நிலையை உயர்த்தப் பாடுபடுமாறு அறிவுறுத்தினார். அறிவு, ஆன்மீகம் ஆகியவற்றில் பாரதப் பெண்கள் வளர்ச்சி அடையவேண்டும் என்பது பரமஹம்சரின் எண்ணம்.
தனக்கு அவற்றைப் பயிற்றுவிக்கத் தெரியாதே, சரியாகத் தான் கல்வி கற்றவள் அல்லவே என கவுரி தயங்கியபோது, `நீ களிமண்ணைக் குழை. நான் தண்ணீர் வார்க்கிறேன். நாம் விரும்பும் வகையில் இந்தியப் பெண்களை மாற்றி உருவாக்கிவிடுவோம்!` என்றார் ராமகிருஷ்ணர்.
குருதேவர் சொல்லைத் தட்ட முடியாத கவுரி பாரதப் பெண்களின் கல்விக்காகவும் ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டாள். கவுரி அன்னை போன்ற ஆயிரம் அன்னைகள் வேண்டுமே நமக்கு என்று விவேகானந்தர் கவுரியைப் பாராட்டியிருக்கிறார்.
1895 இல், சாரதேஸ்வரி ஆசிரமத்தைத் தொடங்கினாள் கவுரி. அது உறைவிடப் பள்ளியாகச் செயல்பட்டது. திருமணமாகாத முதிர்கன்னிகள், திருமணமாகிக் கைவிடப்பட்டவர்கள், கைம்பெண்கள் என அங்கே பலதரப்பட்டவர்கள் சேர்ந்து பயனடைந்தார்கள்.
1911இல் சாரதேஸ்வரி ஆசிரமம் கொல்கத்தாவுக்கு இடம்பெயர்ந்தது. சாரதாதேவி அடிக்கடி அங்கு வருகை தந்தார். சிறு வயதிலேயே உறவுகளைத் துறந்த கவுரி, ஆதரவற்ற பாரதப் பெண்சமூகத்தையே உறவாகக் கொண்டு வாழ்ந்த புனித வாழ்வு, சாரதாதேவியால் வியந்து பாராட்டப்பட்டிருக்கிறது.
பதிமூன்று ஆண்டுகள் சாரதேஸ்வரி ஆசிரமம் வாடகை இடங்களில் இயங்கியது. அங்கு வந்துசேர்வோர் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதற்குத் தகுந்தாற்போல் ஆசிரமமும் வெவ்வேறு இடங்களில் இயங்க நேர்ந்தது.
1924 இல் போதுமான நிதி கிடைத்தபின்னர் அது சொந்தமாக ஒரு மூன்று மாடிக் கட்டிடத்தைப் பெற்று அதில் இயங்கலாயிற்று.
பெண்கல்வியின் முக்கியத்துவத்தை கவுரி அன்னை உணர்ந்திருந்தாள். தியாகசீலர்களாக வாழும் பெண்மணிகளைத் தேடிப் பிடித்துத் தன் ஆசிரமத்தில் ஆசிரியைகளாக நியமித்தாள். சுதேசி இயக்கம் தொடங்குவதற்கு முன்பாகவே கைத்தறித் தொழிலைத் தன் ஆசிரமத்தில் நிறுவிய முன்னோடி கவுரிஅன்னை.......
ஒருமுறை ஒருபெண் கங்கையில் விழுந்து விட்டாள். ஆண்கள் கூட்டமொன்று அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.
`முட்டாள்களே! விழுந்த பெண் தத்தளிப்பதை வேடிக்கையா பார்க்கிறீர்கள்?` என்று சீற்றத்துடன் கர்ஜித்த கவுரி அன்னை, ஜெய் காளி என்றவாறே கங்கையில் குதித்து விட்டாள். ஆனால் கவுரி அன்னைக்கு நீச்சல் தெரியாது!
கவுரி அன்னையும் தத்தளிப்பதைப் பார்த்துச் சில ஆண்கள் பாய்ந்து சென்று குதித்து கங்கையின் நீர்ப்பெருக்கிலிருந்து இரு பெண்மணிகளையும் காப்பாற்றினார்கள். கவுரி அன்னையின் கருணை என்பது எல்லை கடந்தது. 1938 பிப்ரவரி 28 சிவராத்திரி தினத்தன்று, கவுரிஅன்னை சொன்னாள். `சிஷ்யை மேல் கொண்ட பாசம் என்னும் கயிறு கொண்டு என்னை குருதேவர் முன்னர் இழுத்தார். ஸித்தி அடைந்த அதே குருதேவர் இப்போதும் தம் பாசக் கயிற்றால் என்னை இழுக்கிறார்! இன்று நாம் குருதேவரைப் பற்றி மட்டுமே பேசுவோம். வேறெதுவும் பேச வேண்டாம்."
மார்ச் ஒன்றாம் தேதி காலை கவுரி அன்னை, தாம் வைத்திருந்த விஷ்ணு சாலிக்கிராமத்தைத் தன் மேல் அன்பு செலுத்திய துர்க்காதேவியிடம் ஒப்படைத்தாள்.
கவுரி அன்னையின் ஆன்மா, அன்றிரவு 8:15 மணிக்கு குருதேவரின் அமரத்துவம் வாய்ந்த திருப்பாதங்களில் கலந்தது.
மறுநாள் கவுரி அன்னையின் உடல், குருதேவரின் உடல் எரியூட்டப்பட்ட அதே காசிப்–பூர் மயான பூமியில் தகனம் செய்யப்பட்டது.
`எந்த உறவும் நிலையல்ல, இறைவனுடனான பக்தியுறவு மட்டுமே நிலையானது!` என்ற உண்மையை அந்த உடலிலிருந்து எழுந்த பொன்னிற நெருப்பு, சடசடவென்ற ஒலியுடன், உலகிற்குப் பிரகடனம் செய்தது.
தொடர்புக்கு: thiruppurkrishnan@gmail.com
- சபரிமலைக்கு அழைத்துச் சென்ற குருசாமி என்பதால் ரஜினி அவர் அருகில் அமர்ந்ததும் அமைதியானார்.
- ரஜினிக்கு ஆழ்ந்த தூக்கத்துக்கான மருந்துகள் கொடுக்கப்பட்டது.
மதுரை விமான நிலையத்தில் ரஜினி தகராறு செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. விமானத்துக்குள் ஏற்றப்பட்ட பிறகும் ரஜினியை கட்டுப்படுத்துவது நடிகர்-நடிகைகளுக்கு மிகவும் சவாலாக இருந்தது. ரஜினி ஒருவித பதட்டத்துடன் இருப்பதை கண்டு நடிகர்கள் வித்தியாசமாகப் பார்த்தனர்.
சிறிது நேரம் ரஜினி அமைதியாக இருப்பார். எங்கேயோ பார்த்துக் கொண்டு எதையோ சிந்தித்துக் கொண்டே இருப்பார். அவர் என்ன சிந்திக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்த சில நிமிடங்களில் ஆக்ரோஷம் வந்தது போல சத்தம் போட ஆரம்பித்து விடுவார்.
இதனால் ரஜினி அருகில் செல்ல நடிகர்-நடிகைகள் அனைவரும் பயப்பட்டனர். அந்த சமயத்தில் நம்பியார் மட்டும் துணிச்சலாக முன் வந்து ரஜினியை அழைத்து தனது பக்கத்து இருக்கையில் உட்கார வைத்துக் கொண்டார். சபரிமலைக்கு அழைத்துச் சென்ற குருசாமி என்பதால் ரஜினி அவர் அருகில் அமர்ந்ததும் அமைதியானார்.
அதன் பிறகு சென்னை வரும் வரை ரஜினி எந்த தொந்தரவும் யாருக்கும் செய்யவில்லை. சென்னையில் விமானம் தரை இறங்கியதும் நடிகர்-நடிகைகள் யாரும் அவரை அப்படியே விட்டு விட்டுச் சென்று விடவில்லை. மருத்துவமனையில் ரஜினியை அனுமதிக்க முடிவு செய்தனர்.
நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்த மேஜர் சுந்தரராஜன், நம்பியார், பாலாஜி, நாகேஷ் ஆகிய 4 பேரும் கூடி ஆலோசனை செய்தனர். விமான நிலையத்தில் இருந்து தங்களது காரில் வடபழனியில் உள்ள விஜயா நர்சிங் ேஹாம் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்ல தீர்மானித்தனர்.
அதன்படி ரஜினி நேரடியாக விஜயா நர்சிங் ேஹாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரை டாக்டர் செரியன் தலைமையிலான டாக்டர்கள் குழு பரிசோதனை செய்தது. பல்வேறு மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டன. பிறகு ரஜினிக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை டாக்டர்கள் விளக்கி கூறினார்கள். "மேனியாக் டிப்ரெசிவ் சைக்கோசிஸ்" என்று அழைக்கப்படும் மிகப்பெரிய நரம்பு தளர்ச்சி நோயால் ரஜினி பாதிக்கப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் கூறினார்கள்.
ஓய்வு எடுக்காமல், தூக்கமே இல்லாமல் வேலை செய்பவர்களுக்கு இத்தகைய நரம்பு தளர்ச்சி ஏற்படும். இதனால் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது தெரியாமலேயே நடந்துக் கொள்ளச் செய்து விடும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதை கேட்டதும் மேஜர் சுந்தரராஜன், நம்பியார், பாலாஜி, நாகேஷ் ஆகிய 4 பேரும் அதிர்ச்சி அடைந்தனர். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்டனர். அதற்கு டாக்டர்கள், "நல்ல வேளை சரியான நேரத்தில் இவரை அழைத்து வந்தீர்கள். இன்னும் 10 நாட்கள் நீங்கள் இவரை இப்படியே வைத்து இருந்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டு இருக்கும்.
அவர் 72 மணி நேரம் (3 நாட்கள்) மருத்துவமனையில் படுக்கையில் தூங்க வேண்டும். 3 நாட்கள் அவர் தூங்கி எழுந்தால்தான் அவருக்கு அடுத்தக் கட்ட சிகிச்சையை நாங்கள் தொடர முடியும்" என்றனர். அதற்கு நடிகர்கள் 4 பேரும் சம்மதித்து சிகிச்சையை தொடருமாறு தெரிவித்தனர்.
இதற்கிடையே ரஜினி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் பெங்களூரில் உள்ள அவரது சகோதரர் சத்திய நாராயணா மற்றும் நண்பர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பெங்களூரில் இருந்து சென்னைக்கு விரைந்து வந்தனர்.
ஆஸ்பத்திரியில் இருந்த 3 நாட்களும் அவரை மூத்த சகோதரர் சத்திய நாராயணா, நண்பர் முரளி, அவரது உதவியாளர் கிரி ஆகியோர் கவனித்துக் கொண்டனர். இந்த நிலையில் ரஜினி உடல்நலம் பற்றி பத்திரிகைகளில் வெளியான பலவிதமான மாறுபட்ட தகவல்களை பார்த்து விட்டு விஜயா நர்சிங் ஹோம் முன்பு நூற்றுக்கணக்கான ரஜினி ரசிகர்கள் திரண்டு விட்டனர். அவர்களை சமாளிப்பது போலீஸ்காரர்களுக்கும், நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும் மிகவும் சவாலாக இருந்தது.
இந்த நிலையில் ரஜினிக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பதை மேஜர் சுந்தரராஜன் நிருபர்களிடம் விளக்கி கூறினார். அவர் கூறுகையில், "கடந்த சில மாதங்களாக ரஜினி காந்த் சரியான தூக்க மின்றி இரவு-பகலாக நடித்து வருகிறார். கடந்த ஒரு வருட காலமாகவே அவருக்கு ஓய்வு இல்லை, தூக்கம் இல்லாததால் அவர் உடல் நிலையும், மன நிலையும் பாதிக்கப்பட்டு இருப்பதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். அவர் 72 மணி நேரம் (3 நாள்) தொடர்ந்து தூங்க வேண்டும் என்றும், அதன் பிறகுதான் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள்" என்றார்.
ரஜினிகாந்த் நடித்த "ப்ரியா" படத்தின் கதாசிரியரான பிரபல எழுத்தாளர் சுஜாதா கூறியதாவது:-
"ப்ரியா" படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் எனக்குப் பழக்கமானார். அப்போது அவர் உச்சியை நோக்கி ஓடிக்கொண்டிருந்தார். இருந்தும் என்னை விமானத்திலோ, படப்பிடிப்பிலோ சந்தித்தால் தனியாக மதிப்புக் கொடுத்துப் பேசிக் கொண்டிருப்பார். நான் சொல்வதைக் கவனமாகக் கேட்பார்.
ரஜினிகாந்துக்கு தற்காலிக "நெர்வ்ஸ் பிரேக் டவுன்" (நரம்பு மண்டல பாதிப்பு) ஏற்பட்ட காரணங்களை, அப்போதே என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.
பெங்களூரில் இரவு எட்டரை மணிக்குப் பாலச்சந்தர் படத்தின் படப்பிடிப்பில் (தப்புத் தாளங்கள் என்று நினைக்கிறேன்) சைக்கிள் செயின் சுழற்றிக் கொண்டிருக்கிறார். 8.45 மணிக்கு, பெங்களூரில் விமானம் ஏறி, சென்னை போய், அங்கே சூட்டிங் முடித்து விட்டு பிறகு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு மற்றொரு பிளேன் பிடித்து சிங்கப்பூர் போய், அதிகாலையில் அங்கே 'ப்ரியா' சூட்டிங்கில் கலந்து கொண்டார். மூன்று நாள் கழித்துத் திரும்பிப் பெங்களூர் வந்து சைக்கிள் செயின் சுழற்றி விட்டு மறுபடி சிங்கப்பூர்! இந்த மாதிரி அலைந்தால் ஒரு திபேத்திய லாமாவுக்குக்கூட "நெர்வ்ஸ் ப்ரேக் டவுன்" வந்து விடும்.
இவ்வாறு சுஜாதா கூறினார்.
ரஜினியின் திரையுலக முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகித்த பஞ்சு அருணாசலம் கூறியதாவது:-
"உடல் நலம் சரி இல்லாதபோதும், படப்பிடிப்பை ரத்து செய்யாமல் நடித்தவர் ரஜினி. இதற்காக அவரை நான் கடிந்து கொண்டது உண்டு. அப்போதெல்லாம், "சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற வேண்டாமா சார்! தூக்கம் என்ன வேண்டிக் கிடக்கிறது!" என்பார்.
தயாரிப்பாளர்கள், டைரக்டர்களின் மனதை வருத்தக்கூடாதே என்று தன் உடலை வருத்திக்கொண்டார். ஓய்வே இல்லாமல் நடித்ததால்தான் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவரைப்போல் பரபரப்பான சுறுசுறுப்பான நடிகரைப் பார்ப்பது அபூர்வம்."
இவ்வாறு பஞ்சு அருணாசலம் கூறினார்.
திரை உலக பிரமுகர்களின் இந்த கருத்துக்கள், விஜயா நர்சிங் ஹோம் டாக்டர்கள் சொன்னதை நூற்றுக்கு நூறு உறுதி செய்தது. எனவே ரஜினி 3 நாட்கள் ஓய்வெடுத்து நன்றாக உடல் நலம் தேறி வரட்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.
ஆனால் 3-வது நாள் ரஜினி தூங்கவில்லை. அவரிடம் பிடிவாதமும், பதட்டமும் நீடித்தப்படி இருந்தது. அவர் தூங்கி எழுந்தால்தான் சிகிச்சை அளிக்க முடியும் என்பதால் டாக்டர்கள் திணறினார்கள். இதையடுத்து ரஜினிக்கு ஆழ்ந்த தூக்கத்துக்கான மருந்துகள் கொடுக்கப்பட்டது.
அதையும் மீறி ரஜினி ஏதேதோ பேசிக் கொண்டு இருந்தார். இதையடுத்து டைரக்டர் பாலச்சந்தர் மருத்துவமனைக்கு வந்தார். அவர் ரஜினியிடம் நன்றாக தூங்கு. நீ தூங்கினால்தான் டாக்டர்கள் சிகிச்சை அளிக்க முடியும் என்றார். இதனால் 3-வது நாள் ரஜினி ஓரளவு தூங்க ஆரம்பித்தார். அந்த சமயத்திலும் அவரது கால்ஷீட்டுக்காக 10-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் காத்து கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் ரஜினியின் உடல்நலம் பற்றி மாறுபட்ட தகவல்கள் பரவின.
அவரது ஆதரவாளர்கள் ரஜினி விரைவில் குணம் அடைந்து விடுவார் என்றனர். எதிரிகள் ரஜினி கதை முடிந்தது. இனி மீண்டும் அவர் பெங்களூருக்கு கண்டக்டர் வேலைப் பார்க்க போக வேண்டியதுதான் என்று ஏளனம் செய்தனர். ஆனால் ராகவேந்திரரின் கருணை வேறு விதமாக இருந்தது. 3-வது நாள் இரவு ஓரளவு தூங்கி கண் விழித்த ரஜினி மீண்டும் சத்தம் போடத் தொடங்கினார். அம்மா... அம்மா... என்று திருப்பி... திருப்பி... ஒரே வார்த்தையை சொல்லிக் கொண்டு இருந்தார். அவரது பார்வையிலும், நடவடிக்கைகளிலும் உக்கிரம் ஏற்பட்டு இருந்தது.
அப்போது டாக்டர் செரியன் நிதானமாக ரஜினியிடம் பேசினார். "சரி... சார்... அம்மாவை அழைத்து வந்து விடலாம். ஆனால் நீங்கள் சொல்லும் அந்த அம்மா யார் என்றே எங்களுக்குத் தெரியவில்லையே" என்றார்.
அதற்கு ரஜினி, "ரெஜினாம்மா.... ரெஜினாம்மா..." என்றார். உடனே டாக்டர், "சரி அந்த அம்மாவின் அட்ரஸ், போன் நெம்பர் சொல்லுங்கள். அழைத்து வருகிறோம்" என்றார். அதற்கு ரஜினி, "ரெஜினாம்மா ஆழ்வார்பேட்டை ஸ்ரீராம் நகரில் இருக்காங்க. மதர் தெரசா கம்யூனிட்டி அமைப்பில் அவங்க சமூக சேவை செய்துகிட்டு இருக்காங்க. அவரது கணவர் கிராம்டன் கம்பெனியில் வேலை செய்கிறார். இது போதுமா?" என்றார்.
டாக்டர்களும், "இது போதும். நாங்கள் அவரை அழைத்து வருகிறோம். அமைதியாக இருங்கள்" என்றனர். ஆனால் ரஜினி அமைதி யாகவில்லை. அம்மாவை பார்க்க வேண்டும்.
உடனே அழைத்து வாருங்கள்" என்று சொல்லிக் கொண்டே இருந்தார். இதையடுத்து டாக்டர்கள் அந்த அம்மாவை அழைத்து வர ஆள் அனுப்பினார்கள். ரஜினி அழைத்து வரச்சொன்ன அந்த ரெஜினாம்மா யார் என்பதை நாளை பார்க்கலாம்.
- பைபுரோசிஸ் பாதிப்பானது பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது.
- சில நேரங்களில் இந்த நோய் பாதிப்பு தீவிரம் அடையும்போது கால் வீக்கம், கை வீக்கம் ஏற்படும்.
இப்போதைய நவீன காலகட்டத்தில் பெண்கள் புதிதாக ஒரு நோய் தாக்கத்தை எதிர்கொள்கிறார்கள். சிஸ்டமிக் லூபஸ் எரித்தமட்டோசஸ் எனப்படும் இந்த நோயானது, சுருக்கமாக எஸ்.எல்.இ. என்று அழைக்கப்படுகிறது. இன்னும் எளிதாக புரியவேண்டும் என்றால் இதை லூபஸ் என்று அழைக்கிறார்கள். இது ஒருவகையான திசு குறைபாடு நோய் ஆகும்.
சிஸ்டமிக் லூப்பஸ் எரித்தமட்டோசஸ் மற்றும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் பாதிப்பு:
தற்போது ஒரு லட்சம் பெண்களில் 20 முதல் 40 பெண்களுக்கு இந்த திசு குறைபாடு நோய் ஏற்படுகிறது. சிஸ்டமிக் லூப்பஸ் எரித்தமட்டோசிஸ் நோய்த்தாக்கம் கொண்ட பெண்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவர்களின் கை, கால்களில் சில நேரங்களில் அரிப்புகளுடன் கூடிய அலர்ஜி வரலாம்.
பல நேரங்களில் அவர்களுக்கு முகத்தில் அலர்ஜி ஏற்பட்டு முகத்தின் தோலில் கருப்பு கருப்பாக மாறி நிறமிழப்பு (பிக்மன்டேஷன்) வரலாம். உடலின் தோல் பகுதியில் பாதிப்புகள் ஏற்படலாம். சிறுநீர்க்குழாயில் பிரச்சனைகள் உருவாகலாம். சிறுநீரகத்திலும் பிரச்சனை ஏற்பட்டு சிறுநீரக தொற்றுக்கள் ஏற்படலாம். இதனால் சிறுநீரகம் பாதிக்கப்படுவதால், சிறுநீரக செயல்பாடு குறைவாகலாம்.
இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டுமென்றால் அவர்களுக்கு பைபுரோசிஸ் ஏற்படும். அதாவது காயம் ஏற்பட்ட இடங்களில் உருவாகும் வடுவில் உள்ள இணைப்பு திசுக்களில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் சேரும் நிலையே பைபுரோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. மேலும் நுரையீரல், வயிறு உள்ளிட்ட எல்லா இடங்களிலும் கூட இந்த பைபுரோசிஸ் ஏற்படலாம்.

குறிப்பாக இந்த பைபுரோசிஸ் பாதிப்பானது பெண்களுக்கு அதிகமாக ஏற்படுகிறது. 15 வயது முதல் 40 வயது வரையுள்ள பெண்கள் இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதேபோல் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் என்ற நோயும் பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படுகிறது. இது உடலில் உள்ள சிறுசிறு மூட்டு பகுதி இருக்கும் இடங்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சிஸ்டமிக் லூபஸ் எரித்தமட்டோசஸ் மற்றும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் ஆகிய 2 வகையான விஷயங்களிலும் ஒரு பொதுவான விஷயம் என்னவென்றால், இவை இரண்டுமே நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியின் பாதிப்பால் ஏற்படுகிற நோய் ஆகும். வழக்கமாக நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தான் நமது உடலை நோயில் இருந்தும், நோய்க்கிருமிகளிடம் இருந்தும் பாதுகாக்கிறது. ஆனால் இந்த விஷயத்தில் நோய் எதிர்ப்பு சக்தியே நமக்கு எதிராக திரும்பி, நமது உடலில் பாதிப்பை உருவாக்குகிறது.
கருத்தரிப்பதிலும், கரு வளர்ச்சியிலும் ஏற்படும் சிக்கல்கள்:
லூபஸ் மற்றும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் பிரச்சனை இருப்பவர்களுக்கு உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பானது பாதிக்கப்பட்டு, உடலில் உள்ள செல்களுக்கே, இவை எதிரான எதிர்ப்பு உயிரியை உருவாக்கி விடும். அதனால் தான் இந்த லூபஸ் எரித்தமட்டோசிஸ் பாதிப்பின்போது செல்லுலர் நியூக்ளிக் அமிலத்துக்கு (செல்களின் உட்கரு அமிலம்), நியூக்ளியர் ஆன்டிபாடி (எதிர்ப்பு உயிரி) உருவாகிறது.
இதுபோன்று நியூக்ளியர் ஆன்டிபாடி உருவாவதால், நியூக்ளியர் செல்களில் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பானது பாதிப்படைந்து, அதனால் அந்த செல்கள் சேதம் அடையும். அதன் காரணமாக தோல் நோய்கள், ரத்தக்குழாய் தொடர்புடைய பாதிப்புகள் மற்றும் சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்பதிலும் சரி, கரு உருவாகும்போது கரு வளர்ச்சியிலும் சரி, பிரசவத்திலும் சரி, எல்லா விஷயங்களிலுமே பல சிக்கல்கள் உருவாகின்றன.
ஏனென்றால் இந்த பாதிப்பு கொண்டவர்களுக்கு நமது உடலில் உள்ள தோல், ரத்தக்குழாய்கள், நரம்பு செல்கள், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளில் இருக்கின்ற பல செல்களுக்கு எதிராக, நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே மாறுபாடு அடைந்து எதிர்ப்பு உயிரியாக உருமாறி அவற்றில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த தன்னியக்க எதிர்ப்பு உயிரிகள், குறிப்பாக டி.என்.ஏ. ஆன்டிபாடி, ஸ்மித் ஆன்டிபாடி ஆகிய எதிர்ப்பு உயிரிகள் தோன்றி தோல், சிறுநீரகம், ரத்தக்குழாய்கள், மூட்டுகள், தசைநார்கள் ஆகியவற்றில் உள்ள செல்களை பழுதாக்கி அதில் வீக்கங்களை ஏற்படுத்தி, நோய்த்தாக்கத்தை உருவாக்கி பலவிதமான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாக தோலில் பல இடங்களில் ஆங்காங்கே அலர்ஜி போல ஏற்படும். தோலில் மாற்றங்கள் இருக்கும். இது சிறுநீரகத்தை தாக்கினால் சிறுநீரகம் பாதிப்படைந்து, அதில் சேதம் ஏற்பட்டு, அதனுடைய செயல்பாடு குறைந்து விடும். மேலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். இந்த தாக்கம் ரத்தக் குழாய்களில் ஏற்பட்டால் ரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படும். அந்த வீக்கமானது ரத்தக்குழாய்களை பாதித்து அதனால் ரத்தக்குழாயில் ஆங்காங்கே ரத்த உறைவு ஏற்படும்.
மூட்டுகளில் வலி, கை கால்களில் வீக்கம்:
இந்த எதிர்ப்பு உயிரிகளால் குடலுக்கு போகின்ற ரத்தக் குழாய் பாதிக்கப்பட்டால் அந்த குழாயில் ரத்த உறைவு உருவாகலாம். காலில் ரத்த உறைவு ஏற்படலாம். இதனால் ரத்த ஓட்டம் தடைபட்டு அந்த உறுப்புகள் பழுதடையவும் வாய்ப்பு இருக்கிறது. மூட்டு பகுதிகளில் உள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டால் மூட்டழற்சி வரலாம். மூட்டுகளில் வலி ஏற்படலாம். கை, கால்களில் வீக்கம் ஏற்படலாம்.
இதனால் நடக்க முடியாமல் போகும். வேலை செய்ய முடியாது. இந்த மாதிரி ஒவ்வொரு இடங்களிலும் உள்ள எல்லா இணைப்பு திசுக்களும் பழுதடைந்து பைபுரோசிஸ் உருவாகும். அதனால் தான் இந்த பாதிப்பு கொண்ட பெண்கள் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
ஏனென்றால் ஒவ்வொரு செல்களையும் இணைக்கின்ற இணைப்பு திசுக்களில் தான் இந்த எதிர்ப்பு உயிரிகள் உருவாகிறது. அதனால்தான் இந்த எதிர்ப்பு உயிரியானது, ரத்தக் குழாய்கள், சிறுநீரகம் உள்ளிட்ட எல்லா இடங்களிலும் உள்ள இணைப்பு திசுக்களை பாதிக்கும். இது பல உறுப்புகளிலும் பல பிரச்சனைகளை உருவாக்கும்.
இந்த லூபஸ் நோயின் முக்கியமான விஷயமே, சில காலகட்டங்களில் இந்த நோயின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படும். சில நேரங்களில் இந்த நோயின் பாதிப்பு தானாக குறைந்து விடும். நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பில் ஏற்படுகிற சில மாறுபாடுகளை பொறுத்து இந்த விஷயங்களில் நிவாரணமும், குணமடைவதும் ஏற்படும்.
சில நேரங்களில் இந்த நோய் பாதிப்பு தீவிரம் அடையும்போது கால் வீக்கம், கை வீக்கம் ஏற்படும். காய்ச்சல் பாதிப்பு இருக்கும். சில நேரங்களில் சிறுநீரக செயல்பாடு குறைவாகி சிறுநீரக செயலிழப்பு ஏற்படலாம். பல இணைப்பு திசுக்கள், தோல், ரத்தக் குழாய்கள் பாதிக்கப்பட்டு, அது செல்கின்ற உறுப்புகள் எல்லாம் பழுதாகி பல பிரச்சனைகளை உருவாக்கலாம். பல நேரங்களில் இது உயிருக்கு ஆபத்தான நிலையை கூட ஏற்படுத்தலாம்.
திரும்பத் திரும்ப ஏற்படும் கருச்சிதைவுக்கு காரணம்:
இந்த மாதிரியான விஷயங்கள் இளம்பெண்களை பாதிப்பதால் அவர்கள் முக்கியமான பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த நோய்த்தாக்கம் என்பது பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை ஆகும். இதேபோல் தான் இன்னொரு பிரச்சனை ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ். நமது மூட்டு இணைப்புகளில் சைனோவியல் எனப்படும் ஜவ்வு பகுதி உள்ளது. இந்த ஜவ்வு பகுதிதான், மூட்டுகள் இயல்பாக இயங்குவதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது.
அந்த பகுதிக்கு எதிரான எதிர்ப்பு உயிரி உருவாகி அந்த இணைப்புகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் கை கால்கள் எல்லாம் வீங்கிவிடும். மூட்டு ஜவ்வு இருக்கின்ற நிறைய சிறுசிறு இணைப்பு பகுதிகள் எல்லாம் பாதிப்படைந்து, அந்த பகுதிகளில் வீக்கம் உருவாகி, விறைப்புத்தன்மை ஏற்பட்டு வேலை செய்ய முடியாமல் போய் விடும். இதனால் கால்களை மடக்க முடியாது, நீட்ட முடியாது. வலி இருந்துகொண்டே இருக்கும். பல நேரங்களில் இந்த ஜவ்வு பகுதியானது சேதம் அடைந்து பழுதாகி கை, கால்களில் மாற்றங்களும் ஏற்படும். இது ஒரு முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
தற்காலத்தில் தான் இந்தநோய் எதிர்ப்பு சக்தி அமைப்பில் பல பாதிப்புகள் ஏற்படுகிறது. ஒரு பெண்ணின் கர்ப்பம் முதற்கொண்டு பலவிதமான பிரச்சனைகளுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு தான் அடிப்படையான காரணமாக இருக்கிறது. கருத்தரிக்காமல் இருப்பது மற்றும் கருத்தரித்து திரும்பத் திரும்ப கருச்சிதைவு ஏற்படுவதற்கு கூட நோய் எதிர்ப்பு சக்தி பழுதாவது தான் காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பெண்களுக்கு செயற்கை கருத்தரிப்பு செய்யும்போது, அதில் கருவானது கருப்பையில் ஒட்டி வளரும் தன்மை குறைவதற்கும் இது ஒரு காரணமாக இருக்கிறது.
இந்த வகையில் சிஸ்டமிக் லூபஸ் எரித்தமட்டோசஸ் மற்றும் ருமட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ் பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தரிப்பதில் பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் கர்ப்ப காலத்திலும் இவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படலாம். அது என்னென்ன பிரச்சனைகள்? இந்த பாதிப்பு கொண்ட பெண்கள் பாதுகாப்பாக குழந்தைகளை பெற்றெடுப்பது எப்படி என்பது பற்றி அடுத்த வாரம் பார்க்கலாம்.
- ரஜினி முதல் தடவை சபரிமலைக்கு சென்று வந்ததை அவரால் நீண்ட நாட்களுக்கு மறக்க முடியவில்லை.
- அன்று முழுவதும் ரஜினி ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் “அன்னை ஓர் ஆலயம்” படப்பிடிப்பில் பங்கேற்றார்.
நம்பியார் சுவாமிகள் தலைமையில் சபரிமலை அய்யப்பனை வழிபாடு செய்து விட்டு திரும்பிய ரஜினி புத்துணர்ச்சியுடன் காணப்பட்டார். தொடர்ந்து நம்பியார் சுவாமிகள் தலைமையில் ஆண்டு தோறும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வரவேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்.
அதன்படி 9 தடவை அவர் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு சபரிமலைக்கு சென்று அய்யப்பனை கண்டு வந்தார். 1984-ம் ஆண்டு அவருடன் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சனும் மாலை அணிந்து சபரிமலைக்கு சென்று வந்தார்.
ஆனாலும் ரஜினி முதல் தடவை சபரிமலைக்கு சென்று வந்ததை அவரால் நீண்ட நாட்களுக்கு மறக்க முடியவில்லை. அதற்கு காரணம் அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட முக்கியமான அதிரடி மாற்றம்தான்.
1978-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இடைவிடாத படப்பிடிப்பு காரணமாக தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட ரஜினி நினைத்தது உண்டு. அந்த சமயத்தில் அவரது படங்கள் தமிழக தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தன. ரசிகர்கள் திரண்டு அவருக்கு ஆதரவு தெரிவித்ததால் பிறகு தற்கொலை எண்ணத்தை மாற்றிக் கொண்டார்.
1978-ம் ஆண்டு அவர் வேளச்சேரியில் சொந்தமாக ஒரு வீடு கட்ட தொடங்கினார். தனது சகோதரர் மற்றும் நண்பர்களை எல்லாம் அந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் காண்பித்தார். ஆனால் அந்த வீட்டில் ரஜினியால் குடியேற முடியாமல் போய் விட்டது.
வாஸ்து குறைபாடு காரணமாக அந்த வீட்டில் குடியேறுவதை ரஜினி தவிர்த்தார். அப்போது சிலர் அவரிடம், "உங்களுக்கு சூனியம் வைத்து விட்டார்கள்" என்று தெரிவித்தனர். அதை ரஜினியும் உண்மை என்று அப்படியே நம்பினார். அவரது மனதில் கலக்கம் ஏற்பட்டது.
இதற்கிடையே வயது 30-ஐ நெருங்கிக் கொண்டிருந்ததால் திருமண ஆசையும் அவரது மனதுக்குள் உருவாகி இருந்தது. பெங்களூரில் கண்டக்டராக இருந்தபோது பழக்கமான பெண்ணை அவர் மிகவும் நேசித்தார். ஆனால் அவருடனான தொடர்பு துண்டித்துப் போனது.
அதை மறக்காமல் இருந்த ரஜினி தன்னுடன் நடித்த நடிகை ஒருவரை விரும்பினார். ஆனால் அந்த நடிகை பண ஆசைப் பிடித்தவர் என்பது தெரிய வந்ததும் அவரை விட்டுப் பிரிந்தார்.
அதன் பிறகு பிரபல நடிகை ஒருவரை திருமணம் செய்துக் கொள்ள ரஜினி விரும்பினார். ஆனால் அந்த நடிகையிடம் இதுபற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. தனது காதலை அந்த பிரபல நடிகையிடம் சொல்ல அவருக்கு தைரியம் வரவில்லை. ஆனால் அந்த நடிகையின் தாயாரிடம் இதுபற்றி சொல்லி இருந்தார்.
அந்த நடிகையை பெண் கேட்பதற்காக ஒருநாள் ரஜினி அந்த நடிகையின் புதிய வீட்டுக்கு சென்றிருந்தார். திருமணம் தொடர்பான பேச்சை ஆரம்பிக்கலாம் என்று ரஜினி நினைத்தப் போது மிகச்சரியாக மின்சாரம் போய் விட்டது. அதை ரஜினி அபசகுணமாக நினைத்தார்.
இறையருள் மீது எந்த அளவுக்கு ரஜினிக்கு நம்பிக்கை இருக்கிறதோ அதே அளவுக்கு இதுபோன்ற விஷயங்களிலும் அவருக்கு நம்பிக்கை உண்டு. முக்கிய முடிவு எடுக்கும் நேரத்தில் மின்சாரம் தடைபட்டதை அவர் தனக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையாக பார்த்தார். உடனே அந்த நிமிடமே அந்த நடிகையைத் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று முடிவு எடுத்து அங்கிருந்து வெளியே வந்து விட்டார்.
இதற்கிடையே போயஸ் கார்டனில் நிலம் வைத்திருந்த பாத்திமா அக்தர் அதை விற்பதற்கு முடிவு செய்தார். இதை அறிந்த ரஜினி அந்த காலி மனையை வாங்கி அழகான பங்களா கட்டினார். அனைவரையும் அழைத்து விமரிசையாக கிரகப்பிரவேசம் செய்தார். பங்களாவில் குருநாதர் பாலச்சந்தர் படத்தை பிரமாண்டமாக வைத்தார்.
இந்த நிலையில்தான் அவர் 1978-ம் ஆண்டு இறுதியில் சபரிமலைக்கு மாலை அணிந்து இருமுடி கட்டி சுமந்து அய்யப்பனை தரிசனம் செய்து விட்டு 1979-ம் ஆண்டு ஜனவரியில் திரும்பி வந்து இருந்தார். 1979-ம் ஆண்டு தனக்கு உற்சாகமான ஆண்டாக இருக்கும் என்று நம்பினார். ஆனால் அந்த ஆண்டு ரஜினிக்கு சோகமான, சோதனையான ஆண்டாக மாறி விட்டது.
ரஜினிக்கு தமிழக ரசிகர்களிடம் இருந்த வரவேற்பை கண்ட படத்தயாரிப்பாளர்கள் அவரை தங்கள் படத்தில் நடிக்க வைத்து விடவேண்டும் என்று படையெடுத்தனர். எவ்வளவு பணம் கேட்டாலும் தருகிறோம். கால்ஷீட் தாருங்கள் என்று கேட்டனர்.
அந்த சமயத்தில் ரஜினி 2 ஆண்டுகளுக்கு படங்களில் நடிக்க ஏற்கனவே தேதி கொடுத்து இருந்தார். புதிய தயாரிப்பாளர்களை புறக்கணிக்கவும் அவருக்கு தயக்கமாக இருந்தது. எனவே தன்னைத் தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் கற்பனைக்கும் எட்டாத வகையில் சம்பளத்தை அதிகரித்துக் கேட்டார்.
இதனால் அவரைத் தேடி வந்த தயாரிப்பாளர்களின் எண்ணிக்கை கொஞ்சம் குறைந்தது. என்றாலும் 1979-ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் ஒருநாள் கூட ஓய்வு எடுக்காமல் இரவு-பகலாக நடித்தார். இதனால் அவர் மிகவும் சோர்வு அடைந்துப் போனார்.
அந்த சோர்வை போக்கிக் கொள்ள அவரையும் அறியாமலேயே மீண்டும் அவர் மதுபானத்தை கையில் எடுத்தார். குருநாதர் பாலச்சந்தருக்கு செய்து கொடுத்திருந்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டுவிட்டு அவர் மதுபானங்களை இரவும், பகலும் குடித்துக் கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் அவரிடம் ஜர்தா பீடா போடும் பழக்கமும் சேர்ந்து கொண்டது. படப்பிடிப்பு சமயங்களிலும் அவர் மது அருந்தியதைப் பலரும் வெறுத்தனர். எப்போதும் ஒருவித போதையான மன நிலைக்கு தள்ளப்பட்டார். இதன் காரணமாக ரஜினியின் உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக ரஜினியின் போதைப் பழக்கத்தால் அவரது நரம்பு மண்டலங்கள் பலவீனம் ஆகி விட்டது.
இத்தகைய உடல்நலம் பாதிப்பு இருப்பவர்களுக்கு யாரைப் பார்த்தாலும் எரிச்சலாக இருக்கும் என்பதே இதன் அறிகுறியாகும். ரஜினிக்கும் அந்த தாக்கம் ஏற்பட்டது. படப்பிடிப்பு தலங்களில் அல்லது தனது வாழ்க்கை தொடர்பாக யாராவது பேசினால் அவருக்குள் கோபமும், எரிச்சலும் அடக்க முடியாதபடி பொத்துக் கொண்டு வந்தது.
அந்த கோபம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் என்ன செய்கிறோம் என்பது தெரியாமலேயே ரஜினி மற்றவர்களை அடிக்க ஆரம்பித்தார். சிறு வயதிலேயே தன்னை யாராவது முறைத்துப் பார்த்தால் ரஜினிக்கு பிடிக்காது. அந்த சிறு வயதில் விழுந்து இருந்த விதை அவர் மனதுக்குள் பதுங்கி இருந்ததோ, என்னவோ அவர் நடிகரான போது வளர்ந்து விருட்சமாகி இருந்தது.
தன்னிடம் யாராவது ஏடாகூடமாக பேசுவதாக நினைத்தால் அடுத்த நிமிடமே கோபத்தில் அடிக்க ஆரம்பித்து விடுவார். 1979-ம் ஆண்டு மார்ச் மாதம் அவர் பஞ்சுஅருணாசலம், எஸ்.பி.முத்துராமன் கூட்டணியில் ஆறில் இருந்து அறுபது வரை என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்து இருந்தார். ஏ.வி.எம். ஸ்டூடியோவில் அந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 1-ந்தேதி நடந்த போது மயங்கி விழுந்தார்.
ரஜினி மன அழுத்தம் காரணமாக படப்பிடிப்பின்போது மயங்கி விழுந்தது அதுவே முதல் முறையாகும். ரஜினி சுருண்டு விழுந்ததை கண்டதும் படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் பதறிப் போனார்கள். உடனடியாக டாக்டர்களை வரவழைத்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்து விட்டு ஓய்வு எடுத்தால் சரியாகி விடும் என்றனர்.
அதன்படி அன்று முழுவதும் ரஜினி ஓய்வு எடுத்து விட்டு மறுநாள் "அன்னை ஓர் ஆலயம்" படப்பிடிப்பில் பங்கேற்றார். என்றாலும் ரஜினிக்குள் ஏற்பட்டு இருந்த உடல்நல பாதிப்பும், மனநல பாதிப்பும் முழுமையாக நீங்கவில்லை. ரஜினி கதை இதோடு முடிந்து விட்டது என்று திரை உலகில் பலரும் பேச ஆரம்பித்தனர்.
அந்த சமயத்தில் ரஜினியின் கால்ஷீட்டுக்காக 18 படத்தயாரிப்பாளர்கள் தினமும் அவரை விரட்டியபடி இருந்தனர். ஏற்கனவே 13 படங்களில் ரஜினி நடித்துக் கொண்டு இருந்தார். மேலும் மேலும் படங்களை ஒப்பந்தம் செய்ததால் அவருக்குள் மேலும் மன அழுத்தம் ஏற்பட்டு இருந்தது.
குறிப்பாக பத்திரிகையாளர் ஒருவர் ரஜினியை தொடர்ந்து தாக்கி எழுதியது அவரை கடுமையாக பாதித்து இருந்தது. ஒருநாள் ரஜினி காரில் சென்று கொண்டிருந்த போது முன்னாள் அந்த பத்திரிகையாளர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரை நிறுத்தி விளக்கம் கேட்க நினைத்த ரஜினி அவர் அருகில் தனது காரை கொண்டு சென்றார்.
இதனால் பயந்து போன அந்த பத்திரிகையாளர் போலீஸ் நிலையத்துக்கு சென்று ரஜினி தன்னை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்வதாக புகார் அளித்தார். ரஜினி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மார்ச் 7-ந்தேதி ரஜினி அந்த வழக்கில் கைதாகி விடுவிக்கப்பட்டார்.
இது ரஜினியின் மனநிலையை மேலும் கடுமையாக பாதித்தது. கண்ணில் பட்டவர்களை எல்லாம் அடிக்க ஆரம்பித்தார். மதுரையில் "திரிசூலம்" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவாஜிகணேசனுக்கு நடந்த பாராட்டு விழாவுக்கு சென்ற ரஜினி மிகப்பெரிய கலாட்டா செய்து விட்டார். நடிகர்-நடிகைகள் அலறினார்கள்.
- வாழ்க்கை என்பது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றது.
- ஒருவர் உண்ணும் உணவே அவர்களுக்கு செய்வினை உணர்வு பயத்தை உண்டாக்கும்.
முக்காலத்தை உணர்த்தும் ஜோதிடக் கலையின் மூலம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களை நீக்கிக் கொள்ள பலர் விரும்புகிறார்கள். தங்களின் பிரச்சினைக்காக ஜோதிடரை சந்திக்கும் சிலர் செய்வினையை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறார்கள். குறிப்பாக 6, 8, 12-ம் இடத்துடன் தொடர்பு பெறும் தசைகள், புத்திகள் அல்லது பாதகாதிபதியின் தசைகள் புத்திகள் நடக்கும் காலங்களில் அதீத சிரமத்தால் ஒருவித மன பயம் இருக்கும்.
அந்த மனபயம் ஜாதகருக்கு செய்வினை போன்ற ஒரு பிரம்மையை உண்டாக்கும். தனக்கு யாரோ சூனியம் வைத்து விட்டார்கள் என்று எண்ணம் மேலோங்கும். அதாவது வழக்கத்திற்கு மாறாக தொடர்ந்து ஏதாவது அசவுகரியங்கள் நடந்தால் ஜாதகர் தனக்கு யாரோ செய்வினை பில்லி சூனியம், ஏவல் செய்து விட்டார்கள் என்று நம்புகிறார்கள்.
வாழ்க்கை என்பது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றது. சில நேரங்களில் சுப பலன்கள் இரட்டிப்பாக நடக்கும். சில காலங்களில் அசுப பலன்கள் சகித்துக் கொள்ள முடியாத வகையில் இருக்கும். ஒருவருக்கு நல்லது நடந்தாலும், கெட்ட சம்பவங்கள் சூழ்ந்தாலும் தசாபுத்தியே காரணம். தசாபுத்திக்கு மீறிய சம்பவங்கள் நடக்கக்கூடிய வாய்ப்புகள் குறைவு.
அந்த வகையில் செய்வினை என்பது ஒருவர் தன் வாழ்வில் முன்னே செய்த வினையின் பிற் தாக்கமாகவே இருக்கும். செய்வினை = செய்த+வினை என்கின்ற செயல். ஆக, ஒருவனுக்கு செய்வினை தாக்குகிறது அல்லது செய்வினை குறித்த பய உணர்வு வந்தால், நிச்சயம் அவரது செயல்கள் தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்களை பாதித்து இருக்கும். மனதில் உள்ள குற்ற உணர்வுதான் கேள்வியாக வருகிறது என்பதே உண்மை. தன்னால் பாதிகப்பட்ட நபர் நமக்கு செய்வினை செய்து இருப்பார் என்ற பய உணர்வு வருகிறது. இதையே வேறு விதமாக சொன்னால் தாய், தந்தை, சகோதர, சகோதரி, கணவன், மனைவி, குழந்தை என்று யாருடைய அன்பாவது மனதிற்கு இனிமையாக இருந்து இருக்கும். அந்த இனிமையான உறவுகளிடம் கருத்து வேறுபாடு அல்லது பாதிப்பு ஏற்படும் போது பாதிக்கப்பட்ட உறவின் மேல் பழி சொல்லி அந்த உறவுகளால் செய்வினை வந்தது என்கிறார்கள்.
ஜாதகம் பார்க்க வரும் நேரத்தில் ஜாதகருக்கு செய்வினை இருக்கிறதா என்பதை பிரசன்னத்தில் தெளிவாக கூற முடியும். ஒரு ஜாதகத்தில் 6-ம் மிடமான ருண ரோக சத்ரு ஸ்தானம் செய்வினையை உணர்த்தும் ஸ்தானமாகும். ஒருவருக்கு சத்ரு தொல்லை உருவாகும் போது தான் செய்வினை சார்ந்த கேள்வியும் எழுகிறது. ஒருவர் ஜாதகத்தில் 6-ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசா புத்தி காலங்களில் கடன், நோய், எதிரி, ஏவல் பில்லி சூன்யம் சார்ந்த பய உணர்வு ஜாதகரை அச்சுறுத்தும். 6-ம் இடத்துடன் பாதகாதிபதி சம்பந்தம் பெறும் போது சத்ருவின் மூலம் பாதிப்பு நேருகிறது. 6-ம் இடத்திற்கு, பாதகாதி, ராகு/கேதுவுடன் சம்பந்தம் பெறும் பாதிப்பு கடுமையாகவும், ராகு/கேது, மாந்தியுடன் சம்பந்தம் பெறும் போது இனம் காண முடியாத மரண பயத்தையும் கூட ஜாதகருக்கு ஏற்படுத்துகிறது. ஒருவருக்கு ஏற்படும் மன உடல் நல பாதிப்புகள் மூன்று விதமான நாடிகள் மூலமே ஏற்படுகிறது.
வாதம்
ஒருவர் ஜாதகத்தில் 6-ம் இடத்துடன் சனி, புதன், ராகு சம்பந்தம் பெறுவது வாதம் சார்ந்த பாதிப்பாகும். வாத நாடி மூச்சு வெளிவிடுதல் மற்றும் மூச்சை உள்ளே இழுத்தல், தன்மையை உணர்த்தும். வாத நோய்க்கான காரக கிரகங்கள் சனி, புதன் ராகுவாகும். அதாவது செயலற்ற அல்லது குறைவான இயக்கம். உதாரணமாக பக்கவாதம், ஜீரணக்கோளாறு, வாயுப்பிடிப்பு, மூச்சுப்பிடிப்பு போன்றவற்றை கூறலாம். வாத நாடியானது பாதிக்கப்பட்டால் உடல் உறுப்புகள் செயல்இழத்தல், உடல் வலி, மூட்டுவலி, உணர்வு இழத்தல், தசைச்சுருங்கல், சரும வறட்சி, நாவில் ருசி குறைதல், மலக்கட்டு, உடலில் நீர் குறைந்து போதல், உடல் சோர்வு, தூக்கமின்மை, மயக்கம் போன்றவை உண்டாகும். திடீரென இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவது ஜாதகருக்கு செய்வினை போன்ற பயத்தை உருவாக்கும்.
பித்தம்
ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் இடத்துடன் சூரியன், செவ்வாய், கேது சம்பந்தம் இருந்தால் பித்த நோய் தாக்கத்தை உருவாக்கும். அதிக உடல் சூடு, நெஞ்செரிச்சல், தொண்டை எரிச்சல், நீர்க்கடுப்பு, மூலம், அலர்ஜி, அரிப்பு, அல்சர், குடல் புண், கட்டி, கொப்புளம், ரத்த அழுத்தம், தலைவலி , தலைச்சுற்றல், வாந்தி, படபடப்பு முதலானவையும் பித்தம் சம்பந்தபட்டது. பித்த நாடி பாதிப்படைந்தால் ஈரல் மற்றும் கல்லீரல் நோய் ஏற்படுதல், பார்வைத்திறன் குறைதல், கண்ணில் படலம் ஏற்படுதல் உடலின் தோல் சுருங்கி கறுப்பாகமாறுவது, முடியின் கறுப்புநிறம் மாறி வெள்ளை முடி தோன்றுதல், மூச்சுவாங்குதல், இதயம் சம்பந்தமானநோய்கள், மனிதனின் உடல் அமைப்பில் வயோதிக தோற்றம் காணப்படும். இது போன்ற உடல் ரீதியான மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு செய்வினை போன்ற மன பயம் தோன்றும்.

'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
கபம்
ஒருவர் ஜாதகத்தில் 6-ம் இடத்திற்கு சந்திரன், சுக்ரன். நீர் தத்துவ கிரகங்கள் சம்பந்தம் பெறும் போது சளி, மூச்சிரைப்பு, ஆஸ்துமா, அலர்ஜி, சீதளம், பேதி, ஆறாத புண், சர்க்கரை நோய், கணையம், சிறுநீரகச் செயல்பாடு, தைராய்டு, நுரையீரல் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை அனைத்தும் கபம் சார்ந்தது. கப நாடியானது இயல்பாக இருக்குமேயானால் உடலுக்கு குளிர்ச்சி, உடல் வலிமை, தோல் பளபளப்பாக இருத்தல், கண்கள் குளிர்ச்சியாகவும் எவ்வித கண்களுக்கு பாதிப்பு இல்லாமல் தெளிவான பார்வை இருத்தல், முடி சிறப்பாக அடர்த்தியாக வளர்தல், பேச்சில்குரல் தெளிவோடு இருத்தல், உடல்குளிர்ச்சி அடைந்து மென்மையாக இயல்பாக இருத்தல், நாக்கில் சுவைத்தன்மை சரியாக இருந்தால் இயல்பாக இளமையோடு காட்சி தருவார்கள்.
கப நாடி பாதிக்கப்பட்டால் இருமல் மற்றும் சளி உண்டாதல், தொண்டை வறட்சி ஆஸ்துமா, சைனஸ், தலை வலி, தலைச்சுற்றல், மயக்கம், ரத்த அழுத்தம் அதிகமாதல், சருமம் வறண்டு காணப்படுதல், அதிகத் தூக்கம், நடந்தால் மேல் மூச்சு வாங்குதல், நெஞ்சு படபடப்பு, வேலை பார்ப்பதில் உற்சாகம் குறைந்து காணப்படுதல், பசி இல்லாது இருத்தல், உமிழ்நீர் சுரப்பு குறைந்து காணுதல், சிறுநீர் அதிகமாக செல்லுதல் அல்லது குறைந்து செல்லுதல் போன்றவைகள் காணப்படும். நல்ல தைரியமான மனநிலை உள்ளவர்கள் உடல்நல பாதிப்பால் ஏற்படக்கூடிய அசவுகரியத்தை ஏற்றுக் கொள்வார்கள். அதற்கான வைத்தியத்தில் ஈடுபடுவார்கள்.
பலவீனமான மனம் உள்ளவர்கள் ஏவல், பில்லி, சூனியம். செய்வினை போன்றவற்றை நீக்கும் இடம் தேடி அலைவார்கள்.
செய்வினை உண்மையா?
செய்வினை என்பது முதலில் உண்மையா? என்று ஆய்வு செய்யும் போது நம் கண்ணுக்கு புலப்படாத தீய சக்தி சில சமயங்களில் ஏவப்படுகிறது என்ற உண்மையும் பல சமயங்களில் ஜாதகரின் தவறுக்கு பிரபஞ்சம் தரும் தண்டனையும் ஏவப்பட்ட தீய சக்தி போல் ஜாதகரின் உள் உணர்வுக்கு தோன்றும் என்பதே நிதர்சனமான உண்மை. மேலும் மத நல்லிணக்கத்தை உணர்த்தும் அனைத்து புனித நூல்களும் தீய சக்தியின் ஏவலை மறுக்கவில்லை. செய்வினை சரி செய்யப்பட்டு பலர் மறு வாழ்வு அடைந்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.
செய்வினை வெளிப்படும் காலம்
கண்ணுக்கு தெரியாமல் தொடங்கும் இந்த செய்வினை பாதிப்பு ஒற்றை தலைவலி முதல் மாரடைப்பு வரையான பல்வேறு பாதிப்புகளைத் தருகிறது. ஜனன ஜாதகத்தில் லக்கினம், 3ம் இடம், சந்திரன், சூரியன், நல்ல நிலையில் இருந்தால் எளிதில் எந்த விசயத்திற்கும் அசருவதில்லை.
ஒருவரின் ஆழ்ந்த சிந்தனை, ஆழ்மனதை குறிக்கும் கிரகம் காலபுருஷ 5-ம் அதிபதியான சூரியன் ராகு, கேது, சனியுடன் இணைவு, சூரியன்நீசம் பெற்றவர்கள், 6,8,12-ல் மறைந்தவர்கள், அஷ்டம, பாதக அதிபதியோடு சம்பந்தம் பெற்றவர்கள் மனவிரக்தியை அதிகம் சந்திக்கிறார்கள். கோட்சார சந்திரன் ராசிக்கு எட்டில் மறையும் போது அல்லது பிறப்பு ராகு கேது, சனியை கோட்சார சந்திரன் தொடும் போதோ சில அமானுஷ்ய மாற்றங்கள் உடல் மற்றும் மனதில் உண்டாகும். ஜனன கால ஜாதகத்தில் மனோகாரகன் எனப்படும் சந்திரன் வலிமை குறைந்தால் இது போன்ற பாதிப்பு மிகுதியாகும். ஜனன சந்திரன் கோச்சார ராகு. கேதுவுடன் சம்பந்தம் பெறும் போது ஜாதகருக்கு தனக்கு யாரோ செய்வினை வைத்தது போன்ற உணர்வு வரும்.
ஒருவரின் ஆயுள் ஆரோக்கியம், வறுமை, கடன், பலவீனம், அடிமைத் தன்மை, தொழில், பொதுஜனம் ஆகியவற்றுக்கு காரக கிரகம் பொதுவாக சனி பகவான். சனிபக வானால் கிடைக்கக்கூடிய நன்மையோ தீமையோ நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கும். ஒருவரின் பூர்வ ஜென்ம புண்ணியத்திற்கு ஏற்ப அவரவரின் ஜாதகத்தில் உள்ள சனி பகவான் நின்ற நிலைக்கு ஏற்ப கோட்ச்சாரத்தில் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி, அர்த்தாஷ்டமச் சனி காலங்களில் பலன் கிடைக்கும். அல்லது சனி தசை புத்தி அந்தர காலங்களில் செய்வினை ஏவல் பில்லி சூனியம் போன்ற பிரச்சினைகள் எழும்.
அதேபோல் செவ்வாய் வேகமான கிரகம். விவேகம் அற்ற கிரகம். பிடிவாதம், அகம்பாவம், துணிச்சல், கர்வம், மூர்க்கம், சுயநலம், கோபப்படுதல், சண்டையிடுதல், அதீத காமம், அவசரம், உடலில் உள்ள ரத்தம், உடன் பிறந்த சகோதரம் ஆகியவற்றிற்கு காரக கிரகம். ஒரு மனிதனின் அனைத்து ஆற்றல்களும் செவ்வாய் கிரகத்தில் தான் பதிவாகி இருக்கும்.
சனி மற்றும் செவ்வாய்க்கு சுய ஜாதக ரீதியான சம்பந்தம். கோச்சார ரீதியான சம்பந்தம் ஏற்படும் காலங்களில் உஷ்ண சுரம், ரத்தக் கொதிப்பு, ரத்தப் போக்கு, வலி, வீக்கம், சொறி சிரங்குகள், குஷ்டம், அடிபடுதல், விரோதிகளால் ஆபத்து அங்ககீனம் ஏற்படுதல், பில்லி, சூன்யம், தீ விபத்து, அறுவை சிகிச்சை போன்றவைகள் ஏற்படும்.
ஒருவர் உண்ணும் உணவே அவர்களுக்கு செய்வினை உணர்வு பயத்தை உண்டாக்கும். சாத்வீக உணவை உண்டால் எந்தவித செய்வினை தாக்கமும் ஜாதகரை தாக்காது. மேலும் லக்னம் லக்னாதிபதி வலிமையாக இருந்தால் யாரேனும் செய்வினை செய்தால் கூட ஜாதகரை அண்டாது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை செய்வினை மாந்திரீக பாதிப்புகள் ஏற்படுத்துபவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறார்கள்.
மலேசியா, சிங்கப்பூரில் இருந்து வரும் தமிழர்கள் கடுமையான பாதிப்போடு வருகிறார்ககள். அங்கே சாதாரண விஷயங்களுக்கு கூட செய்வினை என்ற ஆயுதத்தை பிரயோகம் செய்கிறார்கள். எதிரியை தைரியமாக எதிர் கொள்ளக் கூடிய சக்தி இல்லாத 6ம் பாவகம் வலிமை குறைந்தவரே இது போன்ற தவறான செயல்களை செய்கிறார்கள்.
தனி மனிதனுக்கு யாரையும் தண்டிக்கும் அதிகாரத்தை பிரபஞ்சம் கொடுக்கவில்லை. நம் சுவாசக் காற்றைக் கூட கால பகவான் தன் காலப் பதிவேட்டில் பதிந்து வருகிறார். காலத்திற்கும் கால பகவானுக்கும் ஞாபக மறதியே கிடையாது. செய் (த )வினை மறுபடியும் எய்தவரை தேடி வரும் என்ற புரிதல் வேண்டும். இயற்கைக்கு மாறாக என்ன செய்தாலும் தனக்கு தானே சூன்யம் வைத்துக் கொள்வதற்கு சமம். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் மனக் குமுறலை பிரபஞ்சத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். தக்க நேரத்தில் நிச்சயம் நீதி கிடைக்கும். தவறான செய்வினை, ஏவல் போன்ற ஆயுதத்தை கையில் எடுக்கக் கூடாது. ஒரு ஆன்மாவை துன்புறுத்துவது மிகவும் கொடூரமானது. செய்வினை தோஷம் ருண ரோக சத்ரு ஸ்தானமான 6ம் பாவகம் தொடர்பான தசா, புத்தி, அந்தர காலங்களில் மட்டுமே அதன் தாக்கம் இருக்கும் மற்ற நேரங்களில் செயல்படுத்த முடியாது.
பரிகாரம்
இன்றைய அவசரகதியான உலகில் செய்வினை என்ற ஒரு பாதிப்பு இருப்பதை அறியாதவர்கள் இன்றும் இருக்கிறார்கள். சிறிய பாதிப்புகளுக்கு கூட கற்பனை பயத்தை தங்களுக்கு தானே உருவாக்கிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் என்ன வகையான பாதிப்பு என்பதை தெளிவாக தெரிந்து கொண்டு அதற்குரிய எளிய பரிகார வழிபாட்டு முறைகளை செய்யலாம். அரசு, வேம்பு சமித்து சர்வரோக நிவாரணியாகும். அரச மரமும் வேப்ப மரமும் ஒன்றாக பிணைந்த மரத்திற்கு அடியில் இரண்டு மணி நேரம் அமர்ந்தாலே சிறிய பாதிப்புகள் குறைந்துவிடும். உண்மையில் பெரிய பாதிப்புகள் இருந்தால் செய்வினை ஏவல் பில்லி சூனியம் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் ஸ்ரீ பிரத்தியங்கரா தேவியை வழிபடவும்.
செல்: 98652 20406
- நேரம்-காலம் பார்க்காமல் ரஜினி ஓடி...ஓடி... நடித்தார்.
- திரை உலகில் உள்ள பெரும்பாலான அய்யப்ப பக்தர்களுக்கு குருசாமியாக இருந்து வழிகாட்டியவர் நம்பியார்தான்.
1978-ம் ஆண்டு சிவாஜியுடன் நடிப்பதற்காக முதல் முதலாக "ஜஸ்டிஸ் கோபிநாத்" என்ற படத்தில் ரஜினி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த படத்தில் கே.ஆர்.விஜயா, சுமித்ரா, மேஜர் சுந்தரராஜன், தேங்காய் சீனிவாசன் ஆகியோர் நடித்தனர்.
1978-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த படம் வெளியானது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதே டிசம்பர் மாதம் ரஜினி நடித்த ப்ரியா படம் வெளியானது. பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவலை அடிப்படையாக வைத்து பஞ்சு அருணாசலம் கதை, வசனம் எழுதி இந்த படம் தயாராகி இருந்தது.
எஸ்.பி.முத்துராமன் இந்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஸ்ரீதேவியும் முக்கிய வேடத்தில் நடித்தார். ஆனால் அவர் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவில்லை. ஒரு நடிகை வேடத்தில் அந்த படத்தில் அவர் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தார்.
இந்த கதை லண்டனில் நடப்பது போல எழுத்தாளர் சுஜாதா எழுதி இருந்தார். ஆனால் ப்ரியா படத்தின் படப்பிடிப்புகள் சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் நடத்தப்பட்டன. இந்த படத்தில் ரஜினி நடிப்பு பிரமாதமாக பேசப்பட்டது. இந்த படம் 25 வாரங்கள் ஓடி வெற்றிப் படமாக அமைந்தது.
இந்த நிலையில்தான் ரஜினியிடம் அடுத்தடுத்த மாற்றங்கள் உருவாகத் தொடங்கின. முள்ளும் மலரும் படத்தில் தொடங்கிய அவரது இடைவிடாத படப்பிடிப்பு பணிகள் அதன் பிறகு அவரை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டன. நேரம்-காலம் பார்க்காமல் ரஜினி ஓடி...ஓடி... நடித்தார்.
காலையில் ஒரு படப்பிடிப்பு, மதியம் ஒரு படப்பிடிப்பு, மாலையில் மற்றொரு படப்பிடிப்பு, இரவில் வேறு ஒரு படத்தின் படப்பிடிப்பு என்று அவர் ஓடிக் கொண்டே இருந்தார். சிங்கப்பூருக்கு சென்று நினைத்தாலே இனிக்கும், ப்ரியா படக்காட்சிகளில் நடித்து விட்டு உடனே விமானத்தில் சென்னைக்கு திரும்பி வண்டலூரில் தாய் மீது சத்தியம் படப்பிடிப்பிலும், பெங்களூரில் தப்புத்தாளங்கள் படிப்பிடிப்பிலும் கலந்து கொண்டு படங்களில் நடித்துக் கொடுத்தார்.
ஒரு கட்டத்தில் சென்னை, பெங்களூர், ஐதராபாத், கொச்சி, மும்பை என்று படப்பிடிப்புக்காக பறந்து கொண்டே இருந்தார். தூங்குவதற்கு கூட அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. இது அவரது உடல்நலத்தை கடுமையாக பாதிக்கத் தொடங்கியது. மது, போதை வஸ்துகள் என்று ரஜினி வித்தியாசமான நடிகராக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் அவர் மீதே அவருக்கு வெறுப்பும், கோபமும் வந்தது.
அந்த சமயத்தில் ரஜினியை சபரிமலை அய்யப்பன் ஆக்கிரமித்தான். அதற்கு காரணம் ரஜினி இடைவிடாமல் ஓடி, ஓடி உழைத்து அலுத்து போனதுதான். இறைவனை தேடிச் சென்று சில நாட்கள் நிம்மதியாக இருந்துவிட்டு வரவேண்டும் என்று அவரது மனம் ஏங்கியது.
அப்போது அவருக்கு நடிகர் நம்பியார் தலைமையில் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் கடுமையான விரதம் இருந்து டிசம்பர், ஜனவரி மாதங்களில் காட்டு வழி பயணத்ைத மேற்கொண்டு சபரிமலை அய்யப்பனை தரிசித்து வருவது தெரிய வந்தது. நம்பியார் குழுவில் இடம் பெறுபவர்கள் கண்டிப்பாக 48 நாட்கள் கடுமையான விரதத்தை இருக்க வேண்டும் என்ற தகவலும் ரஜினிக்கு தெரிய வந்தது.
நம்பியார் தலைமையில் மாலை போடும் ஒவ்வொரு பக்தனும், மது, மாமிசங்களை விலக்கி தினமும் அய்யப்பனை பூஜை செய்து வழிபட வேண்டும் என்ற விதிமுறையை வகுத்திருப்பதும் ரஜினிகாந்திடம் கூறப்பட்டது. இதைக் கேட்டதும், ரஜினிக்கு சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று வர வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.
முதல் தடவை மலைக்கு சென்றபோது பக்தியால் அவருக்கு அந்த ஆசை உருவாகி இருக்கவில்லை. எதற்காக அவர் சபரிமலை செல்ல மாலை அணிந்தார் என்ற விவரத்தை 1993-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை தியாகராய நகரில் நடந்த அய்யப்ப மேளா விழாவில் பேசும்போது அவரே தெரிவித்தார்.
'நான் முதன் முதலாக 1978-ம் ஆண்டு நம்பியார் சுவாமிகள் தலைமையில் சபரிமலைக்குச் சென்றேன். இதற்காக நம்பியார் சுவாமிகளை சந்தித்து பேசி ஒப்புதல் பெற்றேன். அவர் என்னை சபரிமலைக்கு அழைத்து செல்ல சம்மதித்தார்.
நான் ஆன்மிகவாதிதான், கடவுள் உண்டு. அவருக்கு உருவமோ, பெயரோ கிடையாது என்று நம்புபவன். சிறு வயதில் இருந்தே நான் பெங்களூரில் அப்படி வளர்த்துவிட்டேன். சென்னைக்கு வந்தபிறகும் எனது ஆன்மிக ஆர்வத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
ஆனால் முதல் முறையாக நான் சபரிமலைக்கு மாலை அணிந்து சென்றபோது பக்தி காரணமாக செல்லவில்லை. சபரிமலைக்கு செல்லக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் விரதம் இருக்க வேண்டும். மது, மாமிசம் ஆகியவற்றை விலக்கி ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு என்னை மிகவும் கவர்ந்தது.
அப்படி இருந்தால் எனக்கு மனதில் நிம்மதி ஏற்படும் என்று நினைத்தேன். அதன்படி மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினேன். 45 மைல் பெரிய பாதையில் நடந்து சென்று சாமியே சரணம்' என்று முழங்கியதைக் கேட்டபோது என் உடம்பு சிலிர்த்துப் போனது' என்றார் ரஜினிகாந்த்.
திரை உலகில் உள்ள பெரும்பாலான அய்யப்ப பக்தர்களுக்கு குருசாமியாக இருந்து வழிகாட்டியவர் நம்பியார்தான். ரஜினிக்கும் அவர்தான் வழி காட்டினார். அவரது வழிகாட்டுதலின் பேரில் 1978-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந் தேதி காலை 3 பஸ்கள் மற்றும், ஒரு வேனில் 130 பக்தர்கள் கொண்ட குழு சபரிமலை நோக்கிப் பயணமானது. இதில் நடிகர்கள் முத்துராமன், ஸ்ரீகாந்த், கன்னட நடிகர் ராஜ்குமார், விஷ்ணுவர்த்தன், டைரக்டர் கே.சங்கர் மற்றும் பக்தர்களுடன் ரஜினிகாந்தும் முதல் முறையாகப் பயணமானார்.
ரஜினி சபரிமலைக்குச் செல்ல மாலை போட்டுக் கொண்ட பின் அவரைப் பற்றி நம்பியாருக்கு ஒரு தகவல் போனது. ரஜினி விரத கட்டுப்பாடுகளை மீறி புகைப்பிடிக்கிறார் என்று நம்பியாரிடம் கூறினார்கள். ரஜினிக்கு விரத முறைகள் பற்றி முதலிலேயே தெளிவாகச் சொல்லியும் சிகரெட் புகைக்கிறாரே என்று குருசாமி நம்பியார் வேதனைப்பட்டார். உடனே ரஜினிக்குப் போன் செய்தார். அப்போது ரஜினி வீட்டில் இல்லை. அவரது செயலாளர் பேசினார்.
அவரிடம் 'ரஜினி மாலை போட்ட பின்பும் சிகரெட் புகைக்கிறாராம். நீங்க பயணக் கட்டணமாக 500 ரூபாய் கொடுத்திருக்கீங்க. அந்தப் பணத்தோடு மேலே நான் 500 ரூபாய் சேர்த்து 1000 ரூபாயா தந்துடறேன் தயவு செய்து ரஜினி எங்களோடு வர வேண்டாமுன்னு சொல்லிடுங்க. உடனே வந்து 1000 ரூபாயை வாங்கிப் போங்கள்" என்றார்.
இதை அறிந்த ரஜினி கடும் அதிர்ச்சி அடைந்தார். மறுநாள் படப்பிடிப்பு ஒன்றில் இருந்த நம்பியாரிடம் ரஜினி வந்தார். அவரைப் பார்த்ததும், "உங்க செயலாளரிடம் சொன்னதைக் கேள்விப்பட்டீங்களா? அது உண்மைதான். உங்களைச் சேர்த்தற்கு அபராதம் 500 ரூபாய் அதையும் சேர்த்து 1000 ரூபாய் தர்றேன்" என்று சொல்லியபடியே தனது உதவியாளரை அழைத்துப் பணத்தைக் கொண்டு வரும்படி சொன்னார். ரஜினி சங்கடத்துடன், என்னை மன்னிச்சிருங்க, இனி சிகரெட் குடிக்கமாட்டேன்" என்று உறுதி கூறியதும் நம்பியார் அதை ஏற்றுக் கொண்டு பயணத்தில் அவரையும் சேர்த்துக் கொண்டார்.
குருசாமி நம்பியார் தலைமையில் பக்தர்கள் குழு எருமேலியை அடைந்து அங்கிருந்து பெரிய பாதையில் நடைபோட ஆரம்பித்தார்கள். அவர்கள் பல குழுக்களாகச் சென்றார்கள், முதலில் சென்ற குழு ரஜினியுடையதுதான் அவரது இயல்பான வேகம் அங்கும் கை கொடுத்தது.
இந்த நடைப்பயணத்தில் ஸ்ரீகாந்த், பாவாத்மாக்கள் கிளப் ஒன்று ஆரம்பித்தார். ரஜினியோ, "என்ன இது சபரிமலைக்கு வந்து இப்படியொரு கிளப் ஆரம்பிக்கிறீங்க" என்று கேட்டார். அதற்கு ஸ்ரீகாந்த் "நாம் பாவங்கள் செய்துதான் மலைக்கு வருகிறோம். மலைக்குப் போய் வந்த பின்னும் நாம் பாவங்கள்தான் பண்ணுவோம்' என்று கூறினார். அதைக் கேட்டு அருகில் இருந்த பக்தர் ஒருவர், "ஏன் நிரந்தரமாக பாவம் செய்யாமல் இருக்க முடியாதா?" என்று கேட்டார். ரஜினியோ 'முடியாது' என்று சொல்லி கோட்டைத் தாண்டி பாவ ஆத்மா கிளப்பில் மெம்பரானார். அப்போது எழுந்த சிரிப்பொலி மலையெங்கும் எதிரொலித்தது.
இப்படி கேலியும், கிண்டலுமாகத் தொடர்ந்த பயணத்திற்கு ரஜினி சொன்ன விளக்கம், "மாலை போட்டுக் கொண்டு எதையும் ரசிக்கக் கூடாது என்றல்ல மனது சுத்தமாக இருந்தால் போதும் என்பதுதான்.
குழுவினர் பம்பை போய்ச் சேர்ந்ததும், குருசாமி நம்பியார், 'கன்னி சாமிகள் அனைவரும் 108 அடுப்புகளில் சாம்பல் எடுத்து வரவேண்டும்' என்றார். ரஜினிக்கு அது முதல் ஆண்டு பயணம் என்பதால் அவரும் ஒரு கன்னி சாமியாகக் கருதப்பட்டார். 108 அடுப்புகளில் சாம்பல் எடுத்துவர வேண்டும் என்பது ஓர் ஐதீகம்.
ஆனால் ரஜினி அதை சீரியசாக எண்ணாமல், தனக்கே உரிய வேகத்தில் 10 அடுப்புகளில் மடமடவென்று சாம்பல் எடுத்து வந்துவிட்டு, 'நான் எல்லா அடுப்புகளிலும் சாம்பல் எடுத்து வந்துவிட்டேன்" என்றார்.
ஸ்ரீகாந்த் அதை ஒப்புக் கொள்ளவில்லை 108 அடுப்புகளில் சாம்பல் எடுத்தாக வேண்டும் என்று கூறி அவருக்கு உதவி செய்தார்.
அய்யப்ப தரிசனம், ஜோதி தரிசனம் முடிந்து அனைவரும் சென்னை திரும்பிய பின், ரஜினி நம்பியாருக்கு போன் செய்தார் "என்னைப் பார்த்தவர்கள் எல்லாம் என்னிடம் ரொம்ப மாற்றம் வந்திருக்குன்னு சொல்றாங்க" என்றார். நம்பியார் சுவாமிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ரஜினி எல்லாரையும் அடிக்க ஆரம்பித்தார். அவர் ஏன் அப்படி மாறினார் என்பதை நாளைப் பார்க்கலாம்.
- வீட்டைவிட்டுக் கிளம்பி வாசலுக்கு வந்தவுடனேயே நாம் எதற்காக வெளியே வந்துள்ளோம் என்பதுகூடச் சிலருக்கு மறந்து போகிறது.
- மறதி என்பது பலருக்கு நோய்போலப் பேசப்படுகிறது.
'மறதி' மனிதர்க்கு வரமா? சாபமா? என்பதை அறிந்துகொள்வதற்கு ஆவலாய்க் காத்திருக்கும் வாசகப் பெருமக்களே! வணக்கம்!.
அன்றாடம் நொடிகள்தோறும் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு நிகழ்வும், அல்லது ஒவ்வொரு அனுபவமும் நமது மூளையில் சேமித்து வைக்கப்படுகின்றன. சேமித்து வைக்கப்படும் தகவல்கள் நினைவுகளாக மாற்றப்பட்டு, நாம் நினைக்கும்போது, மறந்துபோகாமல் நினைவில் வந்து தோன்ற வேண்டும். அவ்வாறு அவை தோன்றாமல், மறைந்துபோக நேரிட்டால் அது 'மறதி' என்று ஆகிவிடும். வாழ்க்கையின் எல்லா நிகழ்வுகளையும் மூளை சேமித்து வைக்கக் கூடிய ஆற்றல் உடையதுதான். என்றாலும், ஒவ்வொன்றையும் மறந்துபோகாமல் நினைவில் வைத்திருந்தால் அது வீண் குழப்பங்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் நம்மை ஆளாக்கி விடும். அந்த வகையில் மறதியை ஒரு மாபெரும் வரப்பிரசாதம் என்று குறிப்பிடுவர். ஆனால் மறக்கக் கூடாததையும் சேர்த்து மறந்துவிட்டால், பிறகு நாம் நன்றிகெட்டவர்கள் ஆகி விடுவோம். அதனால்தான் திருவள்ளுவர், வாழ்க்கையில் சிலவற்றை நெடுநாட்களுக்கு நினைவில் வைத்திருக்க வேண்டும் என்றும், சிலவற்றை உடனே மறந்துவிட வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.
"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று"
பிறர் நமக்குச் செய்த உதவிகளையும் நன்மைகளையும் மறக்காமல் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்; பிறர் நமக்குச் செய்த தீமைகளையும் கெடுதல்களையும் கால தாமதப்படுத்தாமல் அப்போதே மறந்து விடுவது நல்லது என்கிறது வள்ளுவம். ஆனால் இன்று இதை அப்படியே தலைகீழாகத் திருப்பிப் போட்டுக் கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறோம். அடுத்தவர் செய்த நன்மைகளை உடனே மறந்துபோய் செய்ந்நன்றி கொன்றவர்களாக வாழ்கிறோம்; அடுத்தவர் செய்த தீமைகளை எப்போதும் நெஞ்சில் சுமந்துகொண்டு பழிவாங்கும் பாதகர்களாக அலைந்து கொண்டிருக்கிறோம்.
அடுத்தவர்கள் நமக்குச் செய்யும் கொடுமைகளை உடனே மறந்துபோவதன் மூலமாக, நம் மனம் துன்பமில்லாத மனமாகத், தெளிந்த பளிங்குபோலக் குழப்பமின்றி எப்போதும் தெளிவாகவும் அமைதியாகவும் இருக்கும். அடுத்தவர் செய்த நன்மைகளை நினைத்துப் பார்க்க நினைத்துப் பார்க்க, நம்முடைய மனமும் எப்போதும் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதிலேயே அக்கறையாய் இருக்கும்.
மறதி என்பது பலருக்கு நோய்போலப் பேசப்படுகிறது. வீட்டைவிட்டுக் கிளம்பி வாசலுக்கு வந்தவுடனேயே நாம் எதற்காக வெளியே வந்துள்ளோம் என்பதுகூடச் சிலருக்கு மறந்து போகிறது. சரியான உடற் பயிற்சியின்மை, மனப் பயிற்சியினமை, போதிய உறக்கமின்மை, சத்தான ஆகாரமின்மை போன்ற குறைபாடுகள் மறதி நோய் வருவதற்கு மருத்துவக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. 'மறதி' யுடையவர்கள் வாழ்க்கையில் விரைவில் கெட்டழிவார்கள் என்று திருவள்ளுவர் எச்சரிக்கவும் செய்கிறார்.
"நெடுநீர் மறவி மடி துயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்"
எந்தச் செயலையும் உடனே செய்யாமல் காலம் தாழ்த்தித் தள்ளிப்போடுவது (நெடுநீர்), மறந்து போவது (மறதி), சோம்பல்(மடி), அளவுகடந்த தூக்கம் (துயில்) ஆகிய நான்கும் விரைவில் கெட்டுப்போகிறவர்கள் விரும்பிக் கட்டி ஏறுகிற வாகனங்கள் ஆகும் என்கிறார் திருவள்ளுவர். எனவே மறந்து போகாமல் நினைவுகளை மூளையில் சேமித்து வைப்பது எப்படி?.
நம்முடைய அனுபவங்களையும், நாம் சந்திக்கும் சம்பவங்களையும் தகவல்களாக நாம் நமது மூளைக்கு அனுப்புகிறோம்; அந்தத் தகவல்களை மூளை, நினைவுகளாக மாற்றி நமது மூளையில் சேமித்து வைத்துக் கொள்கிறது. தேவைப்படும் நிகழ் தருணங்களில், தேவையான விஷயங்களை மறப்பின்றி நினைப்பூட்டிப் பொருத்தமாக, நம் செயலுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கின்றன. நம் மூளைக்குச் செல்லுகின்ற எல்லாத் தகவல்களும் நினைவுகளாக நிலைத்துத் தங்குவதில்லை; எந்த அனுபவம் அல்லது சம்பவம் முக்கியமானவையாக அல்லது மதிப்புடையனவாக இருக்கிறதோ அது மட்டுமே முன்னுரிமை அடிப்படையில் நினைவில் சென்று அமர்ந்து கொள்ளும்; அந்தத் தகவல் இனிமையானதோ அல்லது கசப்பானதோ எதுவாக இருந்தாலும் நாம்தரும் முக்கியத்துவத்தைப் பொறுத்து அழியாத நினைவுகளாக அவை உருமாறிக் கொள்கின்றன.
ஒரு செய்தி அல்லது தகவலின் மீது நாம் செலுத்தும் அக்கறையைப் பொறுத்தே அது அழியாத நினைவாக நம் மூளையில் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அக்கறை காட்டாத எந்த அனுபவமும், கண்ணோடு வந்து இமையோடு கரைவது போலவும், காதோடு வந்து காதோடு கடப்பது போலவும் காணாமல் போய்விடும். மாணவர்களைப் பொறுத்த வரை கற்றல் திறனில் மறதி என்பது கூடாத தீய சக்தியாகவே பார்க்கப்படுகிறது. எவ்வளவுதான் பலதடவை மனப் பாடம் செய்தாலும், பரீட்சை அரங்குக்குள் நுழைந்தவுடன் சுத்தமாகக் கழுவி விட்டதுபோல அனைத்தும் மறந்துவிடுகிறதே! ஏன்? என்று பல மாணவர்கள் அனுபவக் கேள்வியோடு வந்து நிற்கிறார்கள். எல்லாப்பாடமும் புரிகிறது!; கணக்குப் பாடம் மட்டும் காததூரம் தள்ளி நிற்கிறதே! ஏன்? என்று சிலர் கணக்காகக் கேட்கிறார்கள். போன வாரம் ரயிலில் சந்தித்து உரையாடிய நபரை இந்த வாரம் பார்த்தவுடன் சட்டென்று பெயர்கூட நினைவில் வர மறுக்கிறதே! ஏன்? என்று சிலர் தனது ஞாபகப் பிசகைக் கேள்வியாகக் கேட்கிறார்கள்.
இவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு பதில்தான். எதையும் விருப்பத்தோடும் ஆர்வத்தோடும் அக்கறையோடும் செய்தால் அது நிச்சயம் நினைவை விட்டு அகலவே அகலாது. மாணவர்கள் எந்த வகையிலாவது தங்களுக்கும் படிக்கும் பாடத்திற்குமுள்ள தூரத்தை குறைத்து அந்நியோன்யப் படுத்திக்கொள்ள வேண்டும். கற்பிக்கும் ஆசிரியரோடு அன்பின் நெருக்கத்தை உருவாக்கிக் கொண்டால், அந்தப் பாடம் வெல்லக் கட்டியாய் இனிக்கும்; ஆசிரியர் மீது மரியாதை, கற்கும் பாடத்தின்மீது மதிப்பு, கல்வியின்மீது அக்கறை இவை ஒன்றுகூடிவிட்டால் புரிகிறவரை கற்க வேண்டும் என்கிற ஆர்வம் பெருகும்; பெருகிய ஆர்வத்தில் புரிந்து படித்தால் அந்தப் பாடம் அதன்பிறகு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்கவே மறக்காது. அதைப் போல நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர் மீதும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலின்மீதும் ஆர்வத்தோடும் அக்கறையோடும் இருந்தால் எல்லாமே நினைவுச் சேமிப்பில் கல்லில் எழுத்தாய் நிலைத்து நிற்கும்.
ஓர் அலுவலகத்தில் ஓர் எழுத்தர் பணிபுரிந்து வந்தார்; அவரிடம் எப்போதும் ஒரு மாறாத பழக்கம் இருந்தது. அலுவலகம் சென்றாலும், வங்கிக்குச் சென்றாலும் அஞ்சல் நிலையம், ரயில் நிலையம் என்று எங்குச் சென்றாலும் தன்னுடைய பேனாவைப் போகிற இடத்தில் மறந்து வைத்துவிட்டு வந்துவிடுவார். அதனால் எப்போதும் அவரது சட்டைப் பை, கால்சட்டைப் பை, ஜோல்னாப் பை என்று எல்லாவற்றிலும் இரண்டிரண்டு பேனாக்கள் இருக்கும். ஆனாலும் மாலையில் வீடு திரும்பும்போது அவரிடத்தில் ஒரு பேனாவும் இருக்காது.

சுந்தர ஆவுடையப்பன்
ஒருநாள் மனநல மருத்துவரிடம் சென்று, தான் அன்றாடம் பேனாவை மறந்து விட்டு வருவதை நிறுத்த ஒரு மார்க்கம் சொல்லுங்கள்; அல்லது ஏதாவது மருந்தாவது கொடுங்கள்! என்று பாவமாகக் கேட்டார். மருத்துவர் அவரிடம் இதுவரை என்ன மாதிரிப் பேனாக்களை உபயோகிக்கிறீர்கள்? என்று கேட்டுவிட்டு, "இனிமேல் ஒரே பேனாவை உபயோகியுங்கள்!; அதுவும் விலை உயர்ந்த பேனாவாக இருக்கட்டும்!; தங்கத்தால் செய்யப்பட்ட பேனாவாக இருந்தால் இன்னும் சிறப்பு!. வாங்கிப் பயன்படுத்திப் பாருங்கள்; ஒரு மூன்று மாதம் கழித்து வாருங்கள்!" என்று சொல்லி அனுப்பினார் மனநல மருத்துவர்.
எழுத்தர் 22 காரட் தங்கத்தாலான பேனாவை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கினார். மூன்றுமாதம் கழித்து மருத்துவரைக் காணச் சென்றார். " என்ன ஆயிற்று? இப்போதும் பேனாக்களை மறந்து வைத்துவிட்டு வந்து விடுகிறீர்களா? பேனாக்கள் தொலைகின்றனவா?" கேட்டார் மருத்துவர். " அதெப்படித் தொலையும்? இப்போது நான் பயன்படுத்துவது விலை உயர்ந்த தங்கப் பேனா ஆயிற்றே!; கவனமாகக் கையாளுகிறேன்; யாரிடம் எழுதக் கொடுத்தாலும் மறக்காமல் கையோடு கேட்டுவாங்கிப் பையோடு வைத்துக்கொள்கிறேன்!. தங்கப் பேனா மந்திரத்தின்மூலம் என் பேனாமறதியை நிறுத்தியதற்கு மிக்க நன்றி!" என்றார் எழுத்தர்.. "அதில் எந்த மந்திரமும் இல்லை!; மனித மூளைக்கு ஒரு குணம் உண்டு; அது எதை மதிப்புமிக்கதாகக் கருதுகிறதோ அதை மறக்கவே மறக்காது!" என்றார் மனநல மருத்துவர்.
நமது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணங்களையும் மதிப்புமிக்க தருணங்களாக ஆக்கிக் கொண்டு மதிப்போடு வாழக் கற்றுக்கொண்டால், மறதியில்லாமல் வெற்றிகாணலாம். வாழ்வின்மீது அக்கறையும் ஆர்வமும் கொண்டு வாழ்பவர்களின் வாழ்வு அவர்களுக்கு மட்டுமல்ல; மற்ற எல்லாருக்கும் நினைவில் நிற்கும் வாழ்வாகப் பளிச்சிடும். எல்லாமே ஓர் எல்லைக்குள் இருக்க வேண்டும். அளவுக்குமீறிய மிதமிஞ்சிய மகிழ்ச்சி மயக்கத்தில் மனிதனுக்கு மறதிநோய் ஏற்படுவதாகத் திருவள்ளுவர் கூறுகிறார். இதற்காக, மனிதனுக்கு மறதி கூடாது! என்பதை வலியுறுத்திக் கூறுவதற்காகவே 'பொச்சாவாமை' என்கிற அதிகாரத்தையும் படைத்திருக்கிறார்.
"இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு"
கோபம், கொண்டவரையும் கொல்லும் கொடுமை வாய்ந்தது; அது அளவு கடந்து வந்தால் இன்னும் கடுமையான கொடுமையானதாக இருக்கும். அந்தக் கோபத்தைவிடத் தீமையானது அளவுக்கு மீறிய மகிழ்ச்சி மயக்கத்தில், அடுத்தவர் செய்த நன்மைகளை மறந்துவிடுவதாகும் என்கிறார் வள்ளுவர்.
மறதி நம்மைத் தாழ்வு மனப்பான்மைக்குள் தள்ளித், தோல்வி நிலைக்குள் எளிதாகப் புகுத்திவிடும். மறதி ஓர் நோயாக வயதானவர்களுக்கு வரும் என்பதை நம்பி விடாதீர்கள். முறையான உடற்பயிற்சிகள் மூலம் நமது உடலை எப்போதும் இயங்கு நிலையில் வைத்திருந்தால், உடல் எப்போதும் விழிப்புணர்வோடு செயல்படும்; அதே போல மனத்தையும் தனிமையில் தள்ளிவிடாமல், ஏதாவது ஒரு வேலையில் ஈடுபடச் செய்து வந்தால் மனமும் எப்போதும் கூர்மையாக இருக்கும். குறுக்கெழுத்துப்போட்டியில் ஈடுபடுவது, மூளைக்கு வேலைகொடுக்கும் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுவது, நல்ல இசையை ரசிப்பது, பழைய அல்லது பக்திக் கவிதைகளை மனப்பாடம் செய்து, திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்ப்பது போன்றவை மனம் பழக்கும் மகத்துவச் செயல்களாகும். ஒரு வேலையில் ஈடுபட்டால் அதில் மட்டுமே கவனம் செலுத்துவது; ஒரு சிந்தனையில் ஈடுபட்டால் பிற சிந்தனைகளைத் தவிர்த்து அதைமட்டுமே கூர்ந்து சிந்திப்பது ஆகியவை நமது நினைவுகளைச் செழுமைப்படுத்தும். போதிய தூக்கம், தேவையான உணவு, அமைதியான மனநிலை ஆகியவை நமது நினைவுகளை ஒருங்கிணைத்து, மறதிகளே இல்லாமல் செய்துவிடும்.
தொடர்புக்கு 944319098
- ரஜினி முள்ளும் மலரும் கடைசி காட்சியில் நடித்து கொடுத்து விட்டு சிங்கப்பூருக்கு சென்றார்.
- “தப்புத் தாளங்கள்” படத்திலும் ரஜினியை டைரக்டர் பாலச்சந்தர் மேலும் நடிப்பில் மெருகு ஏற்ற வைத்தார்.
ரஜினி நடித்த படங்கள் 1978-ம் ஆண்டு வெற்றிகரமாக ஓடத்தொடங்கியதால் அவரை தேடி வரும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் எண்ணிக்கை மளமளவென அதிகரித்தது. குறிப்பாக பைரவி, இளமை ஊஞ்சலாடுகிறது படங்கள் வெளியான பிறகு ரஜினியை திரையுலகம் மொய்த்து விட்டது. ரஜினிக்கும் அந்த ஆரம்ப காலத்தில் சரியான திட்டமிடல் இருக்கவில்லை. தன்னை தேடி வந்த வாய்ப்புகளை பெரும்பாலும் ஒத்துக் கொண்டார். புதிய வேடங்களில் நடித்து புகழ் பெற வேண்டும் என்ற வெறி அவருக்குள் இருந்து கொண்டே இருந்தது. அதனால்தான் நிறைய படங்களில் ஒப்பந்தம் ஆகி இருந்தார். ஆனால் அதுவே அவருக்கு மிகப்பெரிய சோதனையை ஏற்படுத்தி விட்டது.
இந்த சோதனை முள்ளும் மலரும் படம் ஷூட்டிங் சமயத்தில்தான் தொடங்கியது. அந்த படத்தின் சில காட்சிகள் படம் ஆக்காமல் விடுபட்டு விட்டது என்று கூறி மீண்டும் படப்பிடிப்புக்கு வருமாறு கேட்டபோது ரஜினி திட்டவட்டமாக வரமுடியாது என்று மறுத்தார்.
நினைத்தாலே இனிக்கும் படப்பிடிப்புக்காக சிங்கப்பூர் செல்ல இருப்பதாகவும் வந்த பிறகு நடித்து தருகிறேன் என்றும் கூறினார். இதனால் முள்ளும் மலரும் படத்தின் இயக்குனர் மகேந்திரன் தவித்தார். இதை அறிந்த கமல் தலையிட்டு ரஜினியை சமரசம் செய்து நடிக்க வைத்தார். அதன்படி ரஜினி முள்ளும் மலரும் கடைசி காட்சியில் நடித்து கொடுத்து விட்டு சிங்கப்பூருக்கு சென்றார்.
முள்ளும் மலரும் வெளியானதும் முதல் 3 வாரங்கள் சரியாக ஓடவில்லை. படத்தயாரிப்பாளர் வேணு செட்டியார் "என் வாழ்க்கையே போய் விட்டது" என்று கண்ணீர் விட்டார். ரஜினியையும், இயக்குனர் மகேந்திரனையும் திட்டித்தீர்த்தார். இதை அறிந்த ரஜினிக்கும் என்னவோ போல் ஆகி விட்டது.
என்றாலும் ரஜினி மனம் தளரவில்லை. ராகவேந்திரரிடம் மனம் உருக வேண்டினார். அதன் பலனாக 3-வது வாரத்துக்கு பிறகு ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வர தொடங்கினார்கள். ரஜினியின் நடிப்பை ரசித்து பார்த்தனர்.
அதன் பிறகுதான் ரஜினி படங்கள் ஒவ்வொன்றும் வெற்றிப் படங்களாக இருக்கும் என்ற புதிய எண்ணம் மக்கள் மத்தியிலும், திரை உலகிலும் பரவத் தொடங்கியது. முள்ளும் மலரும் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தமிழக அரசு மாநில திரைப்பட விருதுகளை அறிவித்த போது ரஜினிக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவித்தது. நடிப்புக்காக ரஜினி பெற்ற முதல் அரசு விருது அதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து டைரக்டர் பாலச்சந்தர் மீண்டும் ரஜினியை வைத்து "தப்புத் தாளங்கள்" என்ற படத்தை தயாரிக்க முடிவு செய்தார். கதாநாயகியாக சரிதா ஒப்பந்தம் செய்யப்பட்டார். தமிழில் அதுதான் சரிதாவுக்கு முதல் படம்.
"தப்புத் தாளங்கள்" படம் தயாரிக்கப்பட்ட போது பாலச்சந்தருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. ரஜினியை தொடக்க காலத்தில் அழைத்தது போல "வாடா... போடா..." என்று சொல்லலாமா? இப்போது அவர் சூப்பர் ஸ்டார் ஆகி விட்டாரே? அவரது நடிப்பை திருத்த முடியுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.
இதை ரஜினியிடம் டைரக்டர் பாலச்சந்தர் நேரிலேயே கேட்டார். அதை கேட்டதும் ரஜினி கண்கள் கலங்கியது. அவர் பாலச்சந்தரை பார்த்து, "சார்.... என் சினிமா வாழ்க்கை நீங்கள் போட்ட பிச்சை. உங்கள் கருணையால்தான் நான் இன்று நாலு பேர் மத்தியில் பேசப்படுகிறேன். என்னை திருத்தவும், கண்டிக்கவும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. என்னை நீங்கள் அடித்துக் கூட திருத்தலாம்? அதற்கு உங்களுக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது. இனியும் என்னை உங்களிடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்தாதீர்கள்" என்றார்.
ரஜினி கண்ணீர் மல்க இப்படி சொன்னதை கேட்டதும் பாலச்சந்தரும் கண் கலங்கினார். நீ எப்போதுமே என்னுடைய பையன்தான் என்று கட்டிப்பிடித்துக் கொண்டு நெகிழ்ந்தார். இதனால் "தப்புத் தாளங்கள்" படத்திலும் ரஜினியை டைரக்டர் பாலச்சந்தர் மேலும் நடிப்பில் மெருகு ஏற்ற வைத்தார்.
'தப்புத்தளாங்கள்' படப்பிடிப்பின் போது சரிதா அனைவரிடமும் சகஜமாகப் பேசிப் பழகியதைப் பார்த்து ரஜினி மிகவும் ஆச்சரியப்பட்டார். ரஜினியைப் பார்க்கும் போது வேண்டும் என்றே 'மிஸ்டர் கறுப்பா' என்பார். ரஜினியும் விடவில்லை. 'கறுப்பி' என்று கிண்டல் செய்தார். தப்புத்தாளங்கள் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பெங்களூரில் நடந்தது. ரஜினி தங்குவதற்கு ஸ்டார் ஓட்டலில் அறை முன்பதிவு செய்து கொடுத்திருந்தனர். அது ரஜினிக்கு மது அருந்த மிகவும் வசதியாக போய்விட்டது.
பெங்களூரில் வாழ்ந்த போது சிறு வயதில் ரஜினியிடம் ஏற்பட்டிருந்த கெட்ட பழக்கங்களில் மது குடிக்கும் பழக்கம் பிரதானமாக இருந்தது. அடிக்கடி பாட்டிலும் கையுமாகத்தான் இருப்பார். சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்து படித்த 2 ஆண்டுகளிலும் அவரிடம் மது குடிக்கும் பழக்கம் நீடித்தது. இதனால் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகும் மது பழக்கம் அவருடன் ஒட்டிக் கொண்டே வந்து விட்டது. 1977, 1978களில் நிறைய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதால் தினமும் உயர்ரக மதுபானங்களை வாங்கி குடிக்க ஆரம்பித்தார்.
ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்ததும், இரவு குளித்து முடித்து சாமி கும்பிட்டு விட்டு, சரக்கு அடிக்க ஆரம்பித்து விடுவார். அவரிடம் இது ஒரு மரபு போல மாறி இருந்தது. பெங்களூரில் தப்புத்தாளங்கள் படப்பிடிப்பு நாட்களிலும் தினமும் மது குடிக்கும் பழக்கத்தை ரஜினி கைவிட வில்லை.
ஒரு நாள் தப்புத்தாளங்கள் சூட்டிங் முடிந்து ஓட்டல் அறைக்கு திரும்பியதும் குளித்து, சாமி கும்பிட்டு விட்டு வழக்கம் போல ரஜினி மதுபானம் குடிக்க ஆரம்பித்து விட்டார். சில ரவுண்டுகள் முடிந்த நிலையில் ரஜினிக்கு போதை ஏற்பட தொடங்கியது.
அப்போது அவரது அறைக் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால் வெளியில் டைரக்டர் பாலச்சந்தரின் உதவியாளர் அமீர்ஜான் நின்று கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் ரஜினிக்கு 'பக்' என்றாகி விட்டது.
'என்னங்க' என்றார். அதற்கு அமீர்ஜான், 'சார்.... உங்களை டைரக்டர் உடனே கூட்டிட்டு வரச்சொன்னார். ஒரே ஒரு ஷாட் எடுக்காமல் விட்டு விட்டனர். அந்த காட்சியை இப்போதே எடுக்க வேண்டுமாம். புறப்பட்டு வாங்க' என்றார்.
இதைக் கேட்டதும் ரஜினிக்கு சப்த நாடியும் ஒடுங்கி போனது போல ஆகி விட்டது. மது குடித்து இருப்பது பாலச்சந்தர் சாருக்கு தெரிந்தால் பிரச்சினை ஆகி விடுமே என்று பயந்தார். தவித்தார்.
அந்த பயத்துடனே புறப்படத் தொடங்கினார். தன் மீது இருந்து மது வாசனை வந்து விடக்கூடாது என்று நினைத்த ரஜினி நன்றாக குளித்தார். சென்ட் பூசிக் கொண்டார். பிறகு படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு சென்றார்.
டைரக்டர் பாலச்சந்தர், அருகில் செல்லாமல் சற்று தூரத்திலேயே நின்று பேசினார். ரஜினியின் முழியை வைத்து, அவர் மதுபானம் குடித்து இருப்பதை டைரக்டர் பாலச்சந்தர் எளிதாக கண்டுபிடித்து விட்டார்.
ரஜினி, படப்பிடிப்பு நேரங்களில் மது குடித்து விட்டு நடிக்க வருகிறார் என்று டைரக்டர் பாலச்சந்தர் ஏற்கனவே அரசல், புரசலாக கேள்விப்பட்டிருந்தார். இன்று தனது படப்பிடிப்பிலேயே அதை நேரில் பார்த்து விட்டார். ரஜினி மீது அவருக்கு பயங்கர கோபம் வந்தது.
'என்னுடன் அறைக்கு வா' என்று சொல்லிக் கொண்டே டைரக்டர் பாலச்சந்தர் நடந்தார். அவர் பின்னால் பயந்தபடியே ரஜினி சென்றார். அறைக்குள் சென்றதும் ரஜினியை உட்கார வைத்த பாலச்சந்தர், 'உனக்கு நடிகர் நாகேஷை தெரியுமா'? என்றார்.
அதற்கு ரஜினி, 'தெரியும் சார் என்றார்'. அவன் எவ்வளவு பெரிய நடிகர் தெரியுமா? அவன் நடிப்பு முன்னால் நீ வெறும் தூசிதான். அவ்வளவு திறமை இருந்தும் அவன் தினமும் மது குடித்து தன் வாழ்க்கையையே அழித்துக் கொண்டான். உனக்கு அது தெரியுமா,?' என்றார்.
ரஜினி தலை குனிந்து அமைதியாக இருந்தார். பாலச்சந்தரின் குரலில் ஆவேசம் தணியவில்லை. அவர் ரஜினியைப் பார்த்து, 'இன்னொரு தடவை நீ படப்பிடிப்புக்கு தண்ணி போட்டுவிட்டு வந்தால், அல்லது கேள்விப்பட்டால், உன்னைத் தேடி வந்து செருப்பாலே அடிப்பேன்' என்று கத்தினார்.
ரஜினி தன்னை மன்னிக்கும்படி கண்ணீர் விட்டார். குருநாதரின் பேச்சுக்கு மரியாதை கொடுக்கும் வகையில் அன்றோடு மதுபானத்துக்கு ரஜினி விடை கொடுத்தார். இது ரஜினி வாழ்க்கையில் டைரக்டர் பாலச்சந்தர் ஏற்படுத்திய மற்றொரு மகத்தான திருப்புமுனையான மாற்றம் என்றே சொல்ல வேண்டும்.
1978-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தப்புத் தாளங்கள் வெளியானது. இந்த படத்திலும் ரஜினியின் நடிப்பு ரசிக்கும்படி இருந்தது. இந்த படத்துக்கு பிறகு ஏற்கனவே சாண்டோ சின்னப்பா தேவர் ஒப்பந்தம் செய்து இருந்த "தாய் மீது சத்தியம்" படத்தில் ரஜினி விறுவிறுப்பாக நடித்தார்.
ரஜினியின் நடிப்பை சின்னப்பா தேவர் வியந்துப் பார்த்தார். ஆனால் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருந்த நிலையில், சாண்டோ சின்னப்பா தேவர் கோவைக்கு சென்றிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அடுத்த சில வாரங்களில் தாய் மீது சத்தியம் படம் தீபாவளிக்கு வெளியாகி 100 நாட்கள் ஓடி வெற்றிப்படமாக அமைந்தது. அடுத்தபடியாக ரஜினி வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது.
ரஜினி மாலை அணிந்து சபரிமலை அய்யப்பனை காணச் சென்றார். சபரி மலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் ரஜினிக்கு எப்படி ஏற்பட்டது என்பதை 27-ந் தேதி (திங்கட்கிழமை) பார்க்கலாம்.
- குளியல் தண்ணீரை எவ்வாறு தயாரிப்பது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.
- மூலிகை மருந்துகளை கொண்டு காய்ச்சிய தண்ணீரில் குளிக்கலாம்.
மூட்டு வலியால் தற்போது அதிகப்படிப்பான மக்கள் அவதியுறுகிறார்கள். இதற்காக நிறைய மருத்துவமுறைகளை பின்பற்றி அதிக கால விரையத்தையும், பொருளாதார செலவுகளையும் எதிர்கொள்கின்றனர். அதிலும் பல சிறப்பு மருத்துவர்கள் இதற்காக உள்ளனர். இப்படி சூழ்நிலை இருக்கையில் ஒரு சாதாரண குளியல் எப்படி மூட்டு வலிக்கு உகந்ததாகயிருக்கும் என்று கருதலாம்.
இதுபோன்று கேள்வி எழும் போது அதற்கான பதிலையும் ஆயுர்வேதம் வழங்குகிறது.
ஆயுர்வேத பொது மருத்துவத்துறையின் தந்தை சரக மாமுனிவர் என்பவர், ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் போது மருத்துவர் மேற்கொள்ளும் சிறிய மாற்றம் கூட அந்த வியாதியை குணமாக்க வழிவகைச் செய்யும் என்று கூறியுள்ளார். ஆக நாம் மேற்கொள்ளும் சிறிய மாற்றம் பெரிய மருத்துவ மாற்றத்திற்கு வழிகோலும் என்பது நிதர்சனமான உண்மை.
இதற்கு பல நோயாளிகளே சாட்சி. ஆம் பல மருத்துவர்கள் பார்த்தும் குணமாகாத நீண்ட நாட்களாகயிருக்கும் வியாதிக் கூட, நோயாளியை எதார்த்தமாக அணுகும் மருத்துவர்கள், மிக எளிதாக குணமாக்கிவிடுவார்கள். காரணம் நோயாளிகளின் நடைமுறை வாழ்க்கையில் அவர்கள் ஏற்படுத்தும் சிறிய மாற்றம் கூட காரணமாக இருக்கலாம். இதனை யுக்தி அனுசரணம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது
அந்த வகையில் குளியல் எப்படி மூட்டு வலிக்கு பயனாகயிருக்கும் என்பதை பார்ப்போம்.
குளியல் பற்றி சென்ற தொடரில் பார்த்தோம் அல்லவா... அதில் நோயுற்றவருகளுக்கு ஒரு விதமான குளியல், நோயற்றவருகளுக்கு ஒரு விதமான குளியல் என இரு வகையாக பிரித்து பார்ப்போம். அவ்வகையில் மூட்டு வலிக்கு உண்டான மூலிகை குளியல் எவ்வாறு பலனளிக்கும் என்பதை பார்பதற்கு முன்பு சிகிச்சை குறித்து சற்று பார்ப்போம்.
சிகிச்சைக்கு வேறு பெயர்கள் நிறைய கொடுக்கப்பட்டுயிருகின்றன. அதில் ஒரு பெயர் கிரியா கர்மா என்பதாகும். கிரியா கர்மா என்றால் வியாதியை போக்க மேற்கொள்ளப்படும் அனைத்தும் சிகிச்சை என்பதே இதன் பொருள். அந்த வகையில் வலியை போக்க மேற்கொள்ளப்படும் குளியலும் ஒரு வித சிகிச்சை தான்.
மேலும் சிகிச்சை என்பதை பல வகைப்படுத்தப்பட்டாலும் மிக முக்கியமாக இரண்டு வகையில் கூறப்பட்டுள்ளது. அவை ஆப்யந்தர சிகிச்சை எனும் உள்ளுக்கு கொடுக்கும் மருந்தைப் பற்றியது. மற்றொருன்று பாஹ்ய சிகிச்சை எனும் வெளிப்பிரயோக மருந்தை பொருத்தது. உள்மருந்துகள் நிறைய கூறப்பட்டுயிருந்தாலும், குளியல் வெளிப்புறத்தில் மேற்கொள்ளப்படும் நடைமுறை என்பதால் வெளிப்பிரயோக மருத்துவ சிகிட்சைகளை குறித்து பார்ப்போம்.
உள்ளுக்குள் கொடுக்கும் மருந்து எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதே அளவு வெளிப்புற மருந்தும் முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு வெளிப்புறத்தில் பயன்படுத்தப்படும் பசை போன்ற மேற்பூச்சு மருந்துகளே சாட்சி [ointment}.
வெளிப்புறத்தில் எண்ணெய் தேய்த்தல், மூலிகை பொடிகளை தேய்த்தல், பற்றுயிடுதல், கட்டுக் கட்டுதல், மர்ம புள்ளிகளை இயக்குதல், மர்ம புள்ளிகளை குத்துதல், மூலிகை மருந்துகளை கொண்டு ஒற்றடம் கொடுத்தல், மூலிகை மருந்துகளை தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து அல்லது எண்ணெய்யிலிட்டு கொதிக்க வைத்து மேலுக்கு ஊற்றுதல் போன்று வெளிப்புற சிகிட்சை நீள்கிறது. இதில் தண்ணீரில்யிட்டு கொதிக்க வைத்து ஊற்றும் சிகிட்சையே மூலிகை குளியல் என்று அழைக்கிறோம். உண்மையில் இது ஒரு சிகிட்சை முறை, அதை சற்று மாற்றி அன்றாடும் குளியலாக பயன்படுத்தலாம்.
தினமும் காலைப்பொழுதில் மலசலம் கழித்தப் பின்பு, பல் துலக்கி, வாய்க் கொப்பளித்து பின்பு நல்லெண்ணெய் அல்லது மூலிகை மருந்துகளால் செறிவூட்டப்பட்ட மூலிகை எண்ணெய்களை சிறிதளவு சூடுச் செய்து தேய்த்து, மூலிகை மருந்துகளை கொண்டு காய்ச்சிய தண்ணீரில் குளிக்கலாம். அல்லது அந்த தண்ணீரை மூட்டு வலி உள்ள இடத்தில் மட்டும் ஊற்றிக் கொள்ளலாம். ஆனால் தலைக்கு ஊற்றிக் கொள்ளக்கூடாது. தலைக்கு ஊற்றும் போது தலை முடிக்கு உகந்த மூலிகை தண்ணீரை மட்டும் ஊற்ற வேண்டும். அதுவும் மூட்டு வலிக்கு குளியல் மேற்கொள்ளும் போது தண்ணீர் சூடு உள்ளதாக மட்டும் இருக்க வேண்டும். குளியல் தண்ணீரை எவ்வாறு தயாரிப்பது என்று ஆயுர்வேதம் கூறுகிறது... சும்மா தண்ணீரில் கொதிக்க வைத்து ஊற்றினால், குணம் கிடைக்காதா என்றால், குணம் கிடைக்கும். ஆனால் முழுமையான பயனை அடையவேண்டும் என்றால் முறையாக தயாரித்து ஊற்றினால் தான் நல்லது. அது எப்படி முறையாக தயாரிப்பது...?
மூலிகை இலை அல்லது கஷாய சூரணங்களை எடுத்துக் கொண்ட அளவுக்கு 16 மடங்கு அதிகமாக தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இலையின் நிறம் மாறும் வரையிலும் நன்றாக வேக வைத்து, அல்லது கஷாய சூரணகள் பயன்படுத்தினால் அவை நன்றாக வெந்த பின்பு வடிக்கட்டி மூலிகை குளியலுக்கு பயன்படுத்தலாம்.
எந்தந்த மூலிகை எந்தந்த நோய்களுக்கு சிறந்தது...?
சிற்றாமுட்டி வேர் - மூட்டு வலிக்கு மற்றும் மூட்டு எலும்பு தேய்மானத்திற்கு என பிரத்யேக மூலிகை இது. இதனை கொதிக்க வைத்து மூட்டுகளில் ஊற்றி வரலாம்.
ஆமணக்கு வேர் மற்றும் இலை - இவை மூட்டு வலிக்கு மட்டுமில்லை, இடுப்பு வலிக்கும் உகந்தது.
நொச்சி - இடுப்பு வலி, இடுப்பு பிடிப்பு.
புளியிலை - இடுப்பு வலி, மூட்டு வலி மற்றும் வீக்கம்.
எருக்கிலை - குதிகால் வலி, கெண்டைக்கால் வலி.
தழுதாழை - உடல் வலி, மூட்டு வலி மற்றும் வீக்கம்.
சதக்குப்பை கஷாயம் - மூட்டுகளில் ஏற்படும் வலி, பிடிப்பு மற்றும் வீக்கம்.
வாதநாராயணன் இலை - இடுப்பு, மூட்டு வலி மற்றும் வீக்கம், நடக்க முடியாமை.
சீந்தில் கொடி இலை - மூட்டு வலியுடன் கூடிய எரிச்சல்.
பாரிஜாத இலை - உடல் வலி, இடுப்பு வலி.
ஓதிய மரப்பட்டை - கழுத்து வலி மற்றும் பிடிப்பு.
இவற்றை தனித்தனியே பயன்படுத்த வேண்டுமா அல்லது ஒன்றாக பயன்படுத்த வேண்டுமா என்றால் மேற்குறிப்பிட்ட சில மூலிகை பரவலாக கிடைப்பின் அவற்றை ஒன்றாக பயன்படுத்தலாம் அல்லது ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனை அவசியம் தேவை.
- ரஜினியின் இந்த இமாலய வளர்ச்சியைப் பார்த்து சாண்டோ சின்னப்பா தேவர் பிரமித்துப் போனார்.
- இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் அவர் கமலுக்கும், ரஜினிக்கும் சமமான வாய்ப்பு கொடுத்திருந்தார்.
சூப்பர் ஸ்டார் பட்டத்தை ரஜினி வேண்டாம் என்று சொன்னதற்கு ஒரு காரணம் இருந்தது.
தமிழ்த்திரை உலகை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த எம்.ஜி.ஆர். முதலமைச்சர் பதவியை ஏற்று, சரியாக ஓராண்டு ஆகி இருந்த போது, ரஜினியின் பைரவி படம் வெளியானது. இந்த ஓராண்டில் எம்.ஜி.ஆர். தமிழ்த்திரை உலகம் பக்கம் வரவில்லை. 35 படங்களில் அவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு, அவை அனைத்தும் அப்படியே கிடப்பில் போடப்பட்டு இருந்தன.
இந்த நிலையில்தான் எம்.ஜி.ஆர். விட்டுச் சென்ற இடத்தை ரஜினி பூர்த்தி செய்யத் தொடங்கி இருந்தார். அந்த ஓராண்டில் எம்.ஜி.ஆர். முழு நேர அரசியலில் தன்னை ஒப்படைத்து இருந்தாலும் சினிமா உலகில் என்ன நடக்கிறது என்பதையும் ஓரக்கண்ணால் கண்காணித்துக் கொண்டுதான் இருந்தார்.
அந்த சமயத்தில் ரஜினி படங்களில் லதா நடித்தது எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை என்று சிலர் வதந்தியை கிளப்பி விட்டிருந்தனர். இதனால் ரஜினி மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.
அதே சமயத்தில் தமிழ்த்திரை உலகில் சிவாஜியும் உச்சத்தில் இருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் "சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை ஒத்துக் கொண்டால் எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இரு இமயங்களிடமும் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியது இருக்குமோ என்று ரஜினி நினைத்தார்.
எனவே அவர் கலைப்புலி தாணுவை அழைத்து, "என் பெயருக்கு முன்னாள் சூப்பர் ஸ்டார் பட்டம் போடாதீர்கள் தயவு செய்து தவிர்த்து விடுங்கள்" என்றார். ஆனால் வினியோகஸ்தர் கலைப்புலி தாணு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் பைரவி பட விளம்பரங்களில் "சூப்பர் ஸ்டார் ரஜினி" என்றே இடம் பெறச் செய்தார்.
இன்னும் சொல்லப் போனால் "சூப்பர் ஸ்டார்" என்ற பட்டத்தை அவர் அதற்குப் பிறகு தான் சற்று பெரியதாக போடத் தொடங்கினார். இது தமிழக ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. எல்லோரும் ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைக்கத் தொடங்கினார்கள்.
1978-ம் ஆண்டு இறுதிக்குள் சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி, ரஜினி என்றால் சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் நிலை உருவானது. அதன் பிறகு ரஜினியுடன் சூப்பர் ஸ்டார் பட்டம் நிரந்தரமாக ஒட்டிக் கொண்டு விட்டது.
ரஜினியின் இந்த இமாலய வளர்ச்சியைப் பார்த்து சாண்டோ சின்னப்பா தேவர் பிரமித்துப் போனார். ரஜினி விஷயத்தில் தனது கணிப்பு பொய்த்துப் போனதை உணர்ந்தார். ராஜகுமாரி தியேட்டருக்கு சென்று பைரவி படத்தை அவர் பார்த்த போதுதான் ரஜினி மீது ரசிகர்கள் எந்த அளவுக்கு வெறித்தனமாக அன்பு வைத்து இருக்கிறார்கள் என்பதை கண்கூடாகப் பார்த்து உணர்ந்து, புரிந்து கொண்டார்.
தமிழ்த்திரை உலகில் ரஜினி எனும் மூன்றெழுத்துப் புயல் வேகம் எடுக்கத் தொடங்கி விட்டது என்பதும் அவர் மனதுக்குள் தோன்றியது. எனவே ரஜினியை கதாநாயகனாகப் போட்டு இரண்டு படங்கள் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை சாண்டோ சின்னப்பா தேவர் மனதில் தோன்றியது.
கலைஞானம் மூலம் ரஜினிக்கு சின்னப்பா தேவர் அழைப்பு விடுத்தார். அடுத்த அரை மணி நேரத்தில் சின்னப்பா தேவர் அலுவலகத்தில் ரஜினி இருந்தார். அவரது எளிமை, பழகும் விதம் சின்னப்பா தேவருக்கு மிகவும் பிடித்துப் போனது.
அதுவும் சின்னப்பா தேவரிடம் எந்த ஈகோவும் பார்க்காமல் ரஜினி ஆசிப் பெற்றார். இதனால் சின்னப்பா தேவர் மிகவும் நெகிழ்ந்து போனார். முருகா... முருகா... என்று உச்சரித்தப்படி ரஜினியை 2 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்து முன்பணம் கொடுத்தார். இதுவரை ரஜினி வாங்கி வந்த சம்பளத்தை விட 2 மடங்கு அதிகமாகக் கொடுத்தார். கட்டுக் கட்டுகளாக அவர் அள்ளிக் கொடுத்தப் பணத்தை ரஜினி பணிந்து பவ்யமாக வாங்கிக் கொண்டார்.
அப்போது சின்னப்பா தேவர் கூறுகையில், "தம்பி உனக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கு. தமிழ்த்திரை உலகில் உனக்கு என்றொரு இடம் உருவாகி விட்டது. என் 2 படங்களில் நடித்து முடித்ததும் நீ சொந்த வீட்டில் குடியேறி விட வேண்டும். என் அப்பன் முருகன் உன்னுடன் இருக்கிறான் என்றார்.
தமிழ்க் கடவுள் முருகனை முன் நிறுத்தி சாண்டோ சின்னப்பா தேவர் ஆசீர்வதித்ததும் ரஜினி மேலும் நெகிழ்ச்சியானார். முருகனின் மறு உருவமாக அவர் தேவரைப் பார்த்தார். அந்த சமயத்தில் ரஜினி பிரபல இயக்குனர் ஸ்ரீதரின் "இளமை ஊஞ்சலாடுகிறது" படத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
சிவந்த மண் படத்துக்குப் பிறகு ஸ்ரீதர் முழு மனதுடன் எந்த புதுப்படத்திலும் பணியாற்றவில்லை. எம்.ஜி.ஆர். நடித்த உரிமைக் குரல் படத்தை இயக்கினாலும் அவருக்குள் ஒருவித சோர்வு இருந்து கொண்டே இருந்தது. அந்த சோர்வை விரட்டி அடிக்கும் வகையில் ரஜினி நடித்த இளமை ஊஞ்சலாடுகிறது படம் அமைந்தது. அந்த படம் தயாரிக்கப்பட்ட போது ஸ்ரீதரிடம் பழைய சுறுசுறுப்பும் புத்துணர்வும் ஏற்பட்டு இருந்தது. இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் அவர் கமலுக்கும், ரஜினிக்கும் சமமான வாய்ப்பு கொடுத்திருந்தார்.
ரஜினி தொழில் அதிபர். அவர் நிறுவனத்தில் மானேஜராக பணிபுரியும் கமல் ஸ்ரீபிரியாவை விரும்புகிறார். அவர்களை ரஜினி சேர்த்து வைப்பதுதான் இந்த படத்தின் கதை.
1978-ம் ஆண்டு ஜூன் மாதம் 9-ந்தேதி வெளியான இளமை ஊஞ்சலாடுகிறது 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது. ரஜினியின் மாறுபட்ட நடிப்பை இந்த படத்தில் தமிழக ரசிகர்கள் கண்டுகளித்தனர்.
இதற்கிடையே கல்கி வார இதழின் வெள்ளி விழா ஆண்டில் பரிசுப் பெற்ற உமாசந்திரனின் "முள்ளும் மலரும்" நாவலை, சினிமாப் படமாக எடுக்க வேண்டும் என்று இயக்குனர் மகேந்திரன் விரும்பினார்.
குறிப்பாக அந்த நாவலில் வரும் காளி கதாபாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் படத் தயாரிப்பாளரான ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியார் அதை ஏற்கவில்லை. "வில்லனா நடிக்கிற ஆளை எப்படி கதாநாயகனாகப் போட முடியும்" என்று எதிர்த்தார்.
மகேந்திரன் அதுபற்றி கவலைப்படவில்லை. இந்த படத்தில் ரஜினிதான் நடிப்பார். சம்மதம் என்றால் அடுத்தப்படியாகப் பேசலாம் என்று மகேந்திரன் திட்டவட்டமாக கூறி விட்டார்.
மகேந்திரனிடம் காணப்பட்ட பிடிவாதத்தைப் பார்த்து படத்தயாரிப்பாளர் வேணு செட்டியார் இறங்கி வந்தார். முள்ளும் மலரும் படம் தயாரிக்கும் பணிகள் தொடங்கியது. அந்த படத்தில் ஷோபா, படாபட் ஜெயலட்சுமி, சரத்பாபு, வெண்ணிற ஆடைமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.
இந்த படத்தில் காளி என்ற வேடத்தில் ரஜினி, மங்கா என்ற வேடத்தில் படாபட் ஜெயலட்சுமி, வள்ளி என்ற வேடத்தில் ஷோபா நடித்து இருந்தனர். இளமையிலேயே பெற்றோரை இழந்த ரஜினி கஷ்டப்பட்டு உழைத்து வாழ்க்கையில் முன்னேறுகிறார். தனது ஒரே தங்கையான வள்ளி (ஷோபா) மீது உயிரையே வைத்து இருக்கிறார்.
டிராலி டிரைவராக பணிபுரியும் காளியை அந்த ஊருக்கு வரும் புதிய என்ஜினீயர் (சரத்பாபு) வேலையை விட்டு நீக்குகிறார். இதனால் ஆத்திரம் அடையும் காளி அளவுக்கு அதிகமாக மது குடிக்கிறார். போதையில் விபத்தில் சிக்கி ஒரு கையை இழக்கிறார்.
அவரிடம் மங்கா (படாபட் ஜெயலட்சுமி) அடைக்கலம் தேடி வருகிறார். அவரை காளி திருமணம் செய்து கொள்கிறார். இந்த நிலையில் என்ஜினீயருக்கும், வள்ளிக்கும் காதல் ஏற்படுகிறது. அதை காளி ஏற்கவில்லை. என்றாலும் என்ஜினீயரை திருமணம் செய்ய வள்ளி முடிவு செய்கிறார்.
ஆனால் திருமணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு அண்ணன் மீதுள்ள பாசத்தால் ஓடி வருவார். தங்கையின் பாசத்தை கண்டு உருகிப்போகும் காளி என்ஜினீயருக்கே வள்ளியை திருமணம் செய்து கொடுப்பார். அண்ணன்-தங்கை பாசத்தை புதிய பாணியில் காண்பித்த இந்த படம் 1978-ம் ஆண்டு ஆகஸ்டு 17-ந்தேதி வெளியானது.
இந்த படத்தில் ரஜினி கோபம், இயலாமை, தங்கை மீதான பாசம், எதிர்காலம் குறித்த கவலை, வெறுப்பு போன்ற நடிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார். அனைவரும் ரஜினி அந்த படத்தில் காளி கேரக்டராகவே மாறி விட்டதாக பாராட்டினார்கள். டைரக்டர் பாலச்சந்தர் ரஜினி நடிப்பை பார்த்து பிரமித்து பாராட்டி கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தை இப்போது வரை ரஜினி பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.
இந்த படப்பிடிப்பின்போது ரஜினியை படாபட் ஜெயலட்சுமி கிண்டல் செய்து பேசிக் கொண்டே இருப்பார். இதுபற்றி ரஜினி ஒரு பேட்டியில் கூறுகையில், "முள்ளும் மலரும் படத்தில் நடிக்கும் போது எனது தமிழை படாபட் ஜெயலட்சுமி அடிக்கடி கிண்டல் செய்து கொண்டே இருப்பார். அதே சமயத்தில் ஏதாவது நகைச்சுவையாக பேசி உற்சாகம் கொடுப்பார். என்னடா... இது?. ஒரு பொம்பளைக்கே இவ்வளவு தைரியம் இருக்கும் போது நாம் ஏன் அமைதியாக இருக்க வேண்டும் என்று பேசத் தொடங்கினேன்" என்றார்.
இந்த படத்துக்கு முன்பு ரஜினி படப்பிடிப்பு தளங்களில் மற்றவர்களிடம் அவ்வளவாக பேசியது கிடையாது. ஆனால் ரஜினியின் அந்த குணத்தை படாபட் ஜெயலட்சுமி மாற்றி இருந்தார். அதன் பிறகு ரஜினியின் நடவடிக்கைகளிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது.
இந்த படத்தில் வரும் "காளி கெட்டப் பய சார்" என்ற ரஜினியின் வசனம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. அதுபோல இந்த படத்தில் இடம் பெற்ற "செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்", "நித்தம் நித்தம் நெல்லுச் சோறு", "ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும்" பாடல்கள் எல்லாராலும் இனிமையாக ரசிக்கப்பட்டன.
ஆனால் முள்ளும் மலரும் படப்பிடிப்பின் இறுதி நாட்களில் ரஜினிக்கும், படக்குழுவினருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சிருங்கேரியில் முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டது என்று கூறப்பட்ட நிலையில் ரஜினியை மீண்டும் நடிக்க அழைத்தனர். ஆனால் அவர் நடிக்க வரமுடியாது என்று மறுத்தார்.
அவரை சமரசம் செய்ய முடியாமல் அனைவரும் திணறினார்கள். அந்த சமயத்தில்தான் ரஜினியின் மனநிலையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட தொடங்கி இருந்தது. அது என்ன மாற்றம்? என்பதை பார்க்கலாம்.






