search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    • நமது மூச்சினுடைய எண்ணிக்கை உயர உயர ஆயுள் குறையும். அதே நேரம், நாம் இந்த நிலையை தவிர்த்தல் நலம்.
    • நாடி சுத்தி பிராணாயாமத்தை செய்யும் போது மனம் ஆழ்நிலைக்கு செல்கிறது.

    வாசகர்களே, கர்மாவில் இருந்து தப்பித்து கொள்ள இந்த நாடி சுத்தி பிராணாயாமம் நமக்கு எப்படி உதவி செய்கிறது என்பதை பற்றி சற்று சிந்தித்து பார்ப்போம். பொதுவாக மனிதர்கள் மூச்சை மூன்று வகைகளாக சொல்வார்கள். அவை, மேல் மூச்சு, நடு மூச்சு மற்றும் அடி மூச்சு என்பர். மேல் மூச்சு என்பது உணர்ச்சிவயப்பட்டநிலை, மனத்திற்கு அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையாகும். மேல் மூச்சு என்பது நுரையீரலுடைய மேல் பகுதியை மட்டும் இயக்கும். இதனால் மூச்சின் எண்ணிக்கை அதிகரிக்கும். அப்படி மூச்சின் எண்ணிக்கை ஒரு நிமிடத்திற்கு அதிகரிக்கும்போது நம்முடைய ஆயுள் குறைந்துவிடும். அடிப்படையாக, நம் மூச்சின் எண்ணிக்கை ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு என்ற அளவில் இருக்கும்போது, இறைவனால் நிர்ணயிக்கப்பட்ட ஆயுள் நமக்கு கிட்டும். ஆனால், மேல் மூச்சில், உணர்ச்சிவயப்பட்ட நிலையில், நமது மூச்சினுடைய எண்ணிக்கை உயர உயர ஆயுள் குறையும். அதே நேரம், நாம் இந்த நிலையை தவிர்த்தல் நலம்.

    நடு மூச்சு என்பது, நாம் பல நேரங்களில் சிந்தித்து சில முடிவுகளை எடுக்கும் நிைல இது. அடி மூச்சு என்பது அமைதியான மனநிலையில் இருந்து கொண்டு, பக்தி மார்கத்தில் உருவ வழிபாட்டின் மூலமாகவோ அல்லது அகம் நோக்கிய பிரயாணத்திலோ, தன்னையே உணர்ந்து கொள்ள, தியான நிலையில் இருக்கின்ற நிலையாகும். ஆனால் இந்த மூன்று நிலைகளை கடந்து, நான்காவதாக ஒரு நிலை உள்ளது. அது ஞானிகள் அல்லது சித்தர்களின் மூச்சு எனப்படுகிறது.

    இந்த மூச்சு ஆனது அடி மனம் என்று சொல்லுகின்ற ஆழ் மனதோடு இணைந்துள்ளது. இங்கிருந்து தான் நமக்கு உள்ளே இருந்து தெய்வத்தின் குரல் கேட்கிறது என்று சித்தர்களால் சொல்லப்படுகிறது. எனவே, நமக்குள் உள்ள இறைவனை உணர வேண்டும் என்றல், அந்த மெல்லிய குரலை கேட்டு, உணர வேண்டும் என்றால், நாம் ஞானிகளின் மூச்சோடு நம்மை ஒன்றுபடுத்திக் கொண்டு இந்த நாடி சுத்தி பிராணாயாமத்தை செய்யும் போது மனம் ஆழ்நிலைக்கு செல்கிறது. அப்படி செல்லும்போது நமது பேச்சு அடங்குகிறது.

    எனவே, நாம் பேசாது இருக்கும்போது, நமக்குள் உள்ள இறைவன் பேசுகிறார் என்கிறார்கள் மகான்கள். விஞ்ஞான வழியில் சொல்லும்போது, இந்த ஞானிகளின் மூச்சின் மூலமாக நமது உதிரவிதானத்தை இயக்குகிறோம். அப்போது மனம் அமைதி பெறுகிறது. மேலும் உள் உறுப்பு தசைகள் வலுப்பெறுகிறது. சித்தர்கள் வைத்து இருந்த பயற்சியை, உலகில் உள்ள பாமர மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்கின்ற நோக்கிலே இந்த மூச்சு பயிற்சியை ஏழு நிலைகளில் செய்யக்கூடிய நரம்பு தசைநார் மூச்சு பயிற்சியாக உலகிற்கு அளித்த மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள்தான். நாடி சுத்தி பிராணாயாமமும், வேதாத்திரி மகரிஷி அவர்களால் வடிவமைக்கப்பட்ட, நரம்பு தசைநார் மூச்சு பயிற்சியும் ஒரே பலனை கொடுக்கிறது என்றால் நமக்கு ஆச்சர்யமாக இருக்கும்.

    இந்த ஞானிகளின் மூச்சை இயக்குகின்ற இந்த பயிற்சியை தான் திருமூலர் இதை சர கலை என்று கூறுகிறார். சரம் என்றால் தொடர்ச்சி, வளர்தல், முடிவு, இல்லாதது என்று பொருள். இந்த உடலிலே பிராணன் நீண்ட நாட்கள் தங்குவதற்கு செய்ய கூடிய ஒரு மூச்சு பயிற்சியை தான், திருமூலர் சரகலை என்று குறிப்பிடுகிறார். திருமூலர் ஒரு பாடலிலே சொல்லும்போது சரம் தெரிந்தவரிடம் சரசம் ஆடாதே என்கிறார். அதாவது இந்த மூச்சு செய்பவர் இடத்தில் தேவையில்லாமல் யாரும் வாக்குவாதம் செய்யக்கூடாது என்கிறார். மேலும் சரம் தெரிந்தவர் பரம் பார்ப்பார் என்கிறார். அதாவது இந்த பயிற்சி செய்பவர்கள் எப்பொழுதும், பரம் என்கின்ற இறைவனோடு இணைந்து இருப்பார்கள். அவர்கள் ஏதாவது நினைத்தாலோ, சொன்னாலோ அது அப்படியே நடந்துவிடும் என்று சரகலையின் முக்கத்துவத்தை குறிப்படுகிறார். இந்த சரகலை தான் நாடி சுத்தி பிராணாயாமம் அல்லது மகரிஷி அவர்களின் நரம்பு தசை நார் மூச்சு பயிற்சியாகும்.

    அது போல இந்த சரீரத்தின் மேலே ஐந்து கோசங்கள் என்று சொல்லுகின்ற ஐவகையான போர்வைகள் (உறைகள்) நமக்கு மேலே உள்ளது. அதை முறையே அன்னமய கோசம், மனோமயசோசம், பிராணமய கோசம், விஞ்ஞான மய கோசம், ஆனந்தமய கோசம் என்கின்ற ஐந்து உறைகள் நமக்கு மேலே ஆடையாக உள்ளது. இந்த ஐந்து உறைகளை கடந்து உள் ெசன்றால் நம் ஆன்மாவை நம்மால் உணர முடியும். இந்த பிராணாயாமம் பயிற்சியின் மூலம் நமக்கு ஐந்து கோசத்தில் இருந்து முக்தி கிடைக்கிறது. ஏனென்றால் இந்த பிரபஞ்சமாகிய அண்டத்தில் உள்ளதுதான் பிண்டமாகிய இந்த சரீரத்திலும் இருக்கிறது. அவை முறையே, பஞ்ச பூதங்களாகிய நிலம் என்கிற பருவுடலும், நீர் என்கிற இரத்தமும், உமிழ்நீரும் விந்து நாதம் மற்றும் ஹார்மோன்களும் நெருப்பு என்கிற 98.4 வெப்ப நிலையும் ஆகாசம் என்று சொல்லுகின்ற உயிரும் உள்ளது.

    மேலும் அண்டத்தில், பரம்வெளி மண்டலம் என்கின்ற பால்வெளி மண்டலங்கள் 3 1/2 (மூன்றரை) அளவு வளைவு உள்ளதாக இயங்கிகொண்டு இருக்கிறது. அது போல தான் இந்த உடலின் இயக்கத்திற்கு காரணமான குண்டலினி சக்தியும் 3 1/2 சுற்று வளைந்து படுத்து இருக்கும் பாம்பாகவே உருவகம் படுத்தப்பட்டுள்ளது.

    அன்பர்களே, இந்த பிரபஞ்ச படைப்பிலே அனைத்து இயக்கத்திற்கும் காரணமான சக்தி, ஒன்றே ஒன்றுதான். அண்ட சராசரங்களின் இயக்கத்துக்கும், ஒவ்வொரு தனி மனிதனின் இயக்சுத்துக்கும், காரணமான சக்திக்குதான் குண்டலினி என்று பெயர். எனவே, இந்த குண்டலினி சக்தி என்னும் இறை சக்தியை நமக்குள்ளாக காத்து கொள்ள இந்த நாடி சுத்தி பிராணாயாமம் மிகவும் அவசியம். இந்த இறை சக்தியை நமக்குள் நாம் வாழும் காலத்திலேயே உணர்ந்தால் தான், நாம் கர்மவினை பதிவுகளில் இருந்து விடுபட முடியும். ஏனேன்றால் ஆயுள் என்பது நமது மூச்சோடு தொடர்பு உடையது. இதற்கு மூச்சு எப்படி உதவி செய்கிறது என்கிற சந்தேகம் நமக்கு எழும். இதை அட்டாங்க யோகத்தில் பதஞ்சலி முனிவர் நான்காம் அத்தியாயமாக (பிராணாயாமம்) அமைக்கிறார்.

    மனித உடல் ஆனது திடமாக இயங்க 108 இடங்களில் உயிர்காற்று நின்று இயங்குகிறது. இதையே நாம் உயிர்நிலை ஓட்டம் என்கிறோம். மனித உடலில் உள்ள 10 வாயுக்கள் மேற்சொன்ன 108 இடங்களில் உயிர்காற்றை இயக்குவதாக சித்தர்கள் அறிந்தனர். இந்த தச (10) வாயுக்கள் தான், 108 உயிர் இடங்களை, எப்படி இயக்குகிறது என்பதே பிராணாயாமம்.

    அதே போல் மனிதனின் கண்களுக்கு புலப்படாத பொருட்கள் நான்கு 1. இறை நிலை 2. மனிதனின் உயிர் 3. காற்று 4. நோய். இவை நான்கும் உணர முடியும். இந்த நான்கும் தான் இந்த சரீரத்தை சூட்சமமாக ஆட்சி செய்கிறது. எனவே சித்தர்கள் கண்ணால் காண முடியாத பிராணனை கொண்டு உடலின் நோய்களை போக்கும் வழியை கண்டுபிடித்த முறையே பிராணாயாமம்.

    நாடி சுத்தி என்பது உடலின் நோயை குணப்படுத்தும். மேலும் இந்த உடலை கல்பம் (அழியாதது) ஆக்கும். அறிவை அஜயா என்ற ஒடுக்க நிலைக்கு கொண்டு செல்லும்போது சிற்றறிவு ஆனது பேறறிவோடு இணையும். இதை உணர்ந்த சித்தர்கள், பொய் என்று சொல்லக்கூடிய இந்த தேகத்தை, மெய் என்று நிரூபித்து காட்டி காற்றை பிடித்து, மூலக்கனலை எழுப்பி, மெய்ஞான அமுது உண்டு நரை, திரை, மூப்பு, இன்றி இறவா வரம் பெற்று வாழ்ந்து காட்டியவர்கள் சித்தர்கள்.

    இப்போது இந்த நான்கு வகையான மூச்சை பற்றி சற்று விஞ்ஞான பார்வையாக பார்க்கும் போது இதன் முக்கியத்துவம் விளங்கும்.

    மேல்மூச்சு என்பது உயர் சுவாசித்தல் என்பர். இதை கழுத்தெலும்பு சுவாசம் என்பர். இவ்வாறு சுவாசித்தால், விலா எலும்புகளை மேல் பக்கமாக தூக்கி கழுத்து எலும்பும், தோள்பட்டைகளும் உயர தூக்கும்.அதே நேரம், அடிவயிறு அத்தனையும் உள்ளுக்கு இழுத்து உதிரவிதானத்துக்கு எதிராய் அழுத்தி ஏற்றுவர். இதனால் குறைந்த காற்றே நுரையீரலுக்கு கிடைக்கும். மேலும் உதிரவிதானம் மேல் நோக்கி வந்து விட்டதால் எந்த திசையிலும் விரிவு அடைய வாய்ப்பு இல்லாமல் போய்விடும். இது மிகக்குறைந்த அளவு பலனையே தரும். எனவே இந்த உயர் சுவாசித்தல் என்பது மிகவும் மோசமானது. பல பாகங்களை அழுத்தி உயர்த்தி அதிக வேலையை நம்மிடம் வாங்கி கொண்டு குறைந்த அளவே கை கூடும்.

    நடு மூச்சு என்பது இதை விலா சுவாசித்தல் என்பர். உயர் சுவாசித்தலை விட சற்று கூடுதல் பலன் தரும். இதில் உதிரவிதானம் மேலுக்கு தள்ளப்பட்டு அடிவயிறு அடங்கிய வயிற்றுப்பகுதி உள்நோக்கு இழுக்கப்படுகிறது. இதனால் உயர் சுவாசத்தை விட பலன்கள் சற்று அதிகமாக கிடைக்கும். காரணம் என்னவென்றால், விலா எலும்புகள் சற்ற அதிகமாக தூக்கப்படுவதால், நெஞ்சின் ஒரு பகுதி மட்டுமே விரிவடையும்.

    அடி மூச்சு என்பது, இதை அடி வயிறு சுவாசித்தல் என்பர். இந்த மூச்சு உதிரவிதானத்தின் மேல்பகுதி இயக்கப்படுவதால், மேல் மூச்சு, நடு மூச்சை விட நுரையீரல்கள் இயங்க அதிகமான சுதந்திரம் கிடைக்கும். இதனால் காற்று உள் இழுக்கும். இந்த நிலையில் உதிரவிதானம் இயக்கப்படும் போது குன்று போன்ற அமைப்பு கீழ் நோக்கி அழுத்தப்பட உதிரவிதானம், வயிற்றுப் பகுதி பாகங்களை அழுத்தி, அப்பகுதியை உந்தி வெளி தள்ளும். இதனால் கூடுதலான பிராண சக்தி கிடைக்கும்.

    ஞானிகள் மூச்சு என்பது, மூச்சை உள் இழுத்து, வெளிவிடும்போது உள்ளே இருக்கும், உடலுக்கு ஒவ்வாதவற்றை அகற்றி, அனைத்து சுவாச உறுப்புகளையும் முழு இயக்கத்திற்கு உட்படுத்தும். நுரையீரலின் ஒவ்வொரு செல்லையும், ஒவ்வொறு பகுதியையும் முழு மையான இயக்கத்திற்கு உட்படுத்தும். குறைந்த சக்தி செலவில் அதிகமான சுவாச பலனை எட்ட வைக்கும். மேலும் மார்பு கூடு அனைத்து திசைகளிலும், அதிகப்படியான விரிவுக்கு உட்படுத்தப்பட்டு சுவாசத்தில் ஈடுபடும் அனைத்து உறுப்புகளும் தானாக முழு உழைப்புக்கு தள்ளப்பட்டு விடுவதால் முழு பலனும் கை மேல் கிடைக்கும். இதனால் நெஞ்சு மற்றும் அதன் உதிரி பாகங்களை வயிறு மற்றும் அதன் உதிரி பாகங்களில் இருந்து பிரிக்கும். தசை சுவரான உதிரவிதானம் முழுவதும் வேலை செய்யும். இந்த ஞானிகள் மூச்சின் பலன் நமக்கு நாடி சுத்தி பிராணாயாமம் நரம்பு தசை நார் மூச்சு பயிற்சி மூலம் கிடைக்கிறது.

    யோகிகளின் இந்த சுவாசக் கலையை, அவர்கள் பவகார யோகம் என்கிறார்கள். அதாவது தொடர் நாடி சுத்தி பிராணாயாமம் பயிற்சியினால், யோகியானவர்கள் மரணத்தின் மீது முழு ஆதிக்கம் செலுத்தி, அதனோடு மூச்சின் மீதும் மனதின் மீதும் ஆதிக்கம் செலுத்தி, புவி ஈர்ப்பு விசை எல்லைகளை கடந்து செல்லும் நிலை கிடைக்கிறது. எனவே, ஜீவ பிரம்ம ஐக்கிய முக்தி நிலையை வாழும் காலத்திலேயே கொடுக்கக்கூடிய சர கலையை நாம் செய்யும்போது ஆயுள் நீடிக்கிறது.

    எப்போது நாம் ஆயுளை நீட்டித்து மரணத்தை வெல்கிறோமோ அப்போதே நமது கர்மவினை பதிவுகளில் மாற்றம் ஏற்பட்டு, நமது விதியை மதியால் வெல்லுகின்ற சூட்சமம் கிடைக்கிறது. அந்த சூட்சம ரகசியங்களை பற்றி மேலும் ஆராய்ச்சி செய்வோம்.

    • நாம் அனைவரும் பணம், பதவி, பட்டம் என்று ஓர் எல்லையை வகுத்து இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
    • மூக்கின் வழியாக உள்ளே இழுக்கப்படும் காற்று மூச்சுக்குழாய்கள் வழியாக நுரையீரலைச் சென்றடைகிறது.

    பல ஆயிரம் கோடி அணுக்கள் உள்ள நம் உடல் ஓர் உயிரணுவில் இருந்துதான் உருவாகிறது என்றால் எவ்வளவு வியப்பாக உள்ளது! ஓர் உயிரணு இரண்டாகப் பிரிந்து பிறகு நான்கு, எட்டு, பதினாறு எனப் பிரிந்து திசுக்கள், உடல் உறுப்புகள், ரத்தக் குழாய்கள், தோல், தசை, கொழுப்பு எனப் பல கூறுகளாகப் பிரிகின்றன. நம் உடலுக்குள் கண்டுபிடிக்கப்பட முடியாத, இன்னும் சரியாக விவரிக்கப்பட முடியாத விந்தைகள் பல உள்ளன.

    நாம் அனைவரும் பணம், பதவி, பட்டம் என்று ஓர் எல்லையை வகுத்து இயங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நம் உடலின் இயல்புகள் பற்றியோ அல்லது, ஓர் உறுப்பு, செயல்படாமல் போனால் என்ன ஆகும் என்பது பற்றியோ புரிந்துக் கொள்ள முயல்வதில்லை, அதற்கு நாம் நேரம் ஒதுக்குவதுமில்லை.

    "சிறுநீரகத்தின் மதிப்பு", அது பழுது பட்டு, நினைத்த நேரத்தில் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் துயர்ப்படும் நோயாளிகளுக்குத்தான் தெரியும். "இதயத்தின் மதிப்பு" அதனால் இடராகிச் சிறிது தொலைவு நடந்தால் கூட மூச்சு வாங்கும் நோயாளிக்குத்தான் தெரியும், கை கால்கள் நடக்க முடியாமல் தடுமாறும் நோயாளிக்குத்தான் தெரியும் "மூளையின் அருமை".

    எனவே நம் உடல் உறுப்புகளின் மதிப்பை உணர்வதற்காக உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ஆகும் செலவைத் தோராயமாக இங்கே பட்டியலிட்டுள்ளேன்.

    1. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ.10-20 லட்சங்கள்

    2. கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ.25-30 லட்சங்கள்

    3. நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 25-30 லட்சங்கள்

    4. இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 20-25 லட்சங்கள்

    5. கணைய மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 15-20 லட்சங்கள்

    6. மூச்சுக்குழாய் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 5 லட்சங்கள்

    7. விழித்திரை மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம்

    8. தோல் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு ரூ. 1 லட்சம்


    உடல் உறுப்புகளின் மதிப்பை இப்போது உணர்ந்து விட்டீர்களா? இவ்வளவு லட்சங்கள் நம் கையில் இருந்தால் மட்டும் போதும், இந்த உறுப்புகளை வாங்கிப் பொருத்திக் கொள்ளலாம் என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். இந்த உறுப்புகள் ஒருவருக்குப் பொருத்தமானதாக இருக்கிறதா? இல்லையா? என்பதைக் கண்டறிவதே கடினம்.

    நாம் பேணிப் பாதுகாக்க வேண்டியவை விலைமதிப்பில்லா நம் உடல் உறுப்புகளையே, பணத்தையல்ல. பணம் தேவைதான்.! பணமே வாழ்க்கை அல்ல. நாம் சம்பாதித்த பணத்தால், உடல் உறுப்புகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள், உடல் உறுப்புகளைப் பேணிப்பாதுகாக்க முயலுங்கள்.

    உடலின் இயல்புகள் பற்றித் தெரிந்து கொண்டால்தான், சிக்கல்கள் ஏற்படும்போது அதை எளிதாகக் கண்டறியலாம்.

    ஆண்களுக்கு இதயத் துடிப்பு, சராசரியாக நிமிடத்திற்கு 70 முதல் 80 முறை இருக்கிறது, அதேபோல் பெண்களுக்கு நிமிடத்திற்கு 72 முதல் 82 முறை துடிக்கிறது. பொதுவாக, ஓய்வு நேரத்தில் குறைந்த அளவும், ஏதேனும் பயிற்சிகள் அல்லது வேலை செய்யும்போது அதிகமாகவும் இதயம் துடிக்கிறது. உடலுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தைக் கொடுப்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. இதயத்தை எப்படிப் பாதுகாப்பது என்பது பற்றிப் பகுதி 4-ல் பார்ப்போம்.

    மரு.அ.வேணி

    மரு.அ.வேணி

    ஒரு நிமிடத்திற்கு நாம் 12 முதல் 20 முறை மூச்சிழுத்து விடுகிறோம். நாம் செய்யும் வேலைகளுக்கு ஏற்றவாறு இதன் அளவும் வேறுபடுகிறது. மூக்கின் வழியாக உள்ளே இழுக்கப்படும் காற்று மூச்சுக்குழாய்கள் வழியாக நுரையீரலைச் சென்றடைகிறது. மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கவும், வெளியேற்றவும் உதரவிதானம், மார்பக எலும்புகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள தசைகள் உதவுகின்றன.

    குழந்தை, பிறக்கும்போது பொதுவாக 270 எலும்புகளுடன் பிறக்கிறது. பருவத்திற்கு வரும்போது 206 முதல் 213 எலும்புகளாக ஒன்றோடொன்று இணைந்து அவை எண்ணிக்கையில் மட்டும் குறைகின்றன. சிலருக்கு விலா எலும்புகளும், முதுகெலும்புகள் மற்றும் அதன் இலக்கங்களும் மாறுபடுவதே இந்த மாறுபாட்டிற்கான முக்கியக்காரணம்.

    "ரத்தம்" என்பது பிளாஸ்மா மற்றும் ரத்த அணுக்களினால் ஆனது. இதில் பிளாஸ்மா என்பது திரவப்பகுதியைக் குறிக்கிறது. இது நீர், உப்புகள் மற்றும் புரதத்தால் ஆனது. ரத்த அணுக்களில் சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் தட்டணுக்கள் ஆகிய மூன்றும் உள்ளன. சிவப்பு ரத்த அணுக்கள் நுரையீரலில் இருந்து திசுக்கள் மற்றும் உறுப்புகளுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்கின்றன. வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை உடலுக்கு வழங்கிக் கிருமிகளிடம் இருந்து நம்மைப் பாதுகாக்கின்றன. தட்டணுக்கள், ரத்தம், ரத்தக் குழாய்களில் இருந்து வெளியேறினால் உறையும் தன்மையை ஏற்படுத்தி, ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்துகிறது. ஒவ்வொரு உடலிலும் உள்ள ரத்தம் சிவப்பு நிறத்தில் இருந்தாலும், அதன் வகையில் பல மாற்றங்கள் இருக்கின்றன.

    Rh காரணி என்று அழைக்கப்படும் ஒரு புரதம் ரத்தத்தில் உள்ளதா? (Rh+) இல்லையா? (Rh-) என்பதைப் பொறுத்து, மனித உடலின் ரத்த வகைகளை முதன்மையான எட்டுப் பிரிவுகளாகப் பிரிக்கலாம். (A+, A-, B+,B-, O+, O-, AB+, AB-).

    O - Positive - 40 %

    A - Negative - 6 %

    A - Positive - 32 %

    AB - Positive - 4 %

    B - Positive - 11 %

    B - Negative - 2 %

    O - Negative - 7 %

    AB - Negative - 1 %

    A1B+, A1B-, A2B+, A2B-..,Etc.., A1 மற்றும் A2 அரிதான துணைக்குழுக்கள். உலக அளவில் மிகவும் அரிதான வகை ரத்தம் AB நெகடிவ் மற்றும் Rh-null ஆகியவை. இந்த Rh-null ரத்தவகை Rh எதிர்மறையில் இருந்து வேறுபட்டது. ஏனெனில் இதில் Rh ஆன்டிஜென்கள் எதுவும் இருக்காது.

    உடலில் கண்களின் பங்கு...

    மனிதன் இந்த உலகத்தைப் பார்த்து ரசித்து வாழ்கையை வாழ இயற்கை நமக்கு வழங்கிய கொடை கண்கள். இந்தக் கண்களை நம் முன்னோர்கள் மிகவும் பக்குவத்தோடு பாதுகாத்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நாம் அந்தக் கண்களை ஒரு பொருட்டாகக்கூட மதிப்பது இல்லை. அதிகப்படியான செல்போன் பயன்பாடு, கணினி பயன்பாடு உள்ளிட்ட பல காரணங்களால் கண்கள் பாதிக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி முறையற்ற உணவுப் பழக்கத்தால், கண்களுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பது இல்லை. இதனால் இன்று சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண் தொடர்பான நோய்கள், பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். இது தொடர்பாக விரிவான தகவல்களை பின்வரும் பகுதிகளில் பார்க்கலாம்.

    மனித உடலை இயற்கை கட்டமைத்து இருப்பதே ஒரு வியக்கத்தக்க விஷயம்தான். உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் அதன் பணியைச் சரியான நேரத்தில் முறையாகச் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்? சிந்தித்துப் பாருங்கள். நாம் ஓய்வெடுக்கும் பொழுதும், உடல் அதன் பணியைத் தலையாய கடமை என நினைத்துக் கண்ணியத்துடன் பணியாற்றுகிறது. அந்த உடல் உறுப்புகளுக்கு நாம் கொடுக்க வேண்டிய வெகுமதி அவற்றின் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாப்பதுதான். அது மட்டுமின்றி, உங்கள் குடும்பத்தினருக்கோ அல்லது இந்தச் சமுதாயத்திற்கோ நீங்கள் எதையாவது பரிசாக வழங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால், உங்கள் ஆரோக்கியத்தைப் பரிசாக வழங்குங்கள். அதுவே சிறந்த வாழ்க்கைக்கு வழிவகை செய்யும்.

    மரு.அ.வேணி (7598001010, 8056401010)

    • சலனமற்ற அவர் நடவடிக்கையை உற்றுக் கவனித்து நான் அவரிடமிருந்து ஞானம் பெற்றேன்!` என்றார் முனிவர்.
    • ஒவ்வொரு நாளும் காலை வேளையில் அழுக்கு மூட்டைகளை முதுகில் சுமந்துகொண்டு எந்தச் சலனமும் இல்லாமல் மெல்ல நடந்து செல்கிறது.

    வாழ்க்கையில் நாம் அடைய வேண்டியது அறிவு அல்ல. ஞானம்.

    புத்தகங்களைப் படித்தோ பலரிடம் பாடம் கேட்டோ தொடர்ந்த முயற்சி மூலம் யார் வேண்டுமானாலும் அறிவை அடைந்துவிடலாம்.

    ஆனால் ஞானத்தை அனுபவம் சார்ந்த முதிர்ச்சி மூலமே ஒருவன் அடைய முடியும்.

    வாழ்வில் பெற வேண்டிய பேறுகளில் எல்லாம் மிகப் பெரிய பேறு ஞானம்தான்.

    ஒருவனுக்கு திடீரென்று ஞானம் என்றால் என்ன என்று ஒரு சந்தேகம் வந்தது.

    அவன் எவ்வளவோ புத்தகங்களைப் படித்திருக்கிறான். பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கிறான்.

    ஆனால் நிறையத் தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பது அறிவுதானே தவிர ஞானம் ஆகாது என்று அவனுக்குப் புரிந்துவிட்டது.

    ஞானம் பற்றித் தெரிந்துகொள்வதற்காகப் பல இடங்களில் தேடி இறுதியாக ஓர் ஆசிரமத்தில் தவம் புரிந்துவந்த ஒரு முனிவரை அணுகினான். அவர் முகத்தில் இருந்த தெய்வீகப் பொலிவு அவர் ஞானம் பெற்றவர் என்பதை அவனுக்கு உணர்த்தியது.

    அவரிடம் `சுவாமி! ஞானம் என்றால் என்ன? எனக்கு நீங்கள் விளக்க முடியுமா?` என்று பணிவுடன் வினவினான்.

    முனிவர் அவனையே அருள்பொங்கப் பார்த்தார். அவனிடம் தென்பட்ட முழுமையான அடக்கம் அவருக்கு நிறைவு தந்தது.

    ஞானம் பற்றி அடக்கம் உடையவர்கள் தானே அறிந்துகொள்ள அதிகாரம் பெற்றவர்கள்? இவன் ஞானம் அடைய உரிமை பெற்றிருக்கிறான் என அவர் கருதினார்.

    அவனைத் தன்னருகே அமரச் சொன்ன அவர், 'அன்பனே! இன்பத்தினால் மகிழ்ச்சி அடையாமலும் துன்பத்தினால் துவண்டு போகாமலும் இருப்பதுதான் ஞானம் எனப்படுகிறது!` என்றார்.

    அவன் திகைப்படைந்தான். சொல்வது சரி, ஆனால் அப்படி ஒருவர் இருக்க முடியுமா என அவனுக்கு சந்தேகம். இன்பத்தில் ஒருவர் ஆனந்தம் கொள்வதும் துன்பத்தில் அவரே சோர்வடைவதும் இயல்புதானே, அந்த உணர்வுகளை எப்படி வெல்வது என அவன் மனம் யோசித்தது.

    `சரி சுவாமி. இத்தகைய ஞானத்தை நீங்கள் எங்கு கற்றீர்கள்? எப்படி அடைந்தீர்கள்?` என வினவினான் அவன்.

    `நான் அதை ஒரு குருவிடம் கற்றேன்!` என்றார் முனிவர்.

    `அந்த குருவிடமிருந்து நானும் அதைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அவர் எந்த மொழியில் பேசுவார்?` என ஆவலோடு கேட்டான் அவன்.

    முனிவர் கலகலவென்று நகைத்தார்.

    `அந்த குரு பேசுவதில்லை. மெளனம்தான் அவர் மொழி. பேச்சால் அவர் தன் உபதேசத்தைச் செய்வதில்லை. தன் செய்கை மூலம்தான் புலப்படுத்துவார். நாம்தான் அதைப் புரிந்துகொண்டு ஞானம் பெற வேண்டும்!` என்றார்.

    `நல்லது சுவாமி! அவர் எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார்? அவரை நான் எப்போது எங்கே சந்திக்க முடியும்?` என ஆவலோடு அவன் அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினான்.

    முனிவர் அவன் ஆர்வத்தைக் கண்டு நகைத்தார்.

    `அவர் நாள்தோறும் அதிகாலையில் இந்த வழியாகத்தான் போவார். அதுமட்டுமல்ல, சூரியாஸ்தமன நேரத்தில் மாலையில் இதே வழியாகத்தான் திரும்பி வருவார். சலனமற்ற அவர் நடவடிக்கையை உற்றுக் கவனித்து நான் அவரிடமிருந்து ஞானம் பெற்றேன்!` என்றார் முனிவர்.

    `நான் அவரைப் பார்க்க வேண்டுமே?` என்று பரபரத்தான் அவன்.

    `அன்பனே! நீ இன்றுபோய் நாளை அதிகாலையில் ஆசிரமத்துக்கு வா! நாம் வாயிலிலேயே காத்திருந்தால் அவர் நடந்துசெல்லும்போது அவரைப் பார்த்துவிடலாம். அவர் நடவடிக்கையை என்னைப்போல் நீயும் உற்று கவனித்து ஞானம் பெறலாம்` என்றார் முனிவர்.

    அவன் மறுநாள் வருவதாகச் சொல்லிவிட்டு மகிழ்ச்சியோடு புறப்பட்டான்.

    அன்றிரவு முழுவதும் அவன் சரியாக உறங்கவில்லை. ஞானம் பெற வேண்டும் என்ற வேட்கையே அவன் மனத்தைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது...

    மறுநாள் காலை ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்த அவனை ஆசிரமத்தின் வாயிலுக்கு அழைத்துச் சென்றார் முனிவர். வரப்போகிற குருவின் வருகையை எதிர்பார்த்து அவர்கள் வழிமேல் விழிவைத்து ஆவலோடு காத்திருந்தார்கள்.

    கொஞ்ச நேரத்தில் அந்த வழியாக, பெரிய பெரிய அழுக்கு மூட்டைகளை முதுகில் சுமந்தபடி ஒரு கழுதை நிதானமாக நடந்து வந்தது. சற்றுத் தொலைவில் அதைப் பின்தொடர்ந்து ஒரு மனிதனும் வந்துகொண்டிருந்தான்.

    அந்தக் கழுதையைச் சுட்டிக்காட்டிய முனிவர் இவரே என் குரு என்று இருகரம் கூப்பிக் கழுதையை வணங்கினார். அவன் திகைத்தான்.

    `இந்தக் கழுதையார் எதுவும் பேசுவதில்லை. ஆனால் தொடர்ந்த தன் செயல்பாட்டால் எனக்கு ஞானத்தைக் கற்பித்தார்!` என்றார் முனிவர்.

    அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. முனிவர் விளக்கலானார்:

    'அன்பனே! நாள்தோறும் அதிகாலையில் இந்தக் கழுதையை நான் பார்ப்பேன். இது ஒவ்வொரு நாளும் காலை வேளையில் அழுக்கு மூட்டைகளை முதுகில் சுமந்துகொண்டு எந்தச் சலனமும் இல்லாமல் மெல்ல நடந்து செல்கிறது.

    கொஞ்ச தூரத்தில் ஒரு நதி இருக்கிறது. அங்கே போய் இந்த அழுக்குத் துணிகளையெல்லாம் கல்லில் அடித்துத் துவைத்துச் சுத்தம் செய்வான் உடன்வரும் மனிதன். பின்னர் அழுக்குப் போன சுத்தமான துணிகளை மூட்டையாகக் கட்டி கழுதையின் முதுகில் ஏற்றுவான்.

    கழுதை சுத்தம் செய்யப்பட்ட துணிகள் அடங்கிய மூட்டையுடன் மாலையில் திரும்பி இந்த வழியாகவே நடந்து வரும். வரும்போதும் போகும்போதிருந்த அதே நிதானம்.

    இப்போது தன் முதுகில் ஏற்றப்பட்டுள்ள துணிகள் சுத்தம் செய்யப்பட்டவை என்ற கர்வமோ மகிழ்ச்சியோ அதன் முகத்தில் ஒருசிறிதும் தென்படுவதில்லை.

    அன்பனே! நாம் இந்தக் கழுதைபோல் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். காலையிலே போகும்போது அழுக்கு மூட்டைகளைச் சுமந்து செல்கிறோம் என்ற வருத்தமும் அதற்கு இல்லை. மாலையில் திரும்பி வரும்போது அழுக்கு நீக்கப்பட்ட சுத்தமான துணிகளைச் சுமந்துவருகிறோம் என்பதில் மகிழ்ச்சியும் அதற்கு இல்லை.

    நாமெல்லாம் கழுதைகள்தான். துன்ப நினைவுகள் என்ற அழுக்கைச் சுமக்கிறோம். இன்ப நினைவுகள் என்ற சுமையையும் சுமக்கிறோம். இந்தக் கழுதையைப் போல் நம் சுமைகள் எப்படி இருந்தாலும் அவற்றால் பாதிக்கப் படாமல் இருப்போமானால் நிம்மதியாக வாழலாம்.

    இன்பத்தாலும் துன்பத்தாலும் பாதிக்கப் படாமலிருக்கும் கழுதையின் மனநிலையை நாம் பயிற்சி மூலம் பெறவேண்டும். அதுவே ஞானம். அதை நீயும் அடைவாயாக!`

    என்றார் முனிவர்.

     

    அந்த மனிதன் அவரைக் கைகூப்பி வணங்கினான். ஞானம் பெற்றுவிட்டால் ஞானியாகி விடலாம். ஞானிகளை இன்ப துன்பங்கள் பாதிப்பதில்லை என்பதை அவன் புரிந்துகொண்டான்...

    திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்கிறோம். திரைப்படத்தில் ஓர் அருவி வருகிறது. அருவியில் தண்ணீர் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது. படம் முடிந்து பார்க்கும்போது படம் காட்டப்பட்ட திரையில் ஒரு சிறிதளவு ஈரம் கூட இல்லை.

    அதேபோல் நெருப்புப் பிடித்து எரிகின்ற காட்சிகள் திரைப்படத்தில் வருகின்றன. ஆனால் அந்தத் திரையை அதில் காட்டப்பட்ட நெருப்பு பாதிப்பதில்லை. திரை அதனால் கருகிப் போவதில்லை.

    படத்தில் வருகின்ற நீருக்கும் நெருப்புக்கும் அந்தத் திரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    நாம் அந்தத் திரை மாதிரி இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நம் மனமே அந்தத் திரை. நம் மனத்தில் தோன்றும் இன்ப துன்ப நினைவுகளே திரையில் தோன்றும் நீரும் நெருப்பும்.

    எப்படி திரையில் தோன்றும் நீராலோ நெருப்பாலோ அந்தத் திரை பாதிப்படைவது இல்லையோ அதுபோல் இன்ப துன்பங்கள் நம் மனத்தை பாதிக்கக் கூடாது.

    அத்தகைய பக்குவம் நமக்கு வந்துவிட்டால் அதுவே ஞானம். அத்தகைய ஞானம் பெற்றுவிட்டால் எந்த இன்பமும் சரி, எந்தத் துன்பமும் சரி, நம்மை ஒன்றும் செய்யாது.

    யார் கற்றுக் கொடுக்கிறார்கள் என்பது முக்கியமில்லை. கற்றுக் கொடுப்பவர் அது கழுதையானால் என்ன, திரையரங்கத்தின் காட்சித் திரை ஆனால் என்ன? அவற்றிடமிருந்து எதைக் கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் முக்கியம்.

    ராமபிரான் இன்பத்தையும் துன்பத்தையும் சமமாக பாவிக்கும் ஞானிக்குரிய மனநிலையைப் பெற்றிருந்தான். உனக்கு மகுடம் உண்டு என்றபோது அவன் இன்பத்தில் ஆழவில்லை. அந்த மகுடம் உனக்கில்லை, உன் தம்பிக்குத் தான், நீ காட்டுக்குப் போ என்று சொன்னபோது அந்தச் செய்தி அவனை வருத்தவுமில்லை.

    இன்ப துன்பங்களை ஒன்றாக பாவிக்கும் மனநிலையை அவன் பெற்றிருந்ததே அதற்குக் காரணம்.

    ராமபிரானது இந்த அரிய பண்பை இலங்கையில் அசோக மரத்தடியில் வீற்றிருக்கும் சீதை நினைத்துக் கொள்கிறாள்.

    `மெய்த்திருப்பதம் மேவென்ற போதினும்

    இத்திருத்துறந்து ஏகென்ற போதினும்

    சித்திரத்தில் அலர்ந்த செந்தாமரை

    ஒத்திருக்கும் முகத்தினை உன்னுவாள்`

    என்கிறார் கம்பர். ராமனின் முகம் சித்திரத்தில் மலர்ந்த செந்தாமரைபோல் இருந்தது என்கிறார்.

    குளத்தில் பூத்த உண்மைத் தாமரைகள் மாலையில் வாடிவிடும். சித்திரத் தாமரைகள் ஒருபோதும் வாடுவதில்லை. ராமன் திருமுகத்தில் துன்பத்தால் வாட்டம் ஒருபோதும் தோன்றுவதில்லை.

    பற்றில்லாமல் எந்தச் செயலையும் செய்யும் ஞான நிலைக்கு நாம் உயர வேண்டுமானால் தெய்வத்தின்மேல் பக்தி கொண்டு தெய்வத்தையே சரணடைந்து வாழவேண்டும் என்கிறது வள்ளுவம்.

    `பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

    பற்றுக பற்று விடற்கு`

    என்கிறார் திருவள்ளுவர்.

    எந்தப் பற்றும் இல்லாத முழுமையான ஞானியான கடவுளின் பாதங்களை மனதளவில் இறுகப் பற்றிக் கொண்டால் நாம் நமது பற்றுகளிலிருந்து எளிதாக விடுபட முடியும்.

    அப்படிப் பயிற்சி செய்தால் இன்பமும் துன்பமும் அற்ற நிம்மதியான மனநிலையை நாம் அடைய முடியும். அதுவே ஞானம். ஞானம் பெறுவதே மனித வாழ்வின் நோக்கம்.

    தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

    • பாரதத்தின் உயரிய விருதான பாரத் ரத்னா இதுவரை ஐந்து பெண்மணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    • அறிவில் சிறந்தவர் ஆணா, பெண்ணா? பெண்ணே தான் என்று அடித்துக் கூறினார் பூங்கோதையார்.

    மார்ச் 8-ம் நாள் உலக மகளிர் தினம். 2024-ம் ஆண்டின் கோஷமாக முன்னிலைப்படுத்தப்படுவது : பெண்கள் முன்னேற்றத்தில் முதலீடு செய்யுங்கள்; முன்னேற்றத்தை துரிதப்படுத்துங்கள்.

    உலக ஜனத்தொகை 810 கோடி என்ற எண்ணிக்கையை 2024-ல் எட்டி விட்டது. இதில் மகளிரின் எண்ணிக்கை 49 சதவீதம்.

    பெண்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதாக அனைவரும் கூறி வந்த போதிலும் உலகில் சுமார் 8 சதவீத பெண்கள் அன்றாட உணவிற்கே அல்லல்படும் நிலையில் இருக்கின்றனர். ஆகவே சுருக்கமாகச் சொல்லப் போனால், "போகுமிடம் வெகு தூரம்; போக வேண்டும் நெடு நேரம்" என்பதே பெண்களின் சம உரிமைப் போராட்டத்தின் இன்றைய நிலை.

    பெண்கள் இன்றிருக்கும் நிலையைக் கூடத் தாமாகப் பெறவில்லை. அதற்கென ஆங்காங்கே உரிமைப் போர்கள் நடைபெற்றே வந்தன.

    பெண்கள் போராடிப் பெற்ற ஓட்டுரிமை: பெண்கள் சாதாரணமாகப் பெறவில்லை ஓட்டுரிமையை! மிகுந்த போராட்டம் அதற்காகவே பிரிட்டனில் வெடித்தது. பெண்கள் ஓட்டுரிமை வேண்டும் என்று கேட்டபோது "பைத்தியக்காரத்தனமான, சூழ்ச்சி நிறைந்த முட்டாள் பெண்கள் கேட்கும் உரிமை இது" என்று கூறிய விக்டோரியா மகாராணியார் ஒரு பெண்ணிற்கு சாட்டையால் அடித்து தண்டனை தர ஆணையிட்டார்.

    ஆனால் பெண்கள் அசரவில்லை. 1901-ம் ஆண்டு ஏழாம் எட்வர்ட் பட்டம் சூட்டியபோது எமிலின் பங்கர்ஸ்ட் என்ற பெண்மணியின் தலைமையில் கூட்டம் கூட்டமாகப் பெண்களின் அணி திரண்டது. ஆண்கள் கூட்டம் போடும் இடங்களிலெல்லாம் அவர்கள் திடீரென வந்து குதித்தனர். மேடை மீது ஏறி மெகா போன் வாயிலாக எங்களுக்கும் ஓட்டுரிமை வேண்டும் என்று கோஷமிட்டனர். உண்ணாவிரதம் இருந்தனர். சிறைக்கும் சென்றனர்.

    இந்தியாவில் வைசிராயாக இருந்த லார்ட் கர்ஸான் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்பதற்காக பதினைந்து காரணங்களைப் பட்டியலிட்டார். ராயல் கமிஷனோ 'ஒரு பெண்ணின் மூளை எதையும் சமாளித்து ஈடு கொடுக்க வல்லதா" என்று ஆராய முற்பட்டது. ஆனால் பெண்கள் அயர்ந்து போகவில்லை. முதலாம் உலக மகாயுத்தம் 1914-ல் ஆரம்பிக்கவே ஆண்கள் போர்க்களம் செல்லவே, அனைத்து வேலைகளையும் பெண்கள் மேற்கொண்டு தங்கள் திறனைக் காண்பித்தனர். டிராம் விடுவது, கார்களை ஓட்டுவது, மெகானிக்குகளாக அனைத்து வாகனங்களையும் பழுதுபார்ப்பது உள்ளிட்ட வேலைகளை அவர்கள் செய்து காட்டவே உலகமே பிரமித்தது. 1918-ல் யுத்தம் முடிந்தது. பிரதம மந்திரி ஜார்ஜ் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கினார். போராட்டம் உலகெங்கும் வலுக்கவே இன்னும் 28 நாடுகள் பெண்களுக்கு உரிமையை வழங்கின. 1952-ல் களமிறங்கிய ஐ.நா. உலகெங்கும் ஆண்களுக்கும் இருக்கும் அனைத்து உரிமைகளையும் பெண்களுக்குக் கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

    முன்னோடிகள்: பெண்களின் உரிமைக்காகப் போராடிய ஏராளமான அதிசயப் பெண்மணிகள் உள்ளனர். எடுத்துக்காட்டிற்கு எலினார் ரூஸ்வெல்டைச் சொல்லலாம். அமெரிக்க ஜனாதிபதியாக நான்கு முறை பதவி வகித்து சாதனை புரிந்த பிராங்ளின் ரூஸ்வெல்டின் மனைவியான இவர், அவரது வெற்றிக்குக் காரணமாகத் திகழ்ந்தவர்.

    அத்தோடு வெள்ளை மாளிகையில் குடியேறியவுடன் அவர் அடிக்கடி நிருபர்களைச் சந்திக்கப் போகிறேன் என்றார். அனைவரும் மகிழ்ந்த அந்த வேளையில் அற்புதமான அடுத்த வரியை அவர் கூறினார்: "ஆனால் அவர்கள் எல்லோரும் பெண்களாகவே இருக்க வேண்டும்!"

    அனைவரும் பிரமித்தனர். எல்லா பத்திரிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு பெண் நிருபர்களை வேலைக்கு அமர்த்தின. பத்திரிகை உலகம் புதிய அழகைப் பெற்றது. செய்திகளின் தரமும் கூடியது.

    அதே போல உலக அரங்கில் பெண்களின் தாக்கம் அதிகமானது. இதுவரை அறிவிக்கப்பட்ட 864 நோபல் பரிசுகளில் 64 பரிசுகளை பெண்மணிகள் இலக்கியம், மருத்துவம், அமைதி, ரசாயனம், இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் பெற்றுள்ளனர்.

    பாரத ரத்னா: பாரதத்தின் உயரிய விருதான பாரத் ரத்னா இதுவரை ஐந்து பெண்மணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி, மதர் தெரசா, அருணா ஆசப் அலி, இசையரசி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, லதா மங்கேஷ்கர் ஆகியோர் இந்த உயரிய விருதைப் பெற்றுள்ளனர்.

    விண்வெளி வீராங்கனைகள்: 1963-ல் முதல்முறையாக வாலெண்டினா தெரஷ்கோவா என்ற ரஷிய பெண்மணி தனது 26-ம் வயதிலேயே விண்ணில் பறந்து சாதனை நிகழ்த்திக் காட்டினார். தொடர்ந்து விண்வெளிக்குச் சென்ற சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட விண்வெளிப் பயணிகளில் வீராங்கனைகள் ஏராளமானோரும் இந்தச் சாதனையில் ஈடுபட்டனர். ஸ்வெட்லேனா சாவிட்ஸ்கி, சாலி ரைட், கிறிஸ்டா மக்லிப், மே ஜெமிசன், ஐலீன் காலின்ஸ், இந்திய வீராங்கனையான கல்பனா சாவ்லா, பெக்கி விட்சன், கிறிஸ்டினா கோச், ரெசிகா மெய்ர், கேட் ரூபின்ஸ் செய்த சாத னைகள் வியப்பூட்டுபவை; பிரமிக்க வைப்பவை.

    உத்வேகமூட்டும் பெண்மணிகள்:

    உலகளாவிய விதத்தில் உத்வேகமூட்டும் பெண்மணிகள் பட்டியலைத் தயாரிக்கும் பத்திரிகைகளும், சர்வே நிபுணர்களும் தரும் தகவல்கள் சுமார் பத்தாயிரம் பேரைச் சுட்டிக் காட்டுகின்றன. அரசியலில் நியூசிலாந்து பிரதம மந்திரி, ஜேசிந்தா ஆர்டன், அமெரிக்காவின் கமலா ஹாரிஸ் மற்றும் ஹில்லாரி க்ளிண்டன், இந்தியாவின் நிர்மலா சீதாராமன், அழகிகள் மற்றும் திரைப்படத் துறையில் ஐஸ்வர்யா ராய், சீன நடிகை யாங் மி, ப்ரியங்கா சோபிரா, பாடகிகளில் டெய்லர் ஸ்விப்ட் உள்ளிட்டோர் முன்னணியில் இடம் பெறுகின்றனர்.

    இன்போசிஸ் பவுண்டேஷனை நிறுவிய சுதா மூர்த்தி சிறந்த எழுத்தாளர். சேவை மனப்பான்மை கொண்டவர். கோவிட் காலத்தில் அவர் ஆற்றிய சேவையை அனைவரும் பாராட்டினர். உலகத்தில் மீடியா துறையில் ஒரு கலக்கு கலக்கி முன்னணியில் நிற்பவர் ஓபிரா வின்பிரே. சிறு வயதில் பல கொடுமைகளுக்கு ஆளாகி சுயமாக முன்னுக்கு வந்த இவர் பெண்களுக்காக குரல் கொடுப்பது நியாயமானதே.

    நீண்ட இந்த பட்டியலில் அன்றாடம் சேரத் துடிக்கும் பெண்மணிகளால், இது ஆயிரம் ஆயிரமாகப் பெருகும் என்பதில் ஐயமில்லை. விளையாட்டுத் துறையிலும் அறிவியலிலும் சாதனை படைக்கத் துடிக்கும் பெண்மணிகள் எங்களுக்கு இங்கு சில இடைஞ்சல்கள் இருக்கின்றன என்று சொல்வது கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம்!

    பிரபலம் வேண்டாம்; சாதனையே முக்கியம்!

    எங்களுக்குப் பெயர் வேண்டாம், புகழ் வேண்டாம், காசு பணம் வேண்டாம் என்று சொல்லும் அபூர்வப் பெண்மணிகளும் இல்லாமல் இல்லை. எடுத்துக்காட்டிற்கு திம்மக்காவைக் கூறலாம். இவருக்கு இப்போது வயது 112. கர்நாடகத்தில் பழைய மைசூர் ராஜ்யத்தில் குப்பி தாலுக்காவில் (இப்போது தும்கூர்) 1911, ஜூலை 8-ம் நாள் பிறந்த இவர் ஏராளமான மரக்கன்றுகளை சிறு வயதிலிருந்தே நட்டு வந்திருக்கிறார். இவர் நட்டு வைத்த ஆலமரங்கள் மட்டும் 400. பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

    இதிகாசத்திலும் இலக்கியத்திலும் பெண்கள்:

    ராமாயண மகாபாரத இதிகாசங்களில் வரும் அறிவுசால் பெண்மணிகளைப் பற்றி எழுதப் புகுந்தால் ஒரு கலைக்களஞ்சியமே உருவாகும்.

    திரவுபதி, தமயந்தி, சாவித்திரி. இப்படி அறத்தின் அடிப்படையிலான நூற்றுக்கணக்கான பெண்மணிகளை நமது இதிகாசங்களும் இலக்கியமும் சுட்டிக் காட்டுகின்றன. தமிழ் இலக்கியத்தை மட்டும் எடுத்துக் கொண்டோமானால் சங்க இலக்கியத்தில் நாம் காணும் பெண் புலவர்கள் ஏராளமானோர்.

    அஞ்சில் ஆந்தைமகள் நாகையார், அள்ளூர் நன்முல்லையார், ஒக்கூர் மாசாத்தியார், அவ்வையார், கழார்க் கீரனெயிற்றியார், குமிழிஞாழார் நப்பச லையார், நக்கண்ணையார், போந்தைப் பசலையார், மதுரை நல்வெள்ளியார், முள்ளியூர்ப் பூதியார், வெள்ளிவீதியார் என்று இந்தப் பட்டியல் நீளும். அவ்வையாரைப் போல இன்னொரு பெண் புலவர் இலக்கிய உலகில் உண்டா, என்ன?

    பெண்களுக்கு இன்று இருக்கும் பிரச்சனைகள்:

    "ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே" என்று மகாகவி பாரதியாரின் முழக்கம் முழங்கி நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. என்றாலும் நம் நாட்டைப் பொறுத்தவரையில்அரசியலுக்குத் தேவையான அளவு தலைமைப் பண்புள்ள பெண்மணிகள் இன்னும் தேவை. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள, கல்வியறிவில்லாப் பெண்மணிகள் ஏற்றம் பெற உரிய நடவடிக்கை தேவை.

    பாலியல் கொடுமைகளும், இல்லத்தில் ஏற்படும் வன்கொடுமைகளும் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். நீதித்துறை, விளையாட்டு, அறிவியல், கல்வி, விண்வெளி, பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்களுக்கு இருக்கும் தடைகள் இனம் காணப்பட்டு அகற்றப்பட வேண்டும்.

    ஆணுக்கு அறிவு அதிகமா பெண்ணுக்கு அதிகமா?

    பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

    பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

    எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்

    இளைப்பில்லை காண் என்ற கும்மியடி என்று மகாகவி பாரதியார் கூற்றை மெய்ப்பிக்கும் சம்பவத்தை சுட்டிக் காட்டுகிறது கொங்கு மண்டல சதகத்தில் உள்ள பாடல் எண் 65.

    தக்கையிசை ராமாயணம் என்ற நூலை இயற்றிய சிறந்த கவிஞரான எம்பிரான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சங்ககிரியில் வாழ்ந்து வந்தார்.

    ஒரு நாள் கவிஞர் வெளியில் சென்றிருந்தபோது அவருடன் அளவளாவி மகிழ சில வித்துவான்கள் அவர் வீட்டிற்கு வந்தனர்.

    அறிவில் சிறந்த அவரது மனைவி பூங்கோதையார் அவர்களை வரவேற்று உபசரித்து கவிராயர் வெளியில் சென்றிருப்பதையும் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்பதையும் கூறினார். திண்ணையில் அமர்ந்த வித்துவான்கள் தங்களுக்குள் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

    அவர்களுள் ஒருவர் எவ்வளவு தான் கற்றாலும் ஆணுக்கு முன்னால் பெண்ணின் அறிவு குறைவு தான் என்ற தன் கருத்தை முன் வைத்தார். அதை அனைவரும் சந்தோஷமாக ஆதரித்து பெண்களை இழித்துச் பேச ஆரம்பித்தனர். வீட்டின் உள்ளேயிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த பூங்கோதையாரால் ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியவில்லை.

    ஒரு சிறிய துண்டுச் சீட்டில் ஒரு பாடலை எழுதி ஒரு சிறுமி மூலம் புலவர்களிடம் அனுப்பினார். அந்தப் பாடல்:

    அறிவில் இளைஞரே ஆண்மக்கள்; மாதர்

    அறிவில் முதிஞரே ஆவர் – அறிகரியோ

    தான் கொண்ட சூல் அறிவர் தத்தையர்; ஆண்மக்கள்

    தான் கொண்ட சூல் அறியார் தான்

    இதைப் படித்துப் பார்த்த புலவர்கள் திகைத்துப் போனார்கள். அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த கவிராயர் திரும்பி வந்தார். நடந்ததை அறிந்து கொண்ட கவிராயர் தன் மனைவியிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்டார். ஆண்மக்களை இழித்துக் கூறலாமா என்ற அவர் கேள்விக்கு அம்மையார், "நான் இழித்துக் கூறவில்லையே ஆண், பெண் இருவரும் அறிவைக் கொண்டிருந்தாலும் அறிவில் சிறந்தவர்கள் பெண் மக்களே என்றல்லவா கூறி இருக்கிறேன்.

    ஆன்மாவானது நீர்த்துளி வழியே பூமியில் சேர்ந்து உணவு வழியாக புருஷ கர்ப்பத்தில் தங்கி பின்னர் பெண்ணின் கருப்பையை அடைந்து கர்ப்பமுற்று சிசு பிறக்கிறது. ஆகவே தங்கள் கர்ப்பத்தைத் தெரிந்து கொள்ளாத ஆண்களை விட அதை அறிந்திருக்கும் பெண்களே அறிவில் சிறந்தவர்கள் என்கிறேன்" என்றார்.

    மேல் உலகம் சென்ற ஒரு உயிரானது, பூமிக்குத் திரும்பும்போது முறையே துறக்கம், மேக மண்டலம், நிலம், தந்தை, தாய் ஆகிய ஐந்து இடத்துப் புகுந்து வருவதை தியானித்தலே பஞ்சாக்கினி வித்தை என்று அறநூல்கள் கூறுகின்றன.

    சொர்க்கம் சென்ற ஆன்மா, மேகத்தை அடைந்து மழைத்துளி மூலம் நிலத்தை அடைந்து உணவுப் பொருளாய் புருஷ தேகத்தை அடைந்து பின்னர் இந்திரிய மயமாக பெண்ணின் கருப்பையை அடைந்து சிசுவாகப் பிறக்கிறது. புருஷ கர்ப்பத்தில் இரண்டு மாதம் தங்கி இருப்பதை ஆண்கள் அறிவதில்லை. ஆனால் கருவுற்ற உடனேயே பெண் மக்கள் அதை அறிந்து போற்றிப் பாதுகாத்து குழந்தையைப் பிரசவிக்கின்றனர்.

    அறிவில் சிறந்தவர் ஆணா, பெண்ணா? பெண்ணே தான் என்று அடித்துக் கூறினார் பூங்கோதையார்.

    விக்கித்துப் போன புலவர்கள் அதை ஒப்புக் கொண்டனர்.

    விஷயம் கொங்கு மண்டலம் வழியே தமிழகமெங்கும் பரவியது. அனைவரும் பூங்கோதையாரைப் பாராட்டி மகிழ்ந்தனர். தாய்க்குலத்தின் மகிழ்ச்சியைச் சொல்லவும் வேண்டுமோ!

    சிக்கலான கேள்விக்கு சரியான பதிலை அளித்த அறிவில் சிறந்த பெண்மணியான பூங்கோதையைப் பெற்ற மணியான பூமி கொங்கு மண்டலமே என்று கொங்கு மண்டல சதகத்தில் கார்மேகக் கவிஞர் பாடியுள்ளார்.

    குறுமுனி நேர் தமிழ் ஆழி உண் வாணர் குழாம் வியப்ப

    அறிவில் இளைஞரே ஆண் மக்கள் என்ன அறுதியிட்ட

    சிறிய விடைச்சி எம்பெருமான் மனைவி சிறந்து வளர்

    மறுவறு சங்ககிரி சேர்வது கொங்கு மண்டலமே

    பொருள்:

    தமிழ்க் கடலை உண்ட அகத்திய முனி போன்ற பல புலவர்கள் வியக்குமாறு, அறிவில் இளைஞர் ஆண் மக்களே என்று முடிவு கூறிய எம்பெருமான் கவிராயரது மனையாட்டியார் வாழும் சங்க கிரியும் கொங்கு மண்டலமே!

    தமிழ் மங்கையர் பொறுப்பு:

    இப்படி உலகிற்கே அரிய உண்மையை உணர்த்திய பெருமை தமிழ் மங்கையையே சாரும். பெண்களின் சம உரிமையை நிலை நாட்டி உலகெங்கும் அவர்களை மேல்நிலைக்குக் கொண்டு செல்ல தமிழ் மங்கையரை விட தகுதி வேறு யாருக்கு உண்டு. உலக மகளிர் தினத்தில் சிந்திப்போம். செய்வார்களா?


    தொடர்புக்கு:-

    snagarajans@yahoo.com

    • நான் என்கிற அகந்தையை அழித்து தானே பிரம்மமாய் உணர்வது ஞான வழியாகும்.
    • விரதம் இருந்து முதல் கால பூஜை வழிபட்டால் முற்பிறவி கர்மாக்கள் விடுபட்டு நற்பலன்கள் கிடைக்கும்.

    மனித மனம் மண், பொன், பெண் இந்த 3 வசைகளையும் சுற்றியே அலைப்பாய்ந்து வருகிறது. மனித வாழ்வுக்கும் அஸ்திவாரமாக இந்த மூன்று ஆசைகளே விளங்குகிறது. ஒவ்வொருவரின் மனமும் செல்வத்தின் அந்தஸ்த்தில் புகழில் மற்றவர்களைக் காட்டிலும் தான் சிறந்து விளங்க வேண்டும் என்று போராடுகிறது. பிறக்கும்போதே ஒருவன் செல்வ செழிப்பான பெற்றோருக்கு பிறப்பதும், ஏழ்மையில் வாடும் பெற்றோருக்கு பிறப்பதும் அவரவர்களின் ஊழ்வினையே. முன் ஜென்ம ஊழ்வினையை அறுக்க ஒவ்வொரு மனிதனும் பல வழிகளையும் தேடி அலைகிறார்கள். ஊழ்வினையில் இருந்து மீண்டு இறைவனை அடைய நம் முன்னோர்கள் பல்வேறு வழிகளை போதித்துள்ளார்கள். கர்மவினை தீர்ந்து பிறவா நிலையை அடைய இந்து மதத்தில் நான்கு வித உபயங்கள் கூறப்பட்டுள்ளன.

    சரியை:

    நமது இல்லத்தில் இறைவனை ஆத்மார்த்தமாய் வழிபடுவதுடன் கோவில்களுக்கு சென்று இறைவனை துதித்து பாடுவது, மலர் மாலை தொடுப்பது, சந்தனம் அரைத்துக் கொடுப்பது போன்ற இறைப்பணிக்கு உதவுதல், திருக்கோவிலில் மெழுகிடுதல், சுத்தம் செய்வது போன்ற உழவாரப்பணிகள் செய்து வணங்குதல் யாவும் சரிகை வழியாகும். இதன் மூலம் பெறும் முக்தி சாலோக முத்தி எனப்படும்.

    கிரியை

    சிவச்சின்னங்களை அணிந்து சிவனடியாராக இறைச்சேவை செய்வது ஒன்றையே வாழ்வின் நோக்கமாய் கொண்டு வாழ்வதே கிரியை வழியாகும். இந்த வகையில் கிடைக்கும் முக்தி நிலை சாமீப முக்தி எனப்படும்.

    யோகம்

    தகுதியான குருவை பணிந்து யோக முறைகளை கற்று, தொடர் பயிற்சியின் மூலம் உடல், மனம் ஆகியவற்றை தூய்மையாக்கி இறைவனை வழிபாடு செய்து முக்தி பெறுவதே யோக வழியாகும். இத்தகைய முக்தி நிலை சாரூப முக்தி எனப்படும்.

    ஞானம்

    நான் என்கிற அகந்தையை அழித்து தானே பிரம்மமாய் உணர்வது ஞான வழியாகும். இந்த வகையில் பெறும் முக்தி நிலை சாயுச்ய முக்தி எனப்படும்.

    விரதம்

    மேலே கூறிய நான்கு நிலை தவிர்த்து இறையருளைப் பெற சாஸ்திரங்களில் கூறப்பட்ட மற்றொரு உபயம் விரதம். விரதம் என்பது ஒரு விசேஷ நாளில் விருப்பமான தெய்வத்தை நினைத்து குறிப்பிட்ட வேண்டுதலுக்காக ஐம்புலனை அடக்கி, உண்ணாமல் இருக்கும் நிலை ஆகும். விரதம் இருப்பதால் ஆன்மா, மனம், புத்தி, உடல் முதலியவை தூய்மை அடையும். உடலும் உள்ளமும் சுத்தமடையும்போது நினைத்த காரியம் வெற்றியடையும். இந்த மதத்தில் கர்மவினை தீர்ந்து காரிய சித்தி தரும் கடவுளாக கருதப்படுவது சிவ பெருமான். சிவ பெருமான் தன்னை வழிபடுபவர்களின் நியாயமான கோரிக்கைகளை வழங்குவதில் வள்ளல். சிவபெருமானை வழிபட்டு வேண்டிய வரத்தை பெற கூறப்பட்ட பல்வேறு விரதங்களில் சிறப்புப் பெற்றது மகா சிவராத்திரி விரதம்.

    கடும்குளிர் காலம் முடிந்து வசந்த காலம் தொடங்குவதை குறிக்கும் காலம் தான் மாசி மாதமாகும். இந்த மாதத்தில் மாசி மகம், மகா சிவராத்திரி, காரடையான் நோன்பு, ஹோலிப் பண்டிகை போன்ற சிறப்பு மிக்க வழிபாடுகள் கொண்டாடப்படுவதால் ஆன்மீகச் சிறப்பு மிக்க மாதமாகிறது. மாசி மாதம் என்றாலே சிவ, சக்தி வழிபாட்டிற்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் சிவ பெருமானை நினைத்து வழிபடும் சிவராத்திரியும் அம்பிகை வழிபாடும் காரடையான் நோன்பும் இந்துக்களிடம் பிரசித்தி பெற்றது.

    ஸ்வஸ்தி ஸ்ரீ சோபகிருது வருடம் மாசி மாதம் 25-ம் நாள் வெள்ளிக்கிழமை, (8.3.2024) பிறவிப் பிணி தீர்க்கும் மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. பகலில் திரயோதசியும் இரவில் சதுர்த்தசி திதியும் கூடும் சிவராத்திரியானது மிக விசேஷமானதாகும்.

    சிவராத்திரியின் மகத்துவத்தையும் அதனால் ஏற்படப்போகும் நன்மைகளையும் காணலாம். ஒருவர் தன் வாழ்நாளில் மிகுதியான சிரமத்தை அனுபவிப்பதற்கு ஜாதகத்தில் உள்ள தோஷங்களே காரணம். ஒருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை அழிக்கும் வல்லமை பெற்றவர் சிவபெருமான். தன்னை வணங்குபவர்களின் மனதில் இருக்கும் கெட்ட எண்ணக் கழிவுகளான காமம், கோபம், குரோதம், பேராசை, பொறாமை போன்ற கெட்ட கர்ம வினைக் கழிவுகளை அழிப்பவர்.

    அவரை வழிபடுபவர்களின் வாழ்வில் நிலவும் மனக்கவலைகள், வறுமைநிலை, நோய்கள் போன்றவற்றை அறவே அழிப்பவர். ஒருவன் தனது மூன்று பிறவியில் செய்த பாவங்களையும் அழிப்பவர் சிவபெருமான். சிவன் என்ற சொல்லுக்கு மங்கலம், இன்பம் என்று பொருள். ஒருவன் தன் வாழ்வில் வினைப்பயனை அழிக்க எட்டு விதமான சிவ வழிபாட்டு முறைகளை கடைபிடிக்கலாம் என சாஸ்த்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றில் மிகச் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்ததி திதியன்று வரும் மகா சிவராத்திரி விரதமாகும். சிவராத்திரி என்றால் ஒளிமயமான இரவு இன்பம் தருகின்ற இரவு என்று அழைக்கப்படுகிறது.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி

    "பிரசன்ன ஜோதிடர்" ஐ.ஆனந்தி

     

    சிவராத்திரி விரதம் இருக்கும் முறைகள்

    8.3.2024 அன்று வெள்ளிக்கிழமை மாசி 25 அன்று அதிகாலை குளிர்ந்த நீரில் குளித்து நெற்றியில் திருநீறு பூசி சாமி படம் முன் விளக்கேற்றி சிவராத்திரி விரதத்தை தொடங்க வேண்டும்.

    சிவராத்திரி விரதத்தை முதல் நாளே தொடங்கிவிட வேண்டும். விரதமிருப்போர் வியாழக்கிழமை ஒருவேளை மட்டுமே உணவு உண்ணவேண்டும். சிவராத்திரி நாளில் சமைத்த உணவு உண்ணாமல் சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். தண்ணீர் மட்டும் அருந்தலாம். வெள்ளிக்கிழமை பகல் மற்றும் இரவு முழுவதும் எதுவும் சாப்பிடக்கூடாது. வயதானவர்கள், நோயாளிகள் சமைக்காத உணவுகளான பழங்கள், அவல் சாப்பிடலாம். மகா சிவராத்திரி அன்று முழுவதும் மவுன விரதம் இருந்து பேசாமல் பஞ்சாட்சரம் அல்லது "ஓம் நமசிவாய" மந்திரம் சொல்வதால் புண்ணிய பலன் மிகுதியாகும்.

    வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி முதல் சனிக்கிழமை காலை 6 மணி வரை சிவன் கோவிலில்களில் நடைபெறும் 4 கால அபிஷேக பூஜைகளில் கலந்துகொண்டு சிவனை வழிபட வேண்டும். மறுநாள் சனிக்கிழமை காலையில் நீராடி பகல் முழுவதும் உறங்காமல் இருந்து விரதத்தை முடித்தால் சகல வினைகளும் நெருப்பில் விழுந்த தூசி போல் உடனே சாம்பலாகும்.

    மகா சிவராத்திரி பூஜைகள்

    முதல் ஜாமம்

    பிரம்மா சிவனை பூஜிக்கும் காலம் இரவு 7.30 மணிக்கு. முதல் ஜாமத்தில் பிரம்மதேவன், சிவனை பூஜிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் சிவபெருமானை ரிக்வேத பாராயணம் செய்து வழிபட வேண்டும்.

    பஞ்சகவ்யம் அபிஷேகம்.

    மஞ்சள் நிற வஸ்த்திரம்.

    தாமரை மலர் சாற்றல்.

    பாசிப்பருப்பு பொங்கல் நிவேதனம்.

    நெய் தீபம்.

    ரிக்வேத பாராயணம்.

    விரதம் இருந்து முதல் கால பூஜை வழிபட்டால் முற்பிறவி கர்மாக்கள் விடுபட்டு நற்பலன்கள் கிடைக்கும். ஆயுள், ஆரோக்கியம் மேம்படும். வேதங்களில் சிறந்து விளங்குவார்கள். ஜனன ஜாதகத்தில் உள்ள கடுமையான விதிப்பயன்கள், ஜாதக ரீதியான தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பிறவா நிலையை அடைய முடியும்.

    இரண்டாம் ஜாமம்

    மகாவிஷ்ணு சிவனை பூஜிக்கும் காலம் இரவு 10.30 மணிக்கு.

    பஞ்சாமிர்தம் அபிஷேகம்.

    வெண்மை நிற வஸ்த்திரம்.

    வில்வ மாலை சாற்றல்.

    இனிப்பு பாயாசம் நிவேதனம்.

    நல்லெண்ணெய் தீபம்.

    யசூர் வேதம் பாராயணம்.

    இந்த இரண்டாம் ஜாம வேளையில், யசூர் வேத பாராயணம் செய்து சிவனை வழிபடுவதால் தன தான்ய சம்பத்துக்கள் கிடைக்கும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனியின் தாக்கம் குறையும். நவகிரக தோஷம் விலகும்.கண் திருஷ்டி செய்வினை தோஷம் அகலும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் அனுகூலம் ஏற்படும். வறுமை, கடன் தொல்லை, சந்திர தோஷம் நீங்கும். சந்திர தசை, சந்திர புத்தி நடப்பவர்களுக்கு மன உளைச்சல் குறையும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு, இரண்டாம் ஜாம பூஜையின் அபிஷேக நீரை பருக கொடுத்தால் சித்த சுத்தி உண்டாகும் என்பது நம்பிக்கை.

    மூன்றாம் ஜாமம்

    சக்தியின் வடிவமாக அம்பாள் சிவனை பூஜிக்கும் காலம் நள்ளிரவு 12 மணிக்கு

    தேன் அபிஷேகம்.

    சிவப்பு வஸ்த்திரம்.

    ஜாதி மல்லிகை பூ சாற்றல்.

    எள் அன்னம் நிவேதனம்.

    இலுப்பை எண்ணெய் தீபம்.

    சாம வேதம் பாராயணம்.

    விரதம் இருந்து மூன்றாம் கால பூஜையை சக்தியின் வடிவான அம்பாள் செய்வதாக ஐதீகம். விரதமிருந்து தரிசித்தால் எந்த வித தீய சக்தியும் அண்டாமல் அம்பாள் அருள் கிடைக்கும். மகா சிவராத்திரியின் உச்சகட்ட வழிபாட்டு நேரம் இது. இதனை 'லிங்கோத்பவ காலம்' என்றும் கூறுவர். இரவு 11.30 மணி முதல் 1 மணி வரையான இந்த நேரத்தில் தான், அடிமுடியாக நின்ற ஈசன், மகாவிஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும் லிங்க ரூபமாக காட்சி யளித்தார். மகா சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் லிங்கோத்பவ காலத்தில் இறைவனுக்கு நெய் பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளி ஆடை அணிவித்து, மலர்களினால் அலங்கரிக்க வேண்டும். அதோடு சாமவேத பாராயணம் மற்றும் சிவ சகஸ்ர நாமம் உச்சரிக்க வேண்டும். இதனால் சகல பாவங்களும் நீங்குவதோடு, ஆண், பெண் ஜாதகத்தில் உள்ள திருமணத் தடை நீங்கும். கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்த தம்பதிகள் இணைந்து வாழ்வார்கள். பெண்களுக்கு மாங்கல்ய பலம் அதிகரிக்கும். எந்த தீய சக்தியும் அண்டாது சிவ சக்தியின் அருள் அனைவரையும் காக்கும்.

    நான்காம் ஜாமம்

    நான்காம் காலம் அதிகாலை 4.30 மணிக்கு. முப்பத்து முக்கோடி தேவர்கள் முனிவர்கள் ரிஷிகள் மனி தர்கள் மற்றும் அனைத்து ஜீவராசிகள் சிவனை பூஜிக்கும் காலம். கரும்பு சாறு மற்றும் பால் அபிஷேகம்.

    பச்சை கலர் வஸ்த்திரம்.

    நந்தியாவட்டை மலர் சாற்றல்.

    சுத்தான்னம் நிவேதனம்.

    அதர்வண வேதம் பாராயணம்.

    முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூத கணங்களும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் நான்காவது காலத்தில் சிவபெருமானை பூஜிப்பதாக ஐதீகம். விரதம் இருந்து நான்காம் காலம் தரிசித்தால் அனைத்து செல்வமும் கிட்டும் வாழ்வில் மகிழ்ச்சியும் உண்டாகும். பொழுது புலரும் அதிகாலை வேளையில், அதர்வண வேத பாராயணம் செய்து சிவனை வழிபட வேண்டும். இதனால் நம் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். இல்லறம் நல்லறமாகும். பட்டங்களும், பதக்கங்களும், பதவியும் தேடி வரும். உடல் கஷ்டம், மனக்கவலை, பஞ்சம், துக்கம், அவமானத்தில் ஆழ்த்தும் கெட்ட கீர்த்தி நீங்கும். இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் ஆபத்துகளையும் கிரக மாற்றங்களால் ஏற்படும் கவலை, நோய், இழப்புகள் எல்லாம் நீங்கி உலகம் அமைதிப் பூங்காவாகும்.

    மகா சிவராத்திரி

    சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சுவாமி தரிசனம் செய்ய முடியாவிட்டால் கூட, லிங்கோற்பவ காலமாகிய இரவு 11.30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்திலாவது சிவதரிசனம் செய்து வழிபட வேண்டும். ஏனெனில் இந்த நேரத்தில் தான் சிவன் ஜோதிலிங்கமாக தோன்றிய நேரமாக கருதப்படுகிறது. வயதானவர்கள், குழந்தைகள், கோவிலுக்கு செல்ல முடியாமல் உடல் நலக்குறைவோடு இருப்பவர்கள் சிவபுராணம், வில்வாஷ்டகம் படித்து வில்வத்தால் சிவபூஜை செய்தால் அந்த நிமிடமே அவர்களுடைய அனைத்து பாவங்களும் நீங்கும். அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும். பஞ்ச மகா பாதகங்கள் அகலும்.

    சர்ப்ப தோஷத்திற்கு தீர்வு தரும் மகா சிவராத்திரி வழிபாடு

    ஆதிசேஷன் பூலோகத்தை தன் தலையில் சுமந்து தன் பலம் அனைத்தையும் இழந்து தவித்தபோது, ஒரு சிவராத்திரியில் முதல் ஜாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரம் பாம்புரநாதரையும், நான்காம் ஜாமத்தில் நாகூர் நாகநாதரையும் தரிசித்தார். அப்போது சிவபெருமான் பூமி முழுவதையும் தாங்கும்படியான வலிமையை வழங்கினார். எனவே சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் ஜனன கால ஜாதகத்தில் 1, 2, 3, 5,7, 8, 9 ஆகிய இடங்களில் ராகு/கேதுக்கள் நிற்பது கால சர்ப்ப தோஷம், அதிக கிரகங்கள் ராகு/கேது சாரம் போன்ற காரணத்தால் திருமணத்ததடை, குழந்தை பாக்கிய மின்மையால் பாதிப்படைந்தவர்களுக்கு சர்ப்ப தோஷம் நீங்கும். செவ்வாய் தோஷ பாதிப்பு குறையும்.

    மகா சிவராத்திரி விரதத்தால் கிடைக்கும் நற்பலன்கள்

    மகா சிவராத்திரியன்று விரதம் இருப்பவர்களுக்கு நற்கதி கிடைப்பதுடன் சொர்க்கலோக பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்து வந்தால் அவர் சிவகதியை அடைவதுடன், அவரது 21 தலைமுறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவார்கள் என்பது ஐதீகம். அசுவமேத யாகம் செய்த பலனும் கிடைக்கும். உணவு உண்ணாமல் பசியை அடக்குவதன் மூலம் காமம், குரோதம், கோபம், பேராசை, பொறாமை ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும். எல்லோருக்கும் இந்த மகா சிவராத்திரி விரதம் இருக்கும் பாக்கியம் கிட்டாது. "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அவன் (சிவன்) அருள் இருந்தால் மட்டுமே" இந்த மகா சிவராத்திரி விரத வாய்ப்பு கிட்டும்.

    வாழ்வில் செல்வம், வெற்றி ஆகியவற்றை பெற விரும்புவோர் அவசியம் மகாசிவராத்திரி விரதம் இருக்க வேண்டும்.


    - "பிரசன்ன ஜோதிடர்" ஐ.ஆனந்தி,

    செல்: 98652 20406

    • வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதும் நல்லது.
    • பல்வேறு வகையான உணவு பழக்கவழக்க முறைகள் உலகம் முழுதும் கடைபிடிக்கப்படுகின்றன.

    எவ்வளவு மருந்து தான் எடுத்துக்கொள்வது என்கிற சலிப்பு பொதுவாகவே முதுமையில் வந்துவிடுகிறது. மருந்து மாத்திரைகளோடு தான் இனி வாழ்நாள் முழுமையும் பயணிக்க வேண்டுமா? என்ற எண்ணம் முதுமையில் வாழ்க்கையின் உற்சாகத்தையே குறைத்து விடுகிறது. இந்நிலையில் உணவு மற்றும் உணவு முறை சார்ந்த முழு அறிவும், விழிப்புணர்வும் முதுமைக்கு அவசியமாகிறது.

    "மருந்து கால், மதி முக்கால்" என்பது வழக்குமொழி. ஏனெனில் மருந்துண்பது என்பது ஒருபுறமிருக்க, நுட்பமான அறிவோடு உணவுக்கட்டுப்பாடு மட்டுமே வாழ்நாளை ஆரோக்கியமாக நகர்த்த பேருதவி புரியும் என்பதை முதியவர்கள் மட்டுமின்றி, அனைத்து வயதினரும் புரிந்துகொள்வது இத்தருணத்தில் அவசியமாகிறது.

    வாழ்வியல் நெறிமுறை மாற்றங்கள் உடல் எடையைக் குறைப்பதில் மிக அவசியமானவை. அதில் ஆரோக்கியமான உணவு, நல்ல உறக்கம், உடல் பயிற்சி ஆகிய அனைத்தும் அடங்கும். முக்கியமாக உணவு கட்டுப்பாடு என்பது உடல்பருமன் எனும் கொடிய நோய்நிலையில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டு வர பெருந்துணை புரியும். இதன்மூலம் மற்ற நோய்நிலைகளையும் கட்டுக்குள் கொண்டு வந்து, உடலை காத்துக்கொள்ள முடியும்.

    முதுமையில் உணவு முறை மாற்றத்தில் கையில் எடுக்க வேண்டிய ஆயுதமாய் இருப்பவை பாரம்பரிய உணவுகள் தான். முதுமையில் பாரம்பரிய உணவு முறைகளை நாடுவது உடல் பருமனைக் குறைக்க உதவுவதோடு மட்டுமின்றி, சிறுநீரக நோய், ரத்த குழாய் அடைப்பு, ரத்தத்தில் கொழுப்பு, சத்துக்கள் குறைபாடு போன்ற பல்வேறு நோய்நிலைகளை தடுக்க உதவும்.


    பொதுவாக அதிகம் பேர் பயன்படுத்தும் உணவாக இருப்பவை வெள்ளை அரிசி சார்ந்த உணவுகள் தான். இவற்றில் சர்க்கரை சத்து அதிகமாகவும், இரும்பு சத்து, கால்சியம், நார்சத்து ஆகியவை மிகச்சொற்பமாகவே உள்ளன. இதனால் உடலுக்கு பெரும்பயன் ஒன்றுமில்லை. ஆகவே வெள்ளை அரிசி சார்ந்த உணவுகளை முற்றிலும் குறைப்பது நல்லது.

    அதற்கு மாற்றாக நோய் நீக்கும் நிறமி சத்துக்களையும், நார்சத்துக்களையும், விட்டமின்கள், தாது உப்புக்கள் இவற்றைக் கொண்ட கருப்பு நிற அரிசிகளான கருப்பு கவுனி, காட்டு யானம் ஆகியவற்றைப் பயன்படுத்துவது முதுமைக்கு நல்லது.

    பாரம்பரிய அரிசி வகைகளில் உள்ள நிறமிசத்துக்கள் உடல் பருமனுக்கு காரணமாகும் வளர்ச்சிதை மாற்றக் குறைபாட்டினை தடுத்து உடலை காத்து ஆரோக்கியம் நோக்கி நகர உதவுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அவற்றின் நிறத்திற்கு காரணமாகும் ஆன்தோசயனின் மற்றும் ப்ரோ-ஆன்தோசயனின் ஆகிய நிறமிகள் அதன் மருத்துவ குணத்திற்கு காரணமாய் உள்ளன. இவற்றின் கிளைசெமிக் குறியீடு எனும் சர்க்கரை சத்தினை குறிக்கும் அளவும் குறைவாக இருப்பதோடு, உடல் பருமனை உண்டாக்கும் இன்சுலின் எதிர்ப்பு தன்மையை நீக்குவதாகவும் உள்ளன.

    அதே போல் நாம் பயன்படுத்த மறந்த சிறுதானியங்களையும் பயன்படுத்த துவங்குவது முதுமைக்கு நல்லது. அதிக நார்சத்து கொண்ட, குறைந்த சர்க்கரை சத்து உடைய கேழ்வரகு, கம்பு, சோளம் போன்ற குறுதானியங்களை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். அவற்றாலான கேழ்வரகு களி, கம்பங்கூழ், சோள தோசை ஆகிய பண்டைய காலத்தில் நாம் அதிகம் பயன்படுத்திய தானிய உணவுகளை சேர்ப்பது உடல் பருமனைக் குறைப்பதோடு மட்டுமின்றி, உடலுக்கு தேவையான பிற சத்துக்களையும் அள்ளித்தரும்.

    மேலும் தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறு தானியங்களை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதும் நல்லது. இவற்றாலான உணவுகளையும் அடிக்கடி உணவில் சேர்ப்பது உடல் பருமன் மட்டுமின்றி நீரிழிவு, ரத்த சோகை, கால்சியம் குறைபாட்டால் உண்டாகும் எலும்பு மூட்டுத் தேய்மானம் ஆகிய இன்னும் பல நோய்நிலைகளிலும் நன்மைகளைத் தரும்.

    சிறு தானியங்களின் சிறப்பு என்னவெனில் அவற்றில் சர்க்கரை சத்து குறைவாக இருப்பதுடன் உடலுக்கு அத்தியாவசியமான இரும்பு சத்து, கால்சியம், துத்தநாகச் சத்து போன்ற நுண்ணூட்ட சத்துக்களும், பல்வேறு நோய்நிலைகளில் நன்மை பயக்கும் நார்ச்சத்தும், உடலின் வளர்ச்சிக்குத் தேவையான புரதச்சத்தும் அதிகம் உள்ளது. எனவே சிறுதானிய உணவினை நாடுவது சரிவிகித போஷாக்களுக்கும் உணவாக உள்ளது. சிறு மற்றும் குறுதானியங்களில் குறைந்த கிளைசெமிக் குறியீடு (GI) உள்ளபடியால் உடல் பருமனை குறைப்பதில் பேருதவி புரியும். இவற்றை உண்டவுடன் ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காமல் தடுப்பதுடன், ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவும். இவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் முதுமையில் உண்டாகும் மலச்சிக்கலைப் போக்கவும் உதவும். "ஆயில் ஆயுளைக் குறைக்கும்" என்பது புதுமொழி. அந்த வகையில் உடல் பருமனைக் குறைக்க, எண்ணெயில் வறுத்த பதார்த்தங்களையும், எண்ணெய் தோய்ந்த உணவுகளையும் குறைப்பது நல்லது. வணிக ரீதியாக கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான உணவுப் பொருட்களைத் தயாரிக்க மீண்டும் மீண்டும் பயன்படுத்திய எண்ணெய் பயன்படுத்துவதால், அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

    சோ.தில்லைவாணன்

    சோ.தில்லைவாணன்

    இவ்வாறு தயாரித்த உணவில் டிரான்ஸ் கொழுப்பு அதிகம் உள்ளதால் அவை உடல் பருமனை அதிகரிக்க துணைபுரியும். மேலும் இந்த டிரான்ஸ் கொழுப்பு, ரத்தத்தில் ட்ரைகிளிசெரைட் கொழுப்பினை அதிகரித்து இதயம் சார்ந்த நோய்களையும் உண்டாக்கும் என்று எச்சரிக்கின்றன ஆய்வுத் தரவுகள்.

    முதுமையில் நலமுடன் பயணிக்க, உணவில் பிஞ்சுக் காய்கறிகளை அதிகம் சேர்ப்பது உடல் எடையைக் குறைக்க வழிவகை செய்யும். நார்சத்துக்கள் அதிகம் கொண்ட, குறைந்த கலோரிச் சத்துள்ள பிஞ்சுக் காய்கறிகளையும், கீரைகளையும் உண்ணும் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள மேலும் உடல் எடை கூடாமல் தடுக்கலாம்.

    காய்கறிகள், பழங்களில் உள்ள நார்ச்சத்துக்கள் பசி எடுப்பதை தடுப்பதோடு, வயிறு நிரம்பிய உணர்வையும் தரும். மேலும் இவை உணவில் உள்ள கொழுப்புப் பொருட்கள் உட்கிரகிப்பதை தடுத்து உடல் எடை குறைய உதவுவதாக உள்ளன.

    உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை சத்தும், புரதச்சத்தும் சம அளவான கலோரி சக்தியினை அளிப்பதாக உள்ளன. மாறாக கொழுப்புச் சத்தானது இரண்டு மடங்கு அதிக கலோரி சக்தியினை அளிப்பதாக உள்ளது. எனவே அத்தகைய கொழுப்பு சத்துள்ள எண்ணெய் சார்ந்த உணவுப்பொருட்களை குறைப்பதும், தவிர்ப்பதும் நல்லது. பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை (மோர் தவிர) தவிர்ப்பது உடல் எடையைக் குறைக்க உதவும்.

    பல்வேறு வகையான உணவு பழக்கவழக்க முறைகள் உலகம் முழுதும் கடைபிடிக்கப்படுகின்றன. மத்திய தரைக்கடல் உணவு முறை, பாலியோ உணவு முறை, சைவ உணவு முறை, அறிவியலாளர் ஆர்னிஷ் உணவு முறை போன்றவைகள் அவற்றில் சில.

    இவற்றில் சிறப்பானதாக கருதப்படுவது மத்திய தரைக்கடல் பகுதி உணவு முறை தான். இது இத்தாலி, கிரேக்கம் ஆகிய நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படும் உணவு முறை. இந்த உணவு முறையானது பழங்கள், காய்கறிகள், கொட்டை வகைகள், மீன், கடல் உணவுகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வலியுறுத்துகிறது. தாவர வகை உணவுப் பொருட்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வலியுறுத்துவது இதன் சிறப்பு. இத்தகைய உணவு முறையை பின்பற்றி 12 மாதங்கள் நடந்த ஆய்வில் உடல் பருமன் 8.7சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுவது கூடுதல் சிறப்பு.

    அடுத்து மிகச்சிறப்பானதாக கருதப்படுவது சைவ உணவு முறை. இதில் தாவர வகை உணவுப்பொருட்கள் மட்டும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. இறைச்சி, மீன், பால் மற்றும் பால் பொருட்கள், முட்டை இவை அனைத்தும் தவிர்க்கப்படும். இந்த உணவு முறையில் உடல் பருமன் சிறப்பான முறையில் குறைவதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. முதுமையில் எளிமையாக சைவ உணவு முறையைப் பழகுவது முதுமைக்கு அதிகம் நன்மை பயக்கும்.

    உணவில் கலோரி சத்துக்களின் அளவைக் குறைப்பது எளிமையான வழிமுறை. உண்ணும் பொருட்களின் கலோரி அளவினை மதிப்பிட்டு, அதற்கேற்ப உணவு முறைகளை மேற்கொள்வது நல்லது. அதிக கலோரி அளிக்கும் எண்ணெய் பொருட்களும், சர்க்கரை சத்துள்ள கிழங்கு வகைகளும் தவிர்ப்பது உடல் எடை குறைய வழிவகை செய்யும்.

    தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்வது சமீப காலங்களில் அதிகமாகிவிட்டது. சிறு குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை பாக்கெட் பொருட்களை நாடுவது உடலின் ஆரோக்கியத்துக்கு ஆபத்து தான். அத்தகைய தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் போது அதில் முக்கிய நன்மை பயக்கும் இயற்கை வேதிப்பொருட்களை நீக்கிவிட்டு செயற்கை நிறமிகளையும், பதப்படுத்தும் வேதிப்பொருட்களையும் சேர்ப்பது உடல் பருமன் போன்ற நோய்களுக்கு வித்திடும். ஆக எக்காலத்தும் அத்தகைய உணவுகளுக்கு சிவப்பு கொடி காட்டுவது நல்லது.

    முதுமையில் அதிகமான உடல் எடையைக் குறைக்க மருந்துகள், உணவுப்பொருட்கள், உணவு முறைகள் போன்றவைகள் ஒரு புறமிருக்க, எல்லாவற்றுக்கும் மேலாக உடல் எடையைக் குறைக்க மனம் இருக்க வேண்டும். 'மனமிருந்தால் மார்கம் உண்டு' என்பதைப் போல, எல்லா நோய்நிலைகளையும் எதிர்கொள்கின்ற மனம் இருக்க வேண்டியது மிக அவசியம். அத்தகைய மனம் இருந்தால் முதுமை என்றென்றும் மகிழ்ச்சியே.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com (8056040768)

    • மாசி மாதத்தில் வரும் ஏகாதசிகளுக்கு ஜெய ஏகாதசி, விஜய ஏகாதசிகள் என்று பெயர்.
    • விஜயதசமியைப் போலவே இந்த ஏகாதசியும் வெற்றியைத் தரும் ஏகாதசியாகக் கருதப்படுகிறது.

    விரதங்களில் ஏகாதசிக்கு இணையான விரதம் எதுவும் இல்லை என புராணங்கள் கூறுகின்றன. ஒவ்வொரு ஏகாதசிக்கும், ஒரு தனிப்பட்ட பெயரும் தனிச்சிறப்பும் உண்டு.

    மாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு விஜய ஏகாதசி என்று பெயர். நாளை (புதன்கிழமை) விஜய ஏகாதசி தினமாகும். இந்த விஜய ஏகாதசிக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. குறிப்பாக இந்த ஏகாதசி விரதத்தை நாளை கடைபிடிப்பதால், மனம் தூய்மை அடைகிறது.

    ஏகாதசி விரதம் எவ்வளவு கடினமானதோ, அவ்வளவு பலன் தரும் என்பதும் நம்பிக்கை. தொடர்ந்து 12 ஏகாதசிகளில் விரதம் இருப்பது பல நூறு அஸ்வமேத யாகங்களும், கங்கையில் பல முறை புனித நீராடியதற்கு சமமான பலனையும் தரக் கூடியது என புராணங்கள் சொல்கின்றன.

    மாசி மாதத்தில் வரும் ஏகாதசிகளுக்கு ஜெய ஏகாதசி, விஜய ஏகாதசிகள் என்று பெயர். இதில் வளர்பிறை வருவது ஜெய ஏகாதசி என்றும், தேய்பிறையில் வருவது விஜய ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு ஏகாதசிகளிலும் விரதம் இருப்பவர்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    சனாதன தர்மத்தின் படி, ஆண்டு முழுவதும் 24 ஏகாதசிகள் வருகின்றன, அவற்றில் நாளை வரும் விஜய ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    விஜயதசமியைப் போலவே இந்த ஏகாதசியும் வெற்றியைத் தரும் ஏகாதசியாகக் கருதப்படுகிறது. பொதுவாக, இந்த ஏகாதசி விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த விரதத்தை அனுசரிக்கும் நபர்கள் நாள் முழுவதும் விஷ்ணு பகவானை வழிபட வேண்டும், இதனால் அவர்கள் ஆசீர்வாதத்தையும் நல்ல அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள்.

    விஜய ஏகாதசி நாளை காலை தொடங்கி வியாழக்கிழமை காலை முடிவடைகிறது. இந்த விரதத்தின் பரணை பிற்பகல் 1.43 மணி முதல் மாலை 4.04 மணி வரை செய்யப்படும்.

    ஏகாதசி விரதம் முடிவடையும் போது அது பரணா எனப்படும். பொதுவாக எல்லா விரதங்களும் ஒரே நாளில் மாலை/இரவில் ஏதாவது சாத்வீக உணவுகளை சாப்பிட்டு முடிக்கப்படும், ஆனால் ஏகாதசியின் மறுநாள் சூரிய உதயத்திற்குப் பிறகும், சூரியன் மறைவதற்கு முன்பும் விரதம் இருக்க வேண்டும். அதாவது வழக்கமான உணவை உண்பதன் மூலம் விரதத்தை முடிக்க வேண்டும்.

    துவாதசி திதிக்குள் பரணத்தைச் செய்யாமல் இருப்பது பாவத்திற்குச் சமம் என்பது நம்பிக்கை. கூடுதலாக, நோன்பு திறக்கும் போது, ஒருவர் தியானம் செய்ய வேண்டும். அல்லது விஷ்ணுவின் பெயரை உச்சரிக்க வேண்டும். விஜய ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பது மிகவும் புண்ணிய மானதாக கருதப்படுகிறது. மேலும், பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அருளைப் பெற, முழுமையான சடங்குகளைப் பின்பற்றி விஜய ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

    விஜயம் என்றால் வெற்றி என்று அர்த்தம். கடினமான சூழலில் போராட்டமான வாழ்க்கையில் இருப்பவர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஏகாதசி விஜயா ஏகாதசி. இந்த ஏகாதசி விரதத்தை ராமபிரானே கடைப்பிடித்ததாக ஐதீகம்.

    வினைப்பயன்களாலேயே இந்த வாழ்க்கை உருவாகிறது. நல் வினைகளோடு பிறந்தவர்கள் வாழ்வில் நற்பயன்களையும் தீவினைகளோடு பிறந்தவர்கள் துன்பத்தையும் வாழ்வில் அனுபவிக்கின்றனர் என்கின்றன சாஸ்திரங்கள்.

    ஆனால் அவையே இதற்கான தீர்வையும் சொல்கின்றன. ரிஷிகளும் ஞானிகளும் மனிதர்களின் பாவத்தைப் போக்கும் விரத நாள்களைக் கண்டு தெளிந்து அவற்றை ஒரு முறையாக வகுத்தனர். யார் எந்த தெய்வத்தை வணங்குபவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்களின் இஷ்ட தெய்வத்தை வழிபட உகந்த நாள்களை உருவாக்கி அன்று வழிபடவேண்டிய முறைமைகளையும் உருவாக்கினர்..

    சிவனை வழிபடுபவர்களுக்கு பிரதோஷமும், முருகனை இஷ்ட தெய்வமாகக் கொண்டவர்களுக்கு சஷ்டியும், விநாயகரைத் தொழுதுகொள்பவர்களுக்கு சதுர்த்தியையும் விசேஷ தினங்களாக வகுத்தனர். அதேபோன்று விஷ்ணுவை வழிபட உகந்த தினம் ஏகாதசி. வளர்பிறை தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் ஏற்படும் ஏகாதசி திதி தினத்தில் விஷ்ணுவை வழிபடத் துன்பங்கள் தீரும்.

    ராமர் மனிதர்களுக்கு உதாரண புருஷராக வாழ்ந்துகாட்டியவர். மனிதர்கள் தங்கள் பாவங்கள் தீர வாழ்வில் வெற்றிபெற மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகளைத் தன் வாழ்வில் செய்துகாட்டியவர். அப்படி அவர் மேற்கொண்ட விரதங்களில் ஒன்று விஜயா ஏகாதசி.

    ராவணனுடன் போரிட இலங்கை செல்லும் முன்பு அந்தப் போரில் வெல்ல என்ன செய்ய வேண்டும் என்று வக்தால்ப்ய ரிஷியிடம் கேட்டார் ராமர். அதற்கு அந்த ரிஷியும் விஜயா ஏகாதசி விரத மகிமைகளை எடுத்துச்சொல்லி அதை மேற்கொள்பவர்களுக்கு வெற்றி நிச்சயம் என்பதை விளக்கினார். ராம பிரானும் தவறாமல் அந்த விரதத்தைக் கடைப்பிடித்து அதன் பலனை அடைந்தார் என்கிறது புராணம்.

    விஜயா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து வழிபடுவது சிறந்தது. உபவாசம் என்றால் அருகில் வசிப்பது என்று பொருள். இரையைத் தவிர்த்து இறைச் சிந்தனையில் மூழ்கியிருந்தால் அந்த இறைவன் நம் அருகில் வாசம் செய்வான் என்பது பொருள். எனவே முடிந்தவர்கள் முழு பட்டினி கிடந்து விரதம் மேற்கொள்வது பயன்தரும். துளசி தீர்த்தம் மட்டும் அருந்தலாம். இயலாதவர்கள் முழு அரிசிச் சோற்றைத் தவிர்ப்பது நல்லது.

    அதுவும் முடியாதவர்கள் தவறாமல் இறைவனின் நாமத்தை உச்சரித்துக்கொண்டிருப்பது நல்லது. விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களை உரைக்கும் சகஸ்ர நாமத்தை இந்த நாளில் கேட்பது பயன்தரும். குறைந்தபட்சம் நாளை கட்டாயம் ஆலயம் சென்று பெருமாளை வழிபட்டு அங்கு அமர்ந்து விஷ்ணு சகஸ்ர நாமப் பாராயணம் செய்து வழிபடுவதன் மூலம் விஜயா ஏகாதசி விரதத்தின் பலனை முழுமையாகப் பெறலாம்.

    விஜய ஏகாதசிக்கு அப்படி என்ன சிறப்பு?

    ஜனக மகாராஜா, தனது மகள் ஜானகிக்கு சரியான கணவனை தேர்வு செய்ய முடியாமல் குழப்பத்தில் இருந்தார். தெய்வ அம்சம் பொருந்திய தனது மகளுக்கு யாரை மணமகனாக தேர்வு செய்வது என யோசித்த அவர், மகா விஷ்ணுவிடமே இதற்கு வழி கேட்கலாம் என முடிவு செய்து, யாகம் ஒன்றை நடத்தினார்.

    அந்த யாகத்தின் பயனாக ஜனகரின் முன் தோன்றிய மகா விஷ்ணு, விஜய ஏகாதசி நாளில் உனது அரண்மனை வாசலை தேடி வரும் ஒருவனுக்கு உனது மகளை திருமணம் செய்து கொடு என கூறினார்.

    விஜய ஏகாதசி நாளுக்காக ஜனக மகாராஜாவும் காத்திருந்தார். அந்த நாளில் அரண்மனை வாசலுக்கு மிதிலையின் இளவரசன் ஸ்ரீ ராமரே வந்தார். அவருக்கு ஜனகர் தனது மகளை திருமணம் செய்து கொடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன.

    அதனால் விஜய ஏகாதசி தினம் வெற்றிக்குரிய நாளாகவும், நினைத்தவற்றை நிறைவேற்றி தரும் நாளாகவும் குறிப்பிடுகிறார்கள். இந்த நாளில் தான் ஸ்ரீராமர், அரக்கர்களை அழித்து வெற்றி கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

    விஜய ஏகாதசி நாளில் முழு உபவாசம் இருந்து, மகா விஷ்ணு திருநாமங்களை பாராயணம் செய்ய வேண்டும். பகவத்கீதை புராணத்தை படிக்கலாம். மகாவிஷ்ணுவை போற்றும் பாடல்களை பாட வேண்டும்.

    என்ன பலன் கிடைக்கும்?

    விஜய ஏகாதசி விரதம் இருப்பவர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நல்ல ஆரோக்கியம், அதிர்ஷ்டம், செல்வம், வளமான வாழ்வு ஆகியவை கிடைக்கும். பிறப்பு, இறப்பு இல்லாத நிலையை அளிப்பதுடன், மோட்சத்தையும் கொடுக்கும்.

    விஜய ஏகாதசி அன்று, விரதம் இருப்பதன் மூலம், வாழ்க்கையில் செல்வ வளம் வெற்றி, நிம்மதி, ஐஸ்வர்யம், அதிர்ஷ்டம் என அனைத்தையும் பெற்று சிறப்பாக வாழலாம்.

    கோபம், வெறுப்பு, குழப்பம் ஆகிய அனைத்தும் நீங்கி மனதில் நிம்மதியான உணர்வு ஏற்படும். நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகி, வாழ்க்கையில் நிம்மதியையும் சந்தோஷத்தையும் அடையலாம்.

    என்ன மந்திரம் சொல்ல வேண்டும்?

    "ஓம் நமோ பகவதே வாசுதேவாய"

    "ஓம் நமோ நாராயணா"

    இந்த மந்திரங்களை பூஜையின் போதும், மற்ற நேரங்களிலும் பாராயணம் செய்வது மகாவிஷ்ணுவின் ஆசிகளை பெற்றுத்தரும்.

    • திருமலையில் இருந்தவர் திருமலை நம்பி.
    • அனந்தாழ்வார் தான் வந்த வேலையான நந்தவனம் அமைக்கும் வேலையை செய்ய ஆரம்பித்தார்.

    பச்சை கற்பூரம்: பச்சை கற்பூரம் என்று சொன்னாலே தெய்வீக மணம் ஞாபகத்திற்கு வரும். குறிப்பாக திருப்பதி பெருமாள் சன்னதி ஞாபகத்திற்கு வரும். ஆக்கப்பூர்வமாக மனதினை மாற்றி விடும் சக்தி பச்சை கற்பூரத்தின் நறுமணத்திற்கு உண்டு. உணவின் சுவைக்காக கூட பச்சை கற்பூரம் சேர்க்கப்படுகின்றது. இதற்கு நிறைய மருத்துவ குணங்களையும் பயன்படுத்துவார்கள். ஆயினும் இதனை மிகக் குறைவாகவே பயன்படுத்துவார்கள்.

    திருப்பதியில் பெருமாளுக்கு நெற்றிக்கு இடுவதில் பச்சை கற்பூரம் முக்கிய பங்கு வகிக்கும். சரி. ஆனால் பெருமாளின் தாடையிலும் பச்சை கற்பூரம் சாற்றப்படுகின்றது. இது ஏன் என்று தெரியுமா?

    ஸ்ரீரங்கம் எனப்படும் திருவரங்கத்தில் பெருமாளின் சேவையிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் ஸ்ரீராமானுஜர். ஸ்ரீராமானுஜருக்கு ஒரு குறை எப்போதும் மனதில் இருந்தது. திருவேங்கடவருக்கு அதாவது ஏழுமலையானுக்கு ஒரு நந்தவனமும், தபோவனமும் அமைக்க இன்னமும் முடியவில்லையே என தவித்தார்.

    ஸ்ரீராமானுஜர் ஒருநாள் தன் சீடர்களிடம் கேட்கிறார். 'நீங்கள் யாராவது ஏழுமலையானுக்கு அன்றாடம் மாலை கட்டி தரும் பாக்கியத்தினை ஏற்றுக் கொள்வீர்களா? என்று கேட்கின்றார். பலரும் அமைதியாகவே இருந்தனர். அனந்தாழ்வார் என்ற சீடர் மட்டும்தான் அந்த கைங்கர்யத்தை ஏற்றுக் கொள்வதாக முன் வந்தார். ஸ்ரீராமானுஜருக்கு அளவில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. அனந்தாழ்வாரும் தனது மனைவியோடு திருமலைக்கு வந்தார்.

    திருமலையில் இருந்தவர் திருமலை நம்பி. இவர் ஸ்ரீராமானுஜரின் தாய் மாமன். இவர் அனந்தாழ்வாரும் அவரது மனைவியும் தங்க எளிய ஏற்பாடுகள் செய்தார். அவர்களால் முடிந்தது குடிசை அமைத்துத்தந்தார். அனந்தாழ்வார் தான் வந்த வேலையான நந்தவனம் அமைக்கும் வேலையை செய்ய ஆரம்பித்தார். நறுமணமுள்ள பூச்செடிகளை நட்டார். தனது குருவின் பெயரால் 'ராமானுஜ நந்தவனம்' என்று பெயரும் சூட்டினார். இன்றும் அந்த நந்தவனம் அதே பெயரில் உள்ளது.


    கோடை காலத்தில் நந்தவனத்திற்கு தண்ணீர் வேண்டுமே. அதற்காக அனந்தாழ்வார் குளம் வெட்டத் தொடங்கினார். குளத்தில் நீர் சேர்த்து வைத்தால் நந்தவனத்திற்கு எப்போதும் தண்ணீர் கிடைக்கும் என்று குளம் வெட்டும் பணியினைத் தொடர்ந்தார். தனியாக வேலை செய்த அவருடன் அவருடைய மனைவியும் உடன் சேர்ந்து வேலை செய்தார்.

    வெட்டும் மண்ணை எடுத்து வெளியே சற்று தள்ளி கொட்ட வேண்டும் அல்லவா. அனந்தாழ்வார் மண்ணை வெட்ட அவரது மனைவி அதனை தலையில் சுமந்து மறுபக்கம் சென்று கொட்டினார். அந்த பெண்மணி அப்போது கருவுற்று இருந்தார்.

    இதனைக் கண்ட ஒரு சிறுவன் அங்கு ஓடி வந்தான். அவன் தானும் இந்த பணியில் உதவுவதாகக் கூறினான். அனந்தாழ்வார் இதனை 'வேண்டாம்' என மறுத்தார். அந்த பையனோ கூலி கூட வேண்டாம். ஆனால் நானும் இந்த பணியினைச் செய்கின்றேன் என்றார். அப்படியும் அனந்தாழ்வார் கண்டிப்பாய் வேண்டாம் என்று சொல்லி அந்த பையனை அனுப்பி விட்டார். இறைவனுக்கு முழுமையாக தானும் தன் மனைவியும் மட்டுமே செய்ய வேண்டும் என்பதில் அனந்தாழ்வார் உறுதியாக இருந்தார்.

    அனந்தாழ்வார் சொல்லியும் போகாத அந்த சிறுவன் ஒரு பக்கம் மறைந்து நின்றார். அனந்தாழ்வாரின் மனைவியைப் பார்த்து 'அம்மா, நான் மண் சுமந்தால் உங்கள் கணவர் கோபிப்பார். ஆகவே நான் இங்கு மறைந்து நிற்கின்றேன். நீங்கள் இதுவரை மண்ணை கொண்டு வாருங்கள். அதன் பிறகு கரைபக்கம் நான் சென்று கொட்டி விடுகின்றேன்' என அன்போடு வேண்டினான். அந்த சிறுவனின் அன்பை அன்னையால் மீற முடியவில்லை.

    'சரி' என்றார். வேலை சற்று வேகம் கூடியது.

    இதனால் அனந்தாழ்வாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. 'என்ன சீக்கிரமாக மண்ணை கொட்டி விட்டு வருகிறாயே' என மனைவியிடம் கேட்டார். மனைவியும் 'ஆமாம். எனக்கு சோர்வு தெரியவில்லை. அதனால் வேகமாக செய்து விடுகிறேன்' என்றார்.

    சிறிது நேரம் சென்று அனந்தாழ்வார் மண் கொட்டிய பகுதியை பார்க்க வந்தார். அங்கு அந்த சிறுவன் ஓடி ஓடி மண்ணைக் கொட்டிக் கொண்டு இருந்தான். இதனைப் பார்த்த அனந்தாழ்வாருக்கு கோபம் வந்து விட்டது. தன் கடப்பாரையை எடுத்து வீசினார். இதனால் சிறுவன் தாடையில் காயம் ஏற்பட்டது. அதில் இருந்து ரத்தம் கொட்டியது. சிறுவன் ஓடி விட்டான்.


    மறுநாள் காலையில் கருவறையைத் திறந்த அர்ச்சகருக்கு அதிர்ச்சியானது. பெருமாளின் தாடையில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அர்ச்சகர் செய்வதறியாது பதறினார். 'அனந்தாழ்வாரை அழைத்து வா' என அசரீரி கேட்டது. அர்ச்சகர் அனந்தாழ்வாரை அழைக்க இருவரும் பெருமாள் சன்னதிக்கு ஓடோடி வந்தனர். பெருமாளின் தாடையில் ரத்தம் வழிந்து கொண்டு இருந்தது. அனந்தாழ்வாரின் கண்களுக்கு பெருமாள் சிறுவனாக காட்சி அளித்தார்.

    அனந்தாழ்வார் கதறி விட்டார். 'பெருமாளே வந்தது நீங்கள் தான் என்று நான் அறியாமல் இருந்து விட்டேனே' என கண்ணீர் விட்டு அழுதார். மன்னித்து விடுங்கள் என்றார். பெருமாள் அனந்தாழ்வாரை நோக்கி, "அனந்தாழ்வார் உன் கைகளால் தொடுத்து மலர் மாலைகளை நீ அளிக்கும் போது நான் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறேன். ஆனால் கர்ப்பிணியான உன் மனைவி மண் சுமக்கும்போது எனக்கு பொறுக்கவில்லையே" என்றார்.

    அனந்தாழ்வார் பெருமாளின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். சரி பெருமாளின் தாடையில் ரத்தம் வடிகின்றதே என்ன செய்வது? அப்போது தாடையில் சிறிது பச்சை கற்பூரம்வை என்று குரல் கேட்க அதுபடியே அர்ச்சகரும் செய்தார். பெருமாளின் தாடையில் ரத்தம் வடிவது நின்றது. பெருமாள் தாடையில் பச்சை கற்பூரம் வைக்கும் பழக்கம் இன்று வரை தொடர்கின்றது.

    திருப்பதி திருமலைவாசலை தரிசிக்க செல்லும் போது பிரதான வாசலின் வலது பக்கத்தில் இந்த கடப்பாரை இன்னும் தொங்க விடப்பட்டு இருக்கும். திருப்பதி செல்லும் போது அவசியம் இந்த கடப்பாரையையும் பார்க்கலாம்.

    அதிகமாக மருத்துவம் எழுதி பழகி விட்டது. ஆன்மீகம் எழுதும் பொழுது சில மருத்துவ செய்திகள் உடனே எழுத வேண்டும் என்ற வேகத்தினை, ஆர்வத்தினை ஏற்படுத்துகின்றன. கோடை வேறு வந்து விட்டதா? சில எளிய மாற்றங்களை உணவு முறையில் சொல்லலாமே என்று மனம் சொன்னது. சமீபத்தில் நான் பார்த்த காட்சி இதனை எழுதச் சொன்னது. இரண்டு தள்ளு வண்டியில் மிக அருமையான, பிரஷ் ஆன பழங்களை குவித்து விற்றனர். பார்க்கவே நன்கு இருந்தது. பக்கத்தில் ஒரு சுவீட் ஸ்டால். பழ வியாபாரியிடம் வந்த மக்கள் குறைவு. சுவீட் ஸ்டாலில் நிறைவாக இருந்தது. அருகில் இருந்த ஆன்மீக பெரியவர்- அவர்தான் நான் எழுதும் கட்டுரைகளுக்கு பல செய்திகளைத் தருவார்-அவர் திடீரென பழங்களின் தன்மையினை பற்றி பேசினார். அதனை அப்படியே குறிப்பெடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். பொதுவில் பழங்கள் மிக எளிதில் ஜீரணமாகி விடும். அதனால் தான் ஆன்மீக பயணத்தில் இருப்பவர்கள் பழங்களை எடுத்துக் கொண்டனர் என்றார்.


    * அன்னாசி பழம்-சில துண்டுகள் எடுத்துக் கொண்டால் ரத்த சோகை ஏற்படாது. அடிக்கடி ஒரு சில துண்டுகளே போதும்.

    * விளாம்பழம்-இதனை நகர மக்கள் மறந்து விட்டனர். சுண்ணாம்பு, விட்டமின் ஏ சத்து அதிகம். சிறிது வெல்லம் கலந்து சாப்பிட வேண்டும். கண் பார்வை குறைந்து இருப்பவர்கள் இதனை அடிக்கடி பயன்படுத்தலாம். கிருமிகளை அழிக்கும் குணம் விளாம்பழத்திற்கு உண்டு.

    * மாதுளம் பழமும் சரி, தோலும் சரி ஜீரண மண்டலத்தையே சீராக வைக்கும்.

    * ஆரஞ்சு பழத்தில் வைட்டமின்கள் கொட்டி கிடக்குது. கொய்யாபழம்- குறிப்பாக பல நாட்கள் தொடர்ந்து நோயாளிகள் இதனை அன்றாடம் சாப்பிட்டு வந்தால் அநேக நல்ல மாற்றம் கிடைக்கும்.

    * திராட்சையில் கறுப்பு திராட்சையை அதிக மருத்துவ குணங்கள் கொண்டதாக சொல்லுவர். திராட்சை சாற்றினை அடிக்கடி அரை டம்ளர் அளவு அருந்தி வர வேண்டும்.

    * எலுமிச்சை சாறு நீரில் (அ) வெது வெதுப்பான நீரில் கலந்து அன்றாடம் குடிக்கலாம். இதன் பலனை 2 பக்கங்கள் எழுதலாம். எளிமையாக கிடைக்கும். இதன் பலன்கள் பெரிது என்றார்.

    * 2 பேரீச்சம்பழம் அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம். நரம்புகள் பலப்படும். பல் வியாதி நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.

    * பப்பாளி பழ அருமையை இன்று நன்கு புரிந்து கொண்டு விட்டார்கள். ஆயினும் கிராம புறங்களில் இந்த பழம் அப்படியே யாரும் எடுக்காமல் தரையில் கொட்டி வீணாகி இருக்கின்றது. இது மாதிரி பலன் அளிக்கும், எளிதாக கிடைக்கும் பழங்கள் சில உள்ளன. இதனால் நரம்புகள் பலப்படுகின்றன. கிராம புறங்களில் குழந்தைகளின் நல்ல மூளை பலத்திற்கும், நரம்புகள் பலத்திற்கும் இப்படி வீணாக கொட்டி யாரும் பழங்களை உபயோகித்து அவர்களை ஆரோக்கியமான குழந்தைகள் ஆக்கலாமே.

    ஆப்பிள்-உடம்பு சரியில்லாதவர்களை பார்க்கச் சொல்லும் பொழுது தெரிந்தோ, தெரியாமலோ 'ஆப்பிள்' வாங்கிச் செல்வார்கள். தலை முதல் கால் வரை என்பார்களே அது போல் உடலின் அனைத்து மண்டலங்களும் பாதுகாக்கப்படும்.

    * வாழைப்பழம் எந்த பிறவியிலும் சிறந்ததே. * பேயன் வாழை. பச்சை வாழை வெப பத்தை உடலில் குறைக்கும். உடல் குளிர்ச்சியில் இருக்கும். * மஞ்சள் வாழை குடலை சுத்தப்படுத்தி விடும், * ரஸ்தாளி கண், உடல் இரண்டிற்கும் வலுவினை அளிக்கும். பொதுவில் ரஸ்தாளி பழத்தினை உடல் எடை அதிகம் இருப்பவர்கள் அடிக்கடி எடுத்துக் கொள்வதை தவிர்ப்பார்கள். * செவ்வாழை பழம் ஜீரண மண்டலம், குறிப்பாக கல்லீரலுக்கு சிறந்த உணவு ஆகும். கண் எரிச்சல், வறட்சி என்பவர்கள் கற்பூர வாழையினைப் பயன்படுத்தலாம். * நாவல் பழம்- தாகம் தணிக்கும். நீரிழி விற்கு சிறந்த தீர்வு. வயிற்றுப் புண், குடல் புண் தீரும்.

    மாம்பழம் கூட ராஜகனி தான். இப்படி இறைவன் நமக்கு அள்ளி நன்மைகளைத் தருகிறார். முறையாக பயன் படுத்திக் கொள்ளலாமே என்றார்.

    • மிகப்பெரிய இக்கட்டில் சிக்கி மீண்டோம். அதை இன்று நினைத்தாலும் உடம்பெல்லாம் சிலிர்க்கும்.
    • ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டு மரங்களில் வந்தவர்கள் மீனா... மீனா... என்று பயங்கர மாக கத்தினார்கள்.

    அதோ நடுக்கடலில் நிற்குது பாருங்கள் கப்பல்! அந்த கப்பலுக்குத்தான் போகப் போகிறோம் என்றதும் ராமேஸ்வரம் கடற்கரை மணலில் நின்றபடி கடலுக்குள் நின்ற கப்பலை பார்த்தேன்... வாவ்... சூப்பர்... அப்போதே துள்ளி குதிக்க வேண்டும் போல் இருந்தது.

    செங்கோட்டை!

    அர்ஜுனுடன் நான் நடித்த படம். அவருடன் நான் நடித்த முதல் படமும் அதுதான். நல்ல கதை. புதிய டைரக்டர் சி.வி.சசிகுமார்.

    இந்த படத்திற்கான சில காட்சிகள்தான் கப்பலில் வைத்து படமாக்கப்பட்டது. அதற்காக நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு சிறிய படகு மூலம் அழைத்து செல்ல ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

    அது சிறிய படகு. அந்த படகில் நான், என் அம்மா படகோட்டி மட்டும் இருந்தோம். படகு புறப்பட்டதும் ஜாலியாகத்தான் இருந்தது. அசைந்தாடிய படகும்... பரந்து விரிந்த கடலும் பயணத்தை உற்சாகப்படுத்தியது.


    ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று நான் நினைக்க கூட இல்லை. சில நிமிடங்களில் எங்கிருந்துதான் அவ்வளவு கூட்டம் வந்தது...? எப்படி திரண்டது...? என்று தெரியவில்லை. ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டு மரங்களில் வந்தவர்கள் மீனா... மீனா... என்று பயங்கர மாக கத்தினார்கள். கடல் இரைச்சலையும் தாண்டி அவர்கள் போட்ட சத்தம் என் காதுகளை துளைத்தது.

    சரி ரசிகர்கள்தான்...! நம்மை பார்க்க ஆர்வத்துடன் வந்திருக்கிறார்கள் பார்த்த சந்தோசத்தில் கத்துகிறார்கள்! திரும்பி சென்று விடுவார்கள் என்று நினைத்து நானும் அவர்களை பார்த்து சிரித்தபடியே கை காட்டினேன்.

    கடலில் படகு சென்ற போது அலை உயரும் போது உயர்ந்தும், உடனே கவிழ்வது போல் தாழ்ந்தும் சென்றது. அது மனதுக்குள் பயத்தை கிளப்பியது.

    அந்த நேரத்தில் படகுகளில் வந்தவர்களும் எங்கள் படகை சூழ்ந்து கொண்டு வழி விடாமல் முற்றுகையிட்டபடி அவர்கள் படகால் எங்கள் படகை மோதினார்கள். இதனால் படகு தண்ணீரில் கவிழ்வது போல் தள்ளாடியது. நான் பயந்து நடுங்கினேன். பிளீஸ்... வழி விடுங்கள் என்று கெஞ்சினேன். ஆனால் அதை யாரும் காதில் வாங்கவே இல்லை.

    நிறைய சாக்லெட்டுகள் வாங்கி வந்திருக்கிறார்கள். அதை என் மீது தூக்கி வீசினார்கள். தண்ணீருக்குள் படகு அங்கும் இங்கும் ஆடியதும் என் இதயம் பயத்தில் ஆடியது. படகை கெட்டியாக பிடித்துக் கொண்டேன். அழுகை, அழுகையாக வந்தது. ஆனால் அவர்களோ எங்கள் மீது பரிதாபப்பட்டதாக தெரியவில்லை.

    படகில் உட்கார்ந்து இருந்த பிறகும் நாங்கள் பயந்தோம். ஆனால் அவர்களோ கட்டுமரங்களில் எழுந்துநின்று ஆடினார்கள்.

    அவர்களை தாண்டி எங்களால் செல்ல முடியவில்லை. நடுக்கடலிலேயே தவித்து கொண்டிருந்தோம்.

    ரொம்ப நேரம் ஆகியும் நாங்கள் கப்பலுக்கு செல்லாததால் கப்பலின் மேல் தளத்துக்கு வந்து எங்கள் படகு வருகிறதா? என்று படக்குழுவினர் பார்த்துள்ளார்கள்.

    அப்போது நடுக்கடலில் எங்கள் படகை முற்றுகையிட்டு வழிவிடாமல் தடுத்து தொந்தரவு செய்ததை பார்த்திருக்கிறார்கள்.

    உடனே மாஸ்டர் கனல் கண்ணன் ஒரு படகில் அங்கிருந்து விரைந்து வந்து திரண்டிருந்தவர்களை திட்டி எச்சரித்து விரட்டினார். அதன் பிறகுதான் எங்களால் அங்கிருந்து நகர முடிந்தது. மிகப்பெரிய கண்டத்தில் இருந்து மீட்கப்பட்டது போல் இருந்தது.

    ஒரு சின்ன சீன்தான் எடுத்தார்கள். அதற்காக மிகப்பெரிய இக்கட்டில் சிக்கி மீண்டோம். அதை இன்று நினைத்தாலும் உடம்பெல்லாம் சிலிர்க்கும்.

    அந்த படம் அதிரடி படம் மட்டுமல்ல. வலுவான கதையம்சம் கொண்டது. கதைப்படி அக்ரஹாரத்தை சேர்ந்த நான் அய்யர் பாஷைதான் பேச வேண்டும். பேசினேன் அது எனக்கு புதிய அனுபவம்.


    அந்த படத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் எனக்கு தோழியாக இருப்பார். நிஜமாகவே ஜெர்மன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை அந்த பாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார்கள்.

    "பாடு பாடு பாரத பண்பாடு

    மேலை நாடும் போற்றிடும்

    பண்பாடு...." என்ற பாடலுக்கு நானும் அந்த பெண்ணும் ஆடுவோம். அது எனக்கு ரொம்ப பிடித்தது.

    பாடலில் பண்பாட்டை பற்றி பெருமையாக பேசப்பட்டது போல் அந்த பெண்ணும் நமது பண் பாட்டை பற்றி அடிக்கடி நிறைய விஷயங்களை என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டார்..

    'வெண்ணிலவே வெள்ளை

    பூவே வா.... வா...

    வெட்கம் என்னும்

    ஆடை வேண்டாம் வா... வா..' என்ற டூயட் பாடல் காட்சிகள் வாகினி ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது.

    நிறைய காஸ்ட்யூமில் அந்த காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது அர்ஜுனுக்கு குழந்தை பிறந்திருந்தது. அதனால் படப்பிடிப்புக்கு அடிக்கடி தாமதமாக வரவேண்டிய சூழல்.

    அவர் தாமதமாக வந்ததில் எனக்கு சந்தோசம். ஏன் என்றால் என் சம்பந்தப்பட்ட குளோசப் காட்சிகளை நிதானமாக முன் கூட்டியே எடுத்து விடுவார்கள். எங்கள் வீடும் பக்கத்தில் இருந்ததால் கூடுதல் சந்தோசம். ஓய்வு நேரத்தில் வீட்டுக்கு சென்று விடுவேன். இந்த சந்தோசம் எல்லோருக்கும் இருப்பது தானே? இந்த மீனாவுக்கும் ஏற்பட்டதில் தப்பில்லையே?

    இதை நான் அர்ஜுனிடமே சொல்லி இருக்கிறேன். புகழ் பெற்ற டெல்லி செங்கோட்டை போல செங்கோட்டை படமும் பெரும் புகழை தேடி தந்தது.

    அடுத்து வந்தது ஒரு சூப்பர் டூப்பர் படம். தமிழ்நாடே கொண்டாடிய வித்தியாசமான படம். அது என்ன படம் என்று யோசிக்கிறீங்களா...? அது சஸ்பென்ஸ்....

    அடுத்த வாரம் சொல்கிறேன்!

    (தொடரும்)

    • அமெரிக்க அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகையில் வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கும் சடங்கும் நடைபெறும்.
    • தம் வாழ்வில் நிறைந்திருக்கும் செல்வத்திற்காக நன்றி செலுத்துவதற்கும், ஒற்றுமையின் உணர்வைக் கொண்டாடுவதற்கும் இது ஒரு சிறந்த நேரமாகக் கருதுகிறார்கள்.

    அமெரிக்காவில் நன்றி செலுத்துதல் நாள் என்பது நம் நாட்டின் தைப்பொங்கல் திருநாள் போன்று ஒரு வகை அறுவடைத் திருநாள். கனடாவில் தோற்றம் பெற்ற நன்றி நவிலல் தினம் அமெரிக்க முதற்குடிகளின் பாரம்பரியத்திலும், ஐரோப்பியரும் சேர்ந்து கொண்டாடும் அறுவடைத் திருநாளாகும். நவம்பர் மாதத்தின் நான்காம் வியாழக்கிழமையன்று நன்றி நவிலல் நாள் கொண்டாடப்படுகிறது. இது அரசியல், சமூக, கலாச்சார, சமய முக்கியத்துவம் வாய்ந்த நாளாகவும் உள்ளது. மொத்தத்தில் ஒரு குடும்ப விழாவாகவே கொண்டாடப்படுகிறது.

    உறவினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடும் இந்த விழா நாளில் ஊரே திருவிழாக் கோலம் பூண்டுவிடுகிறது. விருந்தும், கேளிக்கையும், மரபுவழிச் சமையலுடன் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. வான்கோழியை முழுக்கோழியாக அவித்தும், பொரித்தும் சமைப்பர். மக்காச் சோளம், கிரான்பெரி பழங்கள், சக்கரை பூசணி கேக் போன்ற உணவுகளை உண்ணுவர்.

    கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளும் நடக்கும். கடவுளுக்கு நன்றி செலுத்தும் வழிபாடுகளும் நடப்பது வழக்கம். அமெரிக்கர்கள், ஐரோப்பிய குடியேறிகளுடன், அனைத்து நாட்டு மக்களும் நல்லுறவு பேணுதற்கும் இவ்விழா பயன்படுகிறது.

    நன்றியுணர்வுடன் தொடங்கும் எந்த ஒரு காரியமும் தன்னம்பிக்கை, நேர்மறையான சிந்தையைத் தூண்டுவதோடு, இதனால் அச்சத்தையும் வெல்ல முடியும் என்ற பரவலான நம்பிக்கை இவர்களிடம் உள்ளது. பிரச்சனைகள் உட்பட நம்மிடம் உள்ள அனைத்திற்கும் நாம் முற்றிலும் நன்றியுள்ளவர்களாக இருக்கும்போது அச்சமின்றி வெற்றிகரமாக செயல்பட முடியும் என்ற வகையில் நன்றியுணர்வைப் பின்பற்றுபவர்கள் மிகவும் ஆக்கபூர்வமானவர்கள் என்கிறார்கள்.

    அதனால் துன்பத்திலிருந்து விரைவாக மீண்டு வருவதோடு, வலுவான சமூக உறவுகளைக் கட்டமைக்கக் கூடியவர்களாக இருக்க முடியும் என்றும், நன்றியுணர்வுடன் இருக்கும்போது பெருமளவிலான ஆற்றல், நம்பிக்கை, உறுதிப்பாடு, உற்சாகம், விழிப்புணர்வு ஆகியவற்றை விளைவிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளதைக் குறிப்பிடுகிறார்கள்.

    நன்றிநவிலல் கொண்டாட்டம் இலையுதிர் கால இலைகளுடன் விடுமுறை அலங்காரம், வான்கோழிப் பதார்த்தங்கள், இனிப்புகள் என்று வீட்டு அலங்காரத்தோடு, சாப்பாட்டு மேசைகளையும் பிரகாசமாக்குகிறது.

    வழக்கமாக தனிக்குடும்பமாக வாழ்பவர்கள், பெற்றோர், சகோதர, சகோதரிகள் போன்ற நீட்டிக்கப்பட்ட குடும்பத்தினருடனும் மகிழ்ந்துக் கொண்டாடும் வகையில் கூடுதல் நாற்காலிகள் போன்றவற்றை அடித்தளத்திலிருந்து மேலே இழுத்துக்கொண்டு வருவார்கள்.

    அடிக்கடி சந்திக்க வாய்க்காத உறவினர்கள் அந்த நாளுக்காக ஒன்றுகூடுவதால் கொண்டாட்டத்திற்கும் மகிழ்ச்சிக்கும் குறைவிருப்பதில்லை. ஏராளமான உணவு வகைகளைச் சாப்பிடுவதுடன், கால்பந்துப் போட்டிகளையும், அணிவகுப்புகளையும் ஒன்றாக அமர்ந்து கண்டுகளிக்க விரும்புகிறார்கள்.

    பெரும்பாலும் இரவு உணவு நேரத்தின்போது உறவுகள் ஒன்றுகூடி, அலங்கரிக்கப்பட்டு, மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்ட சாப்பாட்டு அறையில், பாரம்பரியமான மைய உணவான வறுத்த வான்கோழியுடன், இனிப்பு வகைகள், பீர் போன்ற மதுபானங்கள், திராட்சை இரசம் போன்றவையும் வேண்டுமளவில் வழங்கப்படுகின்றன.

    குடும்பங்கள் ஒன்றுகூடி விருந்து உண்பதற்கு ஏற்ப அமெரிக்காவைச் சுற்றியுள்ள பெரிய நகரங்களிலும், உணவகங்கள் நன்றி தின சிறப்பு உணவுகளை உருவாக்குவதால் வீட்டில் சமைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதில்லை.

    நன்றி செலுத்துதலுக்கு அடுத்த நாள் கருப்பு வெள்ளி என அழைக்கப்படும் விடுமுறையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று நாடு முழுவதும் உள்ள கடைகள் விடிய விடியத் திறந்திருப்பதுடன் சிறப்பான தள்ளுபடிகளையும் வழங்குகின்றன. இக்காலங்களில் கருப்பு வெள்ளி விற்பனை மிகவும் பிரபலமாகிவிட்டன. கறுப்பு வெள்ளி இப்போது அமெரிக்காவில் பரபரப்பான ஷாப்பிங் நாட்களில் ஒன்றாக அறியப்பட்டு, அதன் சொந்த பாரம்பரியமாகவும் மாறியுள்ளது.

    நன்றி செலுத்தும் வார இறுதியில் அடுத்த ஆண்டு மொத்தத்திற்கும் பெரும்பாலும் தேவையான அனைத்து விதமானப் பொருட்களையும் தள்ளுபடி விலையில், பரவலான விளம்பரங்களால் எளிதாக வாங்க முடிகிறது.

    நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் நன்றி தெரிவிக்கும் நாளில் தங்கள் குடும்பங்களைப் பார்க்கப் பயணிக்கின்றனர். வருடத்தின் மிகவும் பரவலாகப் பயணம் செய்யும் நாட்களில் ஒன்றான இந்நாளில் விமானங்களும், புகைவண்டிகளும் நிரம்பி வழிவதோடு, பயண தாமதங்களும், சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் அதிகமாகவே இருக்கின்றன.

    நன்றி செலுத்தும் நேரம் அமெரிக்காவில் உள்ள வான்கோழிகளுக்கு மட்டும் மோசமான நேரமாம். நாட்டின் வேடிக்கையான மரபுகளில் ஒன்று, அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒரு வான்கோழிக்கு மன்னிப்பு வழங்குவது. நேரம் நன்றாக இருக்கும் பறவையின் உயிர் காப்பாற்றப்படுகிறது.

    20-ம் நூற்றாண்டின் மையப்பகுதியில் தொடங்கி, அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒவ்வொரு ஆண்டும் ஒன்று அல்லது இரண்டு வான்கோழிகளை மன்னித்து, மனிதாபிமானத்துடன் அந்தப் பறவைகளை படுகொலையிலிருந்து காப்பாற்றி ஒரு பண்ணைக்கு அனுப்பினாராம். இதையடுத்து இதனையே ஒரு சடங்காக பல அமெரிக்கத் தலைவர்களும் அந்த வான்கோழி மன்னிப்புச் சடங்கைச் செய்கிறார்கள். அமெரிக்க அதிபரின் இல்லமான வெள்ளை மாளிகையில் வான்கோழிகளுக்கு மன்னிப்பு வழங்கும் சடங்கும் நடைபெறும்.


    நியூயார்க் நகரில் மேசி வர்த்தக நிறுவனம் மூலமாக ஊர்வலம் நடத்தப்படுகிறது. இதில் பல ஊர்களிலிருந்தும் மக்கள் குழந்தை குட்டிகளுடன் வந்து கலந்துகொள்வது வழக்கம். இன்னிசை முழங்க துண்டுத் தாள்களும்மேலிருந்து மழைபோல் தூவப்படுகிறது. இந்த ஊர்வலத்தில் சாந்தா கிளாசு எனும் கிறிஸ்துமஸ் தாத்தாவும் தோன்றி குழந்தைகளைக் குதூகலப்படுத்துகிறார்.

    இவையனைத்திற்கும் முத்தாய்ப்பாக மலிவு விலையில் குவிக்கப்படும் பொருட்களை மக்கள் சாரி சாரியாகச் சென்று வாங்குவதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

    தம் வாழ்வில் நிறைந்திருக்கும் செல்வத்திற்காக நன்றி செலுத்துவதற்கும், ஒற்றுமையின் உணர்வைக் கொண்டாடுவதற்கும் இது ஒரு சிறந்த நேரமாகக் கருதுகிறார்கள்.

    அமெரிக்கக் கலாச்சாரத்தில் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்டுள்ள, நன்றி செலுத்துதல் நாள் வட அமெரிக்காவில் ஐரோப்பிய குடியேற்றவாசிகளின் ஆரம்ப நாட்களைக் குறிக்கிறது. இன்று நன்றியறிதல் ஒற்றுமை, பெற்றுள்ள அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

    • திருவிதாங்கூர் மன்னன் அய்யாவை மண்டியிட்டு வணங்கினான்.
    • கொடிமரத்தை 3 முறை வலம் வந்து வணங்கி அய்யா வைகுண்டரை மிக அருகில் தரிசிக்கலாம்.

    எங்கெல்லாம் அநீதிகள் நடக்கிறதோ, அங்கெல்லாம் தர்மத்தை காக்க நான் அவதரிப்பேன் என்றார் ஸ்ரீமன் நாராயணர். அதன்படி அவர் யுகம்தோறும் அதர்மத்தை அழித்து தர்மத்தை காக்க அவதரித்துள்ளார்.

    அதில் 10-வது அவதாரமாக கலி எனப்படும் மாய எண்ணங்களை அழித்து தர்ம சிந்தனைகளை ஏற்படுத்தி மக்களை நல்வழிப்படுத்த ஸ்ரீமன் நாராயணர் எடுத்த அவதாரம் தான் அய்யா வைகுண்டர்.

    சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு...

    தமிழகத்தின் தென் கோடியில் உள்ள இன்றைய குமரி மாவட்டம் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டு இருந்தது. அந்த கால சூழலில் ஜாதிய கொடுமைகள் மேலோங்கி இருந்தது. கீழ்சாதிகள் என பாகுபாட்டால் 18 சாதி மக்கள் சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆளானார்கள்.

    தாழ்ந்த சாதி எனப்படுபவர்கள் முழங்காலுக்கு கீழே வேட்டி அணியக்கூடாது, பெரிய மீசை வைக்க கூடாது, செருப்பு அணிந்து செல்லக்கூடாது, பெண்கள் தோள்சீலை அணிய கூடாது, தாலி அணிந்திருக்க கூடாது என பலவாறான கொடுமைகள் அரங்கேறின. இந்த சூழலில்தான் குமரி மாவட்டம் சாஸ்தான்கோவில் விளை எனப்படும் சாமிதோப்பில் அன்னை வெயிலாளின் வயிற்றில் அய்யா வைகுண்டர் அவதரித்தார். 24-வது வயதில் இறைவனின் நியமப்படி, திருச்செந்தூர் கடலில் தீர்த்தமாடச்சென்று அக்கடலிலேயே சங்கமித்தார்.

    3 நாட்கள் கடலுக்குள் விஞ்சை பெற்று 3-ம் நாளில் வைகுண்ட சுவாமியாக அவதரித்தார் மகா விஷ்ணு. அவரது அவதாரம் நிகழ்ந்த நாள் மாசி மாதம் 20-ந்தேதி அதிகாலை வேளை.

    செந்தூர் கடலில் அவதரித்த அவர் நேராக சாமிதோப்புக்கு வந்தார். தாழக்கிடப்பாரை தற்காப்பதே தருமம் என்று சாதிய கொடுமைக்கு ஆளாகி கூனி குறுகி கிடந்தமக்களை தலை நிமிர செய்தார். யாருக்கும் அஞ்சி நடக்காதீங்கோ, சட்டம் மறவாதே தன்னளவு வந்தாலும், காணிக்கை வேண்டாதீங்கோ, கைக்கூலி கேளாதீங்கோ என மக்களுக்கு நல் அறிவுரைகளை கூறியதோடு, மக்களை பிரித்தாண்டு கொடுமை படுத்தியவர்களுக்கு அவர்கள் செய்யும் செயலை உணரச்செய்தார்.

    அய்யா வைகுண்டர் காலத்தில் தீண்டாமை, மூடநம்பிக்கை இவற்றில் ஊறிப்போயிருந்த மக்கள் எல்லாம் அய்யாவை தெய்வமாக கொண்டாடினார்கள். இது மேல்மட்ட மக்களை பொறாமைப்பட வைத்தது. அவர்கள் திருவிதாங்கூர் மன்னன் சுவாதி திருநாளிடம் புகார் செய்தார்கள்.


    கலி வயப்பட்ட மன்னனும் தனது படைகளை அனுப்பி அய்யாவை சிறைபிடித்து வர செய்தான். தனது தவக்காலமான 5-ம் வருடம் இறுதியில் அய்யாவை கயிற்றினால் கட்டி சாலையில் இழுத்து சென்றார்கள். அய்யாவை கொல்வதற்கு பல வகைகளில் முயற்சி செய்தார்கள். சாராயத்தில் விஷத்தை கலந்து கொடுத்தனர். வத்தல் அறைக்குள் நெருப்பு போட்டு அய்யாவை அடைத்தனர்.

    சுண்ணாம்பு காளவாயில் வைத்து நீற்றினர். பாலில் விஷம் கலந்து கொடுத்தனர். கட்டைகளை அடுக்கி தீயை வைத்து நீந்திக்கொள் என்று அய்யாவை அதில் தூக்கி போட்டனர். எல்லாவற்றையும் புன்முறுவலோடு பொறுமையாக ஏற்ற அய்யா வைகுண்ட சுவாமியை இறுதியாக புலியை பட்டினிபோட்டு அடைத்து வைத்திருந்த கூண்டில் அய்யாவை அடைத்தனர். புலியோ அய்யாவை வணங்கி அவர் திருவடியில் கிடந்தது. அதன்பிறகே அய்யாவை இறைவன் அவதாரம் என உணர்ந்தனர். திருவிதாங்கூர் மன்னன் அய்யாவை மண்டியிட்டு வணங்கினான்.

    சமதர்ம சமுதாயத்தை உருவாக்க அவர் பட்ட இன்னல்கள், கொடுமைகளும் ஏராளம். எல்லாவற்றையும் அமைதியுடனும், பொறுமையுடன் சகித்தவாறு அடிமைத்தழையில் கட்டுண்டு கிடந்தவர்களை மீட்டார். பொறுத்து இருங்க மக்கா, பூலோகம் ஆளவைப்பேன் என்று மக்களை ஒரு நிரப்பாய் வாழ வைத்தார்.

    ஒருவருக்கொருவர் அன்பாய் இருந்து வாழுங்கள் என்று அன்பு வழியை போதித்தார். நடந்தது, நடப்பது, நடக்கபோவது என முக்காலமும் உணர்த்தும் அகிலத்திரட்டு என்னும் புனித நூலை அருளினார். அன்பால் மக்கள் ஒருங்கிணைந்து வாழ அன்புக்கொடி மக்கள் என மக்களை அழைத்தார். எல்லோரும் ஓரு குலம், எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதை அன்றே நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

    ஜோதி வழிபாட்டையும் உனக்குள்ளே இறைவன் இருக்கிறான் என உணர்த்த கண்ணாடி முன் நின்று வழிபடும் முறையையும் ஏற்படுத்தினார். மக்கள் பயன்படுத்தும் பொருட்களில் கூட வேறுபாடுகள் இருக்க கூடாது என முத்திரி கிணறு என பொது கிணறுகள், வழிபடுவதற்காக தாங்கல்கள், பதிகள் அமைத்தார்.

    ஒடுக்கப்பட்ட ஆண்கள் முழங்காலுக்கு கீழ் வேட்டி கட்டக் கூடாது. அங்க வஸ்திரம் அணியக் கூடாது என்று அரசாங்க சட்டம் இருந்த அந்த கால கட்டத்தில் தலைப்பாகை அணிந்து தான் இறைவழிபாடு செய்யவேண்டும் என்றும், பெண்கள் தோள் சீலை அச்சம் இன்றி அணிய வேண்டும் என்றும், மனோதத்துவ ரீதியாக புத்தி போதித்து தம் மக்களை தலை நிமிர்ந்து நிற்க செய்தார்.

    தீண்டாமை என்னும் தீயசக்தியை வேரோடு பிடுங்கும் விதத்தில் திருமண்ணை எடுத்த தம் பக்தர்களின் நெற்றியில் தொட்டு நாமம் சாற்றினார். உங்களுக்கு தெரிந்த பாசையில் இறைவனை போற்றி நீங்களே பணிவிடை செய்யுங்கள் என்று காலை, மாலை இருவேளையும் உகப்படிப்பையும், மதியம் உச்சிப்படிப்பையும் தம் மக்களுக்கு அறிமுகபடுத்தி வழிபடச் செய்தார்.

    எளியோர், வறியோர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் சமமாக அமர்த்தி சாப்பாடு கொடுத்து சமபந்தி போஜனம் நடத்தினார். சாதிக்கொரு கிணறு என்றிருந்த காலத்தில், எல்லோரும் ஒரே கிணற்று நீரை குளிக்கவும், குடிக்கவும் செய்தார். கூட்டு வழிபாட்டு மூலமே கலி என்கிற மாய அரக்கனை வேட்டையாட முடியும் என்று தர்ம நெறிகளை போதித்தார்.

    மகா விஷ்ணுவின் அவதாரமாய் முப்பொருளும் ஒரு பொருளாய் உதித்த வைகுண்டரின் தலைமைப் பதியாக இன்று சாமிதோப்பு விளங்குகிறது. அய்யாவே முன்நின்று முட்டப்பதி, பூப்பதி, அம்பலப்பதி, தாமரைக்குளம் பதி மற்றும் பல பதிகளை அமைத்தார். இன்று அய்யா வைகுண்டசாமி வழிபாட்டு ஆலயங்கள் இந்தியா முழுவதும் மட்டுமின்றி வெளி நாடுகளிலும் விழுதுகளாய் படர்ந்து பரவி வருகிறது.

    அய்யா வைகுண்டரின் தலைமைப்பதி எனப்படுவது சாமிதோப்பு. சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் 6 ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அவர் மூன்று நிலையில் தவம் மேற்கொண்டதாக அகிலம் கூறுகிறது. மூன்று நிலைகளும் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த நோக்கங்களை கூறும் போது அகிலம்,

    "முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே

    தத்தமுள்ள இரண்டாம் தவசு சாதிக்காமே

    மூன்றாம் தவசு முன்னுரைத்த பெண்ணாட்கும் நன்றான முற்பிதிரு நல்ல வழிகளுக்கும்"

    மேலும் தவத்தின் இருப்பு முறையும் நிலைக்கு நிலை மாறுபட்டதாக கூறப்படுகிறது. முதல் 2 வருடங்களும் அவர் 6 அடி குழியிலும், அடுத்த 2 ஆண்டுகள் தரையிலும், கடைசி 2 ஆண்டுகள் உயர்ந்த பீடமிட்டு தவம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தவம் புரிந்த கால கட்டத்தில் பச்சரிசிப் பால் தவிர வேறெந்த உணவு உட்கொள்ளவில்லை. குறைவாகப் பேசினார்.

    சாமிதோப்பு பதிக்குள் நுழைவதற்கு முன்பாக, அய்யா உருவாக்கிய முத்திரிக் கிணற்றில் நீர் இறைத்து நீராடி, அந்தக் கிணற்றை வலம் வந்து வழிபட்டு செல்ல வேண்டும்.

    அய்யாவின் பதிக்கு சென்றதும் அய்யா வைகுண்டர் தவம் இருந்த வடக்குவாசலை "சிவசிவ சிவசிவா அரகர அரகரா" என்று உச்சரித்து 5 முறை சுற்றி அய்யாவிடம் மாப்பு கேட்டு, ஏழு நிலை ராஜகோபுரம் தாண்டி, தருமபதியின் கிழக்குப் பார்த்த முகப்பு வாசலை அடைய வேண்டும். முகப்பு வாசலில் இருந்தே அய்யா வைகுண்டரைத் தரிசிக்கலாம். கொடிமரத்தை 3 முறை வலம் வந்து வணங்கி அய்யா வைகுண்டரை மிக அருகில் தரிசிக்கலாம். அய்யா வைகுண்டரின் பள்ளியறையை வலம் வரும் வழியில் அய்யா வைகுண்டர் மானிட அவதாரத்தில் பயன்படுத்திய கட்டில் வைக்கப்பட்டுள்ள அறையைக் காணலாம்.

    பள்ளியறை தரிசனம் முடித்ததும் தருமபதியின் உள் பிராகாரத்தை வலம் வரலாம். அவ்வாறு வலம் வருகையில், கேரள கட்டடக்கலை முறையில் அமைந்து உள்ள அய்யா வைகுண்டர் கருவறையின் பொன் விமானத்தைத் தரிசிக்கலாம்.

    தருமபதி மட்டுமல்ல, இங்கே பின்பற்றப்படும் அத்தனை வழிபாட்டு முறைகளும் வித்தியாசமானவை. தீப ஆராதனை கிடையாது. தேங்காய் உடைக்க மாட்டார்கள். கற்பூரம், சாம்பிராணி, ஊதுவத்தி ஆகியவற்றுக்கும் இங்கே இடமில்லை.

    வெற்றிலை- பாக்கு, மல்லிகைப்பூ, துளசி, பிச்சிப்பூ, பன்னீர், முழு எலுமிச்சைப் பழம் ஆகியவற்றைக் கொண்டு வந்தால் போதும். இவை வழிபாட்டுக்குப் பிறகு, இனிமமாக(பிரசாதமாக) அனைவருக்கும் சரிசமமாகத் தரப்படும்.

    'காணிக்கை வேண்டா(து)ங்கோ…' என்று அய்யா வைகுண்டரே சொல்லியிருப்பதால், தருமபதிகளில் உண்டியல்கள் கிடையாது. இங்கே பிரதானமாக வலியுறுத்தப்படுவது… 'உங்களால் முடிந்த தருமத்தைச் செய்யுங்கள்' என்பதுதான்.

    'தருமம் செய்து தழைத்திருங்கோ…'

    என்பது அய்யா வைகுண்டரின் வாக்கு என்பதால், இங்கே வரும் ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த தருமத்தைச் செய்கிறார்கள். அதாவது, தருமபதிகளில் நடைபெறும் அன்னதானத்துக்குத் தேவையான, தங்களால் முடிந்த நிதி உதவியை மனமுவந்து தருகின்றனர் மக்கள்.

    • மொபைல் போனும் இண்டர்னெட்டும் சாப்பாடு தூக்கத்தைவிட முக்கியமாகப்போய்விட்ட காலத்தில் இருக்கிறோம்.
    • சந்தோஷ வருத்த தருணங்கள் பற்றியெல்லாம் தாய் தகப்பனுக்கு நன்றாகத்தெரிந்திருக்க அவர்களுடன் நிறையப் பேச வேண்டும்.

    "என்னடி மொபைலிலேயே இத்தன நேரமா பாக்கறியே?"

    "சும்மா இரும்மா! இதெல்லாம் உனக்குப்புரியாது!"

    நீங்கள் இந்த வகை அம்மாவாக இருக்கக்கூடவே கூடாது!

    எண்பதுகளில் பரிட்சை ஹாலுக்கு கால்குலேட்டர் கொண்டு வரக்கூடாது என்றாலோ, காலேஜுக்கு பாவாடை தாவணிதான் போட்டுக்கொள்ள வேண்டும், சுடிதாரெல்லாம் அனுமதிக்க முடியாது என்றால் வாய் பேசாமல் ஒப்புக்கொண்ட தலைமுறை நாம்.

    ஆனால் பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வரக்கூடாது என்றால் உண்ணாவிரதமிருக்கும் தலைமுறை இப்போது! சுதந்திரம் என்றால் நாமறிந்தது காந்தி வாங்கித்தந்தது. ஆனால் இப்போது சுதந்திரம் என்னும் வார்த்தையின் அர்த்தமே வேறு.

    "காலேஜுலேர்ந்து வந்ததுலேர்ந்து அந்த மொபைல் போனையே நோண்டிட்டு இருக்கியே! கொஞ்சம் என்னொட உட்கார்ந்துதான் பேசேன்!"

    "அட என்னம்மா! நீ அடிக்கடி என்னோட சுதந்திரத்துல தலையிடறே. எனக்கு "மீ டைம்" (தானே தனியாகச்செலவிடும் நேரமாம்!) தரணும்! சும்மா குறுக்கிடாதே!"

    மொபைல் போனும் இண்டர்னெட்டும் சாப்பாடு தூக்கத்தைவிட முக்கியமாகப்போய்விட்ட காலத்தில் இருக்கிறோம். எட்டாவது பிறந்த நாளுக்கு மொபைல் போன் வாங்கித்தரவில்லை என்று ஒரு சிறுமி தற்கொலையே பண்ணிக்கொண்டுவிட்ட அவலம் நடந்து சில காலம் கூட ஆகவில்லை.

    ஆக, நம் வீட்டுக்குழந்தைகள் சுதந்திரமாக மொபைல் போனும் கம்ப்யூட்டரில் இண்டெர்னெட்டும் பயன்படுத்துவார்கள் என்பது நமக்கு விதிக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது. அந்தகண்றாவி இண்டெர்னெட்டில் கிடைக்காத சமாச்சாரம் இல்லை. தெய்வீக விஷயங்களிலிருந்து தீவிரவாதம் வரையும் ஆன்மீகத்திலிருந்து அடல்ட்ஸ் ஒன்லி வரையும் பாழாய்ப்போன எல்லாம் இருக்கும் சவுகரியம்.

    நம் குழந்தைகள் எதை எப்படிப்பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்காணிப்பது இயலாது. அதான் சொன்னேனே சுதந்திரம் என்னும்வார்த்தையை தூக்கி நம் முன்னே போடுவார்கள். ஆகவே அவர்களை வழி நடத்துவது மிக மிக அவசியம்.

    இந்த வழி நடத்துதல் அவ்வளவு சுலபமில்லை. இண்டர்னெட் அல்லது ஆன்லைன் பயன்படுத்துதல் பற்றி நமக்கே அரைகுறைதான். தொழில் நுட்பமும் அதன் வசதிகளூம் நாளுக்கொன்றாய் மாறி முன்னேறி வருவதால் நாமே இன்னும் கற்றுக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறோம். ஆகவே இதை வைத்து நம் குழந்தைகளை வழி நடத்துதல் சிரமமான காரியம்.

    விரவிக்கிடக்கும் சமூக வலைத்தளங்கள் ஆன்லைன் தளங்கள் மொபைல் செயலிகள் போன்றவை ஒரு அடர்ந்த காட்டை விட பயங்கரமானதாக ஆகிவிட்டிருக்கின்றன. இந்தக்காட்டினுள் எப்படி பாதுகாப்பாக வலம் வந்து பயன் அடையலாம் என்பது பற்றி நாம் இளைய சமுதாயத்தை வழி நடத்தியாக வேண்டும்.

    முதல் காரியமாக என்னென்ன செயலிகளை உங்கள் குழந்தை உபயோகிக்கிறாள் என்பதை நீங்கள் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் அதில் ஒரு கண் வைத்திருக்கிறீர்கள் என்பது அவளுக்கும் தெரியவேண்டும்.

    'நேத்து ஏதோ புது டோன் கேட்டேனே! எந்த செயலியை டவுன்லோடு பண்ணியிருக்கே?"

    "அம்மா! நீ என்ன ஷெர்லக் ஹோல்ம்ஸா? அது வந்து…ரியா சொன்னாம்மா! இந்த செயலில லேடஸ்ட் பேஷன்ல்லாம் வர்ரதாம்! அம்மா ப்ளீஸ்! இந்த செயலி மட்டும் இருக்கட்டும்மா!"

    அது!

    அதே சமயம் அப்படியே விட்டுடக்கூடாது.

    "எங்க எனக்கு காமி! நானும் டவுன்லோடு பண்ணிக்கறேனே! எனக்கும் லேட்ஸ்ட் பேஷன் தெரிஞ்சா உனக்கு தெச்சுப்போடலாமோனோ!"

    அவர்கள் பார்க்கும் செயலிகளை நீங்களும் தரவிறக்கம் செய்து உபயோகித்துப்பார்த்து நம் குழந்தைக்கு தோதான செயலிதானா என்பதை உறுத்திப்படுத்திக்கொள்ளலாம்.

    அடுத்ததாக சில சின்ன வரைமுறைகள் கொண்டு வரவேண்டும்.

    "இதப்பார்! நீ கேட்டேன்னு மொபைல் வாங்கிக்கொடுத்தாச்சு! ஆனா ராத்திரி எட்டு மணிக்கு சாப்பிட வரும்போது அணைச்சுடணும். அது நம்ம வீட்ல நீ சொல்லுவியே "மீ டைம்"னு அது மாதிரி "எல்லோருக்குமான டைம்! யாரும் மொபைல்ல பேசவோ இல்ல அதை நோண்டவோ கூடாது!"

    நல்ல விஷயம் தான் ஆனால் இதில் ஒரு முக்கிய சமாச்சாரம் இருக்கிறது! நீங்களும் இந்த டிஸிப்ளினுக்கு பணிந்து வரவேண்டும். நீங்கள் "மாதிரி"யாக திகழ்ந்தால்தான் குழந்தைகளுக்கும் ஒரு பொறுப்பு வரும். அதை விட்டுவிட்டு எட்டு மணிக்கு மேல் நீங்க மொபைல் பயன்படுத்த, அதைப்பார்த்த குழந்தை,

    "நீ மட்டும் மொபைல் பேசறியே" என்று கேட்கும்போது, "வாயை மூடு! அதிகப்பிரசங்கி" என்பது தப்பாட்டம்!

    எனக்குத்தெரிந்த ஒரு குடும்பத்தில் செவ்வாய்க்கிழமை வீட்டில் மொபைல் போனுக்குத்தடை. வீட்டுக்கு வந்துவிட்டால் யாரும் செவ்வாயன்று மொபைல் போன் உபயோகப்படுத்த மாட்டார்கள். மொபைல் இண்டர்னெட்டுக்கு வெளியேயும் உலகம் உண்டு என்பது புரிய வேண்டும்.


    பர்சனல் விவரங்களைக்கொடுக்கக்கூடாது என்பதை நீங்கள் குழந்தைகளுக்கு வலியுறுத்த வேண்டும். முக்கியமாக தன் போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் தாராளமாக வெளியிடுவது தடுக்கப்பட வேண்டும்.

    "அம்மா! இதப்பாரேன்! என் ப்ரெண்ட் ரியா எத்தனை அழகழகா போட்டொ போட்டுண்டிருக்கா!"

    குழந்தை காட்டும்போது நீங்களே அந்த ரியாவின் விபரங்களை தளங்களிலிருந்து தரவிரக்கம் செய்து காண்பித்து அவளுக்குப்புரிய வைக்க வேண்டும்!

    "பாத்தியா? இது போல யார் வேணா டவுன்லோடு பண்ணி தப்பா உபயோகப்படுத்த முடியும்! ரியாகிட்டயும் சொல்லு!"

    குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை தூண்டிவிடும் பலப்பல விஷயங்களை இணையத்தின் மூலம் தாய்மார்கள் கண்டறிந்து வீட்டிலேயே சொல்லித்தந்து ஒவ்வொரு குழந்தையும் எந்த விதத்திலும் வாய்ப்புக்கள் குறையப்பெற்றதில்லை என்று முன்னேற்ற முடியுமே...

    அமெரிக்காவில் சில பெற்றோர் தங்களின் டீனேஜ் குழந்தைகளுடன் பேசி எப்போதெல்லாம் மொபைல் இண்டர்னெட் உபயோகிக்கலாம் என்பது பற்றி எழுத்து மூலம் காண்டிராக்டே போட்டுக்கொள்கிறார்களாம், இந்த எழுதப்பட்ட காண்டிராக்ட் கட்டுப்பாடு பற்றிய ஒரு சீரியஸ்னெஸ் தருகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

    குழந்தைகளுடன் நிறையப்பேசவேண்டும்.

    ஆம், மொபைல் இண்டர்னெட்டில் இருந்து தடுக்க மட்டுமில்லை, சாதாரணமாகவே குழந்தைகளை நன்கு புரிந்து கொள்ள, பெற்றோர் அவர்களுடன் அதிகமாகப்பேசுதல் வேண்டும். அவர்களின் விருப்பு வெறுப்புக்கள், அவர்களின் ஆசாபாசங்கள், அவர்களின் நண்பர்கள், அவர்களின் சந்தோஷ வருத்த தருணங்கள் பற்றியெல்லாம் தாய் தகப்பனுக்கு நன்றாகத்தெரிந்திருக்க அவர்களுடன் நிறையப் பேச வேண்டும்.

    மொபைலும் இண்டர்னெட்டும் குடும்பத்தின் உறவுப்பாலத்தை அசைத்து விட்டதென்னவோ உண்மைதான்.

    "நேத்து வீட்ல கரண்ட் இல்ல. மொபைலும் சார்ஜ் போயிடுச்சு! கொஞ்ச நேரம் அப்பா அம்மாவோட பேசிட்டு இருந்தேன். எனக்கே ஆச்சரியம் என்ன தெரியுமா, ரெண்டு பேரும் நல்ல மாதிரியாத்தான் தெரியறாங்க!"

    இப்படிச்சொல்லும் குழந்தைகளின் பெற்றோர் உடனே முழித்துக்கொள்ள வேண்டும்!

    ×