என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கர்ப்பிணிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    • சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக கூறி கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி எல்லைப்பிள்ளைச்சாவடி 100 அடி ரோட்டில் ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மகப்பேறு மருத்துவமனை உள்ளது.

    இங்கு புதுச்சேரி மட்டுமின்றி மாநில எல்லை பகுதியான தமிழகத்தை சேர்ந்த வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம், திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து இங்கு வந்து பிரசவம் மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்நிலையில் தமிழக பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் நேற்று காலை ராஜீவ்காந் தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மகப்பேறு மருத்துவமனைக்கு வந்து பதிவு செய்தனர். பின்னர் பரிசோதனைக்காக காத்திருந்தனர். அவர்களை மதியம் 1.30 மணி வரை அழைக்கவில்லை.

    ஆனால் புதுவையை சேர்ந்த கர்ப்பிணிகளை மட் டும் அழைத்து பரிசோதனை செய்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த கர்ப்பிணிகள் சிலரும், அவர்களது உறவினர்களும் நேற்று மதியம் 1.30 மணியளவில் மருத்துவமனையை விட்டு வெளியேறி எதிரே 100 அடி ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ஒரு டாக்டர் பணியில் இருக்கும்போது மட்டும் தான் தமிழகத்தை சேர்ந்த கர்ப்பிணிகள் சிகிச்சை அளிக்காமல் புறக்கணிப்பதாக குற்றம் சாட்டினர்.

    கர்ப்பிணிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    போக்குவரத்து பாதிப்பு இதுபற்றி தகவல் அறிந்த ரெட்டியார் பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன், அரசு மகளிர் மற்றும் குழந் தைகள் மருத்துவமனை மக்கள் தொடர்பு அதிகாரி டாக்டர் நாராயணன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதா ன பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது தமிழகத்தை சேர்ந்த கர்ப்பிணிகள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக கூறி கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. 

    • புதுச்சேரி ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • கைதான 2 பேருக்கும் திருடுவதற்கு உதவியாக இருந்த சிதம்பரத்தை சேர்ந்த கார்த்திக் மாரியப்பன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சாலையோரம், கடை வீதிகள், பூங்கா மற்றும் வீடு அருகே நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்கள் திருடுபோய் வந்தன. அதிலும் குறி வைத்து புத்தம் புதிய விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டன. இதுதொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலானது.

    இந்தநிலையில் புதுச்சேரி ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் இரவு வில்லியனூர் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், பிடிபட்டவர்கள் சிதம்பரம் கே.என்.தோட்டம் சங்கர் நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் (வயது 19), உசுப்பூர் நாயகபுரம் பகுதியை சேர்ந்த தமிழ் என்ற தமிழரசன் (19) என்பதும், அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. இவர்களில் தமிழரசன் சிதம்பரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் புதுவையில் மேலும் 8 இடங்களில் மோட்டார் சைக்கிள்களை அவர்கள் திருடியது தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் ஓட்டி வந்தது உள்பட மொத்தம் 9 மோட்டார் சைக்கிள்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.15 லட்சமாகும். கைதான 2 பேருக்கும் திருடுவதற்கு உதவியாக இருந்த சிதம்பரத்தை சேர்ந்த கார்த்திக் மாரியப்பன் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • டி.ஜி.பி. கவுரவிப்பு
    • டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் கார்கில் போரின்போது ஐம்மு காஷ்மீர் மாநிலத்தில் கார்கில் மாவட்டத்தில் முதநிலை கண்காணிப்பாளராக பணியாற்றினார்.

    புதுச்சேரி:

    கடந்த 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தினர் அப்போதைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பகுதியில் ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்தனர்.

    இதனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் கடுமையான போர் மூண்டது. கார்கில் பகுதியை மீட்க 'விஜய் நடவடிக்கை' என்கிற பெயரில் பாகிஸ்தான் ராணுவத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. மலைத் தொடரில் மிகுந்த சவால்களை எதிர்கொண்டு நடந்த போரில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வென்றது.

    போரில் 100-க்கணக்கான இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர், போரில் வென்றதை நினைவுகூரும் விதமாகவும் போரில் உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களை நினைவு கூறும் விதமாக ஆண்டு தோறும் ஜூலை 26-ந் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக அனுசரிக்கப்படுகிறது.

    கார்கில் வெற்றி தினம் புதுவை கடற்கரை சாலையில் உள்ள கார்கில் போர் நினைவிடத்தில் இன்று நடந்தது. நிகழ்வில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் உள்ளிட்ட உயரதிகாரிகள், முப்படையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஆகியோர் பங்கேற்று போர் வீரர்கள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்,

    புதுவையில் புதிதாக பொறுப் பேற்றுள்ள டி.ஜி.பி. ஸ்ரீனிவாஸ் கார்கில் போரின்போது ஐம்மு காஷ்மீர் மாநிலத்தில் கார்கில் மாவட்டத்தில் முதநிலை கண்காணிப்பாளராக பணியாற்றினார். அப்போது போரில் காயமடைந்த ராணுவ வீரர்களை மீட்டு மருத்துவ உதவிகளை செய்தார்.

    இதனை பாராட்டி கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் டி.ஜி.பி. ஸ்ரீநிவாசை கவுரவித்தார்கள். ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன், வெங்கடேசன், வி.பி. ராமலிங்கம், அசோக்பாபு, தலைமைச்செயலர் ராஜீவ்வர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-

    நமது நாட்டுக்கு பெருமை சேர்த்த போர்ப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கார்கில் வெற்றி தினம் நடந்தது. வெற்றிக்கு வழித் தேடி தந்த டி.ஜி.பி. இங்கு இருப்பது மகிழ்ச்சி. போரில் ஈடுபட்ட வெற்றி தேடி தந்த அனைத்து வீரர்களுக்கும் பாராட்டும் வாழ்த்துகள்" என்றார்.

    • அமைச்சர் நமச்சிவாயம் உறுதி
    • காலிபணியிடங்கள் நிரப்ப தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    புதுச்சேரி:

    புதுவை மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது.இதற்கு மின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மின்துறை சொத்துகள் அடிப்படையில், மத்திய அரசு அறிவுறுத்தல்படி மீண்டும் மறு டெண்டர் வைக்கப்படவுள்ளது.

    புதுவை மின்துறை தனியார்மயமானால் விவசாயத்துக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்தனர் அதற்கு அரசு தரப்பில விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடரும் என உறுதி அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் புதுவையில் விவசாய நிலங்களில் இலவச மின்சாரம் பெறும் பம்ப் செட் மோட்டார்களில் மின்துறை சார்பில் மின்மீட்டர் பொருத்தத் தொடங்கியுள்ளனர். இது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மின்துறையில் உயர் அதிகாரிகளை விவசாயிகள் சந்தித்து மனுல.வும் அளித்தனர்.

    இதுதொடர்பாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஸ்மார்ட் மீட்டர் பொருத்தவில்லை. தவறாக புரிந்து கொண்டுள்ளனர். புதிய எனர்ஜி மீட்டரை பொருத்துகிறோம். எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படு கிறது என்பதை கண்டறியவே பொருத்துகி றோம். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது. மின்கட்டண மானியத்தை அரசுதான் செலுத்துகிறது. கட்டணம் வசூலிக்க மாட்டோம். இலவச மின்சாரம் எதிர்காலத்திலும் தொடரும்..

    10 சதவீதம் இடஒதுக்கீடு அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து கவர்னருக்கு அனுப்பியுள்ளோம். அவர் மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பிய பின் சென்டாக் கலந்தாய்வு தொடங்கும். புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த வசதி வாய்ப்புகள் புதுவையில் உள்ளது. காலிபணியிடங்கள் நிரப்ப தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    கல்வித்துறையில் காலி பணியிடம் விரைவில் நிரப்பப்படும். வெகுவிரைவாக போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தேர்வு நடத்தவுள்ளோம். மிகவும் பிற்படுத்தப்பட்டவர் இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் நடந்து விடும். அரசு பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு பயிற்சி தர உள்ளோம். பயிற்சி 2 ஆண்டுகள் நடக்கும்

    இவ்வாறு நமச்சிவாயம் கூறினார்.

    • கூட்டணி அரசின் 10 சதவிகித உள் ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
    • ஒட்டுமொத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் ஏழை மக்களின் நம்பிக்கை பெற்ற அரசாக திகழ்ந்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் 10 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருப்பது தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் சாதனையாகும். 50 ஆண்டுகளாக புதுச்சேரியில் ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் கூட்டணி அரசுகள், அரசு பள்ளி மாணவர்களின் முன்னேற்றங்கள் பற்றி சிந்திக்கவில்லை

    மேலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால் தற்போது அரசுப் பள்ளி யில் படிக்கும் மாண வர்களின் கல்வி தரம் உயர வேண்டும் என்பதற்காக ஏற்கனவே சிபிஎஸ்சி பாடத் திட்டத்தை தாய்மொழியில் கல்வி கற்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் மேலும் ஒரு வாய்ப்பாக புதுவையில் தேசிய ஜனநாயக அரசு 1 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை தொடர்ச்சியாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10% உள் ஒதுக்கீடு அளித்து அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருப்பது அரசு பள்ளி யின் மீது பொதுமக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.

    அரசுப் பள்ளியில் படித்தவர்கள் எல்லாம் மிகப்பெரிய பதவிகளிலும் பொறுப்புகளிலும் வகிக்கின்ற நிலையில், புதுவை கூட்டணி அரசின் 10 சதவிகித உள் ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அரசு பள்ளி மாணவர்கள் எம்.பி.பி.எஸ். போன்ற உயர்கல்வி படிப்பினை ஏழை எளிய மாணவர்கள் அடைந்திட இது வழிவகுக்கும். ஒட்டுமொத்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் ஏழை மக்களின் நம்பிக்கை பெற்ற அரசாக திகழ்ந்து வருகிறது.

    எதிர்காலத்தில் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர நம்பி க்கையை ஏற்படுத்தும் இந்த முடிவை எடுத்த அரசுக்கு பள்ளி மாணவர்கள் சார்பாகவும் பா.ஜனதா சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பெருமாள் என்ற காவலாளி பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.
    • பூட்டை உடைக்க முடியாத நிலையில் அங்கு இருந்த ஏ.சி. எந்திரத்தின் காப்பர் ஒயரை வெட்டி திருடிச் சென்றுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை அடுத்த தமிழக பகுதி யான ஆரோவில் அருகே உள்ள மொரட்டாண்டி பகுதியில் வசதி படைத்தவர்கள் ஆங்காங்கே காலி மனை பிளாட்டுகளை வாங்கி பல அடி உயரம் சுவர்களை எழுப்பி உள்ளே மரம் செடிகளை வளர்த்து பார்ம் லேண்டை உருவாக்கி வைத்துள்ளனர்.

    பெரும்பாலும் சென்னை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வர்களே அதிகம் இடங்களை வாங்கி காம்ப வுண்டு சுவரை எழுப்பி பாதுகாத்து வருகின்றனர். ஒரு சில பார்ம் லேண்டில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டி ருக்கிறது. ஒரு சில இடங்களில் இல்லை.

    இந்நிலையில் சுமார் 20 அடி உயர முள்ள காம்ப வுண்ட் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரவு நேரங்களில் பெருமாள் என்ற காவலாளி பணியமர்த்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    நேற்று இரவு பார்ம் லேண்டின் பின்புறம் காம்பவுண்ட் சுவரில் ஏரி குதித்த மர்ம நபர்கள் உள்ளே அறையில் இருந்த புதிதாக வாங்கப் பட்ட பிரம்மாண்ட எல்.இ.டி. டி.வி., ஏ.சி. இணைப்பில் இருந்த காப்பர் வயர்கள் மற்றும் அறையில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை சாக்கில் கட்டி திருடி சென்றுள்ளனர்.

    இதேபோல் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் கார்த்தி கேயனின் பார்ம் லேண்ட் பிளாட்டில் கட்டப்பட்டுள்ள வீட்டின் பூட்டை அந்த கும்பல் உடைத்துள்ளது. பூட்டை உடைக்க முடியாத நிலையில் அங்கு இருந்த ஏ.சி. எந்திரத்தின் காப்பர் ஒயரை வெட்டி திருடிச் சென்றுள்ளனர்.

    அடுத்தடுத்த பிளாட்டுக்களில் இருந்த பொருட்கள் ஒரே இரவில் திருட்டு போன சம்பவத்தால் அந்தப் பகுதியில் இடம் வாங்கிய தொழில் அதிபர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 44 நாட்கள் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.
    • 1 கோடி விதைப்பந்துகள் வழங்கினார் பல்வேறு மாநிலங்களில் அந்த விதை பந்துகள் நடப்பட்டது.

    புதுச்சேரி:

    உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு கோலாலம்பூரில் உள்ள மலேசிய பல்கலைக் கழகத்தில் 3 நாட்கள் நடந்தது.

    இதில் புதுவையில் இருந்து கலந்துகொண்ட பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்துரு (வயது 26) புதுவை யில் இருந்து காஷ்மீர் லடாக் வரை 44 நாட்கள் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டார்.

    சுற்றுப்புற சூழலை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1 கோடி விதைப்பந்துகள் வழங்கினார் பல்வேறு மாநிலங்களில் அந்த விதை பந்துகள் நடப்பட்டது. இதனை பாராட்டி நினைவு பரிசு கேடயம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மலேசிய தலைவர் டத்தோ ஓம்ஸ் தியாகராஜன், உலகத் தமிழ் பண்பாட்டு மைய தலைவர் சண்முகம், மலேசிய நண்பர்கள் அமைப்பு செய லாளர் பொன்பெருமாள், புதுச்சேரி பேராசிரியர் டாக்டர் கலைமாமணி அரங்க முருகையன், டாக்டர் சித்ரா, டாக்டர் லட்சுமிதத்தை ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாராட்டினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெண்களை கர்ப்பம் ஆக்கினால் மாதம் ரூ.25 லட்சம் வரை சம்பளம் பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
    • இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் மாகே பிராந்தியத்தில் உள்ள கெஸ்ட் ஹவுசில் நேபாளத்தைச் சேர்ந்த ஷாஜன் பட்டாராய் (வயது34) என்பவர் தங்கி வேலை செய்து வருகிறார்.

    இவரை கடந்த மாதம் செல்போனில் ஒரு மர்ம நபர் தொடர்பு கொண்டு தன்னிடம் ஒரு சிறந்த ஆபர் உள்ளது. தாங்கள் ஒத்துழைத்தால் அதிக சம்பளம் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.

    அதாவது தான் ஒரு குழந்தை பேறு வைத்திய சாலை நடத்தி வருகிறேன். அங்கு வரும் பெண்களை கர்ப்பம் ஆக்கினால் மாதம் ரூ.25 லட்சம் வரை சம்பளம் பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

    இதற்கு அட்வான்சாக ரூ.2 லட்சம் தரப்படும் என கூறவே ஷாஜன், தனது அடையாள அட்டை, ஆதார் கார்டு, வங்கி கணக்கு எண் உள்ளிட்டவற்றை அனுப்பி வைத்துள்ளார்.

    பின்னர் அவரது செல்போனுக்கு மர்ம நபரிடமிருந்து குறுந்தகவல் வந்துள்ளது. அதில் இவர் ஒரு பெண்ணுடன் பாலியல் ரீதியான தொடர்பு கொள்வதற்காக ரூ.5.5 லட்சம் மற்றும் ரூ.1000 ஆகியவற்றை ஷாஜனின் வங்கிக் கணக்கில் செலுத்தியதற்கான போலி ஆவணங்களை அனுப்பி விட்டு விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்தல் கட்டணம் உள்ளிட்ட செலவினங்களுக்காக கியூ.ஆர். கோர்டை அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து அந்த கியூ.ஆர். கோர்டை ஸ்கேன் செய்து ரூ.50 ஆயிரம் வரை பணத்தை செலுத்தி உள்ளார்.

    பின்னர் அந்த மர்ம நபரை ஷாஜன் தொடர்பு கொள்ள முடியவில்லை. கெஸ்ட் அவுஸில் வேலை செய்து சேமித்து வைத்திருந்த பணத்தை இழந்த சோகத்தில் புலம்பியபடி இருந்துள்ளார்.

    இது குறித்து புகாரின் பேரில் மாகே இன்ஸ்பெக்டர் மனோஜ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வைத்திலிங்கம் எம்.பி. மத்திய அரசிடம் மனு
    • மீனவர்கள் உடமைகளை காத்திடும் வகையில் கிரானைட் கல் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பாராளுமன்ற கூட்டத்தொடரில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை, காரைக்கால் கடற்கரையோர கிராமங்களில் பல ஆண்டாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. புதுவையின் பிராதன நகர பகுதியை பாதுகாக்க 2 கி.மீ. தூரத்துக்கு கடற்கரையில் கருங்கற்கள் கொட்டி பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. கிராமப்பற கடற்கரைகளில் பாதுகாப்பு இல்லாததால் கடல் அரிப்பு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது.

    மாநில அரசு திட்டமிடல் இன்றி கடல் அரிப்புக்கு எதிரான பணிகளை ஆங்காங்கே செய்துவருவது, தவிர்க்க க்கூடிய செலவினங்களுக்கு வழி வகுக்கிறது.

    மத்திய அரசு நிலையை உணர்ந்த புதுவை, காரைக்கால் கடற்கரையோர பாதுகாப்புக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்கரைகளை ஆய்வு செய்து மீனவர்கள் உடமைகளை காத்திடும் வகையில் கிரானைட் கல் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    • சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
    • மாணவர் நலச்சங்க நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனைக்கூட்டம் போலீஸ் தலைமையகத்தில் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே கஞ்சா புகைக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் கல்லூரி டீன், மக்கள் தொடர்பு அதிகாரிகள், மாணவர் நலச்சங்க நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனைக்கூட்டம் போலீஸ் தலைமையகத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா தலைமை வகித்து பேசியதாவது:-

    கஞ்சா பழக்கத்தால் மாணவர்கள் வாழ்க்கையை சீரழித்து கொள்கின்றனர். ஒவ்வொரு கல்லூரியிலும் பேராசிரியர், மாணவர்கள் அடங்கிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு உருவாக்க வேண்டும். மாணவர்கள் மத்தியில் கஞ்சா பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மாணவர்களின் பழக்க வழக்கம், நடவடிக்கைகளில் மாற்றம் கண்டறிந்தால் உடனடியாக பெற்றோர்களை அழைத்து விசாரிக்க வேண்டும்.

    சந்தே கப்படும் மாணவர்களை அடையாளம் கண்டு கவுன்சிலிங் அளிக்க வேண்டும். இவ்வாறு நாரசைதன்யா கூறினார்.

    கூட்டத்தில் எஸ்பிக்கள் ரவிக்குமார், ஜிந்தாகோதண்டராமன், பக்தவச்சலம், சுவாதிசிங், வம்சீதரெட்டி மற்றம் 49 கல்லூரி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    • சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வாலிபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.
    • போதை வாலிபரை ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் ஜீவா நகர் பகுதியில் புதிதாக கட்டி வரும் பாலத்தின் கீழே 3 வாலிபர்கள் கஞ்சா அடித்து கொண்டு கூச்சலிட்டு வருவதாக போதை தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வாலிபர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். இதில் 2 வாலிபர்களை போலீசார் துரத்தி பிடித்தனர். ஒருவர் போலீஸ் பிடியில் சிக்காமல், அரைமணி நேரமாக ஆட்டம் காட்டினார்.

    மேலும் அங்கிருந்த வாய்க்காலில் குதித்து சேறும், சகதியுடன் தப்பியோடினார். பின்னர் வெங்கட்டா நகரில் உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டின் வாசலில் சேறும், சகதியும் சிந்தி கிடப்பதை அடையாளமாக கொண்டு அங்கு வாலிபர் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர்.

    அவரை வெளியே வருமாறு அழைத்தனர். அவர் வர மறுத்ததோடு, கஞ்சா போதையில் தன்னை விட்டு விடும்படி கதறி அழுதார். அங்கும் இங்குமாக ஆட்டம் காட்டி, கடைசியில் நீதிபதி வீட்டுக்கு நேரடியாக வந்துட்டியா. ஒழுங்கா வெளியே வந்துடுப்பா... என போலீசார் மன்றாடினர். அவர் வெளியே வர மறுத்ததால், உள்ளே சென்று தரதரவென வெளியே இழுத்து வந்து அவர் மீது தண்ணீர் ஊற்றி சேறும் சகதியை கழுவி குளிக்க வைத்தனர்.

    பின்னர் போதை வாலிபரை ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணையில், பெரியார் நகரை சேர்ந்த அரவிந்த் என்பதும், அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது, கஞ்சா வாலிபரை போலீசார் பிடிக்க சென்றபோது அவர் செய்த ரகளையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    • ஒரு முறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ தூரம் ஓடும்
    • புதுவையில் அடுத்த 3 மாதங்களில் மின்சார பஸ்கள் இயக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் மின்சார பஸ்களின் சோதனை ஓட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த பஸ்களின் விநியோகம், இயக்கம் மற்றும் பராமரிப்பு தொடர்பாக தனியார் நிறுவனத்துடன் அரசு விரைவில் ஒப்பந்தம் செய்ய உள்ளது.

    நகர்ப்புறங்களுக்குள் 15 வழித்தடங்களில் மின்சார பஸ்கள் தற்காலிகமாக இயக்கப்பட உள்ளன. புதுவை போக்குவர த்துத்துறை 25 மின்சார பஸ்களை இயக்கவும், பராமரிக்கவும் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் தனியார் நிறுவனத்திற்கு கடிதம் வழங்கியுள்ளது.

    டெண்டர் விடப்பட்டு, அரசின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு இந்தக் கடிதம் வழங்கப்பட்டது. தனியார் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் கடிதம் வழங்கியுள்ளதாகவும் 15 நாட்களுக்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என்றும் அதிகாரப்பூர்வ வட்டா ரங்கள் தெரிவித்துள்ளது.

    இந்த நிறுவனம் ஏற்கனவே பல்வேறு நகரங்களில் மின்சார பஸ்களை இயக்குகிறது. முதல் மின்சார பஸ்சின் முன்மாதிரி 45 நாட்களில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், புதுவையில் அடுத்த 3 மாதங்களில் மின்சார பஸ்கள் இயக்கப்படும்.

    அந்த பஸ்கள் தனி வண்ணத்தில் இருக்கும். 25 பஸ்களில் 10 ஏசி பஸ்களும் 15 பஸ்கள் சாதாரணமாகவும் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் 6-7 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டவை. ஒருமுறை சார்ஜ் செய்தால் 200 கி.மீ. தூரத்திற்கு பஸ்களை இயக்கலாம். சார்ஜ் செய்ய சுமார் 6 மணி நேரம் ஆகும்.

    மின்சார பஸ்களுக்கு சார்ஜிங் செய்ய 2 இடங்களில் உள்கட்டமைப்பு வசதி செய்யப்படுகிறது.

    40 பயணிகள் வரை அமரும் திறன் கொண்ட உயர் ஆற்றல் கொண்ட பேட்டரியில் இந்த பஸ்கள் இயக்கப்படுகிறது.

    ×