என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழந்த 2 பேருக்கு ரூ.11 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.
    • பெண் குழந்தைகளுக்கு எதிரான 6 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மோசடி மற்றும் செல்போன் திருட்டு தொடர்பாக பல்வேறு புகார்கள் குவிந்தன.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அந்த செல்போன்களை யார் பயன்படுத்தி வருகிறார்கள்? என கண்டுபிடித்து மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    அதன்படி புதுவையை சேர்ந்த 70 பேரின் செல்போன்களை போலீசார் மீட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.

    இந்த செல்போன்களை காவல்துறை தலைமையகத்தில் அதன் உரிமையாளர்களிடம் போலீஸ் டி.ஐ.ஜி.பிரிஜேந்திரகுமார் யாதவ் வழங்கினார்.

    மேலும் ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழந்த 2 பேருக்கு ரூ.11 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து போலீஸ் டி.ஐ.ஜி. பிரிஜேந்திர குமார் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடப்பாண்டில் மொத்தம் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஆன்லைன் மோசடியில் பணம் இழந்தது தொடர்பாக 24 வழக்குகளில் 13 வழக்கில் ரூ.94 லட்சம் மீட்கப்பட்டது.

    பெண்களுக்கு எதிரான 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12 வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைதாகி உள்ளனர்.

    பெண் குழந்தைகளுக்கு எதிரான 6 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    • .காரைக்கால் மாவட்ட பொதுமக்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பேரணியை நடத்தவுள்ளனர்.
    • பெற்றோர்கள் மற்றும் கிராம சேவகர் இருதயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

    புதுச்சேரி 

    புதுச்சேரி ஊரக வளர்ச்சித்துறை. ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் காரைக்கால் வட்டார வளர்ச்சி துறை இணைந்து, அக்டோபர் 6-ந் தேதி முதல் 5 நாட்கள், பள்ளி மாணவ- மாணவிகள் மூலம், போதைப் பொருளுக்கு எதிராக, காரைக்கால் மாவட்ட பொதுமக்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு பேரணியை நடத்தவுள்ளனர். இதன் முதல் நிகழ்ச்சியாக, காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளியியில் தொடங்கிய இந்த பேரணியை, மாவட்ட வட்டார வளர்ச்சி அதிகாரி ரங்கநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

    நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்ட இப்பேரணி, பள்ளிகளை சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் பொதுமக்களுக்கு போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்திய வண்ணம் பதாதைகள் ஏந்தி சென்றனர். இந்நிகழ்வில் பள்ளியில் துணை முதல்வர் கனகராஜ், வட்டார வளர்ச்சித்துறையின் மாரியப்பன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் கிராம சேவகர் இருதயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

    • கர்நாடக மேலவை குழுவினரிடம் கவர்னர் தமிழிசை வேண்டுகோள்
    • மாநிலத்தின் வளர்ச்சியில் அவர் கொண்டுள்ள அக்கறையை யும் கர்நாடக குழுவினர் பாராட்டினர்.

    புதுச்சேரி:

    புதுவைக்கு அரசு முறை பயணமாக கர்நாடக சட்டப்பேரவை துணைத் தலைவர் எம்.கே.பிரானேஷ் தலைமையிலான சட்ட மேலவை உறுப்பினர்கள் 6 பேர், 4 அதிகாரிகள் கொண்ட குழுவினர் வந்த னர்.

    இந்த குழுவினர் கவர்னர் மாளிகையில் கவர்னர் தமிழிசையை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

    அப்போது, இந்தியாவில் அனைவரும் சகோதரத்து வத்தோடு வாழ்ந்து வருகி றோம். காவேரி நதிநீர்ப் பகிர்வு பிரச்சினையிலும் சகோதரத்துவ உணர்வோடு பொறுப்புடன் செயல்பட்டு காவிரி நீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கவர்னர் தமிழிசை வலியுறுத்தினார்.

    தமிழ் இலக்கியங்களில் காவிரி நதி கரைபுரண்டு ஓடும் அழகும் மீன்கள் துள்ளி விளையாடும் அழகும் சொல்லப்பட்டி ருப்பதாகவும், காவிரி நதிநீர் பாசனத்தின் மூலம் யானை கட்டி போரடிக்கும் அளவிற்கு தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக சிறப்புடன் விளங்கி யதையும் எடுத்துக் கூறினார்.

    இதன்பின் அந்த குழுவினர் சட்டசபையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தனர்.

    அப்போது, சட்டப் பேரவையில் உள்ள நிலைக்குழுக்கள், அவற்றின் அதிகாரங்கள், அவை செயல்படும் விதங்கள் குறித்தும் புதுவையில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.

    மக்கள் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்து வதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி காட்டும் முனைப்பையும், மாநிலத்தின் வளர்ச்சியில் அவர் கொண்டுள்ள அக்கறையை யும் கர்நாடக குழுவினர் பாராட்டினர்.

    கர்நாடக மேலவை உறுப்பினர்கள் புதுவை சட்டசபையை சுற்றிப் பார்த்தனர்.

    இந்த சந்திப்பின்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உடனிருந்தார்.

    • முதல்-அமைச்சரிடம் சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் தானம் செய்வதை உணர்வுபூர்வமாக கருதி தானம் செய்வதை நிறுத்தி விடுகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை தி.மு.க. இளைஞரணி அமைப்பா ளரும் முதலியார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான சம்பத் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதா வது:-

    உடல் உறுப்பு தேவைக்கும் அவை கிடைப்பதற்கும் சராசரி இடைவெளி மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகம் உள்ளது. சாலை விபத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகின்றன.

    ஆனால் இவர்களின் பெரும்பாலானவர்கள் உடல் தானம் செய்வதில்லை. குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் தானம் செய்வதை உணர்வுபூர்வமாக கருதி தானம் செய்வதை நிறுத்தி விடுகின்றனர்.

    இதன் பொருட்டே தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உடல் தானம் செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக அவர்களின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

    இது பொதுமக்களிடம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது . ேமலும் தற்போது உடல் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று மருத்துவத்துறையினர் கருத்து தெரிவிக்கின்றனர்.

    சாமானியனின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் நடப்பது என்பது அவரின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய கவுரவத்தை கொடுக்கும் அது மட்டு மில்லாமல் உடல் உறுப்பு மாற்று என்பது மிகப்பெரிய வணிகமாவதையும் தடுக்கவும் உடல் உறுப்பு பெறுவதில் உள்ள நடைமுறை சிக்கல்களையும் இது கலைத்து விடும்.

    எனவே புதுவையிலும் உடல் உறுப்பு தானம் செய்யும் நபர்களின் இறுதி சடங்கு அரசு மரியாதையுடன் செய்யப்படும் என்ற திட்டத்தை நடைமு றைப்ப டுத்தத் தேவையான நட வடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
    • புதிய பஸ்நிலையத்திலிருந்து சட்டசபை நோக்கி தொழிலாளர்களின் மாபெரும் பேரணி சி.ஐ.டி.யூ. சார்பில் நடத்தப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில சி.ஐ.டி.யூ. செயலாளர் சீனுவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சி.ஐ.டி.யூ. பல கட்ட போராட்டங்களுக்கு பின் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலச்சங்கம் அமைக்கப்பட்டது. இந்த நலச்சங்கத்தை வாரியமாக மாற்ற வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். இன்று வரை அமைப்புசாரா நல வாரியத்தை அரசு அமைக்கவில்லை. புதுவையில் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    எனவே பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். 7 ஆண்டாக தொழிற்பேட்டைகளில் குறைந்தபட்ச சம்பளத்தை தொழிலாளர் துறை அறிவிக்க வில்லை. தொழிலாளர் துறையில் ஆணையர் பதவி பல ஆண்டாக நிரப்பவில்லை. பல தொழிற்சாலைகள், பஞ்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் வலியுறுத்தி வருகிற 17-ந் தேதி புதிய பஸ்நிலையத்திலிருந்து சட்டசபை நோக்கி தொழிலாளர்களின் மாபெரும் பேரணி சி.ஐ.டி.யூ. சார்பில் நடத்தப்படும். 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வீடியோ ஆதாரம் வெளியிட்டு நாராயணசாமி புகார்
    • நில அபகரிப்பு கூட்டம் அரசியல்வாதிகளின் துணையோடு இந்த செயல்களில் ஈடுபட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ராகுல்காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்த கணக்கெடுப்பு நடத்தினால் மேல்சாதி மக்களுக்கு செல்லும் சலுகைகள் தடுக்கப்படும்.

    புதுவையிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சென்டாக்கில் தொடர்ந்து குளறுபடி நடக்கிறது. என்.ஆர்.ஐ. இட ஒதுக்கீட்டில் விதிமுறையை மாற்றி இடங்களை அபகரிக்க முயற்சிக்கின்ற னர். இதற்கு துறை செயலாளர் ஒத்துக் கொள்ளாததால் இந்த முடிவை கைவிட்டுள்ளனர்.

    பல் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த மாணவர் சுரேந்தருக்கு 2-வது கட்ட கலந்தாய்வில் எம்.பி.பி.எஸ். சீட் ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவருக்கு சீட் ஒதுக்கவில்லை என்பதால் புகார் தெரிவித்துள்ளார்.

    இதனால் கவுன்சிலிங் ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுவை அரசு உயர்த்திய மின் கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும்.

    புதுவையில் போலி பத்தி ரங்கள் தயாரிப்பது, நிலங்களை அபகரிப்பது, தனியார் சொத்துக்களை வேறு நபருக்கு பட்டா போடுவது, கோவில் நிலங்களை அபகரிப்பது, அரசு புறம்போக்கு நிலங்களுக்கு பத்திரப்பதிவு செய்வது என பத்திரப்பதி வுத்துறை தொடர் ஊழலில் ஈடுபட்டுள்ளது.

    சி.பி.ஐ. காரைக்காலில் சார்பதிவாளர் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டார். அவர் வாக்குமூலத்தில் யாருக்கு லஞ்சம் செல்கிறது என தெரிவித்துள்ளார்.

    புதுவை காமாட்சியம்மன் கோவில் நில வழக்கில் சார்பதிவாளர், பத்திரப்பதி வுத்துறை செயலாளர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதுதொடர்பான வழக்கில் ஐகோர்ட்டு, நிலத்தை மீண்டும் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளது. இதை வலி யுறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

    புதுவையில பல போலி பத்திரங்கள் தயாரிக்கப்படு கிறது. 32 போலி பத்திரங்கள் தயாரிக்கப்பட்டு, ஏற்கனவே பதிந்துள்ள பத்திரங்களை எடுத்துவிட்டு, போலி பத்திரத்தை வைத்து ரூ.பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளது.

    பதிவுத்துறையில் இன்டெக்ஸ் புத்தகம், கைரேகை புத்தகம் இருக்கும். இன்டெக்ஸ் புத்தகத்தில் பக்கத்தை எடுத்து விட்டு, போலி பத்திரம் செய்தவர்க ளின் பட்டியலை இணைக்கின்றனர். இதற்கு அதிகாரிகள், ஊழியர்கள் துணையாக உள்ளனர். 29 பத்திரம் உழவர்கரை, 3 பத்திரம் பாகூர் சார்பதி வாளர் அலுவலகத்தில் பதி யப்பட்டுள்ளது. பதிவுத்துறைக்கு தொடர்பி ல்லாதவர்கள் உள்ளே நுழைந்து அதிகாரிகள் ஒத்துழைப்போடு பத்தி ரங்களை மாற்றியுள்ளனர்.

    ஒரு மாதம் முன்பு இதை மாற்றியதற்கான ஆதாரங்கள் உள்ளது. இதுகுறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தியுள்ளார். இதில் அரசியல்வாதிகளின் பின்னணி உள்ளது. ஒரு பத்திரத்துக்கு ஒரு எண்தான் தருவார்கள். ஆனால் 2 பத்திரத்துக்கு ஒரே எண் அளிக்கப்பட்டுள்ளது. வில்லியனூரில் சார்பதி வாளர் கார்த்திகேயன் என்பவர் போலி பத்திரம் பதியமாட்டேன் என கூறியதால் அவரை ஒரு கும்பல் தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார்.

    தற்போது திருக்கனூர் சார்பதிவாளர் பாஸ்கர், வில்லியனூருக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டு பத்திரம் பதியப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாக பத்திரப்பதிவு ஊழலுக்கு என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சிதான் காரணம். பொதுமக்களின் பத்திரத்திற்கு உத்திரவாதம் இல்லாத நிலை உள்ளது. யார் சொத்தை வேண்டு மானாலும், யாருக்கு வேண்டுமானாலும் எழுதி கொடுக்கும் நிலை உள்ளது.

    பத்திரப்பதிவுத்துறையில் இமாலய ஊழல் நடக்கிறது. நில அபகரிப்பு கூட்டம் அரசியல்வாதிகளின் துணையோடு இந்த செயல்களில் ஈடுபட்டுள்ளது. இந்த பத்திரப்பதிவுக்கு முதல்-அமைச்சரும் உடந்தையாக உள்ளார். புதுவையில் உள்ள மக்களின் சொத்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. போலி உயில், பத்திரம் தொடர்பாக சி.பி.ஐ. விசா ரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் ஒரு வீடியோ ஆதாரம் ஒன்றையும் வெளியிட்டார். அதில் ஒருவர் தரையில் அமர்ந்து இன்டெக்ஸ் புத்தகத்தில் ஆவணங்களை மாற்றுவதுபோல காட்சி பதிவாயிருந்தது.

    • 500 ஆண்டுக்கு முன் இறந்தவர்களை இந்த உறையில் போட்டு புதைக்கப்படுவது வழக்கம்.
    • தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டால்தான் எந்த காலத்துக்கு உரியது என தெரியவரும் என்றார்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த வில்லியனூர் தொண்ட மாநத்தம் பகுதியில் ஆண்டனி என்பவர் தலைமையில் இளைஞர்கள் காலையில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

    அப்போது ஆற்றுப்பகுதி யில் மண் சரிந்து பானை ஓடுகள் போல அடுக்கி வைக்கப்பட்ட உறை கிணறு ஒன்று தென்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், வரலாறு ஆய்வாள ரிடம் தெரிவித்தனர். வரலாறு ஆய்வாளர் இதுகுறித்து கூறும்போது, 500 ஆண்டுக்கு முன் இறந்தவர்களை இந்த உறையில் போட்டு புதைக்கப்படுவது வழக்கம்.

    அப்போது இந்த பகுதி யில் உறைகளை புதைத்த இடம் தற்போது ஏரியாக இருக்கலாம். இதுகுறித்து தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டால்தான் எந்த காலத்துக்கு உரியது என தெரியவரும் என்றார்.

    இந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசு அறிவித்து, ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அன்பழகன் பேட்டி
    • புதுவையில் சட்டத்தின் ஆட்சி நடை பெறவில்லை தாதாக்களின் ஆட்சி நடை பெறும் சூழல் வந்து விட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் சுற்றுலா என்ற பெயரில் கலாச்சாரம், பெண்கள் பாதுகாப்பு முழுவதும் சீரழிக்கப்

    பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ரெஸ்டோபார், மசாஜ் கிளப்புகள், ஸ்பா, பப் மற்றும் கேபரே டேன்ஸ், அதன் தொடர்ச்சியாக விபச்சாரம் ஆகியவை எந்த விதமான தங்கு தடையுமின்றி நடத்தபடுகிறது.

    வெளியூரிலிருந்து புதுவையில் தங்கி படிக்கும் மாணவிகள், வேலை பார்க்கும் பெண்களை சிலர் அணுகி அவர்களை தவறான பாதையில் அழைத்து செல்கின்றனர்.கடந்த 2 ஆண்டு காலமாக இது நடைபெற்று வருகிறது. இவற்றை தடுக்க வேண்டிய காவல்துறை எதையும் தடுத்து நிறுத்தவில்லை.

    அரசு மற்றும் காவல்துறை யின் உயர் அதிகாரிகள் இவை அனைத்தையும பார்வையாளராக வேடிக்கை பார்த்து வரு கின்றனர்.

    எனவே காவல்துறை உயர் அதிகாரியும், கவர்ன ரும் இந்த கலாச்சார சீரழிவை தடுக்க கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுவையில் சட்டத்தின் ஆட்சி நடை பெறவில்லை தாதாக்களின் ஆட்சி நடை பெறும் சூழல் வந்து விட்டது.

    சட்டப்பேரவை நிலம் விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் மீது சி.பி.ஐ. விசரணைக்கு அனுப்பி உள்ளேன் என சபாநாயகர் கூறினார். இதுவரை அது குறித்து எந்த தகவல் இல்லை.

    உண்மையில் சி.பி.ஐ. விசாரணைக்கு அவர் அனுப்பினாரா? அல்லது சமாதானம் செய்ய பணம் ஏதாவது கைமாறியதா.?

    இவ்வாறு அன்பழகன் கூறினார்

    • வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
    • இந்திய மருத்துவ மையத்திடம் கால அவகாசம் கோராமல் தன்னிச்சையாக அறிவிப்பை வெளியிட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலா ளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    சென்டாக் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது.

    சென்டாக் அதிகாரிகளின் சுயநல போக்காலும், ஆட்சி யாளர்களின் அலட்சியத்தா லும் ஏழை, எளிய மாணவர்க ளின் மருத்துவ கல்லூரி கனவுகள் சிதைக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 5-ந் தேதி மருத்துவம் படிக்க 2 கட்ட கலந்தாய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட மாணவர்க ளின் பட்டியலை சென்டாக் நிர்வாகம் வெளியிட்டது.

    முதல்கட்ட கலந்தாய்வில் காலியாக உள்ள 34 இடங்க ளுக்கு பதிலாக 74 காலியி டங்கள் உள்ளதாக சென்டாக் நிர்வாகம் வெளி யிட்டு மாணவர்களிடையே திட்டமிட்டே குழப்பத்தை ஏற்படுத்தியது.

    செப்டம்பர் 30-ந் தேதியுடன் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என இந்திய மருத்துவ மையம் உத்தர விட்டுள்ளது.

    இந்த உத்தரவை புதுவை சென்டாக் நிர்வாகம் பின்பற்றாமல், இந்திய மருத்துவ மையத்திடம் கால அவகாசம் கோராமல் தன்னிச்சையாக அறிவிப்பை வெளியிட்டது.

    இதையடுத்து அவசரகதி யில் 2-ம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பை சென்டாக் நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது.

    சென்டாக் நிர்வாகத்தின் இந்த சதிச்செயலை புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கி றோம்.

    இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும். ஒட்டு மொத்த குளறுபடிகளுக்கும் சென்டாக்கில் நீண்ட காலமாக பணியாற்றும் அதிகாரிகள்தான் காரணம். எனவே சென்டாக்கில் பணிபுரியும் ஒட்டுமொத்த அதிகாரிகளையும் பதவிநீக்கம் செய்துவிட்டு, புதியதாக அதிகாரிகளை நியமனம் செய்து கலந் தாய்வை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கென்னடி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • புதிய கல்வி கொள்கையால் புதுவை மாநிலத்தில் உயர் கல்வித்துறையில் தாய் மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடத்தப்படும் பல்வேறு துறை வகுப்புகளில் இது நாள்வரை முதல் 2 ஆண்டுகளுக்கு 4 பருவத் தேர்வுகளில் தமிழ் மொழி பயிற்றுவிக்கப்பட்டு வந்தது.

    மாணவர்களும் ஆர்வத்துடன் நமது தமிழ் மொழி மட்டும் இல்லாமல் அந்தந்த பிராந்திய மொழிகளிலும் கற்று வந்தனர். இந்தச் சூழ்நிலையில் மத்திய பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையால் ஏற்கனவே 4 பருவங்களில் தமிழ் மொழி கற்றுக் கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது 2 ஆண்டுகளில் 2 பருவத்திற்கு மட்டும் தமிழ்மொழி பயிற்றுவித்தால் போதும் என்பது கண்டனத்திற்கு ரியதாகும். வேலைவாய்ப்பு கிடைக்காது.

    இதனால் ஒவ்வொரு கல்லூரிகளிலும் 2 தமிழ் பேராசிரியர்கள் பதவி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதே நிலை நீடித்தால் தமிழ் மொழி படித்தவர்களுக்கு புதுச்சேரி மாநிலத்தில் இனிமேல் வேலை வாய்ப்பு என்பது எட்டாக்கனியாகி விடும். அதேபோல் 2 பிராந்திய மொழிகளும் சிதைக்கப்பட்டு விடும். தமிழ் மொழியை அழிக்க நினைக்கும் இந்த புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து கல்லூரி மாணவர்கள்- மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மேலும் தற்பொழுது நடைமுறைப்படுத்தி உள்ள புதிய கல்விக் கொள்கையால் மாணவர்களின் இடை நிற்றல் அதிகமாக நேரிடும். 4 ஆண்டு படிப்பில் முதலாம் ஆண்டு நின்று விட்டால் சான்றிதழ் கொடுத்து அனுப்புகின்ற முறையும் 2 ஆண்டு நின்று விட்டால் பட்டயம் கொடுத்து அனுப்புகின்ற நிலை ஏற்படும்.

    இதனால் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் ஒரு குழப்பத்தினை மட்டு மல்லாமல் கொந்தளிப்பை யும் இந்த புதிய கல்விக் கொள்கை ஏற்படுத்தி இருக்கிறது. புதிய கல்வி கொள்கையால் புதுவை மாநிலத்தில் உயர் கல்வித்துறையில் தாய் மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது.

    எனவே புதுச்சேரி அரசு மத்திய பா.ஜனதா அரசினை அணுகி புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

    தமிழ் மொழியின் மாண்பு கண்டும் மாணவர்களின் போராட்டத்தினை கணக்கில் கொண்டு ஏற்கனவே நடைமுறையில் இருந்த தமிழ்மொழிப்பாட முறையினை மீண்டும் அமல்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தற்போது வேலையில் இருப்பதால் வேலை முடிந்து மாலையில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக தெரிவித்தார்.
    • தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி துளசியம்மாள்(79). நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து துளசியம்மாள் தவறி கீழே விழுந்து விட்டார்.

    இதுபற்றி அபிஷேகப்பாக்கத்தில் வசிக்கும் தனது பேரன் விமல்ராஜிக்கு தகவல் தெரிவித்தார். அப்போது விமல்ராஜ் தற்போது வேலையில் இருப்பதால் வேலை முடிந்து மாலையில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக தெரிவித்தார்.

    அதன்படி விமல்ராஜ் வேலை முடிந்ததும் துளசியம்மாளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கார் ஏற்பாடு செய்து கொண்டு சென்றார். அப்போது வீட்டில் துளிசியம்மான் தலைகுப்புற விழுந்து தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு விமல்ராஜ் அதிர்ச்சியடைந்தார்.

    ரத்த அழுத்தம் காரணமாக துளசியம்மாள் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து விமல்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 2 வாலிபர்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த அரி(23) என்பவரை முதலியார்பேட்டை போலீ சார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் போலீசார் நேற்று மாலை தவளக்குப்பம் மெயின் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக தகாத வார்த்தைகளால் பேசி ரகளை செய்து கொண்டிருந்தனர்.அந்த 2 வாலிபர்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கடலூர் அடுத்த கோண்டூர் பகுதியை சேர்ந்த அருள்(21), லொடுக்கு என்ற சஞ்சய்(20) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் கன்னி யக்கோவில் பச்சை வாழியம்மன் கோவில் அருகே மது குடித்து விட்டு ரகளை செய்த கடலூர் குண்டு உப்பளவாடி பகுதியை சேர்ந்த கரண் (24) என்பவரை கிருமாம்பாக்கம் போலீசாரும்,

    வாணரப்பேட்டை அலேன்வீதியில் பொது இடத்தில் ரகளை செய்த வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த அரி(23) என்பவரை முதலியார்பேட்டை போலீ சார் கைது செய்தனர்.

    ×