search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vaiyapuri Manikandan"

    • வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
    • இந்திய மருத்துவ மையத்திடம் கால அவகாசம் கோராமல் தன்னிச்சையாக அறிவிப்பை வெளியிட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலா ளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    சென்டாக் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது.

    சென்டாக் அதிகாரிகளின் சுயநல போக்காலும், ஆட்சி யாளர்களின் அலட்சியத்தா லும் ஏழை, எளிய மாணவர்க ளின் மருத்துவ கல்லூரி கனவுகள் சிதைக்கப்பட்டு வருகிறது.

    கடந்த 5-ந் தேதி மருத்துவம் படிக்க 2 கட்ட கலந்தாய்வுக்காக தேர்வு செய்யப்பட்ட மாணவர்க ளின் பட்டியலை சென்டாக் நிர்வாகம் வெளியிட்டது.

    முதல்கட்ட கலந்தாய்வில் காலியாக உள்ள 34 இடங்க ளுக்கு பதிலாக 74 காலியி டங்கள் உள்ளதாக சென்டாக் நிர்வாகம் வெளி யிட்டு மாணவர்களிடையே திட்டமிட்டே குழப்பத்தை ஏற்படுத்தியது.

    செப்டம்பர் 30-ந் தேதியுடன் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என இந்திய மருத்துவ மையம் உத்தர விட்டுள்ளது.

    இந்த உத்தரவை புதுவை சென்டாக் நிர்வாகம் பின்பற்றாமல், இந்திய மருத்துவ மையத்திடம் கால அவகாசம் கோராமல் தன்னிச்சையாக அறிவிப்பை வெளியிட்டது.

    இதையடுத்து அவசரகதி யில் 2-ம் கட்ட கலந்தாய்வு அறிவிப்பை சென்டாக் நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது.

    சென்டாக் நிர்வாகத்தின் இந்த சதிச்செயலை புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கி றோம்.

    இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும். ஒட்டு மொத்த குளறுபடிகளுக்கும் சென்டாக்கில் நீண்ட காலமாக பணியாற்றும் அதிகாரிகள்தான் காரணம். எனவே சென்டாக்கில் பணிபுரியும் ஒட்டுமொத்த அதிகாரிகளையும் பதவிநீக்கம் செய்துவிட்டு, புதியதாக அதிகாரிகளை நியமனம் செய்து கலந் தாய்வை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காரைக்கால் துறை முகத்தின் செயல்பாடுகளை புதுவை அரசு கண்காணிக்க தவறியதால் கடத்தல் கேந்திரமாக மாறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
    • முதியவர்கள், குழந்தைகள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காரைக்கால் துறை முகத்தின் செயல்பாடுகளை புதுவை அரசு கண்காணிக்க தவறியதால் கடத்தல் கேந்திரமாக மாறி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. காரைக்கால் துறை முகத்தில் அளவுக்கு அதிகமாக வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டு டன் கணக்கில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.

    காற்றின் மூலம் பரவும் கரி துகள்களால் காரைக்கால் மாவட்டமே நச்சுத்தன்மையாக மாறியுள்ளது. உணவுப் பொருட்களிலும் கரி துகள்கள் கலப்பதால் அதை உட்கொள்ளும் மக்கள் பலவித நோய் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றனர். முதியவர்கள், குழந்தைகள் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

    துறைமுகத்தின் செயல்பாடுக்கு எதிராக காரைக்கால் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் மக்களை ஆட்சியாளர்களின் தூண்டுதலால் போலீசார் மிரட்டுவது கண்டனத்திற்குரியது.

    காரைக்கால் துறைமுகம் வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படு வதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. காரைக்கால் துறைமுகத்தை உடனடி யாக புதுவை அரசு கையகப்படுத்த வேண்டும். அரசே துறைமுகத்தை நடத்தி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவையின் அண்டை மாநிலமான தமிழகத்தை சேர்ந்த விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் ஆசிரமம் மிகப்பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
    • இவர்களுக்கு உரிய பாதுகாப்பும், மறு வாழ்வுக்கான வாய்ப்புகள் வழங்கப்படுகிறதா? என்ற சந்தேகம் நிலவுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையின் அண்டை மாநிலமான தமிழகத்தை சேர்ந்த விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த ஆதரவற்றோர் ஆசிரமம் மிகப்பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. புதுவையிலும் பல அரசு மற்றும் தனியார் காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், சிறுவர் இல்லங்கள் செயல்பட்டு வருகிறது.

    இவற்றில் சில காப்பகங்கள் அனுமதியின்றி லாப நோக்கோடு செயல்படுவதாக அவ்வப்போது புகார்கள் எழுந்து வருகின்றன. ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்ப்பவர்களிடம் அதிக பணம் வசூலிக்கப்பட்டாலும், முதியோருக்கு உரிய சிகிச்சை, அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    புதுவையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப் பட்டு மீட்கப்படும் சிறுமிகள், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு மீட்கப்பட்ட இளம்பெண்கள் பலர் இதுபோன்ற காப்பகங்களில்தான் தங்க வைக்கப்படுகி ன்றனர். இவர்களுக்கு உரிய பாதுகாப்பும், மறு வாழ்வுக்கான வாய்ப்புகள் வழங்கப்படுகிறதா? என்ற சந்தேகம் நிலவுகிறது.

    புதுவையில் ஒவ்வொரு சிக்னல்களிலும் பச்சிளம் குழந்தைகளுடன் யாசகம் பெற இளம் பெண்களும், முதியோரும் கையேந்தி நிற்பது மிகவும் கொடுமையானது.புதுவை மாநிலத்தில் உள்ள காப்பகங்கள், ஆதரவற்றோர் இல்லங்கள், ஆசிரமங்கள், சிறுவர் இல்லங்களை அரசு அதிகாரிகள் முழுமையான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

    சாலைகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டோரை அரசு காப்பகங்களில் சேர்த்து சிகிச்சை அளிக்க வேண்டும். சாலையோரத்தில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு மறுவாழ்வு ஏற்பாடுகளை செய்துதர வேண்டும்.

    சிக்னல்தோறும் யாசகம் பெறுவோரை தடுத்து நிறுத்தி புதுவையை சீர்மிகு நகரமாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி செயல்படும் காப்பகம், ஆசிரமம், இல்லங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து ஆதரவற்றோருக்கு தேவை யான அரவணைப்பை அளிக்க வேண்டும்

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு பா.ஜனதா செயல்பட்டு வருகிறது.
    • மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் மெகா ஊழல் நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு பா.ஜனதா செயல்பட்டு வருகிறது.நில பரப்பளவில் சிறிய சுமார் 12 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட புதுவையில் ஏற்கனவே 7 மதுபான தொழிற்சாலைகள் உள்ளன.

    இந்தநிலையில் மக்கள் எண்ணங்களுக்கு விரோதமாக, மது ஆறு பெருக்கெடுத்து ஓடும் வகையில், தி.மு.க.வை சேர்ந்த தொழிலதிபர்கள் உட்பட புதிதாக 6 மதுபான ஆலைகளுக்கும், 200-க்கும் மேற்பட்ட ரெஸ்டோ பார்கள் எனப்படும் கவர்ச்சி நடன பார்களை திறக்கவும் கலால்துறை பொறுப்பு வகிக்கும் முதல அமைச்சர் ரங்கசாமி கவர்னர் ஒப்புதலோடு அனுமதி அளித்துள்ளார்.

    புதுவை முதல்-அமைச்சரின் மதுபான கொள்கையை அ.தி.மு.க. சார்பில் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். இந்த சூழ்நிலையில் தொழில்துறை பொறுப்பு வகிக்கும் பா.ஜனதா அமைச்சரே மதுபான தொழிற்சாலைகளை திறக்க தேவையான அனைத்து அனுமதியையும் முன்னின்று வழங்க முயற்சிப்பது மாநில மக்கள், தங்களின் மீது வைத்திருந்த மிகப்பெரும் நம்பிக்கையை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது.

    மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் மெகா ஊழல் நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

    எனவே,பிரதமர் புதுவை மாநில மக்களின் மீது அக்கறை கொண்டு முதல்-அமைச்சரின் மக்கள் விரோத மதுபான கொள்கையை தடுத்து நிறுத்தி, புதிதாக வழங்கப்பட்ட மதுபான தொழிற்சாலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும். புதுவை மாநில மக்கள், தங்கள் மீதும், தேசிய ஜனநாயக கூட்டணி மீதும் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றிட வேண்டும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் கடிதத்தில் கூறியுள்ளார்.

    • புதுவை மின்துறை வீட்டு உபயோக கட்டணத்தை யூனிட்டுக்கு சராசரியாக ரூ.45 பைசா உயர்த்தியுள்ளது. வழக்கமாக அரசு பரிந்துரை செய்யும் கட்டணம், இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் ஏற்கப்படும்.
    • இதுனால் அன்றாட கூலி தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மின்துறை வீட்டு உபயோக கட்டணத்தை யூனிட்டுக்கு சராசரியாக ரூ.45 பைசா உயர்த்தியுள்ளது. வழக்கமாக அரசு பரிந்துரை செய்யும் கட்டணம், இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் ஏற்கப்படும். பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டாலும், திட்டமிட்டபடி கட்டணத்தை மின்துறை உயர்த்துவதுதான் வாடிக்கை.

    இந்த கட்டண உயர்வால் புதுவையில் அனைத்து பொருட்களின் விலையும் உயரும். புதுவை மக்கள் மாதந்தோறும் செலுத்தும் மின்கட்டணம் சுமார் ரூ.500 வரை கணிசமாக உயரும். இந்த கட்டண உயர்வை புதுவை மக்களால் ஏற்க முடியாது.

    புதுவையில் கொரோனா காலத்தில் மூடப்பட்ட பல தொழிற்சாலைகள் திறக்கப்படவில்லை. புதிய தொழிற்சாலை களை கொண்டுவர அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுனால் அன்றாட கூலி தொழிலாளர்கள், ஏழை எளிய மக்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர்.

    படித்த இளைஞர்கள் அண்டை மாநிலங்களுக்கு கொத்தடிமைகள் போல கிடைத்த வேலைக்கு சொற்ப சம்பளத்தில் வேலை செய்து வருகின்றனர். புதுவை இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை, வேலைவாய்ப்பை அளிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் பணியிடங்களில் கண்துடைப்புக்காக ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதால் எந்தவித மாற்றமும் ஏற்படாது. இத்தகைய சூழலில் புதுவை மாநில மக்களுக்கு பொருளாதார நெருக்கடியை உண்டாக்கும் மின் கட்டண உயர்வை பொங்கல் பரிசாக அரசு அறிவித்துள்ளதை அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

    இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் பரிந்துரை செய்த வீட்டு உபயோக கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும். மின் கட்டணம், குப்பை வரி, வீட்டுவரி, குடிநீர் வரி என தனித்தனியே வரி விதித்துவிட்டு, ஆண்டு தோறும் வரியில்லாத பட்ஜெட் தாக்கல் செய்வதாக போலி கபட நாடகம் ஆடுவதை முதல்-அமைச்சர் நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், ஏனாமில் மக்கள் நலத்திட்டங்களுக்காக 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாச அசோக்கை அவரின் வீட்டில் சந்தித்தார்.
    • தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சர் அனைத்து தொகுதிகளையும் பாரபட்சமின்றி கவனித்து, நலத்திட்டங்களை வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன், ஏனாமில் மக்கள் நலத்திட்டங்களுக்காக 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாச அசோக்கை அவரின் வீட்டில் சந்தித்தார்.

    அப்போது அவர் நடத்திய போராட்டம், கோரிக்கைகள் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் வையாபுரி மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அசோக், பலமுறை அமைச்சராக இருந்தவரின் ஆதரவுடன் போட்டியிட்ட முதல்-அமைச்சரை வெற்றி பெற்றுள்ளார். இதற்கு ஏனாம் தொகுதி மக்கள் அசோக் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் காரணம். எம்.எல்.ஏ. தேர்தலோடு வெற்றி, தோல்வி முடிந்துவிட்டது.

    தேர்வு செய்யப்பட்ட முதல்-அமைச்சர் அனைத்து தொகுதிகளையும் பாரபட்சமின்றி கவனித்து, நலத்திட்டங்களை வழங்க வேண்டும். ஏனாமில் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏவை செயல்படவிடாமல் அரசியல் செய்கின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஏனாம் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயங்குகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    ஏனாமிற்கு வந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி, நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாததற்கு புதுவைக்கு முழு அதிகாரம் இல்லாததுதான் காரணம் என தெரிவித்துள்ளார். முழு அதிகாரம் இல்லாவிட்டால் முதல்-அமைச்சர் பதவியில் ஏன் நீடிக்க வேண்டும்? மதுபான ஆலைகள், கவர்ச்சி நடன பார்களுக்கு அனுமதி வழங்க அதிகாரம் உள்ளது. மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற அதிகாரம் இல்லையா?

    சூதாட்ட விடுதிகளே இருக்கக் கூடாது என்பதுதான் அரசின் எண்ணம் என ரங்கசாமி தெரிவித்துள்ளார். சட்டசபைக்கு அருகிலேயே மிகப் பெரும் சூதாட்ட கிளப் நடந்து வருகிறது. ஏனாமில் ஏழைகளின் வருமானத்தை சூதாட்ட கிளப் நடத்தி சுரண்டி வருகின்றனர். இவற்றை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்ற அசோக் எம்.எல்.ஏ. கோரிக்கை நியாயமானது.

    மக்களுக்காக நடைபெறும் போராட்டங்கள் என்றுமே தோல்வியை சந்தித்தது கிடையாது. எங்கள் போராட்டத்தை பற்றி மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். எந்தவித மிரட்டலுக்கும் அஞ்சாமல் நாங்கள் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    ×