search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மக்கள் விரோத மது கொள்கையை தடுக்க வேண்டும்-பிரதமர் மோடிக்கு வையாபுரி மணிகண்டன் கடிதம்
    X

    கோப்பு படம்.

    மக்கள் விரோத மது கொள்கையை தடுக்க வேண்டும்-பிரதமர் மோடிக்கு வையாபுரி மணிகண்டன் கடிதம்

    • தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு பா.ஜனதா செயல்பட்டு வருகிறது.
    • மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் மெகா ஊழல் நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தேசிய அளவில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தோடு பா.ஜனதா செயல்பட்டு வருகிறது.நில பரப்பளவில் சிறிய சுமார் 12 லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட புதுவையில் ஏற்கனவே 7 மதுபான தொழிற்சாலைகள் உள்ளன.

    இந்தநிலையில் மக்கள் எண்ணங்களுக்கு விரோதமாக, மது ஆறு பெருக்கெடுத்து ஓடும் வகையில், தி.மு.க.வை சேர்ந்த தொழிலதிபர்கள் உட்பட புதிதாக 6 மதுபான ஆலைகளுக்கும், 200-க்கும் மேற்பட்ட ரெஸ்டோ பார்கள் எனப்படும் கவர்ச்சி நடன பார்களை திறக்கவும் கலால்துறை பொறுப்பு வகிக்கும் முதல அமைச்சர் ரங்கசாமி கவர்னர் ஒப்புதலோடு அனுமதி அளித்துள்ளார்.

    புதுவை முதல்-அமைச்சரின் மதுபான கொள்கையை அ.தி.மு.க. சார்பில் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். இந்த சூழ்நிலையில் தொழில்துறை பொறுப்பு வகிக்கும் பா.ஜனதா அமைச்சரே மதுபான தொழிற்சாலைகளை திறக்க தேவையான அனைத்து அனுமதியையும் முன்னின்று வழங்க முயற்சிப்பது மாநில மக்கள், தங்களின் மீது வைத்திருந்த மிகப்பெரும் நம்பிக்கையை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது.

    மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கியதில் மெகா ஊழல் நடந்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

    எனவே,பிரதமர் புதுவை மாநில மக்களின் மீது அக்கறை கொண்டு முதல்-அமைச்சரின் மக்கள் விரோத மதுபான கொள்கையை தடுத்து நிறுத்தி, புதிதாக வழங்கப்பட்ட மதுபான தொழிற்சாலை அனுமதியை ரத்து செய்ய வேண்டும். புதுவை மாநில மக்கள், தங்கள் மீதும், தேசிய ஜனநாயக கூட்டணி மீதும் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றிட வேண்டும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் கடிதத்தில் கூறியுள்ளார்.

    Next Story
    ×