search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "frozen"

    • காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளில் 300 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.
    • பா.ஜ.க.வின் வங்கிக் கணக்குகளை முடக்கவேண்டும் என கார்கே கோரிக்கை விடுத்துள்ளார்.

    பெங்களூரு:

    காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. அவர்கள் வருமான வரித்துறையினரை வைத்து இப்படி செய்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சிக்கு மக்களால் வழங்கப்பட்ட நன்கொடை பணம் வங்கிகளில் உள்ளது. இப்படி செய்தால் தேர்தல் எப்படி நடக்கும்?

    தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க. எப்படி பணம் சம்பாதித்தது என்பதை சுப்ரீம் கோர்ட்டு இன்று அம்பலப்படுத்தியுள்ளது.

    எங்கள் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், பா.ஜ.க. வங்கி கணக்குகள் செயல்பட்டில் உள்ளது.

    தேர்தல் பத்திர முறைகேடுகள் அம்பலமாகியுள்ளதால் பா.ஜ.க.வின் வங்கி கணக்குகளை முடக்கவேண்டும்.

    தேர்தல் பத்திர முறைகேடு குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

    • 500 ஆண்டுக்கு முன் இறந்தவர்களை இந்த உறையில் போட்டு புதைக்கப்படுவது வழக்கம்.
    • தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டால்தான் எந்த காலத்துக்கு உரியது என தெரியவரும் என்றார்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த வில்லியனூர் தொண்ட மாநத்தம் பகுதியில் ஆண்டனி என்பவர் தலைமையில் இளைஞர்கள் காலையில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

    அப்போது ஆற்றுப்பகுதி யில் மண் சரிந்து பானை ஓடுகள் போல அடுக்கி வைக்கப்பட்ட உறை கிணறு ஒன்று தென்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், வரலாறு ஆய்வாள ரிடம் தெரிவித்தனர். வரலாறு ஆய்வாளர் இதுகுறித்து கூறும்போது, 500 ஆண்டுக்கு முன் இறந்தவர்களை இந்த உறையில் போட்டு புதைக்கப்படுவது வழக்கம்.

    அப்போது இந்த பகுதி யில் உறைகளை புதைத்த இடம் தற்போது ஏரியாக இருக்கலாம். இதுகுறித்து தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டால்தான் எந்த காலத்துக்கு உரியது என தெரியவரும் என்றார்.

    இந்த இடத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அரசு அறிவித்து, ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×