என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மூதாட்டி மயங்கி விழுந்து சாவு
    X

    கோப்பு படம்.

    மூதாட்டி மயங்கி விழுந்து சாவு

    • தற்போது வேலையில் இருப்பதால் வேலை முடிந்து மாலையில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக தெரிவித்தார்.
    • தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி துளசியம்மாள்(79). நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து துளசியம்மாள் தவறி கீழே விழுந்து விட்டார்.

    இதுபற்றி அபிஷேகப்பாக்கத்தில் வசிக்கும் தனது பேரன் விமல்ராஜிக்கு தகவல் தெரிவித்தார். அப்போது விமல்ராஜ் தற்போது வேலையில் இருப்பதால் வேலை முடிந்து மாலையில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக தெரிவித்தார்.

    அதன்படி விமல்ராஜ் வேலை முடிந்ததும் துளசியம்மாளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல கார் ஏற்பாடு செய்து கொண்டு சென்றார். அப்போது வீட்டில் துளிசியம்மான் தலைகுப்புற விழுந்து தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு விமல்ராஜ் அதிர்ச்சியடைந்தார்.

    ரத்த அழுத்தம் காரணமாக துளசியம்மாள் மயங்கி விழுந்து இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து விமல்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×