என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொது இடத்தில் ரகளை செய்த 4 பேர் கைது
    X

    கோப்பு படம்.

    பொது இடத்தில் ரகளை செய்த 4 பேர் கைது

    • 2 வாலிபர்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த அரி(23) என்பவரை முதலியார்பேட்டை போலீ சார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் போலீசார் நேற்று மாலை தவளக்குப்பம் மெயின் ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் நின்று கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக தகாத வார்த்தைகளால் பேசி ரகளை செய்து கொண்டிருந்தனர்.அந்த 2 வாலிபர்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் கடலூர் அடுத்த கோண்டூர் பகுதியை சேர்ந்த அருள்(21), லொடுக்கு என்ற சஞ்சய்(20) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதுபோல் கன்னி யக்கோவில் பச்சை வாழியம்மன் கோவில் அருகே மது குடித்து விட்டு ரகளை செய்த கடலூர் குண்டு உப்பளவாடி பகுதியை சேர்ந்த கரண் (24) என்பவரை கிருமாம்பாக்கம் போலீசாரும்,

    வாணரப்பேட்டை அலேன்வீதியில் பொது இடத்தில் ரகளை செய்த வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்த அரி(23) என்பவரை முதலியார்பேட்டை போலீ சார் கைது செய்தனர்.

    Next Story
    ×