என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கில இலக்கிய மன்ற தொடக்கவிழா நடந்தது.
    • ஆங்கிலத்துறையின் இளங்கலை மற்றும் முது–கலை மாணவர்கள் பயன் பெற்றனர்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி ஆங்கிலத்துறையின் சார்பில் ஆங்கில இலக்கிய மன்றம் நியோ ஐடோலா-2023 தொடக்கவிழா நடை–பெற்றது. விழாவுக்கு கல் லூரி முதல்வர் முனை–வர் பெ.கி.பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    இதையடுத்து மாணவ இலக்கிய மன்ற தலைவர், துணைத்தலைவர், செயலா–ளர் மற்றும் அலுவ–லக உறுப் பினர்கள் ஆகியோர் நிய–மனம் செய்யப்பட்டனர். பின்னர் துறைத்தலைவர் முனைவர் எஸ்.பெமினா வாழ்த்துரை வழங்கினார்.

    பின்னர் முழுமையான வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சி நிலை என்ற தலைப்பில் ஜெய்ப்பூர் காம்காம் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவன ஆங்கில பேராசிரியர் முனை–வர் ஷாலினி சிறப்பு–ரையாற்றினார்.

    அப்போது அவர் பேசு–கையில், நேர்மறை எண்ணத் தின் பயனை விவரித்தார். மேலும் வாழ்வின் ஒவ் வொரு நிகழ்வும் நேர்ம–றை–யான விளைவு–களையே ஏற்படுத்தும் என்ற ஏற்றமிகு கருத்தினை மாணவர்கள் மத்தியில் எடுத்துரைத்தார். முன்னதாக ஆங்கிலத்துறை உதவி பேராசிரியை கே.பி.ஸ்வப்னா வரவேற்றார். முடிவில் உதவி பேராசிரியை என்.நாகஜோதி நன்றி கூறி–னார்.

    இந்த இலக்கிய மன்றத் தின் தொடர் நிகழ்ச்சியாக மாணவர்களின் தனித்திற–மையை வெளிப்படுத்தும் விதமாக திறனறி விழா நடைபெற்றது. மாணவர்கள் கவிதை, நாடகம், ஆடல், பாடல், மவுன நாடகம் மூலம் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில் ஆங்கிலத்துறையின் இளங்கலை மற்றும் முது–கலை மாணவர்கள் பயன்பெற்றனர்.

    • திருச்சுழியில் ஆதார் சேவைகளை பெற முடியாமல் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    • கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா வளாகத் தில் ஆதார் இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆதார் கார்டுகளை புதிதாக விண்ணப்பிக்கவும், பெயர் திருத்தம், முகவரி திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு வந்து செல்கின்றனர்.

    ஆனால் இந்த ஆதார் சேவை மையத்தில் நாள்தோறும் முதலில் வரும் 25 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டு ஆதார் சேவை வழங்கப்படுகிறது. அதற்கு அடுத்து வரும் பொதுமக்களுக்கு ஆதார் சேவை கிடைப்பது இல்லை. இதனால் நீண்ட தூரத்தில் இருந்து வரும் பொதுமக்கள் ஏமாற்றுத்துடன் மறுநாள் வரும் சூழல் ஏற்படுகிறது. மேலும் பண விரயமும், நேரமும் வீணாகிறது.

    வழக்கமாக திருச்சுழி தாலுகா அலுவலக இ- சேவை மையத்திற்கு நாள் தோறும் 50-க்கும் மேற்பட் டோர் வந்து செல்கின்றனர். தற்போது பள்ளி, கல்லூரி கள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகளும் ஆதார் கார்டுகளை விண் ணப்பிக்க அதிகமானோர் இ சேவை மையத்திற்கு வருகின்றனர்.

    ஆனால் திருச்சுழி இ-சேவை மையத்தில் பணி யாளர்கள் பற்றாக்குறை, சர்வர் பிரச்சினை போன்ற பல்வேறு காரணங்களால் உடனடியாக ஆதார் சேவைகளை தர முடிவதில்லை. இதனால் ஆதார் விண்ணப் பிக்க வருவோர் பல நாட்கள் காத்துக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த பிரச்சினையில் தலையிட்டு ஆதார் சேவை மையங்களுக்கு போதிய அளவு ஊழியர்களை நியமிப்பதுடன், மிகவும் பின்தங்கிய பகுதிகளான திருச்சுழி மற்றும் நரிக்குடி யூனியனில் முக்கிய பகுதிகளில் வசிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு இ -சேவை மையங்கள் அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் மேற்படி இ-சேவை மையங்களுக்கு ஆதாரில் திருத்தங்கள் மேற்கொள்ளும் சேவைகளை மீண்டும் வழங்குவதுடன் ஆதார் எடுக்கும் வகையில் புதிய ஆதார் சேவை மையங்களையும் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டு மென மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • கல்விதிறன் மற்றும் வருகை குறித்த விவரங்களையும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஏழா யிரம்பண்ணை கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக தேர்வு செய்த இடத்தினையும், ஏழாயிரம் பண்ணையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேரில் சென்று மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டப் பட்ட ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியினை பார்வையிட்டார். பின்னர் மாணவர்களின் கல்விதிறன் மற்றும் வருகை குறித்த விவரங்களையும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.

    அதனை தொடர்ந்து, சங்கரபாண்டியபுரம் கிராமத்தில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.2.8 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டு வரும் வீட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கரபாண்டியபுரம் கிராமம் அரசு ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரை யாடினார்.

    இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரின்ஸ், வட்டாட்சியர் ரங்க நாதன், உதவி செயற் பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மோட்டார் சைக்கிள்கள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
    • நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே உள்ள நாலூர் பகுதியை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் அய்யனார் (வயது30). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி சவுந்தர்யா (23) என்ற மனைவியும், 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அய்யனார் காரியாபட்டிக்கு சென்று விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். காரியாபட்டி-இலுப்பை குளம் ரோட்டில் உள்ள எஸ்.மறைக்குளம் தொங்குட்டி ஊரணி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் அய்யனார் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அய்ய னார் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவிலில் இரவு தங்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
    • காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆனி மாத பிரதோஷம் மற்றும் ஆடி மாத அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்காக வருகிற 15-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது என வனத்துறை அறிவித்துள்ளது. கோவிலில் இரவு தங்க பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

    அதேபோல தடை செய்யப்பட்ட பொருட்களை பக்தர்கள் மலைப்பகுதிக்கு கொண்டு செல்ல அனுமதி கிடையாது.

    • குடிநீர் வாரியம் சார்பில் பயிற்சி முகாம் நடந்தது.
    • பயிற்சியினை வெங்க டேசன், ராக்கம்மாள், தேவி, நந்தினி உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியம் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு, ஜல்ஜீவன் மிஷின் சார்பில், கிராம குடிநீர் மற்றும் சுகா தாரம் மேலாண்மை உறுப் பினர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

    குடிநீர் வடிகால் வாரியம் விருதுநகர் கோட்ட நிர்வாக பொறியாளர் கென் னடி, உதவி நிர்வாக பொறி யாளர் மணி ஆகியோர் தலைமை வகித்தனர்.

    ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மல்லி ஆறுமுகம், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார வளர்ச்சி ஆணையாளர் சிவ குமார், வட்டார வளர்ச்சி அலு வலர் மீனாட்சி ஆகி யோர் தொடங்கி வைத்தனர்.

    ஊராட்சி ஒன்றிய அலு வலகத்தில் தண்ணீரின் தரம், பாதுகாப்பு, சேகரிப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் வேதியியல் பாக்டீரியாக்கள் சம்பந்தப்பட்ட ரசாயனங் களை எவ்வாறு கண்டறிவது குறித்து பயிற்சி அளிக்கப்பட் டது. பயிற்சியினை வெங்க டேசன், ராக்கம்மாள், தேவி, நந்தினி உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.

    • தலை அலங்காரத்துடன் கூடிய ஆண் உருவ சூடுமண் கண்டெடுக்கப்பட்டது.
    • தற்போது 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டையில் முதற் கட்ட அகழாய்வின் போது பண்டைய கால பொருட்கள் கிடைத்தது. இதை தொடர்ந்து தற்போது 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது.

    இந்த அகழாய்வில் இது வரை தங்க அணிகலன், தங்க பட்டை, சுடு மண்ணால் ஆன பொம்மை, சுடுமண் அகல் விளக்கு, காதணி, எடைக்கல், பதக்கம், கண் ணாடி மணிகள், வணிக முத்திரை, சங்கு வளையல் கள், யானை தந்ததால் ஆன பகடை, தக்களி, செங்கல், சில்லு வட்டம் உள்ளிட்ட ஏராளமான தொல் பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இந்நிலையில் ஆண் உருவ சுடுமண் பொம்மை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கருப்பு நிறத்துடன் வனை யப்பட்டுள்ள இப்பொம்மை தலை அலங்காரமும் உதட்டுச் சிரிப்பும் மெரு கூட்டுகிறது.

    கயல் வடிவில் கண்களும் அவற்றின் புருவங்களும் கீறல் வடிவில் வரையப்பட்டுள் ளன. வாய், மூக்கு, காதுகள் தடிமனாக உருவாக்கப் பட்டுள்ளன. இவ்வுருவம் 2.28 செ.மீ உயரமும் 2.15 செ.மீ அகலமும் 1.79 செ.மீ தடிமனும் கொண்டுள்ளது. அகழாய்வுக்குழியில் 40 செ. மீட்டர் ஆழத்தில் கிடைக்க பெற்ற இந்த ஆண் உருவ சுடுமண் பொம்மை வரலாற் றுக்காலத்தைச் சார்ந்ததாக கருதப்படுகிறது.

    • முதல்-அமைச்சர் பிரிவு மனுக்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.
    • அதிகாரிகளுக்கு கலெக்டர் வலியுறுத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவா ரணம், மாற்றுத் திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    மேலும், மாற்றுத்திற னாளிகள் மற்றும் அதிக வயது முதிர்ந்தோர் களுக்காக அமைக்கப் பட்டுள்ள சிறப்பு அமரு மிடத்திற்குச் சென்று, மாவட்ட கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி னார்கள்.

    இக்கூட்டத்தில், காரியா பட்டி வட்டம், வெற்றிலை முருகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த பொ.மாயகிருஷ்ணன் என்பவரின் வாரிசு தாரர்களான அழகம்மாள், ராமமூர்த்தி மற்றும் கற்பகவள்ளி ஆகியோர்க ளுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.6 லட்சம் நிவாரணத் தொகைக்கான காசோலைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் அனிதா, மாவட்ட கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன் உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கால்நடை வளர்ப்போருக்கு உழவர் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு முக்கிய வாழ்வாதார தொழிலாக கருதப்படுகிறது. கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கால்நடை வளர்ப்போரின் வருமா னத்தை இரட்டிப் பாக்கவும் அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

    விவசாயிகள் புதிய கால்நடைகளை கொள் முதல் செய்த பின்னர், உரிய அளவிலான தீவனம் மற்றும் தாது உப்புகள் வழங்கப் படாததினால் பால் மற்றும் இறைச்சி உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விகிதாச்சார முறையில் உரிய நேரத்தில் உரிய அளவில் தீவனம் முறைகளை கடைபிடியாமை ஆகும்.

    விவசாயிகளின் இந்த குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு கால்நடைகளின் பராமரிப்புக்கென அனைத்து வங்கி கிளைகள் மூலம் உழவர் கடன் அட்டை கடந்த மே 1-ந் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.

    ஒரு பசு மாட்டினை பராமரிப்பதற்கு ரூ14 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்குரிய வட்டி விகிதம் 4 சதவீதமாகும். ஒரு பசு மாடு என்பது 10 ஆடுகளுக்கும், 100 கோழிகளுக்கும் சமமாகும். எனவே கறவை மாடு, ஆடு மற்றும் கோழிப்பண்ணைகளின் பண்ணையாளர்கள் இந்த திட்டத்தில் பங்கெடுத்து கால்நடை பராமரிப்பு செலவினமாக குறைந்த வட்டி விகிததத்தில் வழங்கப்படும் தொகையினை பெற்று பயன்பெறுமாறு அழைக்கப்படுகிறார்கள்.

    வேளாண்மைத்துறை மூலம் உழவர் கடன் அட்டை பெற்றிருந்தாலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். இதில் பயன்பெற விரும்புவோர் அதற்குரிய விண்ணப்பம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் வங்கி கணக்கு புத்தக முன்பக்க நகல், 2 பாஸ்போர்ட் புகைப்படங்கள் மற்றும் கால்நடை கொட்டகை நில ஆவண நகல் ஆகிய ஆவணங்களுடன் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனை மற்றும் கால்நடை மருந்தகங்களுக்கு சென்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கால்நடை மருத்துவர், கால்நடை உதவி மருத்துவர் அல்லது கால்நடை ஆய்வாளரிடம் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் மூலம் முன்னோடி வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு பின்னர் விண்ணப்பதாரது வங்கி கிளைகளுக்கு அனுப்பி பரிசீலிக்கப்பட்டு உழவர் கடன் அட்டையுடன் நிர்ணயிக்கப்பட்ட தொகை வழங்கப்படும்.

    இந்த அரிய வாய்ப்பினை விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்படுத்திக் கொள்ளு மாறு கேட்டுக்கொ ள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்துள்ளனர்.
    • ரமேஷ், தினேஷ் லிங்கம் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்களுக்கு தெலுங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டத்தில் 7 ஏக்கர் 9 செண்ட் நிலம் சொந்தமாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐதராபாத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர் எங்களது நிலத்தை கிரையம் செய்து கொடுக்குமாறு கேட்டார். அதற்கு மறுத்து விட்டோம்.

    இந்த நிலையில் தெலுங்கானா அரசு பதிவுத்துறையில் இருந்து எங்களது நில கிரையம் தொடர்பாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நான் தெலுங்கானா சென்று கிரைய ஒப்பந்தத்தை ரத்து செய்தேன்.

    இந்த நிலையில் மீண்டும் எனது சகோதரர் பெயரில் போலி பத்திரம் தயாரித்து தெலுங்கானாவில் உள்ள நிலத்தை அபகரிக்க முயற்சி செய்தனர். இது தொடர்பாக சிவகாசியை சேர்ந்த தினேஷ்லிங்கத்திடம் கேட்ட போது, நிலத்தை கிரையம் செய்து தருமாறும், இல்லாவிடில் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இதற்கு ரமேஷ் உள்பட 4 பேர் உடந்தையாக உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த புகாரின் அடிப்படையில் சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி ரமேஷ், தினேஷ் லிங்கம் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
    • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 வயதுடைய நபரை கைது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் படந்தால் பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலையில் பக்கத்து கிராமங்களை சேர்ந்த 17 வயதுடைய ஆணும், இளம்பெண்ணும் வேலை பார்த்து வந்தனர். அப்போது அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    பெண்ணின் காதல் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தெரியவரவே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் 2 பேரையும் அழைத்து பேசி எச்சரித்தனர்.

    அதன்பின் இளம்பெண் தனது வீட்டிற்கு செல்லாமல் காப்பகத்திற்கு செல்ல விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை காப்பகத்தில் சேர்த்தனர். இந்த நிலையில் அந்த பெண் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தான் காப்பகத்தில் இருந்த போது காதலன் தனது வீட்டில் யாரும் இல்லை என அழைத்தார்.

    இதையடுத்து நான் அவரது வீட்டிற்கு சென்றேன். அப்போது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலன் என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

    இதன் அடிப்படையில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து 17 வயதுடைய நபரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மூடப்பட்டுள்ள சுகாதார வளாகங்களை செயல்படுத்த பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
    • பக்தர்களின் வாகனங்கள் நான்கு ரத வீதிகளிலும் நிறுத்தப்படுகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் அமைந்துள்ளது. மேலும் இங்கு தென்திருப்பதி என்று போற்றப்படும் திரு–வண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில், செண் பகத்தோப்பு காட்ட–ழகர் கோவில், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள் ளிட்ட பல்வேறு ஆன்மிக ஸ்தலங்கள் உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண் டாள் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த தினமும் ஆயிரக்க–ணக்கான சுற்றுலா பயணி–கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வருகை தரும் பக்தர்களின் வாகனங்கள் நான்கு ரத வீதிகளிலும் நிறுத்தப்படுகிறது. இதற்கி–டையே கோவில் பகுதியில் பக்தர்களின் வசதிக்காக தேரடி பகுதியில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதி அருகாமையிலும், வடக்கு மாட வீதியில் உள்ள யானை மண்டபம் அருகிலும் சுகா–தார வளாகங்கள் செயல் பட்டு வந்தது. இந்த இரு சுகாதார வளாகங்களும் தற்போது பயன்பாட்டின்றி மூடப்பட் டுள்ளது. ஆடிப்பூர கொட் டகை அருகே தனியார் கல்வி நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்ட சுகாதார வளாகம் மட்டுமே பயன் பாட்டில் உள்ளது. அதுவும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே திறக்கப்படுகிறது. நான்கு ரத வீதிகள் மற்றும் தேரடி பேருந்து நிறுத்தம் பகுதியில் சுகாதார வளாகம் இல்லாததால் வெளியூர்க–ளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் மிகுந்த சிரமத் திற்கு ஆளாகு–கின்றனர். இதேபோல் சர்ச் பேருந்து நிறுத்தம் அருகே 15-வது நிதிக்குழு மானியத்தில் அமைக்கப்பட்டுள்ள சுகாதார வளாகம் திறக்கப்ப–டாமல் உள்ளது. அவசர அவசியம் கருதி உடனடியாக திறக்க வேண்டும். தற்போது குற்றால சீசன் தொடங்கி உள்ளதால் தினசரி ஆயிரக்க–ணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் ஸ்ரீவில் லிபுத்தூர் வழியாக செல் கின்றனர். இந்த வாரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லி–புத்தூர் ஆடிப்பூர திருவிழா–வும் தொடங்குகிறது.

    ஆடிப்பூர திருவிழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல லட்சம் பக்தர் கள் ஸ்ரீவில்லிபுத்தூர் வரு–வார்கள். இந்நிலையில் ஆடிப்பூர திருவிழா தொடங் கும் முன்பாக சுகாதார வளாகங் களை சீரமைக்க நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×