என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • 9-ம் நாள் விழாவான ஜூலை 22-ம் தேதி காலை 8.05 மணிக்கு திரு ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் ஜூலை 22-ந் தேதி நடைபெறுகிறது.

    108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகும். ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது இந்த ஸ்தலம். இங்கு ஆண்டு தோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா விமரிசையாக நடைபெறும்.

    இந்த ஆண்டு ஆடிப்பூர தேரோட்டம் ஜூலை 22-ம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கான கொடி யேற்றம் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ ஆண்டாள் - ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப் பட்டது. அதன் பின் 16 வண்டி சப்பரத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிப்பட்டம் ஊர்வல மாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடை பெற்றது. இன்று இரவு 16 வண்டி சப்பரத்தில் ஆண் டாள் ரெங்கமன்னாருடன் எழுந்தருளி வீதி உலா வருகிறார். வருகிற 17-ந் தேதி ரெங்கமன்னார் கோவர்த்த னகிரி கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்தி லும் எழுந்தருளுகின்றனர். 18-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனமும், அன்று இரவு 5 கருட சேவையும், 20-ம் தேதி ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவையும் நடைபெறுகிறது. 9-ம் நாள் விழாவான ஜூலை 22-ம் தேதி காலை 8.05 மணிக்கு திரு ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது.

    இதன் ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்து ராஜா, தக்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    • விருதுநகரில் நாளை காமராஜர் 121-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடு–களை நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    விருதுநகர்

    நாடார் மகாஜன சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா கல்வித்தி–ருவிழாவாக விருதுநகரில் நாளை (15-ந்தேதி, சனிக் கிழமை) வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது.

    அதன்படி காலை 8.30 மணிக்கு காமராஜர் இல்லத் தில் நோட்டு, புத்தகங்களை காணிக்கையாக வைத்து அஞ்சலி செலுத்துதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் காளீஸ்வரி குழுமம் ஏ.பி.செல்வராஜன் பங்கேற்கி–றார். தொடர்ந்து காலை 9 மணி முதல் 10 மணி வரை காமாட்சி என்ற காமராஜர் விளக்கிற்கு நாடார் மகளிர் மன்றத்தினர் மலர் அர்ச் சனை செய்கிறார்கள்.

    இதையடுத்து நாடார் மகளிர் மன்றத்தினர் திரு–விளக்கு ஏற்றுகிறார்கள். விழாவில் நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் வரவேற் புரை ஆற்றுகிறார். தமிழ்நாடு மெர்க்கண்டைல் இயக்கு–னர்கள் பி.விஜய–துரை, கே.நாகராஜன், பி.சி.ஜி.அசோக்குமார், முன்னாள் இயக்குநர் சி.எஸ்.ராஜேந்தி–ரன், குளோபல் பாலிபேக் அதிபர் முரளிதரன் ஆகி–யோர் கல்வித்தாய், கல்வித் தந்தை விருதுகளை வழங்கு–கிறார்கள்.

    இதையடுத்து மாநில அளவில் பேச்சுப்போட்டி–யில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெறு–கிறது. இதில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச் சந்திரன், தங்கம் தென்னரசு, அனிதா ஆர்.ராதாகிருஷ் ணன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ், எம்.எல்.ஏ.க்கள் தங்கப்பாண்டியன், ஏ.எம்.எஸ்.ஜி.அசோகன், ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், ஏ.ஆர்.ஆர்.ரகுமான், பழனி நாடார் ஆகியோர் கலந்துகொள்கி–றார்கள்.

    மேலும் விழாவில் முன் னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச் சர் மாபா க.பாண்டியராஜன், மான்ராஜ் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரெங்கன், எஸ்.எஸ்.கதிரவன், கே.சுரேஷ்குமார், பார்த்திபன், பா.ஜ.க. மாநில துணைத்த–லைவர் கரு.நாகராஜன், ஆறுமுக நயினார், அவனிமா–டசாமி, மாரிக்கண்ணு, வேலுச்சாமி, வி.எஸ்.கந்த–சாமி மற்றும் நிர்வாகி–கள் கலந்துகொள்கி–றார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடு–களை நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

    • வேளாண்மை மேம்பாட்டு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • தோட்டக்கலைத்துறையின் திட்டப்பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டார பகுதிகளில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    சிவகாசி வட்டாரத்தில் விஸ்வநத்தம் கிராமத்தில் தோட்டக்கலைத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட காளாண் வளர்ப்பு குடிலையும், ஆனையூர் கிராமத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்கப் பட்டுள்ள எலுமிச்சை மற்றும் கொய்யா மரக்கன்றுகளையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, சிவகாசி வட்டார ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கிடங்கில் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படவுள்ள விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மற்றும் மின்கல தெளிப்பான்கள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.

    பின்னர் உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் (பயறு) திட்டத்தின் கீழ் மானியத்தில் உளுந்து விதைகளையும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மின்கல தெளிப்பான் மற்றும் முழு மானியத்தில் நிலக்கடலை மினிகிட் ஆகியவற்றை விவசாயி களுக்கு கலெக்டர் வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து, சிவகாசி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறையின் திட்டப்பணிகள் மற்றும் அலுவலர்களுக்கான பணித்திறன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை கள பணியாளர்களின் திட்ட பணிகளுக்கான இலக்குகள் மற்றும் சாதனை விபரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் பத்மாவதி, வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) நாச்சியாரம்மாள், தோட்ட கலை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், சிவகாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுந்தரவள்ளி, தோட்டக்கலை உதவி இயக்குநர் கலைவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அழகர்சாமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜாமணி என்பவருக்கும் வீட்டின் முன்பாக உள்ள செப்டிக் டேங்க் தொட்டி வைப்பதில் பிரச்சினை இருந்தது.
    • செப்டிக் டேங்க் குழி தோண்டினால் நான் எப்படி செல்வேன் என்று அழகர்சாமி ராஜா மணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    அருப்புக்கோட்டை:

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் அழகர்சாமி (வயது 38). இவர் நரிக்குடி அருகே உள்ள துய்யனூர் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி கீதா பிரியா.

    அழகர்சாமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜாமணி என்பவருக்கும் வீட்டின் முன்பாக உள்ள செப்டிக் டேங்க் தொட்டி வைப்பதில் பிரச்சினை இருந்தது. இதுதொடர்பாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    செப்டிக் டேங்க் குழி தோண்டினால் நான் எப்படி செல்வேன் என்று அழகர்சாமி ராஜா மணியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று இவர்களுக்குள் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

    இதில் மனம் உடைந்த ஆசிரியர் அழகர்சாமி வீட்டில் வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார் 80 சதவீத தீக்காயத்துடன் இருந்தவரை அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு நிலைமை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனையில் கடந்த 10-ந் தேதி சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அழகர்சாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றன.

    • எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 தேர்வில் பள்ளி அளவில் முதல் 2 இடங்களை பெற்ற 500 மாணவ-மாணவி களுக்கு காமராஜர் விருது வழங்குகிறார்.
    • பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு பேசுகிறார்.

    விருதுநகர்:

    விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்த நாள் விழா நாளை நடக்கிறது. இதில் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15-ந் தேதி அவர் பிறந்த ஊரான விருதுநகரில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை அவரது 121-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அவரது நினைவு இல்லம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது.

    விருதுநகர்-மதுரை ரோட்டில் உள்ள அவரது நூற்றாண்டு விழா மணிமண்டபமும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்ட செய்திதுறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவு இல்லத்தில் அமைச்சர்கள், கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். பெண்களின் நூற்பு வேள்வியும் நடைபெறுகிறது.

    காமராஜர் பிறந்த நாளையொட்டி மாணிக்கம் தாகூர் எம்.பி., விருதுநகர் கல்வி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 தேர்வில் பள்ளி அளவில் முதல் 2 இடங்களை பெற்ற 500 மாணவ-மாணவி களுக்கு காமராஜர் விருது வழங்குகிறார். மேலும் சுகாதாரத்துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவ அலுவலர், நகர்ப்புற, கிராம செவிலியர், சுகாதார ஆய்வாளர், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு காமராஜர் விருது வழங்கப்பட உள்ளது.

    இதனை தொடர்ந்து நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு பேசுகிறார். இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜ், காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சிரஞ்சீவி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஸ்ரீராஜாசொக்கர், ரங்கசாமி, சிவகாசி எம்.எல்.ஏ. அசோகன் ஆகியோர் செய்து வருகின்றனர். 

    • கடந்த சில வாரங்களாக ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
    • மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்தவர் ரகு (வயது40). இவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சாத்தூர் அருகே உள்ள ராமலிங்காபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    கடந்த சில வாரங்களாக ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஆலை உரிமையாளர் ரகு மற்றும் அவரது உறவினர் முகேஷ்(20) ஆகியோர் கடந்த 6-ந்தேதி இரவு விதிகளை மீறி பட்டாசு ஆலை வெளியே பேன்சி ரக வெடிகளை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

    அப்போது மருந்துகள் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து நிகழ்ந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் வெடிக்க தொடங்கின. இந்த வெடி விபத்தில் ரகு, முகேஷ் ஆகியோர் உடல் கருகினர். விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பநாயக்கன்பட்டி போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பட்டாசு ஆலை உரிமையாளர் ரகு, முகேஷ் ஆகியோர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

    • வாய்க்காலில் தேங்கிய பிளாஸ்டிக் குப்பைகளால் கொசு தொல்லை அதிகமாகிறது.
    • தண்ணீர் தேங்கி நிற்காமல் சீராக செல்லவும் துப்புரவு பணிகளை செய்து பராமரிக்க வேண்டும்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை நுழைவாயில் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 14-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்து 25 ஆயிரம் திட்ட மதிப்பீட்டில் சுமார் 185 மீட்டர் தொலைவில் புதிய கழிவுநீர் வாறுகால் கட்டப்பட்டது.

    இந்த நிலையில் ஒருநாள் கூட வாறுகாலில் கழிவுநீர் செல்லாத நிலையில் குப்பைகள் நிரம்பி கிடக்கின்றன. ஒழுங்கற்ற முறையில் வாறுகால் அமைக்கப் பட்டுள்ளதால் கழிவுநீர் சீராக ஓடாமல் தேங்குகிறது. மேலும் குப்பைகளும் சேர்ந்து கிடப்பதால் சுகாதார கேடு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மேலும் அந்த பகுதியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையும் அமைந்துள்ளது. இதனால் அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளும், பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளும் கொசுக்கடியால் அவதிப் படும் சூழ்நிலை உள்ளது.

    எனவே நரிக்குடி வட்டார சுகாதாரத்துறை அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், கழிவுநீர் வாறுகால் பகுதியில் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றவும், தண்ணீர் தேங்கி நிற்காமல் சீராக செல்லவும் துப்புரவு பணிகளை செய்து பராமரிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
    • பொதுமக்கள் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள சின்னகொல்லபட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    இந்த முகாமில் 587 பயனாளிகளுக்கு ரூ.81 லட்சத்து 58 ஆயிரத்து 309 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, பொதுமக்களிடையே மாறி வரும் உணவு பழக்கவ ழக்கத்தின் காரணமாக நீரிழிவு, இரத்த அழுத்தம் ஆகியவை மூலம், எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்பட்டு பல்வேறு நோய்கள் வருவதற்கான காரணமாக அமைகின்றது. எனவே, 40 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    12-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து வழிகாட்டும் விதமாக நான் முதல்வன் என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுபோன்று கால் நடைத்துறை, மருத்து வத்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மூலம் நலத்திட்டங்கள் பொது மக்களுக்காக செயல்படுத் தப்பட்டு வருகின்றன.

    எனவே, பொதுமக்கள் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், தனித்துறை கலெக்டர் அனிதா, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், சாத்தூர் ஊராட்சி ஒன்றிக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் வெங்கடேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பிளஸ்-2 மாணவி உள்பட 4 பேர் மாயமாகினர்.
    • வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    விருதுநகர்

    திருத்தங்கல் என்.ஜி.ஓ. நகர் கண்ணகி காலனியை சேர்ந்தவர் சரவணன் (வயது 38) இவர் கியாஸ் அடுப்பு பழுதுபார்க்கும் வேலை பார்த்து வந்தார். சம்பவத் தன்று வேலைக்கு சென்ற சரவணன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங் களில் தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்த புகாரின் பேரில் திருத்தங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் முத்தால்நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பெண் சம்பவத் தன்று வீட்டில் இருந்து திடீ ரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்த புகாரின் பேரில் பாண்டியன் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.வெம்பக்கோட்டை அருகே உள்ள ஆ.லட்சுமியா புரத்தைச் சேர்ந்தவர் ராஜ லட்சுமி. இவரது மகள் மாலதி (வயது 21). என்ஜினீய ரிங் பட்டதாரியான இவர் திடீரென மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    விஜய கரிசகுளம் பகுதி சேர்ந்த பிளஸ்-2 மாணவி யும் மாயமானார் இது குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதி மேகமலை புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அணையைச் சுற்றி விவசாய பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் எச்சரிக்கையுடன் வாகனங்களில் பயணிக்க வேண்டும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, புலி, கரடி, மான், மிளா, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதி மேகமலை புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கோவிலாறு அணை உள்ளது. வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் இங்கு வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இப்பகுதியின் அழகை காண தடையை மீறி வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் தற்போது கோவிலாறு அணைக்கு செல்லும் பிரதான சாலை பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அணைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணையைச் சுற்றி விவசாய பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் எச்சரிக்கையுடன் வாகனங்களில் பயணிக்க வேண்டும் எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலன் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • 2 பேரும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தில் உள்ள நூற்பாலையில் கேரள மாநிலம் கேனல் இடுக்கி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி (வயது 25) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவரும் தென்கரை கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த பெற்றோர் மாணவியை கண்டித்துள்ளனர்.

    ஆனாலும் இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். சம்பவத்தன்று பெற்றோர் வெளியே சென்று விட வீட்டில் தனியாக இருந்த மாணவி கிருஷ்ணமூர்த்தியை பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.

    அதன்பின் 2 பேரும் சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள ஒரு தியேட்டருக்கு படம் பார்க்க சென்றனர். அப்போது மாணவிக்கு கிருஷ்ணமூர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் விருதுநகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் அமுதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தார்.

    • விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
    • பெண்கள் உள்பட 63 பேர் கைது செய்யப்பட்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சியில் 70-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெறும் என துப்புரவு பணியாளர்கள் அறிவித்தி ருந்தனர். அதன்படி இன்று காலை பெண்கள் உட்பட 63 துப்புரவு பணியாளர்கள் விருதுநகர் நகராட்சி அலு வலகம் முன்பு திரண்டனர்.

    ஒப்பந்த முறை துப்புரவு பணியை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடந்தது. சி.ஐ.டி. யு. நகர அமைப்பாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துப்புரவு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் விஜயபாண்டி முன்னிலை வகித்தார்.

    போராட்டம் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனாலும் துப்புரவு பணியாளர்கள் தொடர்ந்து நகராட்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கலைந்து செல்லுமாறு எச்சரித்தும் போராட்டம் நீடித்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×