search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவிலாறு அணை பகுதியில் யானைகள் நடமாட்டம்- பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
    X

    கோவிலாறு அணை பகுதியில் யானைகள் நடமாட்டம்- பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

    • ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதி மேகமலை புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • அணையைச் சுற்றி விவசாய பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் எச்சரிக்கையுடன் வாகனங்களில் பயணிக்க வேண்டும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் யானை, புலி, கரடி, மான், மிளா, காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைபகுதி மேகமலை புலிகள் சரணாலயமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் கோவிலாறு அணை உள்ளது. வன விலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் இங்கு வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இப்பகுதியின் அழகை காண தடையை மீறி வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில் தற்போது கோவிலாறு அணைக்கு செல்லும் பிரதான சாலை பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் அணைப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அணையைச் சுற்றி விவசாய பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் எச்சரிக்கையுடன் வாகனங்களில் பயணிக்க வேண்டும் எனவும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×