search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள்கள் மோதல்
    X

    மோட்டார் சைக்கிள்கள் மோதல்

    • மோட்டார் சைக்கிள்கள் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.
    • நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே உள்ள நாலூர் பகுதியை சேர்ந்தவர் போஸ். இவரது மகன் அய்யனார் (வயது30). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு திருமணமாகி சவுந்தர்யா (23) என்ற மனைவியும், 1 வயது பெண் குழந்தையும் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று அய்யனார் காரியாபட்டிக்கு சென்று விட்டு இரவில் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். காரியாபட்டி-இலுப்பை குளம் ரோட்டில் உள்ள எஸ்.மறைக்குளம் தொங்குட்டி ஊரணி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் அய்யனார் கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அய்ய னார் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×