என் மலர்
விருதுநகர்
- ரெயில் பயணிகள் வசதி குழு பரிந்துரைத்த பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பிரசார அணி தலைவர் காமாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.
விருதுநகர்
விருதுநகரில் பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் ரெயில் நிலையத்தை கடந்த மார்ச் மாதம் ரவிச் சந்திரன் தலைமையிலான பிற மாநில உறுப்பினர்கள் அடங்கிய ரெயில் பயணிகள் வசதிக்குழு ஆய்வு செய்தது. அப்போது நாங்கள் கொடுத்த கோரிக்கைகளின் படி ரெயில் நிலைய கிழக்கு பகுதியில் நுழைவுவாயில், அனைத்து நடைமேடைகளும் மேம்படுத்துதல், நகரும் படி வசதி, குடிநீர் வசதி, நவீன தங்கும் அறைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய் வதற்கு ரெயில் பயணிகள் வசதிகள் குழு பரிந்துரைத்ததின்பேரில் தற்போது அதற்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
இதில் முதல் கட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.7 கோடியே 73 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு பிரத மர் மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டியுள்ளார். இப்பணிகள் வருகிற மார்ச் மாதம் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்து பணிகளை மேற்கொண்டு விருதுநகர் ரெயில் நிலையம் உலக தரத்தில் மேம்படும் என்பது உறுதி. இதற்காக பிரதமர் மோடி, நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு விருதுநகர் மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மதுரையில் இருந்து அருப் புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான அகல ரெயில் பாதை திட்ட பணியை கைவிடக்கூடாது. திட்ட பணியை விரைந்து முடித்து தென் மாவட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் உதவ வேண்டும் என மாவட்ட பா.ஜ.க. சார்பில் மாநில நிர்வாகிகள் மூலம் மத்திய அரசிடம் வலியு றுத்துவோம். உறுதியாக திட்டம் கைவிடும் வாய்ப்பு ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பா.ஜ.க. மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட பிரசார அணி தலைவர் காமாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.
- மக்களின் ரசனை மற்றும் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப புது ரக காலண்டர்களும் தயாராகி உள்ளன.
- ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிறந்தவுடன் அந்த ஆண்டிற்கான பஞ்சாங்கம் வெளியாகும்.
காலண்டர் எனப்படும் நாட்காட்டி அன்றைய நாளின் அர்த்தம் குறித்த விளக்கத்தை கூறினாலும், சமூக, சமய, வணிக, நிர்வாக நோக்கங்களையும் பிரதிபலிக்கும் ஒரு அம்சமாகவே பார்க்கப்படுகிறது. யுகங்கள் நவீனமானாலும், காகிதத்தில் அச்சிடப்பட்டு நாள்தோறும் கண் விழித்ததும் கைதொடும் காலண்டர் எதிர்வரும் நிகழ்வுகளை ஞாபகப்படுத்துகிறது.
கலண்டே என்னும் லத்தீன் மொழி சொல்லில் இருந்து உருவாகி காலப்போக்கில் காலண்டர் ஆனது. ஆண்டு, மாதம், நாள், கால நிகழ்வுகளை தாங்கி சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரையிலும் மொழி, சமுதாயம், பண்பாடு வகைகளிலும் பிரிக்கப்படுகிறது. குறிப்பாக இந்து நாட் காட்டியில் வடிவமைக்கப்பட்ட காலண்டரில் பஞ்சாங்கம், திதி, 27 நாட்சத்திரங்கள், நல்ல நேரம், யோகம், கர்ணம் ஆகியவை இடம்பெறுகிறது.
அந்த வகையில் வரப்போகும் 2024 ஆம் புத்தாண்டை வரவேற்க குட்டி ஜப்பான் என்று புகழப்படும் அச்சக நகரான சிவகாசியில் பணிகள் முழுவீச்சில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2024-க்கான காலண்டர்கள் தயாரிக்கும் பணிகளுக்கு முன்னோட்டமாக, புத்தாண்டு தினசரி காலண்டர் ஆல்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி இந்த ஆண்டு புதிய வரவாக, பவளக்கல் காலண்டர் மற்றும் க்யூஆர் கோடு அச்சடித்த காலண்டர்கள் அறிமுகமாகிறது.
அச்சகத்தொழிலில் மெச்சத்தக்க வகையில் செயல்படும் சிவகாசியில் தினசரி காலண்டர்கள், மாத காலண்டர்கள் தயாரிப்புக்கு பெரும் செல்வாக்கு உள்ளது. சிவகாசியில் உள்ள காலண்டர் தயாரிக்கும் அச்சகங்கள் உலக தரத்தில் இருப்பதால், இங்கு தயாராகும் காலண்டர்களுக்கு பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.
தினசரி காலண்டர்களில் வழக்கமான காலண்டர்களுடன், டை கட்டிங் காலண்டர், பெட் பாயில்ஸ் காலண்டர், சில்வர் பாயில்ஸ் காலண்டர், கோல்டு பாயில்ஸ் காலண்டர், மெகா சைஸ் காலண்டர், கடிகார காலண்டர், மாத காலண்டருடன் இணைந்த தினசரி காலண்டர், சுவாமி படங்கள், அரசியல் தலைவர்கள், உலக தலைவர்கள், பிரபல நடிகர்கள், இந்தியாவின் புகழ்மிக்க இடங்கள், உலக புகழ்பெற்ற இடங்கள், இயற்கை காட்சிகள் என பல நூறு வகைகளில் காலண்டர்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் புதிய வகையிலான காலண்டர் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு புதிய வரவாக, பவளக்கல் மற்றும் க்யூஆர் கோடுடன் தினசரி காலண்டர் வருகின்றது. இந்த காலண்டரில் உள்ள சிறப்புகள் தினசரி தாளில் ஒரு க்யூஆர் கோர்டு அடையாளம் இருக்கும். இதனை செல்போன் மூலம் ஸ்கேன் செய்து பார்த்தால், அன்றைய நாளின் முக்கிய நிகழ்வு, முக்கிய தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள், பிரபலங்களை பற்றிய தகவல்கள், கோவில் திருவிழாக்கள், கோவிலின் முக்கிய நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறியலாம்.
பவளக்கல் காலண்டரில் கல்கள் பதிக்கப்பட்டு தத்ரூபமாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் கியூ ஆர் கோடுடன் தயார் செய்யப்பட்ட காலண்டர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள், குழந்தைகள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. இதுபோக வாட்ச் உடன் கூடிய டேபிள் காலண்டர்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பிறந்தவுடன் அந்த ஆண்டிற்கான பஞ்சாங்கம் வெளியாகும். பஞ்சாங்கம் வெளியானவுடன், வரும் புத்தாண்டிற்கான காலண்டர்கள் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்படும். நாள், நட்சத்திரம், நல்ல நேரம், திதி மற்றும் பல்வேறு தகவல்களுடன் காலண்டர்கள் வடிவமைக்கும் பணிகள் நடைபெறும். இதனை தொடர்ந்து புத்தாண்டிற்கான புது வகை வடிவமைப்பு மற்றும் டிசைன்கள் உருவாக்கப்படும். காலண்டர்கள் எத்தனை வடிவங்களில், என்னென்ன டிசைன்களில், என்னென்ன படங்களில் தயாரிக்கப்படுகிறதோ அவைகள் அத்தனையும் இணைத்து, புத்தாண்டு காலண்டர் ஆல்பங்கள் தயாரிக்கப்பட்டு ஆடிப்பெருக்கை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது வழக்கம்.
அவ்வாறு தயாராகும் புத்தாண்டு காலண்டர் ஆல்பங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று பிரமாண்டமாக வெளியிடப்படும். இதற்காக காலண்டர் தயாரிக்கும் நிறுவனங்களில் காலண்டர் ஆல்பங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த காலண்டர்கள் ஆர்டர்கள் சேகரிக்கும் முகவர்களை வரவழைத்து, புத்தாண்டு காலண்டர் ஆல்பங்களை வழங்குவார்கள்.
அதனை பெற்றுச் செல்லும் முகவர்கள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இந்த ஆல்பங்களை காண்பித்து, அவர்களுக்கு தேவைப்படும் வகையிலான காலண்டர்களை ஆர்டர் எடுத்து, சிவகாசி காலண்டர் நிறுவனத்திற்கு அனுப்புவார்கள். முகவர்கள் கேட்டுள்ள டிசைன்களில் காலண்டர்கள் தயாரித்து, குறிப்பிட்ட நாட்களில் அவர்களுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் புத்தாண்டிற்கான காலண்டர் சீசன், புத்தாண்டின் முதல் மாதமான ஜனவரி 2-வது வாரம் வரை, அதாவது தமிழர் திருநாளான தைப்பொங்கல் நாள் வரை தொடர்ந்து நடைபெறும். சுமார் 5 மாதங்கள், சிவகாசியில் உள்ள பிரபல காலண்டர் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தப் பணிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருவார்கள்.
இதுதொடர்பாக காலண்டர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் நிறுவனத்தைச் சேர்ந்தவரும் தமிழ்நாடு தினசரி காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளருமான ஜெய்சங்கர் கூறுகையில், ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டிற்கும் அனைவரின் வீடுகளிலும் தவறாமல் இடம் பிடிப்பது காலண்டர்கள் தான். தினமும் காலையில் கண் விழிக்கும்போது அன்றைய நாளில் உள்ள விசேஷங்கள், சுப நிகழ்ச்சிகள், நல்ல நேரம், முக்கிய குறிப்புகளை பார்ப்பதில் அனைவருக்குமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.
ஒரு ஆண்டு முழுவதும் வீட்டில் இருக்கும் காலண்டர்கள் தரமானதாக இருக்க வேண்டும் என்ற வகையில் தரமான அட்டை, கண்ணை கவரும் படங்கள், புதுப்புது வடிவங்களில் காலண்டர்களை தயாரித்து வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது ரகங்களில் காலண்டர்களை தயாரிப்பதால், இந்த ஆண்டு புது வரவு என்ன என்ற எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும்.
மக்களின் ரசனை மற்றும் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப புது ரக காலண்டர்களும் தயாராகி உள்ளன. காலண்டர்களின் விலை இந்த ஆண்டு சுமார் 5 சதவீதம் அளவிற்கு உயரும் வாய்ப்புள்ளது. காலண்டர் தயாரிக்க தேவைப்படும் முக்கிய பொருட்களான பேப்பர், அட்டை மற்றும் மூலப்பொருட்களின் விலை கடந்த ஆண்டில் இருந்ததைப்போலவே உள்ளது. அலுவலக பயன்பாட்டிற்கான மின் கட்டண உயர்வு, தொழிலாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட சில காரணங்களால் காலண்டர்களின் விலை சற்று கூடுதலாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விலை உயர்வும் யாரையும் பாதிக்காத வகையில் தான் இருக்கும். மேலும் வரும் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சியிலிருந்து 10 சதவீதம் கூடுதலாக ஆர்டர் கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருக்கிறோம். மேலும் வழக்கம் போல இந்த ஆண்டும் காலண்டர்கள் விற்பனை நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
- சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழாவுக்காக தாணிப்பாறையில் தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது.
- துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயக் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு வருகிற 12-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 6 நாட்க ளுக்கு பக்தர்கள் கோவி லுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்படவுள்ள தற்காலிக பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் போதிய பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ளவும், கூட்ட நெரிசலை ஒழுங்குப் படுத்தவும் போலீசார் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் குடிநீர், சுகாதார வசதிகள் செய்து தரப்படும். வனத்துறையின் மூலம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வண்ணம் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப் படும்.
மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுடன் கூடிய மருத்துவக் குழு அமைக்கப் பட உள்ளது. ஆம்புலன்ஸ் வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும். மேலும் சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் பிளாஸ்டிக், போதை பொருட்களை கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் துணிப்பைகளை பொதுமக்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
தாணிப்பாறை அடி வாரத்தில் சேரும் குப்பை களை அகற்றுவதற்கு போதுமான துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
வெளியூர் பஸ்கள், தனி நபர்களுக்கு சொந்தமான வாகனங்கள் போன்ற அனைத்து வாகனங்க ளையும் நிறுத்துவதற்கு வசதியாக தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளது. சதுரகிரிக்கு செல்லும் பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது துணை இயக்குநர் மேகமலை புலிகள் காப்பகம் (ஸ்ரீவில்லி புத்தூர்) திலீப்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி, சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், ஸ்ரீவில்லி புத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு முகேஷ் ஜெயக் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 முதல் 200-க்கும் மேற்பட்ட கிடாய்களை பக்தர்கள் கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
- கிடாய் விருந்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுமார் 5,000-க்கும் கலந்து கொண்டு உணவருந்தினர்.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள தமிழ்பாடி கிராமத்தில் மந்தகுமாரன் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் களரி திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் இந்தத் திருவிழாவில் அதிகாலை முதல் மாலை வரை இடைவெளியின்றி தொடர்ச்சியாக நடைபெறும் சமபந்தி கிடாய் கறி விருந்து நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது.
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த திருவிழாவின் சமபந்தி கிடாய் விருந்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வது தனிச்சிறப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 முதல் 200-க்கும் மேற்பட்ட கிடாய்களை பக்தர்கள் கோவிலில் நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.
இந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்திருந்த 196 ஆடுகள் கோவில் சன்னதி முன்பாக பலியிடப்பட்டது. இதனையடுத்து பலியிடப்பட்ட ஆடுகளை சமைத்து அனைவருக்கும் சமபந்தி கறி விருந்தாக பரிமாறப்பட்டது. இந்த கிடாய் விருந்தில் பெண்கள் பங்கேற்க கூடாது என்பதால், ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
இதில் பங்கேற்பதற்காக தமிழ்ப்பாடி, திருச்சுழி, அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து சமபந்தி கிடாய் விருந் தில் பங்கேற்று பசியாறினர்.
முன்னதாக மந்தகுமாரன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் காலை 9 மணி அளவில் சமபந்தி கிடாய் விருந்து தொடங்கியது. கிடாய் விருந்தில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து சுமார் 5,000-க்கும் கலந்து கொண்டு உணவருந்தினர்.
மேலும் இந்த சமபந்தி விருந்தில் கலந்துகொள்ளும் ஆண்கள் மது அருந்தி பங்கேற்கக் கூடாது எனவும், அவ்வாறு மது அருந்தி விருந்தில் கலந்துகொண்டால் சுவாமியின் கடுமையான தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்பது காலங்காலமாக தமிழ்பாடி கிராம மக்களின் இன்றளவும் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- கோவில் திருவிழாவுக்கு வந்த வாலிபர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இந்த சம்பவம் அப்பகுதி மக்களி–டையே பெரும் சோகத்தை–யும், அதிர்ச்சியையும் ஏற் படுத்தியுள்ளது.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள எம்.புளியங்குளம் பகுதியை சேர்ந்த ஊதாக்கட்டை (எ) ஆறுமுகம் என்பவரது மகன் அய்யனார் (வயது 22). இவர் வெளியூரில் தங்கி கொத்த–னார் வேலை பார்த்து வரு–கிறார். மேலும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்த–தாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கோவில் திருவிழாவிற்காக தனது சொந்த ஊரான புளியங் குளம் கிராமத்திற்கு அய்ய–னார் வந்திருந்தார். திருவிழா–வையொட்டி கலை நிகழ்ச்சி முடிந்த நிலையில் நேற்று காலை அய்யனார் வெளி–யில் சென்று விட்டார்.
இதற்கிடையே எம்.புளியங்குளம் அருகேயுள்ள மயிலி ரெயில்வே பாலத் திற்கு அடியில், மதுவில் பூச்சி மருந்தை குடித்த நிலை–யில் அய்யனார் உயிருக்கு போராடி கொண்டிருப்ப–தாக தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத் திற்கு விரைந்து சென்ற நண்பர்கள் மற்றும் உறவி–னர்கள் அவரை திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அதன்பின்னர் அங்கி–ருந்து மேல் சிகிச்சைக்காக அய்யனார் அருப்புக் கோட்டை அரசு மருத்துவ–மனைக்கு கொண்டு செல் லப்பட்டார். இருப்பினும் உடல் முழுவதும் விஷம் பரவிய நிலையில் வழியி–லேயே அய்யனார் பரிதாப–மாக உயிரிழந்தார். இதனை–யடுத்து அவரது தாய் அழகு மீனாள் கொடுத்த புகா–ரின்பேரில் வழக்குப் பதிவு செய்த திருச்சுழி போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
வெளியூரில் தங்கி கொத் தனார் வேலை பார்த்து வந்த அய்யனார் சொந்த ஊரில் மதுவில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களி–டையே பெரும் சோகத்தை–யும், அதிர்ச்சியையும் ஏற் படுத்தியுள்ளது.
- விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை பூஜை நடந்தது.
- மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணிமன்ற தலைவர் ராமராஜ் செய்திருந்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் ஒவ்வொரு வருடமும் மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணிமன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக நடைபெறும்.இந்த ஆண்டு 36-வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு ராஜபாளையம்-மதுரைரோட்டில் உள்ள மாயூரநாதசுவாமி கோவில் முன்புள்ள ஆதிவழிவிடும் விநாயகர் கோவில் வளாகத்தில் சிலை செய்வதற்கான பிரதிஷ்டை பூஜை நடைபெற்றது. திருவாடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாச்சாரியார் பூஜையை நடத்தி வைத்தார்.
இதில் முக்கிய பிரமுகர்கள், பிரபல தொழில் அதிபர் குவைத்ராஜா மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாப்பிள்ளை விநாயகர் நண்பர்கள் நற்பணிமன்ற தலைவர் ராமராஜ் செய்திருந்தார்.
- குழந்தைகள், கர்்ப்பிணிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம் நடக்கிறது.
- மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
விருதுநகர்
தமிழகம் முழுவதும் உள்ள 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது.
முதல் கட்டம் ஆகஸ்டு மாதம் 7 முதல் 12 வரையிலும், 2-வது கட்டம் செப்டம்பர் 11 முதல் 16 வரையிலும் மற்றும் 3-ம் கட்டம் அக்டோபர் 9 முதல் 14 வரையிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தடுப்பூசி முகாம்களை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 வயதிற் குட்பட்ட குழந்தைகள் 1 லட்சத்து 13 ஆயிரத்து 577 ேபர் உள்ளதாகவும், அதில்1,845 பேருக்கு முறையாக தடுப்பூசி செலுத்தப்படாமல் உள்ளது. அவர்களுக்கு 823 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக கலெக்டர் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரி வித்துள்ளார்.
விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம்களுக்கான பல்துறை ஒருங்கி ணைப்புக்குழு கூட்டம் கடந்த வாரத்தில் கலெக்டர் தலைமையில் நடந்தது. வழக்கமாக தடுப்பூசி செலுத்தப்படும் அனைத்து மையங்களிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் முறையாக செலுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்யவும், கர்ப்பிணி கள் மற்றும் 5 வயதுக்குட் பட்ட குழந்தைகளுக்கு விடுபட்ட தடுப்பூசிகளை செலுத்தவும் இந்த முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகங்களின் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
- சட்டத்துக்கு புறம்பான ஜவுளி ரகங்களை உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- மேற்கண்ட தகவலை கலெக்டர்கள் விஷ்ணு சந்திரன் (ராமநாதபுரம்), ஆஷா அஜித் (சிவகங்கை) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம்
கைத்தறி தொழிலைப் பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் கைத்தறி வளர்ச்சி ஆணையர் மூலம் அமல்படுத்தப்பட்ட கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம், தமிழக அரசின் கைத்தறி ஆணையர் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டம் பிரத்யேகமாக கைத்தறியில் மட்டுமே உற்பத்தி மேற் கொள்ளவதற்காக 11 ரகங்கள் சட்டத்தில் விவ ரித்துள்ளபடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பேட்டு பார்டருடன் கூடிய சேலை, பேட்டு பார்டருடன் கூடிய வேட்டி, துண்டு மற்றும் அங்க வஸ்தரம், லுங்கி, போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி ஜமுக்காளம், உடை துணி, கம்பளி, சால்வை, உல்லன் ட்வீட், சத்தார்க் போன்ற ரகங்கள் விசைத் தறியில் உற்பத்தி செய்யத் தடை செய்யப்பட்டுள்ளது.
இதைத் தவிர்க்கும் நோக்கில் கைத்தறி துறையால் தற்போது அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படையினர், மாவட்டத்தில் உள்ள விசைத்தறி கூடங்கள், தனியார் ஜவுளி விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். சட்டத்துக்குப் புறம்பாக ஜவுளி ரகங்கள் உற்பத்தியில் ஈடுபடுதல் அல்லது விற்பனை செய்தல் போன்ற நடவ டிக்கைகளை கண்டறி யும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட விசைத்தறியாளர் மீது காவல் துறையில் புகார் செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்படும்.
மேலும், தனியாரிடம் கூலிக்கு நெசவு செய்து வரும் கைத்தறி நெசவா ளர்களின் இடர்பாடுகளை களைந்திடும் வகையில், தனியார் நெசவாளர்கள் வாழ்ந்து வரும் பகுதிக்கு அருகே உள்ள ஏதேனும் ஒரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்து தொடர்ச்சியாக வேலை வாய்ப்பும், அதற்கான ஊதியமும் பெற்று பயன டைய வேண்டும்.
கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்ட 11 வகை ரகங்கள் குறித்து விளக்கம் பெற மதுரை மாவட்டத்தில் 21/9, கக்கன் தெரு, செனாய் நகரில் உள்ள உதவி அமலாக்க பிரவு அலுவ லகத்தை அணுகலாம். அல்லது சென்னை கைத்தறி ஆணையரக அலுவலக கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் 98846-97637, 89369-97637, 91760-97637, 91766-17637, 91766-27637, 98845-97633, 98849-97633, 89391-97633, 89394-97633, 91763-97633 என்ற எண்களில் வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொள்ளலாம்.
மேற்கண்ட தகவலை கலெக்டர்கள் விஷ்ணு சந்திரன் (ராமநாதபுரம்), ஆஷா அஜித் (சிவகங்கை) ஆகியோர் தெரிவித்துள் ளனர்.
- காளீஸ்வரி கல்லூரியில் சிலம்பம் போட்டி நடந்தது.
- 500-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகள் நடைபெற்றது. இதனை உலக சிலம்பம் விளையாட்டு சங்கமும், சிவகாசி ரோட்டரி கிளப்பும் இணைந்து நடத்தின. விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டிகள் தனி மற்றும் குழு போட்டி களாக நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட சிலம்ப வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமை களை வெளிப்படுத்தினர்.
மேலும் இப்போட்டியில் காளீஸ்வரி கல்லூரி மாண வர்கள் கலந்து கொண்டு ஒற்றை கம்பு, அரை கம்பு, அலங்கார சிலம்பம் ஆகிய பிரிவுகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை கல்லூரி செயலர் செல்வராசன். முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்து லட்சுமி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.
- சிவகாசி ராஜரத்தினம் கல்லூரியில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
- உதவி பேராசிரியர் மெர்லின் ராணி நன்றி கூறினார்.
சிவகாசி
சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா, ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டுத்துறை தலைவர் ஜான்சிராணி வரவேற்றார்.
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேசினார். பெரியத் தாய், கல்லூரி முதல்வர் சுதா, டாக்டர்கள் யசோதா மணி, முருகேசலட்சுமணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பத்மாவதி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
தாய்ப்பால் ஊட்டு தல் விழிப்புணர்வு தொடர் பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. உதவி பேராசிரியர் மெர்லின் ராணி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை உதவி பேரா சிரியர்கள் மகா லட்சுமி மற்றும் கவுசல்யா ஆகியோர் செய்திருந்தனர்.
- நரிக்குடி ஒன்றியத்திற்கு பொறுப்பு சேர்மன் பதவியேற்றார்.
- கவுன்சிலர்கள் பஞ்சவர்ணத்துக்கு எதிராக கையெழுத்திட்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் 14 கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் 6 அ.தி.மு.க. உறுப்பினர்களும், 6 தி.மு.க. உறுப்பினர்களும், அ.ம.மு.க., சுயேட்சை தலா ஒரு உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஒன்றிய தலைவர் பஞ்சவர்ணம் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் அ.தி.மு.க., தி.மு.க.வை சேர்ந்த 12 கவுன்சிலர்கள் பஞ்சவர்ணத்துக்கு எதிராக கையெழுத்திட்டனர்.
இதுகுறித்து விருதுநகர் கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்ப ட்டது. அதனை ஊரக வளர்ச்சித் துறை செயலாளருக்கு கலெக்டர் அனுப்பி வைத்தார்.
அந்த அறிக்கையை பரிசீலனை செய்த ஊரக தழிலும் வெளியிடப்பட்டது.
இதனையடுத்து சேர்மன் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒன்றிய தலைவர் இல்லாததால் பல மாதங்களாக கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறவில்லை. இதனால் அந்த பகுதியில் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நரிக்குடி ஒன்றிய நிர்வாக நலன் கருதி துணை சேர்மனாக இருந்த அம்மன் பட்டி ரவிச்சந்திரனை சேர்மனாக (பொறுப்பு) செயல்பட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து நரிக்குடி ஒன்றிய சேர்மனாக அம்மன்பட்டி ரவிச்சந்திரன் பொறுப்பேற்று கொண்டார்.அவருக்கு நரிக்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜசேகரன், வாசுகி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.பின்னர் அம்மன்பட்டி, அரசு அலுவலர்கள்,கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் நரிக்குடி ஒன்றிய புதிய சேர்மனான அம்மன்பட்டி ரவிச்சந்திரனுக்கு நேரில் சென்று பொன்னாடை போர்த்தி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
அம்மன்பட்டி மற்றும் உடைய சேர்வைக் கார் பட்டி ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பொறுப்பு சேர்மன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
- நகைகளை ஏலம் எடுத்து தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.12 ½ லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
- ரமேஷ், தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்துகொண்டுள்ளார்.
விருதுநகர்
ஈரோடு மாவட்டம் எம்.அம்மன்பட்டி கோவில் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது41). விருதுநகர் ஆலங்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வம் மனைவி பேச்சியம்மாள். இருவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
அதன்பின்னர் இருவரும் நட்பாக பழகி வந்தனர். கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்ப்பதாக ரமேஷிடம் பேச்சியம்மாள் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தங்களது வங்கியில் 380 கிராம் நகைகள் ஏலத்திற்கு வர உள்ளதாகவும், அவற்றை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து தரமுடியும் என்றும் ரமேஷிடம் பேச்சியம்மாள் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
அதனை நம்பிய ரமேஷ் விவரம் கேட்டுள்ளார். அப்போது ரூ.13 லட்சத்து 85 ஆயிரம் கொடுத்தால் 380 கிராம் நகைகளையும் ஏலத்தில் எடுத்து தருவதாக பேச்சியம்மாள் அவரிடம் உறுதி கொடுத்துள்ளார். இதனை நம்பிய அந்த வாலிபர் சிவகாசி பஸ் நிலையத்திற்கு நண்பர்க ளுடன் வந்துள்ளார்.
அதுகுறித்து பேச்சி யம்மாளுக்கு தகவல் கொடுத்தார். பேச்சி யம்மாளும் அங்கு சென்று அவரிடம் பேசியுள்ளார். பின்னர் பல்வேறு வங்கி கணக்கில் இருந்து பேச்சியம்மாளின் வங்கி கணக்கிற்கு ரூ.11 லட்சத்தை பரிமாற்றம் செய்தார்.
மேலும் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் ரொக்கமாக கொடுத்துள்ளார். அதனை பெற்று கொண்ட பேச்சி யம்மாள் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுத்து கூட்டுறவு வங்கியில் செலுத்த வேண்டும் என்றும், செலுத்திவிட்டு நகைகளை பெற்று கொண்டு வருவதாகவும் அதுவரை பஸ் நிலையத்திலேயே காத்திருக்கும்படியும் கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.
சந்தேகமடைந்த ரமேஷ் அவரது செல்போன் எண்ணிற்கு அழைத்த போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போது தான் ரமேஷ் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டுள்ளார்.
உடனடியாக சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை ஏமாற்றிய பேச்சியம்மாளை தேடி வருகின்றனர்.






