search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி நினைவுநாள் ஊர்வலம்
    X

    கருணாநிதி நினைவுநாள் ஊர்வலம்

    • ராஜபாளையத்தில் கருணாநிதி நினைவுநாள் ஊர்வலம் நடந்தது.
    • ஊர்வலத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ராஜபாளையம்

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-வது நினைவு நாளை முன்னிட்டு ராஜபாளையத்தில் நினைவு நாள் ஊர்வலம் நடந்தது. தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் முகவூர் காமராஜர் சிலை முதல் செட்டியார்பட்டி, தெற்கு மாரியம்மன் கோவில் வரை தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செய லாளர் ராசாஅருண்மொழி, ஒன்றிய சேர்மன் சிங்கராஜ், நகர சேர்மன் பவித்ரா ஷியாம், நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பேரூராட்சி சேர்மன் ஜெயமுருகன், பாலசுப்ரமணியன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுமதி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வேல் முருகன், பேரூர் கழக செயலாளர்கள் இளங்கோவன், சிங்கம்புலி அண்ணாவி, மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி ஒன்றிய, நகர, பேரூர், துணை சேர்மன்கள் துரை கற்பகராஜ், கல்பனா, விநாயகமூர்த்தி காளிஸ்வரி மாரிச்செல்வம், கவுன்சிலர்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய, நகர, அணிகளின் அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், வார்டு, கிளை செய லாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×