search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Management Board"

    • ஸ்ரீவில்லிபுத்தூர் வி.பி.எம்.எம். கல்லூரியில் கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
    • மாநில கூர்ந்தாய் வாளர் ரத்தினவிஜயன் ஆகி–யோர் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வி.பி.எம்.எம். கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி–யில் கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை ஆசி–ரியை கீதாராணி தலைமை தாங்கினார். மாநில கூர்ந்த ஆய்வாளர் ரத்தின விஜயன் முன்னிலை வகித்து பேசி–னார்.

    இந்த கூட்டத்தில் கல்வி வளர்ச்சி குறித்து பெற்றோர் களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்துமேலாண்மை குழு கட்டமைப்பு உறுப்பி–னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட–னர்.

    அதில், பள்ளி மேலாண் மைக் குழுவின் தலைவராக ராமலட்சுமி, துணை தலை–வராக கிருஷ்ணசாமி, கல்வி–யாளராக பாலசுப்பிரமணி–யம், சுய உதவி குழு உறுப்பி–னராக செல்வலெட்சுமி தலைமையாசிரியர் கீதா ராணி, ஆசிரியர் பிரதிநிதி–யாக பரமசிவம் மற்றும் 12 உறுப்பினர்கள், தலைமை–யாசிரியை கீதாராணி மற்றும் மாநில கூர்ந்தாய் வாளர் ரத்தினவிஜயன் ஆகி–யோர் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    • இளையான்குடி அரசு பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.
    • இலவசமாக சிலம்ப பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக பேரூராட்சி தலைவர் கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பேரூராட்சியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு சீரமைப்பு கூட்டம் நடந்தது. இதில் பேரூராட்சி தலைவர் செய்யது ஜமீமா கலந்து கொண்டு ஆசிரியர், பெற்றோருக்கு இடையேயான கடமைகளை எடுத்துரைத்தார்.

    இந்த பள்ளியில் இலவசமாக சிலம்ப பயிற்சி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறிய பேரூராட்சி தலைவருக்கு தலைமை ஆசிரியர் நன்றி தெரிவித்தார். இதில் மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    ×