என் மலர்
விருதுநகர்
விருதுநகர்:
அண்மைக்காலமாக தமிழகத்தில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்து வருகிறது. இதைதடுக்க போலீசார் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
தென்மாவட்டங்களில் கள்ள நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விடும் கும்பலை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.அதன் விபரம் வருமாறு:-
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் நேற்று இரவு மது குடிக்க ஒரு வாலிபர் வந்தார். அவர் மதுபாட்டில்களை வாங்கி விட்டு விற்பனையாளரிடம் 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.
அந்த நோட்டை பார்த்த போது விற்பனையாளருக்கு சந்தேகம் எழுந்தது. வழக்கமான ரூபாய் நோட்டை விட அதில் சில மாற்றங்கள் இருந்தன. இதுகுறித்து விற்பனையாளர் உடனே சாத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 500 ரூபாய் நோட்டை சோதித்தபோது அது கள்ளநோட்டு என தெரியவந்தது. இதையடுத்து கள்ள நோட்டை மாற்ற முயன்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் சத்திரப்பட்டியைச் சேர்ந்த கார் டிரைவர் சந்தோஷ்குமார் (வயது 36) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அவரது வீட்டிலும் சோதனை செய்யப்பட்டது. அப்போது அங்கு ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள 500, 100 ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கலர் ஜெராக்ஸ் எந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து சந்தோஷ் குமாரிடம் நடத்திய விசாரணையில் கள்ள நோட்டு தயாரிக்க பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் சாமி (26) மைதீன் (25) ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சந்தோஷ் குமார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் கள்ளநோட்டை எங்கெங்கு மாற்றினார்கள் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் கடந்த 16-ந்் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் 17 மையங்களில் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக மத்திய அரசு அறிவித்தபடி சுகாதார பணியாளர்களுக்கு அனுமதி கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 10 ஆயிரம் பேர் தடுப்பூசி போடுவதற்கு முன் பதிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மாவட்டத்தில் தடுப்பூசி போடுவதற்காக 9,760 தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தினசரி 100 பேருக்கு ஒவ்வொரு மையத்திலும் தடுப்பூசி போடப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
ஆனால் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணியில் எதிர்பார்த்த வேகம் இல்லை. முன்பதிவு செய்திருந்த சுகாதார பணியாளர்கள் கூட உடனடியாக தடுப்பூசி போடுவதற்கு முன்வராத நிலையில் உள்ளது. இதுவரை ஏழு மையங்களில் 3,107 பேருக்கு மட்டுமே தடுப்பூசிபோடப்பட்டுள்ளது. சராசரியாக தினசரி 250 முதல் 275 பேருக்கு மட்டுமே 7 மையங்களிலும் தடுப்பூசி போடப்படும் நிலை உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே திட்டமிட்டபடி 10 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்காக நடவடிக்கையை வேகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து தடுப்பூசி போட முன்வரும் பொதுமக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டிய நிலை உள்ளதால் முதல் கட்ட தடுப்பூசி போடும் பணியை விரைந்து முடிக்க வேண்டியது அவசியமாகும். இதனைத்தொடர்ந்தே அடுத்த கட்டமாக தடுப்பூசி போடும் நடவடிக்கைகளில் எதிர்பார்க்கும் வேகம் இருக்க வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். மத்திய அரசு தமிழகத்தில் தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளநிலையில் மாவட்டங்களிலும் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.
மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,544 ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 89 ஆயிரத்து 394 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,542 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து மாவட்டத்தில் பரிசோதனை முடிவை தெரிவிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
காலை 6.50 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் உடல் வெப்ப பரிசோதனை மற்றும் கைகளை கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்த பின்னரே மலைப்பாதை வழியாக பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டனர்.
பிரதோஷத்தையொட்டி கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக மதியம் 2 மணி முதல் 4 மணி வரை சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம், வாசனைத்திரவியங்கள் உள்பட 18 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தைமாத பிரதோஷம் என்பதாலும், குடியரசு தின விடுமுறை நாள் என்பதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான உணவு மற்றும் அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனி, நாரணாபுரம் என்.லட்சுமியாபுரம் ஆகிய இடங் களில் புதிய தொடக்க பள்ளிகள் தொடக்க விழா நேற்று காலை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி புதிய பள்ளிகளை தற்காலிக கட்டிடங்களில் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வியை கொடுக்க வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோடிக்கணக்கான நிதி உதவிகளை கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கி வருகிறார். மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், வண்ண சீருடைகள், காலணிகள், மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவை வழங்கி ஊக்குவித்து வருகிறார்.
தற்போது தற்காலிக கட்டிடங்களில் திறக்கப்பட்டுள்ள இந்த 2 பள்ளிகளுக்கும் அனைத்து வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும். புதிய பள்ளிகள் தொடங்கப்படுவதன் நோக்கம். மாணவர்கள் பள்ளிக்காக தொலைத்தூரங்களுக்கு செல்ல வேண்டாம் என்பது தான். வீட்டின் அருகில் பள்ளி இருப்பது பாதுகாப்பானது. புதிய பள்ளிகளுக்கு தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த பின்னர் பள்ளிகள் செயல்படும். தற்போது தொடங்கப்பட்டுள்ள பள்ளிகள் வரும் காலங்களில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.
பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும். புதிய பள்ளிகள் தொடங்க அனுமதி அளித்த முதல்-அமைச்சருக்கும், கல்வி அமைச்சருக்கும் தொகுதி மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சுபாஷினி, வேளாண் உற்பத்தி குழு தலைவர் தெய்வம், நாரணாபுரம் பஞ்சாயத்து தலைவர் வேதராஜன், வார்டு உறுப்பினர் மகேஸ்வரி, அ.தி.மு.க. நிர்வாகிகள் ரவிச்சந்திரன், பொன்சக்திவேல், கருப்பசாமி, முத்தையா, ஆ.செல்வம், பொன்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






