என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
சாத்தூர் அருகே கள்ள நோட்டு தயாரித்த கும்பல் சிக்கியது - ஜெராக்ஸ் எந்திரம் பறிமுதல்
விருதுநகர்:
அண்மைக்காலமாக தமிழகத்தில் கள்ளநோட்டு புழக்கம் அதிகரித்து வருகிறது. இதைதடுக்க போலீசார் பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
தென்மாவட்டங்களில் கள்ள நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விடும் கும்பலை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.அதன் விபரம் வருமாறு:-
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் நேற்று இரவு மது குடிக்க ஒரு வாலிபர் வந்தார். அவர் மதுபாட்டில்களை வாங்கி விட்டு விற்பனையாளரிடம் 500 ரூபாய் நோட்டை கொடுத்துள்ளார்.
அந்த நோட்டை பார்த்த போது விற்பனையாளருக்கு சந்தேகம் எழுந்தது. வழக்கமான ரூபாய் நோட்டை விட அதில் சில மாற்றங்கள் இருந்தன. இதுகுறித்து விற்பனையாளர் உடனே சாத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 500 ரூபாய் நோட்டை சோதித்தபோது அது கள்ளநோட்டு என தெரியவந்தது. இதையடுத்து கள்ள நோட்டை மாற்ற முயன்ற வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் சத்திரப்பட்டியைச் சேர்ந்த கார் டிரைவர் சந்தோஷ்குமார் (வயது 36) என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து அவரது வீட்டிலும் சோதனை செய்யப்பட்டது. அப்போது அங்கு ரூ. 1½ லட்சம் மதிப்புள்ள 500, 100 ரூபாய் கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் கள்ளநோட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கலர் ஜெராக்ஸ் எந்திரமும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்ந்து சந்தோஷ் குமாரிடம் நடத்திய விசாரணையில் கள்ள நோட்டு தயாரிக்க பெரிய கொல்லப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் சாமி (26) மைதீன் (25) ஆகியோர் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சந்தோஷ் குமார் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் கள்ளநோட்டை எங்கெங்கு மாற்றினார்கள் என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்