என் மலர்
செய்திகள்

மின்சாரம் தாக்கி பலி
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி ரிசர்வ்லைன் இந்திராநகரில் வசித்து வந்தவர் சிவக்குமார் (வயது 38). கட்டிட தொழிலாளி. இந்தநிலையில் பள்ளபட்டி பகுதியில் நடைபெறும் கட்டிட பணிக்காக சிமெண்டு கலவை எந்திரத்தை கொண்டு சென்றபோது ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சைக்கிளை சிவக்குமார் எடுத்து அருகில் இருந்த வீட்டின் முன்பு நிறுத்தி வைத்த போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி சுப்புலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






