என் மலர்
விருதுநகர்
| ராஜபாளையம் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| தங்கப்பாண்டியன் | திமுக | 74158 | |||
| கே.டி.ராஜேந்திரபாலாஜி | அதிமுக | 70260 | |||
| காளிமுத்து | அமமுக | 7660 | |||
| விவேகானந்தன் | சமக | 4059 | |||
| ஜெயராஜ் | நாம் தமிழர் | 15593 | |||
| ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| மான்ராஜ் | அதிமுக | 70475 | |||
| மாதவராவ் | காங்கிரஸ் | 57737 | |||
| சங்கீதபிரியா | அமமுக | 23682 | |||
| குருவையா | மநீம | 3512 | |||
| அபிநயா | நாம் தமிழர் | 20348 | |||
| சாத்தூர் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| ஏ.ஆர்.ஆர். ரகுராமன் | மதிமுக | 74174 | |||
| ஆர்.கே.ரவிச்சந்திரன் | அதிமுக | 62995 | |||
| எம்.எஸ்.ஆர். ராஜவர்மன் | அமமுக | 32916 | |||
| கி.பாண்டி | நாம் தமிழர் | 12626 | |||
| சிவகாசி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| அசோகன் | காங்கிரஸ் | 78947 | |||
| லட்சுமிகணேசன் | அதிமுக | 61628 | |||
| சாமிக்காளை | அமமுக | 9893 | |||
| முகுந்தன் | மநீம | 6090 | |||
| கனகபிரியா | நாம் தமிழர் | 20865 | |||
| விருதுநகர் | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் | திமுக | 73297 | |||
| பாண்டுரங்கன் | பாஜக | 51958 | |||
| கோகுலம் தங்கராஜ் | அமமுக | 10783 | |||
| மணிமாறன் | சமக | 5054 | |||
| செல்வகுமார் | நாம் தமிழர் | 14311 | |||
| அருப்புக்கோட்டை | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் | திமுக | 91040 | |||
| வைகைசெல்வன் | அதிமுக | 52006 | |||
| ஆர்.ரமேஷ் | தேமுதிக | 2532 | |||
| வி.உமாதேவி | மநீம | 7638 | |||
| அ.உமா | நாம் தமிழர் | 12392 | |||
| திருச்சுழி | |||||
| வேட்பாளர்கள் | கட்சி | வாக்குகள் | |||
| தங்கம் தென்னரசு | திமுக | 102225 | |||
| ராஜசேகர் | மூமுக | 41233 | |||
| கே.கே.சிவசாமி | அமமுக | 6441 | |||
| முருகன் | மநீம | 1356 | |||
| ஆனந்தஜோதி | நாம் தமிழர் | 13787 | |||
அருப்புக்கோட்டை தொகுதியில் சாத்தூர் ராமச்சந்திரன் 9-வது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்தார்.
தற்போதுள்ள அருப்புக்கோட்டை தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு சாத்தூர் தொகுதியாக இருந்தது. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இடம் பெற்றார். அப்போது அந்த அமைச்சரவையில் எம்.ஜி.ஆரை தவிர பண்ருட்டி ராமச்சந்திரனும் அமைச்சராக இருந்ததால் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் சாத்தூர் ராமச்சந்திரன் அழைக்கப்பட்டார்.
அதுமுதல் அவர் அரசியல் வட்டாரத்தில் சாத்தூர் ராமச்சந்திரன் என்று அழைக்கப்படுவது வழக்கமாயிற்று.
அருப்புக்கோட்டை தொகுதியில் மொத்தம் 1,71,409 வாக்குகள் பதிவாகின. இதில் நோட்டா 1,323. செல்லாதவை 208.
அருப்புக்கோட்டை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சாத்தூர் ராமச்சந்திரன் 91,040. வாக்குகள் பெற்று வெற்றி பெற்று சாதனை படைத்தார். அ.தி.மு.க. வேட்பாளர் வைகைச்செல்வன் 52,006 வாக்குகள் பெற்றார்.
அருப்புக்கோட்டை தொகுதியில் 29 பேர் போட்டியிட்டனர். அவர்கள் வாங்கிய ஓட்டுகள் வருமாறு:-
1. சாத்தூர் ராமச்சந்திரன் (தி.மு.க) - 91040.
2. வைகைச் செல்வன் (அ.தி.மு.க.) - 52006.
3. ஆர்.ரமேஷ் (தே.மு.தி.க) - 2535.
4. அ.உமா (நாம் தமிழர் கட்சி) - 12392.
5. வி.உமாதேவி (மக்கள் நீதி மையம்) - 7638.
6. சுப்பாராஜ் (பகுஜன் சமாஜ்) - 272.
7. எம்.கருப்பசாமி (புதிய தமிழகம்) - 478.
8. எஸ்.தீனதயாளன் (அனைத்து மக்கள் புரட்சி) - 58.
9. எஸ்.பாண்டியன் ( பகுஜன் திராவிட கட்சி) - 48.
10. ஏ.பி.எஸ்.ஜான்சன் (மை இந்தியா கட்சி) - 57.
11. ஜி.ரஞ்சித் (சுயேச்சை) - 57.
12. ஆர்.எஸ்.ராமச்சந்திரன் (சுயே) - 68.
13. வழக்கறிஞர் தங்கபாண்டியன் (சுயே) - 426.
14. தங்கவடிவேல் (சுயே) - 61.
15. தனசேகரன் பாண்டியன் (சுயே) - 76.
16. பிரசாந்த் (சுயே) - 438.
17. கே. பூமிநாதன் (சுயே) - 629.
18. வி.பூர்ணிஷா (சுயே) - 216.
19. ஆர்.பொன்முனியசாமி (சுயே) - 2884.
20. எஸ்.மணிவண்ணன் (சுயே) - 398.
21. எம்.முத்துமாரியப்பன் (சுயே) - 135.
22. இ.ராமச்சந்திரன் (சுயே) - 3053.
23. ஜி.ராமச்சந்திரன் (சுயே) - 61.
24. எஸ்.ராமச்சந்திரன் (சுயே) - 188.
25. டி.ராமச்சந்திரன் (சுயே) - 39.
26. ஆர்.ராமச்சந்திரன் (சுயே) - 71.
27. பி.லிங்க பாண்டி (சுயே) - 419.
28. விஜயகுமார் (சுயே) - 60.
29. வெங்கடேசன் (சுயே) - 38.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியில் 15 வேட்பாளர்கள் களம் கண்டனர்.
இந்த தொகுதியானது தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டதால், காங்கிரஸ் சார்பில் மாதவராவ் (வயது 63) வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அ.தி.மு.க. சார்பில் மான்ராஜ் போட்டியிட்டார்.
தீவிரமாக பிரசாரம் செய்து வந்த வேட்பாளர் மாதவராவ் கொரோனா தொற்றுக்கு ஆளானார். இதைத்தொடர்ந்து மதுரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். சட்டசபை தேர்தல் கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கு அடுத்த சில நாட்களில் மாதவராவ் உயிரிழந்தார்.
இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அவர் வெற்றி பெற்றால், அந்த தொகுதி மீண்டும் இடைத்தேர்தலை சந்திக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததால், இந்த தொகுதியின் தேர்தல் முடிவு தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் பதிவான ஓட்டுகள் நேற்று விருதுநகரில் உள்ள மையத்தில் எண்ணப்பட்டன.
தொடக்கத்தில் இருந்தே அ.தி.மு.க. வேட்பாளர் மான்ராஜ் முன்னணியில் இருந்தார். 2-வது இடத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் வந்தார். சுற்றுக்கள் முடிய, முடிய இவர்கள் 2 பேருக்குமான ஓட்டுகள் வித்தியாசம் அதிகரித்த வண்ணம் இருந்தது. 26 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் 12 ஆயிரத்து 738 ஓட்டுகள் அதிகம் பெற்று அ.தி.மு.க. வேட்பாளர் மான்ராஜ் வெற்றி பெற்றார். அவர் 70 ஆயிரத்து 475 வாக்குகள் பெற்றிருந்தார். காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் 57 ஆயிரத்து 737 ஓட்டுகள் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்ட 7 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை சிவகாசி ஸ்ரீவித்யா கல்லூரியில் தனித்தனி அறைகளில் எண்ணப்பட்டு வருகின்றன. இங்கு அருப்புக்கோட்டை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வைகை செல்வன் இன்று காலை வந்தார். அவர் தனது தொகுதி வாக்கு எண்ணும் அறைக்கு செல்வதற்கு பதில் சாத்தூர் தொகுதி வாக்குகள் எண்ணும் அறைக்கு தவறுதலாக வந்து விட்டார்.
இதற்கு அ.ம.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு எதிராக அ.தி.மு.க.வினரும் கூச்சலிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வாக்குவாதம் திடீரென மோதலாக மாறியது. இதில் அ.ம.மு.க. முகவரின் சட்டை கிழிந்தது.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து இருதரப்பினரையும் சமரசம் செய்தனர். மாவட்ட தேர்தல் அலுவலர் கண்ணன் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
பின்னர் வைகை செல்வனை போலீசார் பாதுகாப்பாக அருப்புக்கோட்டை தொகுதி வாக்கு எண்ணும் மையத்திற்கு அழைத்து சென்றனர்.
இந்த சம்பவம் காரணமாக வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பதட்டம் நிலவியது.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 19-வது வார்டு அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மாரியப்பன் (வயது 50). இவர் 2 முறை அ.தி.மு.க. கவுன்சிலராக வெற்றி பெற்றவர்.
இவர் நேற்று இரவு ராஜபாளையம் மாயூரநாத சுவாமி கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். பின்னால் அவரது நண்பர் முருக கணேஷ் (48) அமர்ந்திருந்தார்.
மதுரை சாலையில் சென்று கொண்டிருக்கும்போது எதிரே ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ராஜபாளையத்துக்கு பால் கேன்கள் ஏற்றிவந்த கூட்டுறவு பால் சங்கத்தின் வேன், மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மாரியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற முருக கணேஷ் படுகாயம் அடைந்தார். அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
இந்த விபத்து குறித்து ராஜபாளையம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பால் வேன் டிரைவர் முதுகுடி கிராமத்தைச் சேர்ந்த சக்திராஜன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






