search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நோயாளிகள் அவதி"

    • குழந்தைகள், விஷக்கடி உள்ளிட்ட அவசர சிகிச்சைக்குத் தினமும் ஏராளமான நோயாளிகள் கிராமப் பகுதியிலிருந்து வந்து செல்கின்றனர்.
    • போதிய பராமரிப்பு இல்லாததால், வளாகத்தில் செடிகள் வளர்ந்து விஷ ஜந்துகளின் இருப்பிடமாக மாறியுள்ளது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த பேரிகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அதிக அளவில் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.

    ஆனால், இங்கு போதிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும், மருத்து வமனையில் பெண்கள் கழிப்பறையை பயன்படுத்த முடியாதபடி எப்போதும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

    மருத்துவமனையில் பயன்படுத்தும் மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்றாமல் மருத்துவமனை வளாகத்தில் கொட்டி வைத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் சுகாதாரமற்ற நிலை நிலவி வருகிறது.

    கழிவுநீர் கால்வாய் திறந்த நிலையில் இருப்பதால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி, கொசுக்கடிக்கு இடையில் நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்லும் நிலையுள்ளது.

    சுகாதார நிலைய வளாகத்தின் திறந்தவெளி பகுதிகள் முறையான பராமரிப்பு இல்லாமல் செடி, கொடிகள் வளர்ந்து முட்புதர் காடுபோல மாறியுள்ளது.

    இதனால், விஷஜந்துகள் நடமாட்டம் உள்ளது. இக்குறைகளைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக பொது மக்கள் கூறுகையில் மாநில எல்லையில் உள்ள பேரிகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அதிக அளவில் கர்ப்பி ணிகள், குழந்தைகள், விஷக்கடி உள்ளிட்ட அவசர சிகிச்சைக்குத் தினமும் ஏராளமான நோயாளிகள் கிராமப் பகுதியிலிருந்து வந்து செல்கின்றனர்.

    ஆனால், இங்கு போதிய பராமரிப்பு இல்லாததால், வளாகத்தில் செடிகள் வளர்ந்து விஷ ஜந்துகளின் இருப்பிடமாக மாறியுள்ளது.

    மருத்துவக் கழிவுகளைச் சுகாதார நிலைய வளா கத்தில் கொட்டுவதால், சிகிச்சைக்கு வரும் நோயாளி களுக்குத் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, காலியாக உள்ள மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நிரப்பவும், சுகாதார நிலைய வளாகத்தில் சுகாதாரத்தைக் காக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • மின் இணைப்பு தராததால் காட்சி பொருளான எக்ஸ்ரே கருவியால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
    • இது குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    கீழக்கரை

    கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனைக்கு தினமும் 600-க்கும் மேற்பட்ட உள், வெளி நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்ற னர். இவர்களில் தினமும் சுமார் 25 பேர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில் புதிய எக்ஸ்ரே மிஷினுக்கு மின் இணைப்பு இல்லாததால் தினமும் ஒரு மணி நேரம் மட்டும் ஜெனரேட்டர் போட்டு எக்ஸ்ரே எடுக்கப் பட்டு வருகிறது.

    இதனால் நோயாளிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. இதுகுறித்து கீழக்கரை நுகர்வோர் நலச் சங்கம் செயலாளர் செய்யது இப்ரா ஹிம் கூறுகையில்:-

    ஏற்கனவே இருந்த எக்ஸ்ரே மிஷினுக்காக கடந்த 40 வருடங்களுக்கு முன் போடப்பட்ட மின் வயர்கள் புதிய மெஷினில் இணைக்கப்பட்டபோது மின் கசிவு ஏற்பட்டு அனைத்துவயர்களும் எரிந்து விட்டதாக கூறப்படு கிறது.

    இதுகுறித்து பொதுப் பணித்துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது காலை 8 மணிக்கு வரும் நோயாளிகள் எக்ஸ்ரே எடுப்பதற்கு மதியம் 12 மணி வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. காரணம் 11 மணிக்கு தான் ஜென ரேட்டர் போடப்பட்டு 12 மணி வரை ஒரு மணி நேரத் திற்கு மட்டும் எக்ஸ்ரே எடுக் கப்படுகிறது.

    இதனால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். ஆகவே மாவட்ட கலெக்டர் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு இது குறித்து உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • முதலுதவி சிகிச்சை போன்ற அனைத்து பிரச்சனைக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை தான் நாட வேண்டிய உள்ளது
    • பலமுறை புகார் தெரிவித்தும் மாவட்ட மருத்துவ நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    ஒகேனக்கல்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்து ஒகேனக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    அதுமட்டுமின்றி இங்குள்ள சுற்றுலா தள த்திற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தினம்தோறும் வந்து செல்கின்றனர்.

    ஒகேனக்கல், கூத்தப்பாடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் இருக்கக்கூடிய மக்கள் ஒகேனக்கல்லில் உள்ள ஆரம்ப சுகாதார நிலை யத்தில் தான் அவசர சிகிச்சை பெறவேண்டி நிலையுள்ளது.

    பெண்கள் தங்களது கர்ப்ப காலங்களில் மகப்பேறு பரிசோதனை செய்து கொள்கின்றனர்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அவர்களுக்கு உடல்நிலை குறைவு அல்லது ஆற்றுப் பகுதிகளில் குளிக்கும் போது கண்ணாடி பாட்டில்கள் கால்களை கிழிப்பது, ஆற்றில் அடித்துச்செல்லும் நபர்களை உயிருடன் மீட்கும்பொழுது, இவர்களுக்கு முதலுதவி சிகிச்சை போன்ற அனைத்து பிரச்சனைக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை தான் நாட வேண்டிய உள்ளது.

    இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் போதிய அளவில் இல்லாமல் ஐந்து செவிலியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரே செவிலியரை வைத்து செயல்பட்டு வருகிறது.

    அதே போல இந்த ஆரம்ப சுகாதார நிலையம் காலை 8 முதல் மாலை 4 மணி வரை செயல்பட்டு வருவதாலும், அதற்கு மேல் செவிலியர்கள் பற்றாக்குறையால் ஆரம்ப சுகாதார நிலையம் ஆனது மூடப்படுகின்றன. இதனால் இங்குள்ள மக்கள் இரவு நேரங்களில் மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் சுமார் 16 கிலோமீட்டர் வனப்பகுதிகளை கடந்து சிகிச்சை பெறுவதற்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    இந்நிலையில் செவிலியர்களை நியமிக்க வலியுறுத்தி பலமுறை புகார் தெரிவித்தும் மாவட்ட மருத்துவ நிர்வாகம் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே மாவட்ட மருத்துவ நிர்வாகமும் உடனடியாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களின் நலன் கருதி செவிலியர்களை நியமிக்கப்பட்டவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொன்னேரியை சுற்றியுள்ள கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இந்த வருடம் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
    • அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் வார்டுகளில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பொன்னேரி:

    பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு வருகிறார்கள்.

    காய்ச்சல் இருமல், சளி, பிரசவம், எக்ஸ்ரே ஸ்கேன், பல் சிகிச்சை, விபத்து, அறுவை சிகிச்சை, டயாலிசிஸ், பொது மருத்துவம் உள்ளிட்ட பல நோய்களுக்கு உள்நோயாளியாகவும் வெளிநோயாளியாகவும் ஏராளமானோர் வந்து செல்வதுண்டு.

    இந்நிலையில் பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம், திருப்பாலைவனம், பழவேற்காடு பகுதிகளில் வைரஸ் காய்ச்சல், புளூ காய்ச்சல் உள்ளிட்ட பருவ கால நோய் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.

    மழைக்காலம் தொடங்கிய அக்டோபர் மாதத்தில் குறைவாக இருந்த பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. மழை, பனி, குளிர் போன்றவற்றால் வைரஸ் தொற்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாக்கி வருகிறது. காய்ச்சல், உடல் வலி, இருமல், சளி போன்றவை இதன் அறிகுறியாக இருந்தாலும் தொண்டை வலியும் அதிகமாக உள்ளது.

    பொன்னேரியை சுற்றியுள்ள கிராமங்களில் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இந்த வருடம் அதிகமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் வார்டுகளில் தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மேலும் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குகளில் கூட்டம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக சிறு குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டு இருப்பதை காணமுடிகிறது. வழக்கமாக மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் இரவு 10 மணி வரை செயல்படக்கூடிய கிளினிக்குகள் இப்போது கூட்டம் குவிவதால் நள்ளிரவு வரை செயல்படுகிறது.

    குறிப்பாக பொன்னேரி அரசு மருத்துவமனையில் பொது மருத்துவ வெளி நோயாளி சிகிச்சை பிரிவில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் அதிகமாக கூட்டம் காணப்படுவதாகவும் குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் மருத்துவர்கள் சென்று விடுவதால் நோயாளிகள் மருத்துவரை பார்க்க முடியாமல் அவதிப்பட்டு திரும்பி விடுவதாகவும் தனியார் மருத்துவமனையை நாடுவதாகவும் நோயாளிகள் தெரிவித்தனர். இதனை கருத்தில் கொண்டு சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

    • கொடுமுடி அரசு மருத்துவ மனையில் சி.கே.சரஸ்வதி எம்.எல்.ஏ. திடீர் ஆய்வினை மேற்கொண்டார்.
    • தாலுகா மருத்துவ மனையாக கொடுமுடி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட போதும் அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏதும் இல்லாமல் உள்ளன.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம், கொடுமுடி அரசு மருத்துவ மனையில் சி.கே.சரஸ்வதி எம்.எல்.ஏ. திடீர் ஆய்வினை மேற்கொண்டார். ஆய்வின் போது ஆய்வகம், நோயாளிகள் படுக்கையறைகள், அவசர மருத்துவ பிரிவு, மருந்தகம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ள பகுதிகள் அனைத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொ ண்டார்.

    ஆய்வுக்கு பின் சரஸ்வதி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:

    தாலுகா மருத்துவ மனையாக கொடுமுடி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்ட போதும் அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏதும் இல்லாமல் உள்ளன.

    மொத்தம் 6 பொது மருத்துவர்கள், ஒரு பல் மருத்துவர், ஒரு சித்தா மருத்துவர் உட்பட 8 மருத்து வர்கள் பணியமர்த்தப்பட்ட போதிலும் அவர்களுக்கு அடிக்கடி பணி மாறுதல் கொடுக்கப்படுவதால் அவர்களால் தொடர்ந்து பணியாற்ற முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது,

    இதனால் நோயா ளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட முடிவதில்லை, எலும்பு முறிவு மருத்துவர் ஒருவர் பணி நியமனம் செய்யப்ப ட்டுள்ளார், ஆனால் எக்ஸ்ரே எடுக்கும் வசதி, எக்ஸ்ரே மெஷின் கிடையாது.

    இதனால் ஏழை நோயாளிகள் வெளியில் பணம் கொடுத்து எக்ஸ்ரே எடுத்து வரும் நிலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆய்வகங்களில் உள்ள மெஷின்கள் மற்றும் உபகரணங்கள் மிகவும் பழுதான நிலையில் உள்ளது. சில மிஷின்கள் இயங்குவதில்லை.

    அதேபோல் விபத்து ஏற்பட்டு அவசர சிகி ச்சைக்கு வருபவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்க முடிவதில்லை. இதனால் மக்கள் கரூர் மற்றும் ஈரோடு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்.

    கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் செய்யக்கூடிய ஸ்கேன் மெஷின் இங்கு இயங்குவதில்லை. இதனால் கர்ப்பிணி பெண்கள் வெளியே சென்று பணம் கொடுத்து ஸ்கேன் எடுத்து வரும் நிலை உள்ளது. மேலும் இங்கே பிரேத பரிசோதனைகள் முறையாக நடைபெற்று வருகின்றன.

    ஆனால் அடையாளம் தெரியாதவர் பிரேதங்களை பரிசோதனை செய்து அவர்களுக்கு பாதுகாப்பாக வைக்க குளிர்சாதன வசதி கொண்ட பிரீசர் பாக்ஸ் இந்த மருத்துவமனையில் இல்லாமல் ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிணவறைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

    எப்பொழுதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த மருத்துவ–மனை தாலுகா மருத்துவ–மனையாக தரம் உயர்த்தப் பட்ட போதும் மிகவும் குறைந்த எண்ணி க்கையில் நோயாளிகள் வந்து செல்வது அவர்களு க்கான சிகிச்சை பெறக்கூடிய வசதிகள் இல்லாமல் இருப்பதும் பொதுமக்க ளிடையே பெருத்த கவலை உருவாக்கியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் இது குறித்து சட்டமன்றத்தில் வலியுறுத்தி அனைத்து வசதி களையும் பெற்று தருவதாகவும் கூறினார். ஆய்வின்போது மருத்துவ அலுவலர் ரேவதி, டாக்டர்.பேபி, சித்த டாக்டர் இந்துமதி, பல் டாக்டர் கீதா மற்றும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், உள்ளூர் பிரமுகர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் படுக்கை வசதியின்றி நோயாளிகள் அவதிக்கு உள்ளாகினர்.
    • புதுச்சேரி உள்ளிட்ட பிற பிராந்தியங்களில் பணியாற்றும் 42 பேர், உடனே காரைக்காலுக்கு திரும்பவேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு, காரைக்கால் மட்டுமில்லாது, அண்டை மாவட்டமான, நாகை,திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஏராளமான நோயாளிகள், தினசரி காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று சென்றவண்ணம் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி, உயர்தர சிகிச்சை, விபத்து சிகிச்சை, விஷம் ஆய்வுக்கூடம், சி.டி ஸ்கேன் போன்ற தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் டாக்டர்கள் இல்லாமை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்ற குற்றசாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி ஜிம்பர் சார்பில், அண்மையில், சுமார் ரூ.30 கோடிக்கு மேல் புனரமைப்பு பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனாலும், தொடரும் அவலமாக, கடந்த சில வாரமாக, நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதிகள் இல்லாமல், வெறும் தரையிலும், சிலர் பாய், போர்வை உள்ளிட்ட வசதிகளோடு படுத்துறங்கும் நிலைக்கு தள்ளப்படுள்ளனர். இதில், அறுவை சிகிச்சை, மகப்பேறு உள்ளிட்ட நோயாளிகளும் இருப்பது வேதனையானது. இந்நிலையில், புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி, கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், காரைக்காலில் ரூ.80 கோடியில் புதிய ஆஸ்பத்தி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு செய்துள்ளார்.

    அதேபோல், காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணியாற்ற அனுமதி பெற்று, புதுச்சேரி உள்ளிட்ட பிற பிராந்தியங்களில் பணியாற்றும் 42 பேர், உடனே காரைக்காலுக்கு திரும்பவேண்டும். இல்லையேல் அவர்களின் ஊதியம் நிறுத்திவைக்கப்படும் என, மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இவை அனைத்தும் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக, குறைந்த செலவில், நோயாளிகளுக்கு போதுமான படுக்கை வசதி, விபத்து சிகிச்சை, விஷம் ஆய்வுக்கூடம், சி.டி. ஸ்கேன் போன்ற தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் டாக்டர்கள் இல்லாமை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துத ந்தால், காரைக்கால் அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை க்காக வந்து மரணம் அடையும் நோயாளிகளின் எண்ணி க்கை குறையும். எனவே, முதல் கட்டமாக அடிப்படை வசதிகளை செய்துதர முதல் அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர் முன்வரவேண்டும், என நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்த மயில் ரவுண்டானா எனப்படும் பஸ் நிலைய பகுதியை தேர்ந்தெடுக்கின்றனர்.
    • போராட்டம் நடைபெறும் சமயங்களில் மிகப் பெரிய ஸ்பீக்கர் பாக்ஸ்களை வைத்து பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டத்தில் 2-வது பெரிய நகரமாக உள்ள பழனி சர்வதேச அளவில் மிகச்சிறந்த ஆன்மீக சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு பக்தர்கள் பழனி முருகனை தரிசிக்க வருகை தருகின்றனர்.

    திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்நிலையில் பழனியில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்த மயில் ரவுண்டானா எனப்படும் பஸ் நிலைய பகுதியை தேர்ந்தெடுக்கின்றனர். அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் முக்கிய சாலையாக இது உள்ளது. ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெறும் சமயங்களில் மிகப் பெரிய ஸ்பீக்கர் பாக்ஸ்களை வைத்து பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.

    அவசர சிகிச்சைக்காக வருபவர்களும், உயிருக்கு போராடிக் கொண்டு ஆம்புலன்சில் வருபவர்களும் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். அவசர சிகிச்சை வார்டு மற்றும் பிரசவ வார்டு அமைந்துள்ள பகுதியின் பின்புறம்தான் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    இது மட்டுமின்றி அரசு ஆஸ்பத்திரியை சுற்றி ஏறி போராட்டக்காரர்கள் அமர்ந்து கொள்வதால் கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. எனவே போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு பழனியில் பஸ்நிலையத்தை தவிர்த்து வேறு இடத்தை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கின்றனர்.
    • நோயாளிகளுக்கு தேவையான ஊசி மருந்து இல்லையெனவும், நீண்ட நேரமாக காத்துக் கிடப்பதாகவும் நோயாளிகள் தெரிவித்தனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தலைமை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மேலும் நோயாளிகளுக்கு தேவையான ஊசி மருந்து இல்லையெனவும், நீண்ட நேரமாக காத்துக் கிடப்பதாகவும் நோயாளிகள் தெரிவித்தனர்.

    மேலும் இதைப்பற்றி இரவு நேர மருத்துவர் ஒருவர் கூறுகையில், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கின்றனர். இதுபற்றி தலைமை மருத்துவரிடம் கூறியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

    இந்த பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளிடம் இரவு நேர மருத்துவர்கள் மரியாதை குறைவாக பேசுவதாகவும் நோயாளிகள் தெரிவித்தனர். வரும் நோயாளிகளிடம் உரிய முறையில் பதில் அளிக்க வேண்டும். இதற்கு உடனடியாக மாவட்ட கலெக்டர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மருத்துவர்கள் அலட்சியப்படுத்துவதால் சில உயிர்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவசரத்திற்கு கூட மருத்துவம் இல்லாமல் இருப்பது ஏன், அதற்காக தான் அரசு மருத்துவமனை இருக்கிறதா என நோயாளிகள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். இது போன்ற மருத்துவர்களுடைய அலட்சிய போக்கினை கைவிட்டு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கோரிக்கை என நோயாளிகள் தெரிவித்தனர்.

    • 100-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சி அலுவலகம் அருகில் ஆரணி அரசு மருத்துவமனை உள்ளது.

    இதில் மருத்துவ அலுவலர் மமதா உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    மேலும் நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் ஆரணி அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கு காலை வரையில் மட்டும் தான் சிகிச்சை அளிப்பது வழக்கம் சிகிச்சை சம்மந்தமாக நோயாளிகளுக்கு வழங்ககூடிய சீட்டு வழங்கபட்டது.

    நோயாளிகள் அவதி

    ஆனால் காலையில் மருத்துவர் பணி நேரத்தில் நீண்ட நேரம் ஆகியும் தனது இருக்கையில் வராத காரணத்தினால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாயினார்கள்.

    ஆரணி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை வந்த நோயாளிகள் மருத்துவர் தனது இருக்கையில் இல்லாத காரணத்தினால் நீண்ட வரிசையில் கால் வலிக்க நீண்ட நேரம் நின்று கொண்டு காத்திருந்ததால் நோயாளிகள் மேலும் சோர்வடைந்து காணப்பட்டனர்.

    ஓரு சில நோயாளிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து மருத்துவ அலுவலரிடம் நோயாளிகள் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

    ஆனாலும் மருத்துவர் இருக்கைக்கு எந்த ஓரு மருத்துவரும் வரவில்லை.

    இது குறித்து சம்மந்தபட்ட மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் நோயாளிகளை அலைகழிக்காமல் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×