search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "patients suffer"

    • முக்கூடல் தாம்போதி பாலத்தில் செல்லும்போது மாடு குறுக்கே வந்ததால் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது நடராஜன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
    • ஆம்புலன்ஸ் இல்லாததால், நீண்ட நேர தாமதம் ஏற்பட்டு, அதன்பின்னர் தனியார் வாகனத்தில் அவர் நெல்லைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    முக்கூடல்:

    சேரன்மகாதேவி முடுக்கு தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 58). இவரும், அதே ஊரை சேர்ந்த பழைய கிராமம் தெருவில் வசிக்கும் மீனாட்சிசுந்தரம் (64) ஆகிய இருவரும் இடைகால் சிவன் கோவிலில் பூஜை செய்துவிட்டு ேமாட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர்.

    மோட்டார் சைக்கிளை நடராஜன் ஓட்டினார். கடையம் - நெல்லை ரோட்டில் முக்கூடல் தாம்போதி பாலத்தில் செல்லும்போது மாடு குறுக்கே வந்ததால் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது நடராஜன் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் ஏற்பட்ட விபத்தில் மீனாட்சி சுந்தரத்திற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    உயிருக்கு போராடிய மீனாட்சி சுந்தரத்திற்கு முக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல டாக்டர்கள் பரிந்துரைத்த நிலையில், அந்த ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் இல்லாததால் தனியார் வாகனத்தை வாடகைக்கு எடுக்க சென்றனர். இதனால் நீண்ட நேர தாமதம் ஏற்பட்டு, அதன்பின்னர் தனியார் வாகனத்தில் அவர் நெல்லைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கின்றனர்.
    • நோயாளிகளுக்கு தேவையான ஊசி மருந்து இல்லையெனவும், நீண்ட நேரமாக காத்துக் கிடப்பதாகவும் நோயாளிகள் தெரிவித்தனர்.

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தலைமை அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மேலும் நோயாளிகளுக்கு தேவையான ஊசி மருந்து இல்லையெனவும், நீண்ட நேரமாக காத்துக் கிடப்பதாகவும் நோயாளிகள் தெரிவித்தனர்.

    மேலும் இதைப்பற்றி இரவு நேர மருத்துவர் ஒருவர் கூறுகையில், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் ஆட்கள் பற்றாக்குறையாக இருக்கின்றனர். இதுபற்றி தலைமை மருத்துவரிடம் கூறியும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

    இந்த பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளிடம் இரவு நேர மருத்துவர்கள் மரியாதை குறைவாக பேசுவதாகவும் நோயாளிகள் தெரிவித்தனர். வரும் நோயாளிகளிடம் உரிய முறையில் பதில் அளிக்க வேண்டும். இதற்கு உடனடியாக மாவட்ட கலெக்டர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    மருத்துவர்கள் அலட்சியப்படுத்துவதால் சில உயிர்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அவசரத்திற்கு கூட மருத்துவம் இல்லாமல் இருப்பது ஏன், அதற்காக தான் அரசு மருத்துவமனை இருக்கிறதா என நோயாளிகள் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர். இது போன்ற மருத்துவர்களுடைய அலட்சிய போக்கினை கைவிட்டு கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த கோரிக்கை என நோயாளிகள் தெரிவித்தனர்.

    • 100-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சி அலுவலகம் அருகில் ஆரணி அரசு மருத்துவமனை உள்ளது.

    இதில் மருத்துவ அலுவலர் மமதா உள்ளிட்ட சுமார் 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    மேலும் நேற்று ஞாயிற்று கிழமை என்பதால் ஆரணி அரசு மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கு காலை வரையில் மட்டும் தான் சிகிச்சை அளிப்பது வழக்கம் சிகிச்சை சம்மந்தமாக நோயாளிகளுக்கு வழங்ககூடிய சீட்டு வழங்கபட்டது.

    நோயாளிகள் அவதி

    ஆனால் காலையில் மருத்துவர் பணி நேரத்தில் நீண்ட நேரம் ஆகியும் தனது இருக்கையில் வராத காரணத்தினால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிகுள்ளாயினார்கள்.

    ஆரணி சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆரணி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை வந்த நோயாளிகள் மருத்துவர் தனது இருக்கையில் இல்லாத காரணத்தினால் நீண்ட வரிசையில் கால் வலிக்க நீண்ட நேரம் நின்று கொண்டு காத்திருந்ததால் நோயாளிகள் மேலும் சோர்வடைந்து காணப்பட்டனர்.

    ஓரு சில நோயாளிகள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து மருத்துவ அலுவலரிடம் நோயாளிகள் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

    ஆனாலும் மருத்துவர் இருக்கைக்கு எந்த ஓரு மருத்துவரும் வரவில்லை.

    இது குறித்து சம்மந்தபட்ட மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் நோயாளிகளை அலைகழிக்காமல் சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் இணையான ஊதியம் வழங்கக்கோரி அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். #DoctorsStrike
    சென்னை:

    தமிழகத்தில் அரசு ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் ஆகியவற்றில் சுமார் 18 ஆயிரத்து 600 டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    இவர்கள் மத்திய அரசு டாக்டர்களுக்கு வழங்கப்படும் இணையான ஊதியம் வழங்கக்கோரி போராடி வருகிறார்கள்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சென்னையில் 4 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், குழந்தைகள் மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். டாக்டர்களின் போராட்டத்தால் புற நோயாளிகள் பிரிவு செயல்படவில்லை.



    நீரிழிவு புற நோயாளிகள் பிரிவு, ரத்த அழுத்தம், தோல் சிகிச்சை, கதிர்வீச்சு, நரம்பியல், கல்லீரல், இருதயம் உள்ளிட்ட அனைத்து புறநோயாளிகள் பிரிவிலும் நோயாளிகள் சிகிச்சைக்காக வரிசையில் காத்து நின்றனர்.

    டாக்டர்கள் சிகிச்சை வராததால் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள். உதவி மருத்துவர்கள் மட்டுமின்றி முதுகலை பட்டதாரி மாணவர்கள், உதவி பேராசிரியர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் புறநோயாளிகள் பிரிவு முடங்கியது. காலை 8 மணி முதல் 12 மணி வரை புறநோயாளிகள் பிரிவுகள் வழக்கமாக செயல்படும்.

    சென்னையில் பல்வேறு பகுதிகளில் இருந்து நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து காத்து நின்றனர். டாக்டர்கள் வராததால் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    நெல்லை மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 350 டாக்டர்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் 400 டாக்டர்கள் என 750 டாக்டர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டம் தள்ளி வைக்கப்பட்டதால், அரசு டாக்டர்களும் தங்கள் வேலை நிறுத்தத்தை தள்ளி வைப்பதாக அறிவித்தனர். இதைத் தொடர்ந்து டாக்டர்கள் பணிக்கு வந்தனர்.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் 600-க்கும் மேற்பட்ட அரசு டாக்டர்கள் காலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். பின்னர் அவர்கள் பணிக்கு சென்றனர். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புற நோயாளிகள் உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப் பட்டார்கள். பலர் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக சென்றனர்.

    கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, விருத்தாசலம், வேப்பூர் உள்பட 10 அரசு ஆஸ்பத்திரிகள், 70 ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 5 இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் டாக்டர்கள் இன்று புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். #DoctorsStrike

    ×