என் மலர்tooltip icon

    விருதுநகர்

    உக்ரைன் நாட்டின் பதுங்கு குழியில் தவிக்கும் மாணவர்களை மீட்டு தரக்கோரி விருதுநகர் மாவட்ட கலெக்டர் மற்றும் மத்திய-மாநில அரசு அதிகாரிகளுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
    ராஜபாளையம்:

    ராஜபாளையம் தென்றல் நகரை சேர்ந்த பால்சாமி- சவுந்தரலதா ஆகியோரது மகன் பெருமாவளவன். இவரது நண்பர்கள் உக்ரைன் நாட்டில் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்ததால் இவரும் அவர்களுடன் சேர்ந்து படித்து வருகிறார்.

    தற்போது உக்ரைனில் ரஷிய படை தாக்குதல் நடத்தி வருகிறது. பெருமாவளவனுடன் ராஜபாளையம் பகுதியில் உள்ள இடையன்குளம், வத்திராயிருப்பு மற்றும் திருச்சி, பெரம்பலூரை சேர்ந்த மாணவ-மாணவிகள் சுரங்க பாதைகளில் பதுங்கி உள்ளனர்.

    அவர்கள் பெற்றோருடன் தொலைபேசியில் பேசிய போது கண்ணீருடனும், நடுக்கத்துடனும் தொடர் குண்டு மழை பொழியும் எல்லை பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.

    அவர்களை மீட்டு தரக்கோரி விருதுநகர் மாவட்ட கலெக்டர் மற்றும் மத்திய-மாநில அரசு அதிகாரிகளுக்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மாணவர் பெருமாவளவன் ஊர் திரும்பும் நாளை எதிர்பார்த்து கவலையுடன் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காத்திருக்கின்றனர். 

    அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான கவுன்சிலர்களும் மாயமாகி உள்ளனர். மாவட்ட தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் சென்றார்களா? என்பது தெரிய வில்லை.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல், சிவகாசி நகராட்சிகள் இணைக்கப்பட்டு 48 வார்டுகளுடன் சிவகாசி மாநகராட்சி உருவானது. இந்த மாநகராட்சி முதன் முறையாக தற்போது தேர்தலை சந்தித்தது.

    இங்கு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. 24 வார்டுகளில் வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியது. அ.தி.மு.க. 11 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 2-ந்தேதி பதவி ஏற்க உள்ளனர். 4-ந்தேதி மேயர், துணை மேயர் மறைமுக தேர்தல் நடக்கிறது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற 11 பேரில் 30-வது வார்டு உறுப்பினர் கரை முருகன் தவிர மற்ற 10 பேரும் திடீரென மாயமாகி விட்டனர். அவர்கள் எங்கு சென்றார்கள்? என்பது மர்மமாக உள்ளது.

    இதுபற்றி விசாரித்ததில் கும்பகோணம், திருநள்ளாறு உள்ளிட்ட பகுதி கோவில்களுக்கு வழிபட சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் ஒட்டுமொத்தமாக சென்று ஏன்? என்பது தெரிய வில்லை.

    மாவட்ட அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான கவுன்சிலர்களும் மாயமாகி உள்ளனர். மாவட்ட தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் சென்றார்களா? என்பது தெரிய வில்லை.

    இதையும் படியுங்கள்... ஹங்கேரியில் இருந்து 240 இந்தியர்களுடன் புறப்பட்ட 3வது விமானம் டெல்லி வந்தடைந்தது

    சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல கட்டுப்பாடுகளுடன் 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு  மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்திபெற்ற சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோவில் உள்ளது. மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் திரளான பக்தர்கள் வருகை தருவார்கள். 

    வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் மலைக்கு செல்ல மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரி தினத்தன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதன்படி இந்த ஆண்டு வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மகா சிவராத்திரி வருகிறது. இதையொட்டி சதுரகிரி கோவிலுக்கு திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே மகா சிவராத்திரி, பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 3-ந்தேதி (வியாழக்கிழமை) வரை சதுரகிரிக்கு செல்ல கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மேற்கண்ட நாட்களில் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற வேண்டும். பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்க அனுமதி இல்லை. மலையேறும் பக்தர்கள் அங்குள்ள நீரோடைகளில் குளிக்கக்கூடாது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

    சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என்ற காரணத்தால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலை அடிவாரம் மற்றும் கோவில் பகுதியில் செய்யப்பட்டுள்ளது.

    சிவராத்திரி தினமான 1ந்தேதி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு விடிய விடிய இரவு முழுவதும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
    விருதுநகரில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டத்தில் கஞ்சா  விற்பனை கொடிகட்டி  பறக்கிறது. இதனிடையே ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. சபரிநாதன் உத்தரவின் பெயரில் கஞ்சா வைத்திருப்பவர்கள், புகையிலை வைத்திருப்பவர்கள் ஆகியோரை கண்காணிக்க போலீசில் தனி குழு அமைக்கப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்த நிலையில் இன்று காலை வன்னியம்பட்டி பேச்சியம்மாள் என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் சோதனை செய்ததில் பேச்சியம்மாள் வீட்டில் இருந்த அவரது மருமகன் சேதுபதிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து,   ரூ. 4,680ஐ பறிமுதல் செய்தனர். 

    இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சேதுபதியை கைது செய்தனர்.

    சிவகாசி  அய்யனார் காலனியை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 44). இவர் கஞ்சா விற்பனை செய்வதாக நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தி அங்கிருந்த 1 கிலோ 100 கிராம் கஞ்சா, மோட்டார் சைக்கிள், ரொக்கம் ரூ. 22 ஆயிரத்து 500, 2 செல்போன்கள், எடை அளவு எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து சுப்புராஜை கைது செய்தனர்.
    விருதுநகரில் வங்கி ஊழியர்கள் போல் பேசி ரூ.4 லட்சம் மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருதுநகர் 

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் அன்புராஜ் (46). இவருக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் கணக்கு உள்ளது. சம்பவத்தன்று வங்கி சேவை குறித்த குறைகளை தெரிவிக்க சேவை மையத்திற்கு தொலைபேசி மூலம் அன்புராஜ் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் முடியவில்லை. 

    இந்த நிலையில் அவரது செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர்கள் தாங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சேவை மையத்தில் இருந்து பேசுவதாக கூறி அன்புராஜ் வங்கி கணக்கின் முழு விவரத்தையும் கேட்டுள்ளனர்.

    இதனை நம்பி அவரும் தனது வங்கி விபரத்தை அந்த நபர்களுக்கு தெரிவித்துள்ளார் இந்த நிலையில் அவரது வங்கி கணக்கில் இருந்து பல தவணைகளில் ரூ. 3 லட்சத்து 81 ஆயிரத்தை மர்ம நபர்கள் எடுத்துள்ளனர். 

    இதனால் அதிர்ச்சி அடைந்த அன்புராஜ் மோசடி குறித்து விருதுநகர் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அருப்புக்கோட்டையில் வங்கி மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருதுநகர்

    அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தை சேர்ந்தவர் மதுக்கரா (39). இவர் அங்குள்ள அரசு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். 

    சம்பவத்தன்று வங்கி அருகிலுள்ள ஏ.டி.எம். மீது மர்ம நபர் கல்வீசி தாக்கினார். இதை வங்கி மேலாளர் மதுக்கரா தட்டிகேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் வங்கி மேலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். 

    இதுகுறித்த புகாரின்பேரில் அருப்புகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏ.டி.எம். மீது கல் வீசி கொலை மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகின்றனர்.
    சிவகாசியில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவர் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    சிவகாசியில் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வைத்திருப்பவர்கள் மீது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    அதன்படி ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள கூரார்பட்டி  அசைபா காலனியை சேர்ந்த காளிராஜ் (56) என்பவர் தடை செய்யப்பட்ட பேன்சிரக பட்டாசுகளை வைத்திருந்ததாக ஏழாயிரம்பண்ணை போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 16 பேன்சிரக பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் தொழிலாளிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் சண்முகையா என்பவர் ரோல்கேப் தயாரிக்கும் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார். இங்கு ஆலமரத்துபட்டியை சேர்ந்த ராஜா (வயது 37) என்பவர் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை இவர் மட்டும் தனியறையில் பாம்பு மாத்திரை தயாரிப்பதற்காக மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென உராய்வு ஏற்பட்டு மருந்து தீ பிடித்தது. இதை சற்றும் எதிர்பாராத ராஜா தீ விபத்தில் சிக்கி பலத்த தீக்காயமடைந்தார்.

    உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 60 சதவீத தீக்காயங்களுடன் அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மகா சிவராத்திரி, பிரதோ‌ஷம், அமாவாசையை முன்னிட்டு வருகிற 28ம் தேதி (திங்கட்கிழமை) முதல் 3-ந் தேதி (வியாழக்கிழமை) வரை சதுரகிரிக்கு செல்ல கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்திபெற்ற சுந்தர- சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. மலை உச்சியில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பிரதோ‌ஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் திரளான பக்தர்கள் வருகை தருவார்கள். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் பக்தர்கள் மலைக்கு செல்ல மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு வருடமும் வரும் மகா சிவராத்திரி தினத்தன்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதன்படி இந்த ஆண்டு வருகிற 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மகா சிவராத்திரி வருகிறது. இதையொட்டி சதுரகிரி கோவிலுக்கு திரளான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே மகா சிவராத்திரி, பிரதோ‌ஷம், அமாவாசையை முன்னிட்டு வருகிற 28ம் தேதி (திங்கட்கிழமை) முதல் 3-ந் தேதி (வியாழக்கிழமை) வரை சதுரகிரிக்கு செல்ல கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மேற்கண்ட நாட்களில் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற வேண்டும். பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்க அனுமதி இல்லை. மலையேறும் பக்தர்கள் அங்குள்ள நீரோடைகளில் குளிக்க கூடாது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல கூடாது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அதிகமாக வருவார்கள் என்ற காரணத்தால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் மலை அடிவாரம் மற்றும் கோவில் பகுதியில் செய்யப்பட்டுள்ளது.

    சிவராத்திரி தினமான 1-ம் தேதி அன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு விடிய விடிய இரவு முழுவதும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிக்கலாம்....திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து
    பட்டாசு கடைக்குள் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்ற சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் போதை பொருள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    விருதுநகர்-சிவகாசி சாலையில் ஆமத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் தனியார் கல்லூரி அருகே நின்றபோது வேகமாக ஒரு கார் வந்தது. போலீசார் அந்த காரை தடுத்து நிறுத்தினர்.

    காருக்குள் 2 வாலிபர்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன கொண்டு செல்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். ஆனால் 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காருக்குள் 5 பாக்கெட்டுகள் இருந்தன. அதனை பிரித்து பார்த்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை காருடன் பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த 2 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர்.

    அப்போது ஆமத்தூர் அருகே உள்ள கவலூர் கிராமத்தில் ஒரு பட்டாசு கடையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அவர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். பட்டாசு கடைக்குள் 89 பாக்கெட்டுகளில் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றையும் போலீசார் கைப்பற்றினர். மொத்தத்தில் 204 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி காரில் வந்த 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்களது பெயர் சிவசாமி (வயது 32), சதீஷ்பாண்டி (22) என்பதும், இவர்கள் மதுரையை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. 2 பேரும் திருத்தங்கல்லை சேர்ந்த ஜோதிராஜா என்பவருடைய பட்டாசு கடையை லீசுக்கு எடுத்து அங்கு கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்து வந்துள்ளனர்.

    கைதான 2 பேரும் மதுரைக்கு கடத்தி சென்று கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாரிடம் தெரிவித்தனர். ஆனால் கவலூரில் இருந்து விருதுநகர் வழியாக நேரடியாக மதுரை செல்லாமல் இவர்கள் கிராம பகுதி வழியாக சுற்றி செல்வதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    பட்டாசு கடையில் பதுக்கி வைத்து 2 கிலோ பாக்கெட்டுகளாக கஞ்சா இவர்கள் கொண்டு வருவதால் பல்வேறு பகுதிகளுக்கும் அதனை சப்ளை செய்து வருகிறார்களா? அல்லது போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க நேர் வழியில் செல்லாமல் கிராமங்கள் வழியாக செல்கின்றனரா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
    வத்திராயிருப்பு:

    மாசி பிரதோஷம் மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல, வருகிற 28-ந் தேதி முதல் மார்ச் 3-ந் தேதி வரை 4 நாட்களுக்கு கோவில் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

    மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்த நாட்களில் பக்தர்கள் காலை 7 மணி முதல் காலை 10 மணிவரை மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிவராத்திரி அன்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு விடிய, விடிய இரவு முழுவதும் 4 கால சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. 

    எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப் பட்டுள்ளது.பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கும் கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

    மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  அரசின் விதி முறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்று  விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.
    விருதுநகரில் லாரி நிறுவனத்தில் வாகனம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
    விருதுநகர்

    திருத்தங்கல் தனியார் லாரி நிறுவனத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரூ.4 லட்சம் மதிப்பிலான சரக்கு வேன் திருட்டு போனது. இது குறித்து நிறுவன மேலாளர் ரவிச்சந்திரன் போலீசில் புகார் செய்தார்.

     சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வாகனத்தை திருடியதாக சிவகாசியைச் சேர்ந்த வேல்முருகன்(வயது23) என்பவரை கைது செய்தனர்.

    ஒட்டப்பிடாரம் தாலுகா சின்னான்குளத்தை சேர்ந்த லட்சுமியம்மாள்(80) பஸ்சில் சாத்தூர் வந்தார். வெங்கடாசலபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கியபோது பின்னால் இறங்கிய பெண், லட்சுமியம்மாளின் கைப்பையை பறித்துசென்றார். அவரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து சாத்தூர் போலீசில் ஒப்படைத்தனர். 

    விசாரணையில் அவரது பெயர் அன்னமாரி(88) என தெரியவந்தது. சிவகாசி ஆனையூரை சேர்ந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

    ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள அச்சங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் வினோத் குமார்(30). இவர் சாக்கு பையில் 2 கிலோ வெடி பொருட்கள் வைத்திருந்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதேபோல் விளாம்பட்டியை சேர்ந்த கண்ணன்(32) 10 குரோஸ் கருந்திரியை வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். வெம்பக்கோட்டை போலீசார் ரோந்து சென்றபோது 10 கிலோ வெடி பொருட்கள் மற்றும் 20 பண்டல் சரவெடி வைத்திருந்ததாக சீவலராஜ் பாண்டியன்(45) என்பவரை கைது செய்தனர்.
    ×