search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனம் திருட்டு"

    • இரவு இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டு தூங்கினார்.
    • காலையில் எழுந்து பார்ததால் வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினம் அருகே உள்ள மோட்டுகொள்ள கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர் (வயது 28). இவர் இரவு இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்னால் நிறுத்திவிட்டு தூங்கினார். காலையில் எழுந்து பார்ததால் வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து காவேரிபட்டினம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு நண்பர்களோடு பேசியவாறு நடைபயிற்சி மேற்கொண்டார்.
    • 2 பேரையும் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் மோட்டார் சைக்கிளுடன் ஒப்படைத்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் கிளிஞ்சல்மேடு சுனாமி குடியிருப்பைச்சேர்ந்தவர் மாதவன். மீன்பிடி தொழில் செய்துவருகிறார். இவர் காரைக்கால் கடற்கரையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே, ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் சைக்கிளை நிறுத்தி பூட்டிவிட்டு நண்பர்களோடு பேசியவாறு நடைபயிற்சி மேற்கொண்டார். ஒரு மணி நேரம் கழித்து மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தபோது, மோட்டார் சைக்கிள் பூட்டை உடைத்து, 3 நபர்கள் சாலையில் தள்ளிகொண்டு சென்றதை பார்த்து, நண்பர்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளை தள்ளிகொண்டு சென்ற 2 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பியோடி விட்டார். 

    தொடர்ந்து, பிடிபட்ட 2 பேரையும் காரைக்கால் நகர காவல்நிலையத்தில் மோட்டார் சைக்கிளுடன் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் மோகன், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, ராஜகண்பாதி, சார்லஸ் மற்றும் போலீசார் 2 பேரையும் விசாரித்தபோது, திருவாரூர் அண்ணாநகர் பின்னவாசலைச்சேர்ந்த சதீஷ்(வயது18) அவருடைய நண்பர் திருவாரூர் தாமரைக்குளம் தெருவைச்சேர்ந்த 17 வயது இளைஞர் என்பதும் தெரியவந்தது. பின்னர் இருவரையும் கைது செய்து, இருவரும் ஏற்கெனவே திருடிய ஒரு மோட்டார் சைக்கிளுடன் 2 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மற்றொருவரை போலீசார் தேடிவருகின்றனர்.

    • பளுகல் அருகே உள்ள மேல்பாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயசுந்தர் லால், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாக னத்தை தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி :

    பளுகல் அருகே உள்ள மேல்பாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயசுந்தர் லால், ரப்பர் பால் வெட்டும் தொழிலாளி. இவர் தனது இரு சக்கர வாகனத்தை பூவன்கோடு பகுதியில் நிறுத்தி விட்டு பால் வெட்ட சென்றுள்ளார்.

    வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்த போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை. இது குறித்து பளுகல்போலீஸ் நிலையத்தில் ஜெயசுந்தர் லால் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாக னத்தை தேடி வருகின்றனர்.

    ×