என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர் சங்க கருத்தரங்கு நடந்தது.
    • உதவிப்பேராசிரியர் சாந்தி நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் இளைஞர் மன்றம் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர் சங்கம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

    இதில் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியை அர்ச்சனாதேவி பங்கேற்று ''விடாமுயற்சி-வெற்றியின் திறவுகோல்'' என்ற தலைப்பில் பேசினார். மாணவர்கள் தமக்குள்ள திறமைகளைப் பயனுள்ள வகையில் வெளிகொணருவதற்கான வழிமுறைகளைத் எடுத்துரைத்தார்.

    இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் 40 மாணவர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் மன்ற அமைப்பாளர் விஜயலட்சுமி, மாற்றுத்திறனாளி மாணவர் சங்க அமைப்பாளர் மதுமதி ஆகியோர் செய்திருந்தனர்.

    2-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர் அருண் பாண்டியன் வரவேற்றார். 3-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர் ஜெயக்குமார் நன்றியு கூறினார்.

    சிறப்பு ெசாற்பொழிவு

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறை இலக்கிய மன்றம் சார்பில் சிறப்புச்சொற்பொழிவு நடந்தது. இதில் விருந்தினராக விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி உதவிப்பேராசிரியர் கயல்விழி பங்கேற்று ''நிகழ்நிலை நெறி முறைகளுக்கான வழிகாட்டுதல்'' என்ற தலைப்பில் பேசினார்.

    அவர் பேசுகையில், மாணவர்கள் நிகழ்நிலை தளங்களை பயனள்ள முறையில் பயன்படுத்துவதற்கான நெறிமுறைகளை செயல்பாடுகளின் மூலம் எடுத்துரைத்தார். முன்னதாக உதவிப்பேராசிரியர் அர்ச்சனாதேவி, வரவேற்றார்.

    துறைத் தலைவர் பெமினா தொடக்கவுரை ஆற்றினார். உதவிப்பேராசிரியர் சாந்தா கிறிஸ்டினா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். உதவிப்பேராசிரியர் சாந்தி நன்றி கூறினார்.

    • மாணவ-மாணவிகளின் அறிவுபூர்வ கல்வியை பெருக்குவதற்காக தான் மடிக்கணினி திட்டம் தொடங்கப்பட்டது.
    • திட்டத்தை நிறுத்துவது தான் திராவிட மாடலா? என்பதை மு.க.ஸ்டாலின் எண்ணி பார்க்க வேண்டும்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் 32 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே இயக்கம் அ.தி.மு.க. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தொடங்கி, புரட்சிதலைவி அம்மா சிறப்பான ஆட்சியை தந்தார். அம்மா மறைவிற்கு பிறகு நான் முதல்வராகி சிறப்பான ஆட்சி தந்தேன். அந்த வகையில் அதிக நாட்கள் ஆட்சி செய்த இயக்கம் அ.தி.மு.க..

    அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் ஏற்றம் பெற்றது. முதன்மை மாநிலமாக தமிழகம் மாறியதற்கு அடித்தளமிட்டது அ.தி.மு.க. அரசு தான். இன்றைக்கு மு.க.ஸ்டாலின் திராவிட மாடல், திராவிட மாடல் என்று மூச்சுக்கு 300 தடவை சொல்கிறார். அப்படி என்ன திராவிட மாடல் கொண்டு வந்து விட்டார்.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்து 16 மாதமாகிறது. அப்படி என்ன செய்து விட்டார்கள்? தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சியில் ஒரே நேரத்தில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம். பிள்ளையார் சுழி போட்டது போல விருதுநகரில் முதல் மருத்துவ கல்லூரி அமைந்தது. அதன் ராசி அடுத்தடுத்து மருத்துவ கல்லூரி கொண்டு வரப்பட்டது.

    அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் மருத்துவ கல்லூரி அமைய அடிக்கடி என்னை சந்தித்து வலியுறுத்தினார். அதன் பயனாக விருதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் பிரம்மாண்டமான மருத்துவ கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது.

    சென்னையில் தனியார் மருத்துவமனையில் கிடைக்கும் சிகிச்சை விருதுநகரில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்தது அ.தி.மு.க. அரசு. 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    நாங்கள் பெற்ற பிள்ளைக்கு யாரோ பெயர் வைப்பது போல அ.தி.மு.க. ஆட்சியில் தி.மு.க. அரசு தொடங்கி வைத்து வருகிறது. 7 சட்டக்கல்லூரிகள், கால்நடை மருத்துவமனை, ஆராய்ச்சி நிலையங்கள் கொண்டு வந்தோம். 76 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கொண்டு வந்தோம். பள்ளிகளை தரம் உயர்த்தி அதிக மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்கும் சூழ்நிலையை ஏற்படுத்தினோம்.

    ஒரு நாடு கல்வியில் சிறந்து விளங்கினால் தான் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க முடியும். அதிலும் ஏழை மக்களுக்கு கல்வி வசதிகளை ஏற்படுத்தி தந்த அரசு அம்மா அரசு. அதனால் தான் உயர் கல்வியில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. இந்த சாதனைக்களுக்கெல்லாம் சொந்தம் கொண்டாட வேண்டியது அ.தி.மு.க. அரசு தான்.

    மாணவர்களுக்கு சீருடை, பாடபுத்தகம், மடிக்கணினி உள்ளிட்ட கல்வி உபகரணங்களை தந்தது அ.தி.மு.க. அரசு. யாராலும் கொடுக்க முடியாதததை மாணவர்களுக்கு கொடுத்தது அம்மா அரசு. ஆனால் தி.மு.க. அரசால் இந்த திட்டத்தை நிறுத்த தான் முடிந்தது.

    தமிழகத்தில் ரூ.52 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி அவர்களது வீடுகளில் விளக்கேற்றியது அ.தி.மு.க. அரசு. அந்த திட்டத்தையும் தி.மு.க. அரசு தற்போது நிறுத்திவிட்டது. அதை நினைத்தால் வேதனையாக உள்ளது.

    மாணவ-மாணவிகளின் அறிவுபூர்வ கல்வியை பெருக்குவதற்காக தான் மடிக்கணினி திட்டம் தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தை நிறுத்துவது தான் திராவிட மாடலா? என்பதை மு.க.ஸ்டாலின் எண்ணி பார்க்க வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சியுடன் ஒப்பிடுகையில் கடந்த 1½ ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் மளிகை பொருட்களின் விலை 30 சதவீதம் உயர்ந்துள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல்வேறு வாக்குறுதிககளை அளித்தனர். ஆனால் அவர்கள் அதனை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டனர்.

    பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்றார்கள். ஆனால் டீசல் விலையை குறைக்கவில்லை. டீசல் விலை உயர்ந்தால் அனைத்து பொருட்ளின் விலையும் உயர்ந்துவிடும். இதுபோல் அவர்கள் அறிவித்த எந்த அறிவிப்பையும் நிறைவேற்றவில்லை.

    நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் படித்த இளைஞர்கள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வாங்கிய கல்விக்கடனை ரத்து செய்வோம் என்றனர். ஆனால் அதனை செய்யவில்லை. கிராமப்புறங்களில் 100 நாள் வேலை திட்ட பணி நாட்களை 150 ஆக உயர்த்துவோம் என்றனர்.

    மேலும் 100 நாள்வேலை திட்ட தொழிலாளர்கள் ஊதியத்தை உயர்த்துவோம் என்றனர். ஆனால் எதையும் செய்யாமல் ஏழைகளை தி.மு.க. அரசு ஏமாற்றிவிட்டது.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவித்ததும் மாநில அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியில் நடந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் அவ்வாறு நடக்கவில்லை.

    தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கொடுக்க வேண்டிய அகவிலைப்படி உயர்வை அரசு ஊழியர்களுக்கு வழங்காத தி.மு.க. அரசு இந்த அகவிலைப்படி உயர்வை எப்படி வழங்கப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

    படித்தவர்கள், படிக்காதவர்களை ஏமாற்றிய ஒரே அரசு தி.மு.க. அரசு. அதில் கைதேர்ந்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    • ராஜபாளையம் சஞ்சீவி மலையில் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
    • இத்தகைய பாரம்பரியமிக்க வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகரில் பிரதானமாக அமைந்துள்ள சஞ்சீவி மலை பல்வேறு புராண கதைகளோடு இணைத்து செவிவழி கதையாக கூறப்படுகிறது. ராஜபாளையம் இயற்கை ஆர்வல ர்களான வெங்க டேஷ், பிரகாஷ்குமார் ஆகியோர் சஞ்சீவி மலையில் அமைந்துள்ள பாறை ஓவியங்கள் குறித்து தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப்பேராசிரியரும், தொல்லியல் ஆர்வலருமான கந்தசாமி தலைமையில் களப்பணி மேற்கொள்ளப்பட்டது.

    இதுகுறித்து பேராசிரியர் கந்தசாமி கூறியதாவது:-

    ராஜபாளையம் நகரின் பிரதானமாக அமைந்துள்ள சஞ்சீவி மலையில் பல மூலிகைகள் நிறைந்த பகுதியாகவும், புராண காலத்தோடு இணைத்து பெருமையுடன் கூறப்பட்டு வருகிறது. மலை உச்சியில் சஞ்சீவிநாதர் மற்றும் முருகன் ஆலயம் அமைந்துள்ளது. ஆரம்ப காலகட்டத்தில் மழை பெய்ய ஊர் மக்கள் ஒன்று கூடி சஞ்சீவி மலைக்குச் சென்று மழை பெய்வதற்காக கடவுளைக் வேண்டிக்கொண்டு மேளதா ளத்துடன் ஆரவாரமாக பூஜை செய்து ஒரு கல்லை கீழே உருட்டி விடுவார்கள்.

    பலமுறை அன்று இரவே மழை பெய்ததாகவும் கதைகள் கூறுகின்றன. சஞ்சீவி மலையில் தேன் தட்டுப்பாறையின் அடிவாரத்தில் காணப்படும் பாறை ஓவியங்கள் வெண்சாந்து கொண்டு வரையப்பட்டுள்ளன. பாறை ஓவியத்தில் ஆயுதங்களோடு மனிதன் நிற்பது போன்றும், காட்டெருமை மீது ஒரு மனிதன் அமர்ந்திருப்பது போன்று காணப்படுகிறது. 2, 3 பேருக்கு மேல் குழுவாக நடன காட்சிகள் போன்றும் வரையப்பட்டுள்ளது. மேடையின் மீது அமர்ந்த ஒருவருக்கு நீண்ட உயரமான குடை போன்ற அமைப்புடன் வரையப்பட்டுள்ளது. படங்கள் தெளிவில்லாமல் முழுமை அடையாததால் ஆரம்ப காலத்தில் வரையப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    விலங்குகள் மற்றும் மனிதர்கள் கோட்டு ருவங்களாக வரைய ப்பட்டுள்ளன. இங்கு காணப்படும் பாறை ஓவியங்களில் விலங்குகள் அதிகமாக வரையப்பட்டுள்ளது. அத்துடன் மனிதனின் சண்டை காட்சிகள் குறைவாக வரையப்பட்டுள்ளன. எனவே விலங்குகள் அதிகமாக வரையப்ப ட்டுள்ளதால் தொடக்க காலகட்டமாகும். மனிதனின் சண்டைக் காட்சிகள் அடுத்தடுத்த காலகட்டங்களில் வரைய ப்பட்டிருக்க வேண்டும். பல காலகட்டங்களாக இப்பாறை ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவற்றில் முக்கோண அமைப்புகள், குறியீடுகள் மற்றும் பல சின்னங்கள் காணப்படுகின்றன. இவற்றில் குறியீட்டு உருவங்களை முழுமையாக கணிக்க இயலவில்லை. நீண்ட நெடிய பாறை முழுவதும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பல இடங்களில் அழிந்து காணப்படுகிறது.

    எனவே இந்த வெண்சாந்து பாறை ஓவிய அமைப்பை உற்று நோக்கும் போது காலத்தால் சற்று முற்பட்டதாக தெரிகிறது. தமிழகத்தில் பல இடங்களில் வெண்சாந்து ஓவியங்கள் பெருங்கற்காலத்தில் வரையப்பட்டுள்ளது. எனவே இந்த பாறை ஓவியங்கள் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்ப ட்டதாக கருதப்படுகிறது. ஆரம்ப காலகட்டங்களில் செஞ்சாந்து ஓவியங்கள் வரைந்து அதற்கு மேல் வெண்சாந்து ஓவியங்கள் தீட்டப்பட்டு இருக்கிறது.

    இப்பாறை ஓவிய ங்கள் எழுத்துக்கள் தோன்றுவதற்கு முன் ஓவிய எழுத்துக்களாக வரையறுக்கப்படுகிறது. தமிழகத்தின் பல இடங்களில் அமைந்துள்ள பாறை ஓவியங்கள் பெரும்பாலும் வழிபாட்டுத் தலங்களாக இருந்து வருகிறது ஏனெனில் வரையப்பட்டுள்ள மனிதர்களை மூதாதையர் வழிபாடாக மக்கள் இன்றளவும் பல்வேறு மலைகளில் வணங்கி வருகிறார்கள். சஞ்சீவி மலை தெற்கு மலையடிப்பட்டி பகுதியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளனர். சஞ்சீவி மலை பாறை ஓவியங்கள் பெருங்கற்கால பண்பாட்டோடு தொடர்பு டையதாக கருதப்படுகிறது.

    முருகன் கோவில் அருகே உள்ள பாறையில் அலங்காரத்துடன் விஷ்ணுவின் முழு கோட்டு ருவம் மிக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே பாறை ஒன்றில் சூரிய வட்டம் ஒன்று பெண் உருவில் செதுக்கப்பட்டுள்ளது. சஞ்சீவி மலையில் அமைந்துள்ள இப்பாறை ஓவியத்தை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து ஓவியத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்.

    பரந்துபட்ட இந்த மலையில் மேலும் பல தொல்லியல் தடயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இத்தகைய பாரம்பரியமிக்க வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருச்சி பாலபாரதி, பாலமுரளி ஆகியோரும் பாறை ஓவியத்தை ஆய்வு செய்தனர்.

    • அ.தி.மு.க. சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.
    • இதற்காக பிரமாண்ட முறையில் மேடை அமைக்கும் பணிகள் ஒரு வாரத்துக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

    சிவகாசி

    விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் தி.மு.க. அரசை கண்டித்தும் நாளை (29-ந்தேதி) காலை 9 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அண்ணாமலையார்நகர் அம்மா திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.

    இதில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக பிரமாண்ட முறையில் மேடை அமைக்கும் பணிகள் ஒரு வாரத்துக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

    மேடை அமைக்கும் பணிகளை இரவு-பகலாக முன்னாள் அமைச்சர்- விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். பொதுக்கூட்டம் நடைபெறும் நேரம் காலை வேளை என்பதால் வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும் பொதுமக்கள், நிர்வாகிகள் பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் கூலிங் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    500-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், தொண்டர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சிறப்பாக செய்திருக்கிறது.

    முன்னதாக நாளை காலை வரும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விருதுநகர் மாவட்ட எல்லையில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் பிரமாண்டமான முறையில் வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ மேடையில் வந்து எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

    பொதுக்கூட்ட ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்-முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி செய்து வருகிறார்.            

    • விருதுநகர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு பணிகள் குறித்து மத்திய அரசு அதிகாரி ஆய்வு கூட்டம் நடந்தது.
    • இதில் செயற்பொறியாளர் சக்திமுருகன், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டுரங்கன், சிவகாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில், மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி, பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலர் ஜெயா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    இதில் மழைநீர் சேகரிப்பு திட்டம் தொடர்பாக ஜல் சக்தி அபியான், ஜல் சக்தி கேந்திரா மற்றும் மழை நீரை சேகரிக்க நடைபெற்ற பணிகள், நடைபெற்று வரும் பணிகள் தொடர்பான விளக்கக் காட்சி மூலம் எடுத்துரைக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து, அலுவலர்களுடன் இணைந்து, அருப்புக்கோட்டை, காரியாபட்டி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் மழைநீர் சேகரிப்பு பணிகளான தடுப்பணை கட்டும் பணிகள், குடிமராமத்து செய்யப்பட்ட ஊரணிகள், மழை நீரை உறிஞ்சும் அகழிகள், நீரினை மறுசுழற்சி செய்யும் வடிவமைப்புகள் ஆகியவற்றை மாவட்ட மத்திய அரசின் பொறுப்பு அதிகாரி, பழங்குடியினர் நலத்துறை கூடுதல் செயலர் ஜெயா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த நிகழ்வுகளின் போது ஜல் சக்தி அபியான் திட்டத்தின் தொழில்நுட்ப அலுவலர் ஜமீர் பகவான், செயற்பொறியாளர் சக்திமுருகன், உதவி செயற்பொறியாளர்கள் பாண்டுரங்கன், சிவகாமி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி மீனா.
    • சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த 2 பேரை தேடி வருகிறார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    சென்னை அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மனைவி மீனா. இவர் அடிக்கடி தேனியில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலுக்கு வந்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சிவகிரியை சேர்ந்த செல்வகிருஷ்ணன் என்பவருக்கும், மீனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

    செல்வகிருஷ்ணனை அப்பா என்று அழைத்து வந்த மீனா அடிக்கடி அவரிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த வாரம் செல்வகிருஷ்ணன் மீனாவிடம் பேசும்போது, ரூ.16 லட்சம் கொடுத்தால் உடனே ரூ.22 லட்சம் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறியதால் இதனை நம்பிய மீனா சென்னையில் ரூ.5 லட்சம் கடன் வாங்கி கொண்டு தனது நகைகளை அடகு வைத்தும் மொத்தம் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் திரட்டியுள்ளார்.

    பின்னர் அந்த பணத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த மீனா செல்வகிருஷ்ணன் கூறியபடி ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் வைத்து தென்காசி மாவட்டம் புதூர் செந்தட்டியா புரத்தை சேர்ந்த பால்துரை என்பவரிடம் ரூ.10 லட்சத்து 56 ஆயிரத்தை கொடுத்துள்ளார்.

    பணத்தை பெற்று கொண்ட பால்துரை புரோநோட்டில் மீனாவிடம் கையெழுத்து பெற்றதாக தெரிகிறது. பின்னர் ஒரு நபரை சந்தித்து வருகிறேன் என்று கூறிவிட்டு சென்ற பால்துரை நீண்ட நேரமாகியும் வரவில்லை. அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த மீனா செல்போனில் செல்வகிருஷ்ணனை தொடர்பு கொள்ள முயன்றார். அவரது செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. 2 பேரும் சேர்ந்து தன்னை ஏமாற்றியதை உணர்ந்த மீனா இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் அழகர்சாமி வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த 2 பேரை தேடி வருகிறார்.

    • முப்பெரும் விழா நடந்தது.
    • செயலாளர் அந்தோணிராஜ் நன்றி கூறினார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பழையபாளையம் இல்லத்துப் பிள்ளைமார் சமூகம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. பழையபாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூக தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். இளைஞர் சங்க தலைவர் விக்னேஷ்திருமால் வரவேற்றார். ராஜபாளையம் நகர்மன்ற தலைவர் பவித்ராஷியாம்ராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஸ்ரீமன் நாராயணகுரு நூலகம், மற்றும் டிஜிட்டல் தனிப்பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து பேசினார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கும், எல்.கே.ஜி. முதல் கல்லூரி வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கான 2022, 23 ஆகிய 2ஆண்டுகளுக்கான ஊக்கத்தொகை மற்றும் கல்வி நிதி நிர்வாகிகள் சார்பில் வழங்கப்பட்டது.

    விழாவில் இல்லத்து பிள்ளைமார் பொதுநல பண்டு தலைவர் காளிமுத்து, பழையபாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூக துணை தலைவர் சரவணகண்ணன், பொருளாளர் ஆறுமுகம் என்ற துரைராஜ்,முன்னாள் செயலாளர் கணேசன், உப செயலாளர்கள் ராஜா, அய்யனார், நகர் மன்ற உறுப்பினர் ஷாலினி சரவண கண்ணன் உட்பட பலர் பேசினர். விழாவில் பழையபாளையம் இல்லத்து பிள்ளைமார் சமூக நிர்வாக குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். செயலாளர் அந்தோணிராஜ் நன்றி கூறினார்.

    • அ.திமு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும் படிக்கட்டாக அமையும் என்று கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.
    • திருத்தங்கல் அண்ணாமலையார் நகரில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது.

    சிவகாசி

    விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும் தி.மு.க. அரசை கண்டித்தும் வருகிற 29-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் அண்ணாமலையார் நகரில் கண்டன பொதுக்கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து சிவகாசியில் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் நகர செயலாளர் அசன்பதுருதீன் தலைமையில் நடந்தது. சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது:-

    தி.மு.க. அரசை கண்டித்து சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அண்ணாமலையார் நகரில் நடைபெறும் மாபெரும் கண்டன பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

    அ.தி.மு.க. ஆட்சியை இழக்கவில்லை. ஆட்சி பறிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு காரணம் எப்போதெல்லாம் அ.தி.மு.க.வில் பிரச்சினை நிலவுகிறதோ அப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வந்து விடுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சிவகாசியில் தீப்பெட்டி, பட்டாசு, அச்சு தொழிலுக்கு பாதுகாவலனாக இருந்துள்ளேன். எல்லா தொழிலுக்கும் எடப்பாடியார் உறுதுணையாக இருந்துள்ளார். அடுத்து வரும் எம்.பி. தேர்தலோடு எம்.எல்.ஏ. தேர்தலும் சேர்ந்து வரலாம். எனவே அ.தி.மு.க. தொண்டர்கள் இப்போதே தயாராக வேண்டும். சிவகாசிக்கு வருகை தரும் எடப்பாடியாருக்கு பிரமாண்டமான வரவேற்பு கொடுக்க வேண்டும்.

    இதில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும். சிவகாசியில் தி.மு.க. அரசை கண்டித்து நடைபெறும் கண்டண பொதுக்கூட்டம் அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர வைக்கும் படிக்கட்டாக அமைய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் முத்துபாண்டியன்,மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பிலிப்வாசு, முன்னாள் மாவட்ட இளைஞரணி அவைத் தலைவர் லட்சம், சிவகாசி ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவிகள் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டியைச் சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 46). இவரது மகள் தனலட்சுமி (19). இவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் ராஜபாளையம் பகுதியில் உள்ள தாத்தா வீட்டில் இருந்த தனலட்சுமி சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சண்முகநாதன் ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனது மகளை அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் ஆசை வார்த்தை கூறி அழைத்து ச்சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள ரோசல்பட்டியைச் சேர்ந்த 14 வயது மாணவி அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டு வேலைகளை செய்யவில்லை என தாய் கண்டித்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவி வீட்டில் வைத்திருந்த ரூ. 1,200, சைக்கிள், செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மாயமானார். இதுகுறித்து பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி மீனம்பட்டி பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவி நர்சிங் படித்து வந்தார். இவர் அடிக்கடி செல்போனில் பேசியதை தாய் கண்டித்துள்ளார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • விவசாயிகளுக்கான இலவச தொலைபேசி சேவை தொடக்கம்.
    • விவசாயிகள் மற்றும் வணிகர்களின் பயன்பாட்டிற்காக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    உழவர் உற்பத்தியாளர் நிறுவன விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களின் நலனைக் கருத்திற்கொண்டு 2022-23-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் கீழ் இலவச கட்டணமில்லா தொலைபேசி சேவை மற்றும் புலனம் (வாட்ஸ்அப்) சேவை பெறப்பட்டுள்ளது.

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் தொடர்பாக தங்களுக்கு எழும் சந்தேகங்கள், வினாக்கள் மற்றும் பல்வேறு திட்டங்கள் தொடர்பான தகவல்கள் போன்றவற்றை 1800 425 1907 என்ற இலவச கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

    இந்த சேவையானது, விவசாயிகள் மற்றும் வணிகர்களின் பயன்பாட்டிற்காக காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். உழவர் சந்தை, ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், மின்னனு தேசிய வேளாண் சந்தை, முதன்மை பதப்படுத்தும் மையம், குளிர்பதன கிடங்கு, சிறப்பு வணிக வளாகங்கள் தொடர்பான கேள்விகள், புகார்கள், கருத்துக்கள் ஆகியவற்றை 7200818155 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி தகவல் பெற்று பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜோஸ்வா ரஞ்சித் 20 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
    • மூத்த மகன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 2-வது மகன் ராஜபாளையத்தில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சீனிவாசன் புது தெருவை சேர்ந்த பவுல் என்பவரது மகன் ஜோஸ்வா ரஞ்சித் (வயது 47). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி இரவு வீட்டுக்கு வரும்போது மொட்டையடித்திருந்தார். அவர் மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து நேற்று அவர் தூங்கி கொண்டிருந்த அறை கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த ஜோஸ்வா ரஞ்சித்தின் தாய் பாக்கியம் (65) கதவை தட்டியுள்ளார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. இது பற்றி அவர் அக்கம் பக்கம் வசிப்பவர்களிடம் தெரிவித்து கதவை திறக்கும் படி கூறியுள்ளார். அதன்படி கதவை உடைத்து திறந்து பார்த்த போது ஜோஸ்வா ரஞ்சித் தூக்கில் பிணமாக கிடந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோஸ்வா ரஞ்சித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது ஜோஸ்வா ரஞ்சித்தின் தாய் தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக தெரிவித்தார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தார்.

    எனவே அவரிடம் பேசிய நபர்தான் அவரை தற்கொலைக்கு தூண்டியிருக்க வேண்டும் என்று கூறினார். அதன் அடிப்படையில் போலீசார் ஜோஸ்வா ரஞ்சித் மர்மமாக இறந்தாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜோஸ்வா ரஞ்சித் 20 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். 2-வது மகன் ராஜபாளையத்தில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மல்லிகா உடல்நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். இதை தொடர்ந்து வேறு திருமணம் செய்யாமல் இருந்து வந்த ஜோஸ்வா ரஞ்சித் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கோவில்பட்டியை சேர்ந்த நிர்மலா என்ற பெண் போலீசை திருமணம் செய்துள்ளார்.

    நிர்மலா ஏற்கனவே திருமணமானவர். அவருக்கு ஒரு மகன் உள்ளார். அவர் கணவரை விவாகரத்து செய்துவிட்ட நிலையில் ஜோஸ்வா ரஞ்சித்தை 2-வதாக திருமணம் செய்துள்ளார்.

    போலீஸ்காரர் ஜோஸ்வா ரஞ்சித் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 2-வது மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அவர் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இருந்தபோதிலும் அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இதனால் போலீஸ்காரர் ஜோஸ்வா ரஞ்சித் சாவில் மர்மம் நீடித்து வருகிறது.

    • சிவகாசி பி.எஸ்.ஆர். கல்லூரியில் மென்பொருள் வடிவமைப்பு பயிற்சி முகாம் நடந்தது.
    • எந்திரவியல் துறையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியில் ''ஆட்டோடெஸ்க் யூசன் 360'' என்ற மென்பொருள் வடிவமைப்பு தொடர்பாக பயிற்சி முகாமை கல்லூரியின் ஐ.சி.டி. அகாடமி நடத்தியது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் தொடங்கி வைத்தார். முதல்வர் விஷ்ணுராம் வாழ்த்துரை வழங்கினார். டீன் மாரிச்சாமி சிறப்புரை ஆற்றினார்.

    இந்த பயிற்சி முகாமை சென்னை ஐ.சி.டி.அகாடமி நிர்வாக அதிகாரி திவ்யபிரசாத் நடத்தினார்.

    அவர் பேசுகையில், இந்த மென்பொருள் ஆட்டோ மெஷனில் உற்பத்திதுறை மற்றும் வடிவமைப்பு துறையின் பயன்பாடு பற்றியும், இதன் மூலமாக உள்ள வேலைவாய்ப்பு பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.இதில் எந்திரவியல் துறையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், எந்திரவியல் துறை பேராசிரியர்கள் முத்தையா, குமாரசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

    எந்திரவியல் துறைத்தலைவர் கனகசபாபதி நன்றி கூறினார்.

    ×