search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவிகள் உள்பட 3 பேர் மாயம்
    X

    மாணவிகள் உள்பட 3 பேர் மாயம்

    • மாணவிகள் உள்பட 3 பேர் மாயமானார்கள்.
    • சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டியைச் சேர்ந்தவர் சண்முகநாதன் (வயது 46). இவரது மகள் தனலட்சுமி (19). இவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இந்த நிலையில் ராஜபாளையம் பகுதியில் உள்ள தாத்தா வீட்டில் இருந்த தனலட்சுமி சம்பவத்தன்று மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சண்முகநாதன் ராஜபாளையம் தெற்கு போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில், எனது மகளை அதே ஊரைச் சேர்ந்த வாலிபர் ஆசை வார்த்தை கூறி அழைத்து ச்சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள ரோசல்பட்டியைச் சேர்ந்த 14 வயது மாணவி அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டு வேலைகளை செய்யவில்லை என தாய் கண்டித்துள்ளார். இந்த நிலையில் அந்த மாணவி வீட்டில் வைத்திருந்த ரூ. 1,200, சைக்கிள், செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு மாயமானார். இதுகுறித்து பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி மீனம்பட்டி பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவி நர்சிங் படித்து வந்தார். இவர் அடிக்கடி செல்போனில் பேசியதை தாய் கண்டித்துள்ளார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×