என் மலர்
விழுப்புரம்
- ரூ.2000/- நிதியானது ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
- அஞ்சல் அலுவலகத்திலும், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் ஆதார் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம்.
விழுப்புரம்:
பிரதம மந்திரி கிசான் சம்மன் யோஜனா மூலம் ரூ.2000/- நிதியானது ஆதார் எண் பதிவு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது மத்திய அரசு 14-வது தவணைத் தொகை விடுவிப்பதில் சில புதிய வழிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி ஜூலை மாதம் முதல் விடுவிக்கப்படும் அனைத்து தவணை தொகைகளும் பயனாளிகளின் ஆதார் எண் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் அலுவலகத்திலும், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திலும் ஆதார் எண்ணை பதிவு செய்து மற்றும் ஆதார் கார்டில் முகவரி மாற்றம், செல்போன் எண் இணைத்தல் போன்ற அனைத்து பணிகளையும் செய்து தர உள்ளனர். எனவே விவசாயிகள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆதார் எண்ணை பதிவு செய்து பயனடையலாம் என மாவட்ட கலெக்டர் பழனி தெரிவித்துள்ளார்.
- கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர்.
- முக்கிய குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க அம்பத்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
விழுப்புரம்:
புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28), கோர்க்காட்டை சேர்ந்தவர் அன்பரசன் (32). இருவரும் ரவுடிகள். இவர்கள் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவர்கள் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தனர். மயிலம் போலீஸ் நிலையத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தனர்.
இவர்கள் கடந்த 10-ந்தேதி மயிலம் போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்திட சென்றனர். மோட்டார் சைக்களில் சென்ற இவர்களை வானூர் அருகே செங்கமேடு-திருவக்கரை சாலையில் மர்மகும்பல் சுற்றி வளைத்து கொலை செய்தனர். இது தொடர்பான வழக்கில் வானூர் போலீசார் புதுவை மாநிலம் வில்லியனூர் பகுதி கொடாத்தூரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (வயது 20), விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மாத்தூரை சேர்ந்த வீரசெழியன் (26), வழுதாவூரைச் சேர்ந்த ஜெகன் (23) ஆகியோரை கைது செய்து விழுப்புரம் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான விழுப்புரம் மாவட்டம் வழுதாவூரைச் சேர்ந்த முகிலவ், வினித், சத்தியராஜ், ராம்குமார், புதுவை மாநிலம் வில்லியனூர் பிள்ளையார்குப்பம் மதன், பொறையூர் சூர்யா ஆகியோர் சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வானூர் போலீசார் முடிவு செய்தனர். சென்னை அம்பத்தூர் கோர்ட்டில் இருந்து அலுவலர் சார்ந்த தகவல் கடந்த 16-ந்தேதி வானூர் போலீசாருக்கு வந்தது. உடனடியாக வானூர் போலீசார் சென்னைக்கு விரைந்தனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான முகிலன் மற்றும் 5 பேரை வானூர் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க அம்பத்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கு அனுமதி கிடைத்து முகிலனிடம் வானூர் போலீசார் விசாரணை நடத்தினால் மட்டுமே இக்கொலைக்கான காரணம் தெரியவரும் என தெரிகிறது.
- கல்குவாரிக்கு தேவையான வெடி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா? என அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்தது.
- கண்டெய்னர் இங்கு வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஏவலூர் கிராம எல்லை விவசாய நிலத்தில் கடந்த சில மாதங்களாக கண்டெய்னர் ஒன்று கிடந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியில் கல்குவாரி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் விவசாயம் சங்கம் சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக கல்குவாரி அமைக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த பணிக்கான கண்டெய்னர் கொண்டுவரப்பட்டதா? இந்த கண்டெய்னரில் கல்குவாரிக்கு தேவையான வெடி பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதா? என அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்தது.
இது தொடர்பான புகாரின் பேரில் ரோஷனை இன்ஸ்பெக்டர் அன்னகுடி, வெள்ளிமேடுபேட்டை சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். கேட்பாரற்று இருந்த கண்டெய்னரின் பூட்டை உடைத்து பார்த்தனர். இதில் கண்டெய்னர் காலியாக இருந்தது. இதனை தொடர்ந்து இந்த கண்டெய்னர் யாருடையது?, இது எவ்வாறு இங்கு வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்டெய்னர் காலியாக இருந்ததால் அப்பகுதி பொதுமக்கள் அச்சம் நீங்கி நிம்மதியடைந்தனர்.
- கிரி பிரம்மதேசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
- விவசாய கிணற்றில் கிரி பிணமாக மிதந்தான்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ்அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல். இவரது மகன் கிரி (வயது13) இவர் பிரம்மதேசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தந்தை அதே பகுதியில் உள்ள கல் குவாரியில் வேலை செய்து வருகிறார். தாய் மாலாவும் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்த கிரி திடீரெனமாயமானார். அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் கிராமம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் நேற்று மாலை பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர், இந்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில் இன்று காலை அதேகிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் கிரி பிணமாக மிதந்தான்.இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- திருமண நாள் முதல் அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதிைய சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சிவகாமி (வயது 35). இவர்களுக்குள் திருமண நாள் முதல் அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சிவகாமி வீட்டினுள் இருந்த ஒரு அறையில் இருந்த மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தார், சிவகாமியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை க்காக அனுமதித்தனர்.
அங்கு சிவகாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோது இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி சிவகாமி இறந்தார். இது தொடர்பாக கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் சுந்த ர்ராஜன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தற்கொலை செய்து கொண்ட சிவகாமிக்கு திரும ணமாகி எத்தனை ஆண்டுகள் ஆகின்றது. வரதட்சினை கொடுமை யால் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுதாகர் தனது நண்பர்கள் 6 பேருடன் விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணைக்கு இன்ப சுற்றுலா சென்றார்.
- பொதுமக்களின் உதவியுடன் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
விழுப்புரம்:
புதுவை மாநிலம் திருபுவனை புதுக்காலனியை சேர்ந்தவர் சுதாகர் (வயது 43). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது நண்பர்கள் 6 பேருடன் விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணைக்கு இன்ப சுற்றுலா சென்றார். அங்கு வீடூர் அணையின் கரையில் அமர்ந்து அனைவரும் மது அருந்தினர். பின்னர் அணையின் கரையில் குளித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சுதாகர் நீரில் மூழ்கினார். அவரது நண்பர்கள் அவரை நீரில் மூழ்கி நீச்சல் அடித்து தேடினர். இதில் சுதாகரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதை யடுத்து அங்கிருந்த பொதுமக்களின் உதவியுடன் விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காத்தமுத்து, பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து விக்கிரவாண்டி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தரேஷ்வரன் தலைமையிலான வீரர்கள் வீடூர் அணைக்கு வந்து இரவு 8 மணிவரை மீட்பு பணியில் ஈடுபட்டனர். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு வீடூர் அணைக்கு மீண்டும் சென்ற தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கி சுதாகரை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் அவர் குளித்த இடத்தின் அருகிலேயே சேற்றில் சிக்கி மூச்சித் திணறி இறந்து கிடந்தார். உடலை மீட்ட தீயணைப்பு வீரர்கள் வீடூர் அணையின் கரையில் வைத்தனர். விக்கிரவாண்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத ப ரிசோதைனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மரியாதை செய்துவிட்டு தான் செல்ல வேண்டும் என கூறி குணாளை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
- வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி ரோடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39),இவர் திண்டிவனம் செஞ்சி ரோட்டில் பேட்டரி கடை நடத்தி வருகிறார்.இவரது கடையில் டி. வி. நகர் பகுதியை சேர்ந்த குணால் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 17-ந் தேதி இரவு கடையை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் செல்ல முற்பட்டபோது எம்.ஜி. ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் அவரது கூட்டாளிக ளான சபரீசன், ஜாஸ்மி ன்,அமீர்,மற்றும் 5-க்கும் மேற்ப ட்டோர் திடீரென கடை ஊழியர் குணாளின் வாகனத்தை நிறுத்தி இந்த தெருவில் நீ வேகமாக செல்லக்கூடாது எங்களை பார்த்துவிட்டு மரியாதை செய்துவிட்டு தான் செல்ல வேண்டும் என கூறி குணாளை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்ட கடை உரிமையாளர் பா.ம.க. நிர்வாகி ரமேஷ் மற்றும் அவரது மனைவி பரமேஸ்வரி ஆகியோர் ஏன் எங்கள் கடையில் வேலை செய்யும் நபரை அடிக்கிறீர்கள் என கேட்டதற்கு ரமேஷ் மற்றும் பரமேஸ்வரியையும் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்த மோட்டார் சைக்கிள்,கடை போர்டு போன்ற பொருட்களை அடித்து சேதப்படுத்திவிட்டு உங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். அருகில் இருந்தவர்கள் அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர். இது சம்பந்தமாக பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் பார்த்திபன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்து சபரிசன் மற்றும் ஜாஸ்மின் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பார்த்திபன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.மேலும் இது சம்பந்தமாக தகவல் அறிந்த மயிலம் பா.ம.க. எம்.எல்.ஏ. சிவக்குமார் பா.ம.க. நிர்வாகி ரமேஷ் மற்றும் பரமேஸ்வரி ஆகியோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர் கூறுகையில் முக்கிய குற்றவாளியான பார்த்திபனை உடனடியாக கைது செய்ய வேண்டும். வணிகர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவது வேதனையாக உள்ளது. உடனடியாக போலீசார் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
- சில நாட்களுக்கு முன்பாக காலை நேரங்களில் வெயில் சுட்டெரித்தது.
- நெல்லை அறுவடை செய்து ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திலும், அந்தந்த பகுதியில் உள்ள சாலைகளிலும் வைத்திருந்தனர்.
விழுப்புரம்:
தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்தது. அதிகபட்டசமாக 105 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாயினர். கோடை மழை பெய்யாதா, பூமி குளிர்ந்து வெப்பம் தணியாதா என பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக காலை நேரங்களில் வெயில் சுட்டெரிப்பதும், மாலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுமாக இருந்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. ஒரு சில இடங்களில் சூராவளி காற்றுடன் மழை பெய்தது.
இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், திருவெண்ணைநல்லூர், செஞ்சி, விக்கிரவாண்டி, வானூர், மரக்காணம், கண்டமங்கலம் திண்டிவனம் போன்ற பகுதிகளில் நேற்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்து காற்று வீசியது. விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இரவிலிருந்து ஒரு சில பகுதிகளில் சாரல் மழையும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் ெபய்து வருகிறது. இத்தனை நாட்களாக வீடுகளில் ஏ.சி. போடாமல் படுத்துறங்க முடியாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை முதல் பெய்த மழையினால் பூமி குளிர்ந்தது. இதனால் இரவு நேரங்களில் குளிர் அடித்ததால் பெரும்பாலானோர் மின்விசிறியை கூட நிறுத்திவிட்டு உறங்கினர். பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளான போதும், கோடை வெப்பம் தணிந்ததால் விழுப்புரம் மாவட்ட மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர். அதேசமயம் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்த்திருந்த மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. விழுப்புரம் மாவட்ட கிராமப்புற பகுதிகளின் விளைநிலங்களில் பயிரிடப்பட்ட நெல்லை அறுவடை செய்து ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திலும், அந்தந்த பகுதியில் உள்ள சாலைகளிலும் வைத்திருந்தனர். வெப்பசலனத்தால் பெய்த திடீர் மழையால் நெல் மூட்டைகள் நனைந்தன. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
- கடந்த சில தினங்களாக இலவச அரசி ரேஷன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
- குறைந்த எண்ணிக்கையிலான அரிசிகள் பளீரென வெள்ளை நிறத்திலும் இருந்தது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக இலவச அரசி ரேஷன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை கண்டமங்கலம் அடுத்த நவமால் காப்பேர் ரேஷன் கடையில் இலவச அரிசி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.அப்போது ரேஷன் கடையில் வழங்கப்பட்ட இலவச அரிசியில் 2 வகை யான அரிசிகள் இருந்தன. பெரும்பாலான அரிசிகள் பழுப்பு நிறத்திலும், குறைந்த எண்ணிக்கையிலான அரிசிகள் பளீரென வெள்ளை நிறத்திலும் இருந்தது.
இதனால் அதிர்ச்சி யடைந்த நவமால்காப்பேர் மக்கள் இலவச அரிசியை வீட்டிற்கு எடுத்து வந்து தனித்தனியே பிரித்தனர். இதில் ஒரு கிலோவிற்கு 100 கிராம் அளவிற்கு வெள்ளி நிற அரிசி கலந்திருந்தது. இதனை தனியே பொருக்கி எடுத்த ஒரு சிலர், இதனை நீரில் ஊறவைத்தனர். அப்போது இந்த வெள்ளை நிற அரிசி உப்பலாகி நீண்டது.
இதனைக் கண்ட பொது மக்கள் இது குறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் புகார் அளித்தனர். நாங்கள் என்ன செய்வோம்? அரசு அனுப்பி வைக்கும் அரிசிைய தங்களுக்கு வழங்குகிறோம் என்று கூறினர். இத்தகவல் காட்டுத் தீ போல கண்டமங்கலம் பகுதியில் பரவியது. இதையடுத்து இலவச அரிசியை வாங்கிய அனைவரும் மூட்டையை பிரித்து பார்த்தனர். அனை வருக்கும் வழங்கப்பட்ட அரிசிகளில் வெள்ளை நிற அரிசி கலந்திருந்தது. இதனை அவர்களும் தனியே பிரித்து நீரில் ஊறவைத்தனர். இதுவும் உப்பலாகி நீண்டது. இது கண்டமங்கலம் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசால் இலவசமாக வழங்கப்படும் அரிசியில் வெள்ளை நிற அரிசி பிளாஸ்டிக் அரிசி கலந்துள்ளது என்ற தகவல் கண்டமங்கலம் பகுதி மக்களிடையே வேக மாக பரவிவருகிறது. இதை யடுத்து அங்காங்கே வசிக்கும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரிதிநிதிகளிடம் புகார் அளித்துள்ளனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வந்து சோதனை செய்தால் மட்டுமே, இது சாப்பிடு வதற்கு உகந்ததா? அல்லது பிளாஸ்டிக் அரிசியா? என்பது தெரியவரும்.
- 278 பணி யாளர்களுக்கு ரூ.71.55 கோடி பணிக்கொடைக்கான காசோ லைகள் வழங்கப்பட்டது.
- புதிய டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் நியமிக்க வும் அரசாணை வழங்கப் பட்டுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், ஓய்வு பெற்ற போக்குவரத்து பணி யாளர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் பழனி தலைமையில் நடைபெற்றது. இதனை அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர். தொடர்ந்து அமைச்சர் பொன்முடி கூறுகையில், கடந்த மே 2020 முதல் நவம்பர் 2022 வரை பணிபுரிந்து ஓய்வுபெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற, இறந்த பணியாளர் என மொத்தம் 8,361 பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன் களான ரூ.1,582 கோடியை வழங்கிட முதல்- அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
விழுப்புரம் கோட்டத்தில், 4.11.2022 அன்று முதற் கட்டமாக ஓய்வுபெற்ற 137 பணியாளர்களுக்கு ரூ.18.63 கோடியும், 2-வது கட்டமாக 200 பேருக்கு ரூ.30.63 கோடியும் வழங்கப்பட்டது. தற்போது விழுப்புரம், கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மண்டலங்களில் ஓய்வு ெபற்ற பணியாளர்கள் மற்றும் இறந்த பணியாளர்களின் - வாரிசுதாரர்கள் என மொத்தம் 278 பணி யாளர்களுக்கு ரூ.71.55 கோடி பணிக்கொடைக்கான காசோ லைகள் வழங்கப்பட்டது, என்றார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகை யில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி தான், போக்குவரத்துத்துறையை ஏற்படுத்தினார். இந்தியாவிலேயே 21,000-க்கும் அதிகமான பஸ்கள் இயங்கும் நிலை தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது. போக்குவரத்துத்துறை ஊழியர்கள் ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகிறார்கள். தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின், ஆட்சி பொறுப்பேற்றவுடன் போக்குவரத்துத்துறையை சீரமைத்து, அனைத்து பணியாளர்களும் மாதம் முதல் தேதியன்றே ஊதியம் பெறுகின்ற நிலையை உருவாக்கி கொடுத்தார். மேலும், பொதுமக்கள் நலனை கருத்திற்கொண்டு பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் உள்ளார். மகளிர் கட்டணமில்லா பஸ் சேவை வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஆண்டொன்றுக்கு ரூ.2,500 கோடி நிதியுதவியை முதல்-அமைச்சர் வழங்கி வருகிறார். புதியதாக பஸ்கள் வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்திற்கும், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்திற்கும் புதிய டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் நியமிக்க வும் அரசாணை வழங்கப் பட்டுள்ளது, என்றார். இதில் ரவிகுமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, லட்சுமணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- விழுப்புரம் கல்வி மாவட்டம் திண்டிவனம் கல்வி மாவட்டம் உள்ளிட்ட இரு மாவட்டங்களில் 1489 மாணவ- மாணவிகள் தேர்வு எழுது கின்றனர்.
- பிளஸ்-2 பொதுத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவ-மாணவிகளுக்கு தனி தேர்வு இன்று நடை பெற்றது.
விழுப்புரம்:
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவ-மாணவிகளுக்கு தனி தேர்வு இன்று நடை பெற்றது. விழுப்புரம் மாவட்டத் தில் விழுப்புரம் கல்வி மாவட்டம் திண்டிவனம் கல்வி மாவட்டம் உள்ளிட்ட இரு மாவட்டங்களில் மொத்தம் 1489 மாணவ- மாணவிகள் தேர்வு எழுது கின்றனர். விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 785 மாணவ -மாணவிகளும் திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 704 மாணவ மாணவி களும் தேர்வு எழுதினார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் செயின்ட் மைக்கேல் எஸ். மேல்நிலைப் பள்ளி , செஞ்சி செயின்ட் மைக்கேல்ஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, திண்டிவனம் செயின்ட் ஆன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் செயின்ட் பிலோமினாஸ் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சாணக்யா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி திண்டிவனம் அரசு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கானை கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி, சிந்தாமணி ஜான் டூவி மெட்ரிக் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி உள்ளிட்ட 9 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
- கிழக்கு கடற்கரை சாலை வழியாக மீண்டும் வீடு திரும்பி உள்ளனர் .
- நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நிஷாவின் தலையில் படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டிஉள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார் குப்பம் மீனவர் கிராம பகுதியை சேர்ந்தவர் தியாகு வயது (35) இவரது மனைவி நிஷா வயது (30 )இவர்கள் இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் புதுவைக்கு சென்று அங்கு தனது வேலைகளை முடித்துக் கொண்டுகிழக்கு கடற்கரை சாலை வழியாக மீண்டும் வீடு திரும்பி உள்ளனர் . இவர்கள் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தின் அருகில் வந்த போது இவர்களின் வாகனத்தை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் ைசக்கிளில் அமர்ந்து வந்த நிஷாவின் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி செயினை பறித்துள்ளனர்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நிஷா தனது தாலி செயினை பிடிக்க முயற்சி செய்து உள்ளார் .அப்போது மர்ம நபர்கள் நிஷாவை தள்ளி உள்ளனர். இதனால் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த நிஷாவின் தலையில் படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டிஉள்ளது. அந்த நேரத்தில் தாலி செயினை பறித்த மர்ம நபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார்சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். தன் கண் எதிரிலேயே இச்சம்பவத்தை கண்ட தியாகு ஒன்றும் செய்ய முடியாமல் கதறியபடி தன் மனைவியை மீட்டு சிகிச்சைக்காக மரக்காணத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுவை மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிஷா அழைத்துச் செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து தியாகு மரக்காணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் பேரில் மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதேபோல் கடந்த வாரம் மரக்காணம்அருகே கோட்டக்குப்பத்தில் கத்தியால் வெட்டிவிட்டு தனியார் ஊழியரிடம் மர்ம நபர்கள் செல்போனை பறித்து சென்று விட்டனர். இதுபோல் தொடர்ந்து இப்பகுதியில் வழிப்பறி கொள்ளை நடைபெற்று வருவதால் எந்த நேரத்தில் என்ன ஆகுமோ என பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.






