search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Acham"

    • பாராமுகமாக இருப்பதால் குடிமகன்களின் ‘பாராக’ மாறிவரும் ராஜபாளையம் ஜவகர் மைதான மேடை.
    • இரவில் வெளியே வர குடியிருப்புவாசிகள் அச்சப்படுகின்றனர்.

    ராஜபாளையம்

    'காட்டன் சிட்டி' என்று பெருமையுடன் அழைக்கப்ப டும் விருதுநகர் மாவட்டத் தின் முக்கிய தொழில்நகர மாக திகழும் ராஜபாளையம் பல்வேறு வரலாற்று சான்று களையும் தாங்கியுள்ளது.

    அதிலும் குறிப்பாக தேசத் தந்தை மகாத்மா காந்தியடி கள், பி.எஸ்.குமாரசாமி ராஜா, ஜவஹர்லால் நேரு, பசும்பான் முத்துராமலிங்கத் தேவர் போன்ற தேசத்தலை வர்களும் அண்ணா, பெரி யார், காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற அரசியல் தலைவர் களும் பொதுக்கூட்டத்தில் பேசி வரலாறு கண்ட ஜவ கர் மைதானம் ராஜபாளை யம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.

    இதனாலேயே ஆளுங் கட்சி, எதிர்க்கட்சி உட்பட அனைத்து அரசியல் கட்சிக ளுமே பொதுக்கூட்டங்கள் நடத்த தேர்ந்தெடுப்பது ராஜபாளையம் ஜவகர் மைதானத்தை மட்டுமே. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் செலவில் பொதுக்கூட்ட மேடை ஜவஹர் மைதானத் தின் கிழக்குப் பகுதியில் மேற்கு பார்த்து அமைக்கப் பட்டது.

    இது சற்று உயரமாக இருப்பதால் மேடையில் இருப்பவர்கள் பொதுமக்கள் பார்வைக்கு சரியாக தெரிவ தில்லை என்று கருதிஅதன் எதிர்புறம் மேற்கு பகுதியில் கிழக்கு பார்த்து தற்காலிக மேடை அமைத்து பொதுக் கூட்டம் நடத்துவதை அனைத்து கட்சிகளும் வழக் கமாகக் கொண்டுள் ளது. இதனால் உபயோகப்படுத் தாமல் இருக்கும் கிழக்கு புறம் அமைந்துள்ள மேடை யினை குடிமகன்கள் பாராக பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

    காவல் துறை அதிகாரி களும் பாராமுகமாக இருப்ப தால் தினமும் இரவு எட்டு மணிக்கு மேல் குடிமகன்கள் மேடை முழுவதும் ஆக்கிர மித்து விடிய, விடிய மது அருந்துகிறார்கள். வார சம்பளம் பெறும் தொழிலா ளிகள் சனிக்கிழமை இரவு வாங்கும் சம்பளத்தை இந்த மேடையில் அமர்ந்து மது அருந்தி சம்பள பணத்தை கரைத்து விட்டு வீட்டில் பெயில் மார்க் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ள னர்.

    இவர்களை மகிழ்ச்சியூட் டூம் விதமாக திருநங்கைகள் சிலர் அழகு மங்கைகளை போல அலங்காரம் செய்து கொண்டு மேடையில் இருப் பவர்களுக்கு ஜாடை காட்ட தொடங்கி விடுகிறார்கள். இதனால் விடிய, விடிய இவர்கள் அட்டகாசம் தாங் காமல் அருகில் உள்ள குடி யிருப்புவாசிகள் இரவு ஆகி விட்டால் வெளியே வரு வதே இல்லை.

    பாதுகாப்பில்லாத சூழ் நிலை ஏற்படுவதால் இது குறித்து காவல்துறை உடன டியாக நடவடிக்கை எடுத்து வரலாற்று சிறப்பு மிக்க பொதுக்கூட்ட மேடை மது கூட மேடையாக மாறியிருப் பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பொது மக்கள் விரும்புகிறார்கள். ஒவ்வொரு இரவும் மதுப் பிரியர்கள் அருந்தும் மது பாட்டில்களை அருகில் வீசி விட்டு செல்வதும் வாடிக் கையாகி விட்டது.

    ஞாயிற்றுக்கிழமை வந்து–விட்டால் சண்டேனா இரண்டுடங்கிற மாதிரி அந்த பகுதியில் சேகரிக்கப்ப டும் மது பாட்டில்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங் குகிறது. இது போதா தென்று பற்றாக்குறைக்கு குடிமகன்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு அடிதடி என்றும், சில சமயம் பாட் டில் வீச்சும் நடக்கிறது. அந்த மேடையை டெண்டர் விட்டு பார் வைக்க முறைப்படி அனுமதி கொடுத்து விட லாம் என்று சமூக ஆர்வலர் கள் ஆதங்கத்துடன் கூறி வருகிறார்கள்.

    குறைகளை நாங்கள் தெரிவித்து விட்டோம், நிறை களை காண சம்பந்தப் பட்ட அதிகாரிகள் சாட் டையை கையில் எடுப்பார் களா? என்பதை பொருத்தி ருந்துதான் பார்க்க வேண் டும்.

    • கடந்த சில தினங்களாக இலவச அரசி ரேஷன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
    • குறைந்த எண்ணிக்கையிலான அரிசிகள் பளீரென வெள்ளை நிறத்திலும் இருந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக இலவச அரசி ரேஷன் கடைகள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை கண்டமங்கலம் அடுத்த நவமால் காப்பேர் ரேஷன் கடையில் இலவச அரிசி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.அப்போது ரேஷன் கடையில் வழங்கப்பட்ட இலவச அரிசியில் 2 வகை யான அரிசிகள் இருந்தன. பெரும்பாலான அரிசிகள் பழுப்பு நிறத்திலும், குறைந்த எண்ணிக்கையிலான அரிசிகள் பளீரென வெள்ளை நிறத்திலும் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த நவமால்காப்பேர் மக்கள் இலவச அரிசியை வீட்டிற்கு எடுத்து வந்து தனித்தனியே பிரித்தனர். இதில் ஒரு கிலோவிற்கு 100 கிராம் அளவிற்கு வெள்ளி நிற அரிசி கலந்திருந்தது. இதனை தனியே பொருக்கி எடுத்த ஒரு சிலர், இதனை நீரில் ஊறவைத்தனர். அப்போது இந்த வெள்ளை நிற அரிசி உப்பலாகி நீண்டது. 

    இதனைக் கண்ட பொது மக்கள் இது குறித்து ரேஷன் கடை ஊழியர்களிடம் புகார் அளித்தனர். நாங்கள் என்ன செய்வோம்? அரசு அனுப்பி வைக்கும் அரிசிைய தங்களுக்கு வழங்குகிறோம் என்று கூறினர். இத்தகவல் காட்டுத் தீ போல கண்டமங்கலம் பகுதியில் பரவியது. இதையடுத்து இலவச அரிசியை வாங்கிய அனைவரும் மூட்டையை பிரித்து பார்த்தனர். அனை வருக்கும் வழங்கப்பட்ட அரிசிகளில் வெள்ளை நிற அரிசி கலந்திருந்தது. இதனை அவர்களும் தனியே பிரித்து நீரில் ஊறவைத்தனர். இதுவும் உப்பலாகி நீண்டது. இது கண்டமங்கலம் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசால் இலவசமாக வழங்கப்படும் அரிசியில் வெள்ளை நிற அரிசி பிளாஸ்டிக் அரிசி கலந்துள்ளது என்ற தகவல் கண்டமங்கலம் பகுதி மக்களிடையே வேக மாக பரவிவருகிறது. இதை யடுத்து அங்காங்கே வசிக்கும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பிரிதிநிதிகளிடம் புகார் அளித்துள்ளனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வந்து சோதனை செய்தால் மட்டுமே, இது சாப்பிடு வதற்கு உகந்ததா? அல்லது பிளாஸ்டிக் அரிசியா? என்பது தெரியவரும்.

    ×